Showing posts with label ஸ்ரீ அரவிந்த அன்னை. Show all posts
Showing posts with label ஸ்ரீ அரவிந்த அன்னை. Show all posts

ஏப்ரல் 24 :: தரிசன நாள் செய்தி!.

ஏப்ரல் 24! ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாகத் தங்க வந்த நாள்! 1920 ஏப்ரல் 24 அன்று பாண்டிச்சேரிக்குத் திரும்பிய அன்னை, ஸ்ரீ அரவிந்தருடைய  சேவையிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டதன் தொடக்கமாக, ஒவ்வொரு வருடமும் பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தாசிரமத்தில் தரிசனநாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. தரிசன நாளன்று அன்னையின் செய்தியும் மலர்ப்பிரசாதமும் அடியவர்களுக்குக் கிடைக்கும் என்பது இந்தப்பக்கங்களுக்கு வருகிறவர்கள் அறிந்த செய்திதானே!


 

 


ஸ்ரீ அரவிந்த அன்னையின் செய்தியைச் சிந்தித்து இருப்பதே இன்றைய தியானமாகவும்!

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே 
  

அன்னை பிறந்தாள்! எங்கள் அன்னை பிறந்தாள்! பிப்ரவரி 21, தரிசன நாள்!

பிப்ரவரி 21, பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தாசிரமத்தின் மிகச் சிறப்பான தரிசன நாட்களுள் ஒன்று! இந்த நாள் ஸ்ரீ அரவிந்த அன்னையின் பிறந்த நாள் என்பதுதான் விசேஷம்! ஸ்ரீ அரவிந்தராலே, சாதகர்களுக்கும் யே அன்னை என்று சாதகர்களுக்கு அறிவிக்கப்பட்டவர், பெற்ற தாயாகவே இவனைப்போன்ற பலருக்கும், அணுக்கமாக இருந்த ஆயிரக்கணக்கான அடியவர்களுக்கும் இன்றும் அருள்பாலிப்பவர்!   ஸ்ரீஅரவிந்த ஆசிரமம் என்று உருவானதில் அன்னையின் பங்கே அதிகம்.. 


ஸ்ரீ அரவிந்த அன்னை என்று சொல்லும் போதே, இன்றும் ஆசிரமத்தில் வழங்கப்படும் தரிசன நாள் செய்தி, மலர் பிரசாதம், மலர் வழிபாடு இப்படி ஏராளமான விஷயங்கள் இருந்தாலும், பால்கனி தரிசனம் என்பதும் மிகவும் விசேஷமானது. அது எப்படி ஆரம்பித்தது என்று சில சுவாரசியமான தகவல்களுடன் அரவிந்த் என்கிற ஆசிரமவாசி, நேற்றைக்கு இந்த 19 நிமிட வீடியோவைப் பகிர்ந்திருக்கிறார்.

இது இன்றைய  தரிசனநாள் செய்தியின் முகப்பு. 


இது இன்றைய தரிசன நாள் செய்தி.


 
ISTM குழு அன்பர் ஒருவர் அன்னைக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இந்தப்படத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். மேலே வீடியோவுக்கும், இந்தப் படத்துக்கும் ISTM குழுவுக்கு மிகுந்த நன்றி.

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே    

இது ஸ்ரீஅரவிந்தர் அன்னையைத் தியானிக்க அருளிய மந்திரம்! ஸ்ரீ அரவிந்த அன்னை என்றென்றைக்கும் நம்மோடு துணையிருப்பாளாக! பிரார்த்தனைகளுடன்! 

    

ஜனவரி 1 பாண்டிச்சேரி ஸ்ரீஅரவிந்தாசிரமத்தின் தரிசன நாள்!

நம்மூரில் ஜனவரி முதல்நாளை ஆங்கிலப்புத்தாண்டாகக் கொண்டாடுவது ஒரு சாங்கியம், fashion, கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்துகொள்கிற மந்தைத்தனம் இப்படி என்ன வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும்! என்னைப் பொறுத்தவரை இந்தநாள் ஸ்ரீஅரவிந்தாசிரமத்தின் தரிசன நாளாகவும், ஸ்ரீ அரவிந்த அன்னையின் தரிசனநாள் செய்தியைப் பெறுகிற ஒரு திருநாளாகவும் தான் இருக்கிறது அன்னையின் ஆசி, செய்தி இவைதான் தரிசன நாளின் சிறப்பாக இருப்பது அடியவர்களுடடைய அனுபவம்!


         

ஆன்மீக உணர்வின் அடிப்படைக் காரணமாக இருப்பது உள்ளே இருக்கும் இறைவனைக் கண்டு கொள்வதற்கே!

நேற்றும் இன்றும் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் இருக்கும் ஸ்ரீ அரவிந்தர் சொசைட்டி கட்டடத்தில், ஸ்ரீஅரவிந்தரின் சாவித்ரி மஹாகாவியத்தை அகண்ட பாராயணமாக, ஸ்ரீஅரவிந்தயக்ஞமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்துபோன வருடம்  உலகத்துக்கே பெரும் சோதனையாக, கொரோனா தாக்கம், பொருளாதார முடக்கம், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இன்னமும் அதிலிருந்து மீளமுடியாமல் தவிப்பது என்றிருந்தாலும் எல்லா சோதனைகளைத் தாண்டி மனித இனம் மீண்டு வரவேண்டுமென்றால், தெய்வத்தின் துணையைத் தேடுவதைத்தவிர, வேறு வழியேது?

ஸ்ரீஅரவிந்தர், ஸ்ரீஅரவிந்த அன்னை இருவரது திருவடிகளையும் சிந்தையில் வைத்துச் சரண் அடைகிறேன்/ அடைகிறோம்!  

மா மிரா சரணம் மம  ஸ்ரீஅரவிந்த சரணம் மம 

நண்பர்களுக்கு இனிய ஆங்கிலப்புத்தாண்டு தின வாழ்த்துகள்!                   

தேடாமலேயே தேடி வரும் தெய்வ அருள்! கருணை!

இன்று நவம்பர் 17. ஸ்ரீ அரவிந்த அன்னை மானுட வடிவில் 95 ஆண்டுகள் இருந்து, மஹாசமாதிக்கு ஏகிய நாள். இன்று ஸ்ரீஅரவிந்தாசிரமத்தில் தரிசன நாளாகவும், அடியவர்கள் ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை இருவரும் சூட்சும வடிவில் அருள் பாலிக்கும் சமாதி அருகே அமர்ந்து கூட்டுத் தியானம் செய்யவும், ஸ்ரீ அரவிந்த அன்னையின் அறைக்குச் சென்று வணங்கவும் அனுமதிக்கப் படுகிற நாளாகவும் இருக்கிறது.


    இன்றைய தரிசன நாள் செய்தியாக    


முன்பே இந்தப்பக்கங்களில் பலமுறை எழுதியதைப் போல தெய்வத்தின் கடைக்கணருள் நான்தேடாமலேயே பலமுறை என்னைத் தேடி வந்து அருள்பாலித்திருக்கிறது அன்னை படத்தை முதன்முதலாய்ப்பார்த்த தருணத்தில் இவள் என்னுடைய அம்மா மாதிரியே இருக்கிறாளே என்றுதான் நினைத்தேன். அசடன்! என்னைப் பெற்றவள் வடிவில் ஸ்ரீ அரவிந்த அன்னையே காட்சி அளித்தாள் என்பதை உணராத அசட்டுத்தனம் அது. நான் அவளை நினைக்க மறந்தாலும், அவள் எனக்குத் தோன்றும் துணையாகவும் தோன்றாத துணையாகவும் கூடவே இருந்து அருள்பாலித்து வருகிறாள் என்பதை ஒருவாறு புரிந்து கொண்டபின் எனக்கென்ன மனக்கவலை என் தாய்க்கன்றோ தினம்தினம் என்கவலை என்கிற பழைய பாடலின் பொருளை  அனுபவத்தில் உணர்ந்த்தும் அதுவாகவே நிகழ்ந்தது. அவளே எல்லாம் என்று இருந்தநாட்களும் உண்டு. சமீப காலங்களில் அன்னையை நினைக்காமலேயே இருந்ததுமுண்டு. ஆனாலும் அவள் எனக்கும் தாயல்லவா!  




 ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன் திருவடிகளை சரண் அடைகிறேன்! எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உனது திருவடிகளில் சமர்ப்பணம் செய்கிறேன்.

ஒரு பெண்குழந்தையை எங்கள் குடும்பத்திற்கு உனது அருட்கொடையாக அளித்திருக்கிறாய். அந்தக்குழந்தை என்றென்றும் உனது கடைக்கண் அருளிலேயே, உனது பாதுகாப்பிலேயே வளரட்டும்.

பழம்பெரும் பாரத தேசத்தை, அகப்பகை, புறப்பகை இரண்டிலிருந்தும் காப்பாய்! உலகத்தில் பாரததேசம் நீ அறிவித்தபடி அதன் ஆன்மீக குருபீடத்தை அடைய உனதருள் விரைந்துசெயல்பட திருவுள்ளம் இசைவாய்!

மீண்டும் மீண்டும் உன்னை வணங்குகிறேன். திருவடிகளைச்  சரணடைகிறேன்.

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே!                

போகும் திசை மறந்து போச்சு!

2009 ஆம் ஆண்டிலேயே இரண்டு முறை போகும் திசை மறந்து போனதா என்று என்னை நானே விசாரித்துக் கொண்டு பதிவுகள் எழுதினேன். இன்றும் கூட அந்த விசாரணையை என்னிடம் நடத்திக் கொண்டுதான் ஆக வேண்டும் போல இருக்கிறது என்பதனால் இது ஒரு மீள்பதிவு தான்  

போகும் திசை மறந்து போச்சு-இங்கே

பொய்யே வேதமுன்னு ஆச்!சு

வைரமுத்துநீர்த்துப்போய்விடாமல் கவிதையை கவிதையாகவும்லட்சியக் கனவுகளோடும் எழுதின நாட்களில் இளைய ராஜா இசையமைப்பில் உருவான பாடல் இதுகண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற படத்தில்இடதுசாரிச் சிந்தனைகளில் இருந்த ஸ்ரீதர்ராஜன் என்ற இளம் இயக்குனரின் படைப்புக்காகஇளையராஜாவைரமுத்துவின் வரிகள் வெற்று வரிகளாகவே போய் விடாமல் கவிதை வரிகளுக்கு இசையால் உயிர் கொடுத்த பாடல் இது.

ஸ்ரீதர் ராஜனுடைய நண்பர்கள் இருவர் எனக்கும் நட்பான நாட்களில்இந்தப் படத்தின் பாடல் ஒலிப்பேழையை சுடச் சுடக் கொண்டுவந்து கொடுத்த நாட்கள்அப்படியே ஸ்ரீதர் ராஜனை ஓரிருதடவை சந்திக்கிற சந்தர்ப்பமும்கிடைத்தது.......இந்தப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும்ஸ்ரீதர் ராஜன்பின்னாட்களில் ஜெமினி கணேசனுடைய மாப்பிள்ளையாகிப் போனார்அவர் பேசின லட்சியம்கம்யூனிசம் எல்லாம் கனவாய்ப் பழங்கதையாய்ப் போனதும் நினைவுக்கு வரும்போது சிரிப்புத் தான் வருகிறது.ஜெமினிக்கு மாப்பிள்ளை ஜெமினி மாதிரியேபெண்ணுக்கு அடிமையாகத் தானே இருக்க முடியும்இது என்ன புதுக்கதை என்று தோன்றுகிறதா?

ஜெமினி கணேசனைப் பற்றி பேசும்போது வேறொன்றும் வேடிக்கையாக நினைவுக்கு வருகிறதுமனிதனைப் பற்றிப் பெரிய காதல் மன்னன்பெண் பித்தன்இன்னும் என்னென்னவோ நினைத்துக் கொண்டிருக்கிறோம் இல்லையாஉண்மையில்ஜெமினி கணேசன் பெண்ணுக்கு அடிமையாகவே கடைசி வரை வாழ்ந்த ஒரு மனிதன்! ஜெமினியின் சரிதம் எழுத நிறையப்பேர் இருப்பதால், அந்த வேலையை அவர்களே தொடரட்டும்!

இந்த ஒரு தகுதிக்காகவேஜெமினிக்குத் தபால் தலையும் வெளியிட்டுஇந்திய அரசு கவுரவப் படுத்தியது போலிருக்கிறதுபெண்ணடிமைத்தனம் என்று பேசுபவர்கள்பெண்ணுக்கு அடிமைத்தனம் என்று ஒன்று இந்த நாட்டில் இருந்ததையே அறியாதவர்கள்பாவம்!!

காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்குத் தபால் தலைதமிழ் வளர்த்த சுத்தானந்த பாரதிக்கு இல்லையா என்று ஒருத்தர் குமுறியதையும் இந்தப் பக்கங்களில் ஏற்கெனெவே பேசியிருக்கிறோம்! சுத்தானந்த பாரதியார் என்ற தலைப்பில் தேடுங்கள்கிடைக்கும்!

ஆங்...எதற்காக இப்போது இதைப் பேச ஆரம்பித்தோம்போகும் திசை மறந்து போச்சுபோச்சாஇல்லியான்னு கொஞ்சம் என்னையே விசாரிச்சுக்கத் தான்


கோவி கண்ணன்அவருடைய ஒரு பதிவின் பின்னூட்டங்களில்என்னுடைய ப்ரொபைலைப் பார்த்துவிட்டுவயதுவிவரங்களையும் பார்த்து விட்டுகொடி பிடிப்பதைப் பற்றி எழுதினதில் ஒரு சுய பச்சாதாபம் தெரிந்ததாகச் சொல்லியிருந்தார்அதுவும்...........

இன்னொரு நண்பர் கபீரன்பன் என்ற பெயரில்கபீர்தாசருடைய ஈரடிக் கவிதைகளை எளிய தமிழில்அவருடைய அனுபவத்தில் அறிந்ததையும் சேர்த்து எழுதிக் கொண்டிருக்கிறார்இந்த மாதிரி முயற்சிகளில் தான்சிந்தனை,ஒரு குறுகிய எல்லைகளில் இருந்து விடுபட்டுவிரிந்துபறந்து ஒரு புதிய பரிணாமத்தை அடைகிறதுஎன்னுடைய ஒரு பதிவை ரீடரில் படித்து விட்டுவேறொரு பதிவுக்கு பின்னூட்டம் எழுதினார்எனக்கு ஒரு விஷயத்தை மறைமுகமாகத் தெளிவுபடுத்துகிற மாதிரி எழுதியிருந்ததிலும்.........

போகும் திசை என்ன என்பதைப் பற்றி மறுபடியும் யோசிக்க வேண்டி வந்ததுமுதலில் சொன்ன மாதிரி போகும் திசை நெசமாவே மறந்து போச்சா என்னஅப்படியும் போய்விடுமா என்ன என்ற கேள்வியேஇந்தப் பாடலை நினைவுபடுத்திக் கொள்வதிலிருந்து ஆரம்பித்தது!

"தற்போது தான் (2009இல்) உங்கள் புரொபைல் பார்த்தேன்வயது 55 என்றிருந்ததுஇளையர்கள் பொறுப்பு இல்லாமல் இருக்கிறார்கள் என்று கோபம் வரக் கூடிய வயதுவயதின் காரணமாகவே தமக்கு எல்லாம் தெரிந்திருக்கும் என்றே நினைக்கக் கூடிய வயது."

//கொடி பிடித்த காலம் எல்லாம் எப்பவோ!அது செங்கொடிஅதுகூட லட்சிய வெறியோடு மட்டுமே இருந்ததுநபர்களின் மீது அல்ல.//

அதையும் படித்தேன்சுய பட்சாதாபம் ஓங்கி இருந்தது. 50 வயதுக்கு மேல் சில தீவிர நாத்திகர்கள் கூட தீவிர ஆத்திகர்கள் ஆகிவிடுங்கஅப்போது தான் உலகம் நிலையல்லஉடல் நிலையல்ல என்கிற உண்மை புரியும் போல :)

இது கோவி கண்ணன் சொன்னதுகாயமே இது பொய்யடா-வெறும் காற்றடைத்த பையடா இப்படி நான் பாடிக் கொண்டிருப்பது போலஉலகே மாயம்-வாழ்வே மாயம் என்று ஐம்பதுக்கு மேல்தான் தெரியவரும் என்பது போலஅவர் சொல்கிற மாதிரி இல்லை?!



கபீரன்பன் சொல்லாமல் சொன்னது வேறு மாதிரி இருக்கிறது!

ரொம்ப போரடிக்கிறது-என்ன செய்யலாம்? என்ற பதிவில் ஸ்ரீ அரவிந்த அன்னையின் உரையாடல்களிலிருந்து ஒரு பகுதியை எடுத்து இப்படிச் சொல்லியிருந்தேன்:

இப்படிப் பட்ட சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றி ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்கிறார்:

"இப்படிக் கொஞ்சம் நேரம் கிடைக்கும் போதுஅது சிலநிமிடங்களோசில மணி நேரமோ,உனக்குள்ளேயே சொல்லிக் கொள்: " ஒருமுகப்படுத்திக் கொள்ளவும்ஒன்று சேர்த்துக் கொள்ளவும்என்னுடைய வாழ்க்கையின் பொருளை வாழ்ந்து பார்ப்பதிலும்உண்மையும் பரம சத்தியமாகவும் இருக்கும் ஒன்றிடம் என்னை சமர்ப்பிப்பதற்கும்ஒரு வழியாக எனக்குக் கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கிறது."


கபீரன்பன் said...
August 17, 2009 9:09 AM

//உண்மையும் பரம சத்தியமாகவும் இருக்கும் ஒன்றிடம் என்னை சமர்ப்பிப்பதற்கும்ஒரு வழியாக எனக்குக் கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கிறது //

மிகவும் பொருள் பொதிந்த சத்தியம்அதை உணர்வதற்கான விவேகம் அவனருளாலேதான் கிடைக்கும்.

சிந்திக்க வேண்டிய அன்னையின் கருத்துகளை எடுத்துக் காட்டியதற்கு நன்றி

கிருஷ்ணமூர்த்தி said...
August 17, 2009 9:19 AM

ஒரு சராசரி மனிதனாக இருந்துஇதைஉணர்வதும் கடைப்பிடிப்பதும் எவ்வளவு கடினமான காரியம் என்பதை சொந்த அனுபவத்திலேயேஅதுவும் கடந்த சில நாட்களிலேயே கண்டுகொண்டேன்.

"அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன்என்று ஆழ்வார்கள் சொன்னது ஏன் என்றும் தெரிய வர ஆரம்பித்திருக்கிறது!

வருகைக்கும்என்னுடைய இப்போதைய மனநிலையை எனக்கே காட்டி அருளியதற்கும் மிகவும் நன்றி!

கபீரன்பன் சொல்லாமல் சொன்னதென்ன என்பதை அவரவர்கள் அனுபவம்அறிவுக்குத் தகுந்தபடி தாங்களே தெரிந்துகொள்ளட்டும் என்பதைமுதலில் ஒரு தனிப்பதிவாக அன்றைக்கு எழுத ஆரம்பித்துஅப்படியே நிறுத்திக் கொண்டேன்.

Evolution என்ற குறியீட்டுச் சொல்லுடன் தேடினால்,இந்தப் பதிவில் ஆறு இடுகைகளில்மேலே சொன்ன முரண்பட்ட இரண்டு கருத்துக்களைப் பற்றி முன்னமேயே பேசியிருப்பது தான் என்பது தெரியும்.

என்னுடைய சொந்த அனுபவங்களைப்பற்றி ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற தலைப்பில் கொஞ்சம் பேசியிருக்கிறேன்.

நடைமுறை வாழ்க்கையில்பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விடுவதான'பன்றியோடு சேர்ந்த கன்றுக்குட்டியாக' ஆகி விடாமல் இருப்பதற்குகொஞ்சம் சிரமப் பட்டுத் தான்வெளியே வர வேண்டியிருக்கிறதுஇந்த முயற்சி கூட இல்லை என்றால், 'பகுத்தறிவுஎன்ற சொல் எப்படி இன்றைக்குஅதன் உண்மையான பொருளில் இல்லாமல்வேறு விதமான அசட்டுத்தனமாக இருக்கிறதோஅது மாதிரி ஆகி விடும்நடைமுறை வாழ்க்கையில்இப்படி ஒன்றை எதிர்ப்பது என்பது ஏன் என்று தெரியாமலேயே அதன் பின்னால் கூட்டமாக ஓடுவதுசேரிடம் அறியாமலேயே சேர்ந்துஅதிலேயே சிக்கிக் கொள்வதுதான்ஒரு சிக்கலில் இருந்து விடுபடுகிறேன் என்று இன்னொரு புதைகுழிக்குள் விழுந்து விடுவது மாதிரித்தான்.

அடுத்துகற்றல் என்பது தொடர்ந்து நிகழ்வதுஒரு தடவை குடத்தை நிரப்பியதும் முடிந்து போவதில்லை.நெருப்பு இன்னும் இன்னும் என்று கேட்பது போலசாப்பிட்ட நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு மறுபடியும் பசி எடுப்பது போல தொடர்ந்து கொண்டே இருப்பதுஉயிர்மையின் ஒரு அடையாளமேஇந்த 'இன்னும்இன்னும்' தான்!

“For the Divine is Freedom and any interference with the freedom of choice, freedom of action, of the evolving soul is against the Truth and Purpose of the manifestation.”

பகுத்தறிவுபகுத்தறிவு என்று சொல்கிறார்களே அது இது தான்இந்த உண்மையைப் புரிந்து கொள்வது தான்.

இறைநிலை நம்முடைய போக்கில் ஒருபோதும் தலையிடுவது இல்லைஒவ்வொரு முக்கியமான தருணத்திலும் நேர் எதிரான பாதைகள் பிரிவதைஅதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று தேர்ந்தெடுக்கிற சுதந்திரத்தை இறையருள் நமக்கு வழங்கியிருக்கிறதுதேர்ந்தெடுத்தது எதுவோ அதற்குரிய வகையில் அடுத்தடுத்த அனுபவங்கள்படிப்பினைகள் என்று நம்மைநமக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ வழிநடத்திக் கொண்டே இருக்கிறதுவிளையாட்டில் மும்முரமாக இருக்கிற குழந்தையைஅதன் போக்கிலேயே அம்மாக்காரி விட்டு விடுவதைப் போலத் தான் இது.

அன்று பார்த்த சாரதியாக வந்தவனேநமக்கும் ஆத்ம சாரதியாக இருந்து கொண்டு நம்மையும்நமக்குத் தெரிந்தோதெரியாமலோநம்முடைய சம்மதத்துடனோஇல்லாமலோவழிநடத்திக் கொண்டிருக்கிறான்.

அவனையே பற்றிக் கொள்கிற தருணமும் வரும்காலைப் பற்றிக் கொள்கிற குழந்தையை அள்ளி அணைத்துக் கொள்கிற தாயைப்போல அவன் நமக்காகக் காத்திருக்கிறான்!

அப்புறம் வேறென்ன வேண்டும்!




தன்னையறியத் தனக்கொரு கேடில்லை!

 ஸ்ரீ அரவிந்த அன்னையே! உ ன் திருவடிகளை வணங்குகிறேன்.


[I+pray+to+thee+guide+copy.jpg]
தன்னிடமிருக்கும்போது பெரிதாகத் தோன்றாத அதே தவறு அல்லது பழக்கம், பிறரிடம் பார்க்கும்போது கேலி, கண்டனத்துக்கு உரியதாகி விடுகிற வேடிக்கையைப் பற்றி ஸ்ரீ அரவிந்த அன்னை இப்படிச் சொல்கிறார்.

"நம்மிடம் ஒரு பலவீனம் இருக்கிறதுஉதாரணமாக கேலிக்குரிய ஒரு பழக்கமோஏதோ ஒன்று தவறாகவோஅல்லது அரைகுறையாகவோ இருப்பதாக வைத்துக் கொள்வோம்அது நம்முடைய சுபாவத்தின் ஒரு அங்கமாகவே ஆகிவிடுவதால்அது இயல்பானது தான் என்று கருதுகிறோம்அது எந்தவிதத்திலும் நம்மை அதிர்ச்சிக்கோவியப்புக்கோ உள்ளாக்குவதில்லை!
 
அதே கேலிக்குரிய பழக்கம்தவறுஅல்லது அரைகுறையான விஷயம் மற்றவர்களிடத்தில் பார்க்கும்போதுமிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகிறோம்.

நம்மிடத்திலே அதே குறை இருப்பதைக் கொஞ்சமும் கவனியாமல்அடுத்தவரிடத்தில் அதைப் பார்த்து, "என்னஇவர் இப்படிப்பட்டவரா?" என்கிறோம்!

ஆகநம்மிடம் இருக்கும் அழுக்குடன்அதைக் கவனியாமல் இருக்கிற மடத்தனமும் சேர்ந்து கொள்கிறது.

இதில் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறதுயாரோ ஒருவருடைய ஏதோ ஒரு செய்கைபேச்சு உங்களுக்கு முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாததாகத் தோன்றும்போதுகேலி செய்யத் தோன்றும்போது, "என்னஅவர் அப்படி இருக்கிறாராஅப்படி நடந்து கொண்டாராஅப்படிச் சொன்னாராஅப்படிச் செய்தாரா?" என்று நினைக்கும்போதுஉங்களுக்குள்ளேயே சொல்லிப் பாருங்கள்!

நல்லது!நான் கூட எனக்குத் தெரியாமலேயேஅப்படித் தான் செய்கிறேனோ என்னவோஅவரை விமரிசிப்பதற்கு முன்னால்என்னையே முதலில் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்அதே மாதிரி நானும் வேறெந்த வகையிலும் செய்யாமல் இருக்கிறேனா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்! "

அடுத்தவருடைய நடத்தையைக் கண்டு  "அதிர்ச்சியடையும் ஒவ்வொரு தடவையும்இதே மாதிரி நல்ல விதமாகவும்புத்தியுடனும் இருக்கப் பழகினால்,வாழ்க்கையில் மற்றவர்களுடனான உறவு ஒரு கண்ணாடியில் பிரதிபலிப்பதைப் போல இருப்பதைக் காணமுடியும்நமக்குள் இருக்கும் அழுக்கு,பலவீனங்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

பொதுவாகப் பார்க்கப் போனால்அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை,பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பது தான்,என்ன கொஞ்சம் வித்தியாசமாகமறைவாகஅல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான்நம்மிடம் இருக்கும் குறை பெரிதாகதீமை இல்லாததாகத் தெரிவதுஅடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது!"

1958 ஆம் ஆண்டு நவம்பர் ஏழாம் தேதிஸ்ரீ அரவிந்த அன்னை, "எண்ணங்களும் சிந்தனை மின்னல்களும்என்ற ஸ்ரீ அரவிந்தருடைய நூலில் இருந்துஒரு சிந்தனையை விளக்கிச் சொன்னதன் ஒரு பகுதி. அன்னை நூல் தொகுப்பு நூற்றாண்டுப்பதிப்பு, தொகுதி 10 பக்கம் 20-21 
 

"ஓரடி முன்னால்- ஈரடி பின்னால்"

 


ஸத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோகத்வம்
நிர் மோகத்வே நிஸ் சல தத்வம்
நிஸ் சல தத்வே ஜீவன் முக்தி:

ஆனந்த விகடனில் திரு பரணீதரன் அவர்கள் அருணாசல மகிமை தொடரை எழுதி வந்த நேரம்சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் சரித்திரத்தை எழுதி வந்த பகுதியில்ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய இந்த ஸ்லோகத்தை முதன் முதலாகப் படிக்கிற வாய்ப்புக் கிடைத்தது.
ஒன்றை விடுவதற்கோஅல்லது ஒன்றைப் பிடித்துக் கொள்வதற்கோ மனிதனுக்கு ஒரு இடைப்பட்ட சாதனம் தேவையாக இருக்கிறது.

நேரடியாகவே முழு உண்மையைசத்தியத்தை அறிந்து கொள்கிற வகையில் மனிதகுலம் சிருஷ்டிக்கப்படவில்லை

For man is not intended to grasp the whole truth of his being at once, but to move towards it through a succession of experiences and a constant, though not by any means perfectly continuous self -enlargement.

The first business of reason then is to justify and enlighten to him his various experiences and to give him faith and conviction in holding on to his self-enlargings.

It justifies to him now this, now that, the experiences of the moment, the receding light of the past, the half-seen vision of the future. Its inconstancy, its divisibility against itself, its power of sustaining opposite views are the wohle secret of its value. It would not do indeed for it to support too conflicting views in the same individual, except at moments of awakening and transition, but in the collective body of men and in the successions of Time that is its whole business. “

The Future Evolution of Man என்ற நூலில் ஸ்ரீ அரவிந்தர் மனிதனுடைய பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம் எப்படி இருக்கும் என்பதை விவரிக்கும் சில பகுதிகளைமுந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம்இந்த விஷயத்தைமுழு மொழிபெயர்ப்பாகவோவிமரிசனமாகவோ இங்கு எழுத முற்படவில்லைஇதைப் படிக்கிற போது எனக்குள் எழுகிற சிந்தனையின் தாக்கமே இந்தப் பதிவுஎன்னோடுஇதை படிக்க முன்வரும் நண்பர்களுக்கும் ஒரு சிறிய அறிமுகம்அவ்வளவு தான்.

ஒரு சிறு குழந்தையைப் போலதட்டுத் தடுமாறிகுளறிதடுக்கி விழுந்துஇப்படியாக trial and error ரீதியில் ஒவ்வொரு அனுபவமாகஅதன் படிப்பினையாகபிறகு வேறொரு அனுபவம் அதன் மேல் படிப்பினை என்ற தொடர் சுழற்சியிலேமனிதன் உண்மையை நோக்கி முன்னேறுகிறான்.
உண்மையைத் தேடுகிறேன் என்று எல்லோரும் தான் சொல்கிறார்கள்ஆனால் ஒவ்வொரு விதமாகச் சொல்கிறார்களே என்று தோற்றும்.குருடர்கள் கூடியானையைத் தடவியானை இப்படித் தான் இருக்கும் என்று தனக்கு அனுபவமாகப் பட்டது மட்டுமே உண்மை என்கிற கதை தான்ஒவ்வொருவருவர் சொல்வதிலும் ஒரு பகுதிமட்டுமே உண்மைஆனாலும் முழுமையான உண்மை அல்லஅதனால்சொல்லப் பட்ட பகுதி உண்மையில் கூட சந்தேகம் எழத்தான் செய்யும்.

எதை எதையோ தெரிந்து கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்ஆனால், "நான் யார்என்று கேட்டால் தடுமாறுகிறோம். "நான்என்று எண்ணிக் கொண்டிருப்பது எல்லாம் உண்மையான "நான்அல்ல என்பதைகொஞ்சம் தடுமாற்றத்திற்குப் பிறகு நமக்கே புரிய வரும்.

இந்த வலைப் பதிவின் முக்கியமான நோக்கமே "நான் யார்இங்கு என்ன செய்கிறேன்என்னுடைய உண்மையான கடமை எதுஎன்ற தேடல் தான்
 
எதிலும் முழுமையான ஈடுபாடோ முயற்சியோ இல்லாத இவனுக்கும் அனுபவங்கள் நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தனகற்றது என்ன என்பதை புரிந்து கொள்ள முடியாத மண்டுவாக இருந்த போதிலும்அனுபவங்கள் இவனை ஒரு திசையிலேயே இழுத்து வந்ததை இப்போது நினைத்துப் பார்த்தால்இறைவன் எவ்வளவு கருணையோடு இவனது வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறான் என்பது நெகிழ்ந்து உருக்குகிறது

தாயிற் சிறந்த தயாவான சத்துவன்அவனது தொண்டர்கள் வழியாகவே இறங்கி வந்து இவனையும் ஒரு பொருளாக நயந்து ஏற்றுக் கொண்ட அற்புதம் நிகழ்ந்தது 1975, 1976 ஆம் ஆண்டுகளிலே. பரணீதரன் எழுதிய தொடரைப் படித்து விட்டுஏதோ ஒரு உந்துதலில்.சத்குரு சாது பார்த்தசாரதி பின்னாளில் சுவாமி அண்வானந்தா என்று அறியப்பட்ட வைஷ்ணவியின் அருட் குழந்தைக்குத் தன்னுடைய கவலைகளை வெளியிட்டுக் கடிதம் எழுதினான்.
அது தான் இவன் எடுத்து வைத்த முதல் அடி.

அடுத்துவைஷ்ணவிதேவியின் அணுக்கத்தொண்டர் குழாத்தில் முதல்வரான சத்குரு சாது ராம் சுவாமிகளை மதுரையில் நேரடியாகச் சந்தித்து வணங்கும் பெரும்பேறு கிடைத்ததுஇவ்விருவரே இவனுக்கும் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்,ஸ்ரீ ரமண மஹரிஷி, [வள்ளிமலைதிருப்புகழ் ஸ்வாமிகள் இவர்களுடனான சம்பந்தத்தை அருளியவர்கள்.
தந்தையின் மரணம்இவனை வேறு ஒரு திசைக்கு இட்டுச் சென்றது.

இடது சாரிச் சிந்தனைகள்நாத்திகம்எதையும் எதிர்மறை ஆகவே பார்க்கிற ஒரு வரட்டுப் பிடிவாதம் இப்படி ஏகப்பட்ட முரண்பாடுகள்லெனினுடைய வார்த்தைகளில் சொல்வதானால் "ஓரடி முன்னால்ஈரடி பின்னால்என்று சாண் ஏறி முழம் வழுக்குகிற கதையும் அரங்கேறியது.

ஆனாலும்இந்த சாபமும் ஒரு வரமே என்பது இப்போது திரும்பிப் பார்க்கையில் புரிகிறதுகுரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்றாலும்பரிணாமச் சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழற்ற முடியாதுகுரங்குச் சேட்டைகள் கொஞ்சம் மீதமிருந்தாலும்மனிதன் குரங்கின் நிலைக்கு ஒருபோதும் கீழிறங்கி விட முடியாது.

Forward, for ever forward!
At the end of the tunnel is the light…
At the end of the fight is the victory!

1948 ஆம் ஆண்டுத் தொடக்கத்தின் வாழ்த்துச் செய்தியாக ஸ்ரீ அரவிந்த அன்னை அருளிய இந்த வார்த்தைகள்

"முன்னேறு முன்னேறிக்கொண்டே இரு
பயணத்தின் முடிவில் வெளிச்சம்
போராட்டங்களின் முடிவில் வெற்றி!"

சாண் ஏறி முழம் சறுக்குகிறது ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்பதெல்லாம் ஆக்க மாட்டாதவன்தன்னுடைய இயலாமையை மூடி மறைக்கும் வார்த்தைகள் மட்டுமே.
நாம் எதிர் கொள்ளும் ஒவ்வொரு தருணமும்நிகழ்வும் தெய்வ சித்தத்தினாலேயே தீர்மானிக்கப் படுபவைஇன்றைய வலிதுயரம்,தோல்வி என்பதெல்லாம்உண்மையில் வெற்றிக்கான படிக்கட்டுகளே என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை.

எனது அறியாமையில் எழுகிற ஆசைகளின் படியல்லதெய்வ சங்கல்பப் படியே எல்லாம் நடந்தேறட்டும்தெய்வ சங்கல்பத்தை நிறைவேற்றுகிற ஒரு கருவியாகஇவனையும் திருத்திப் பணி கொள்வாய் என்பதே ஸ்ரீ அரவிந்த அன்னையிடத்தில்இன்றைக்கு வேண்டிக்கொள்ளும் வரம்.

**2009 ஜனவரியில் எழுதியதன் மீள்பதிவு. இங்கே பதிவுகள் எழுதி என்னஆகப்போகிறது என்ற மனநிலை இன்னமும் நீடிப்பதால் இப்படி ஒரு மீள் பதிவு.    

ஸ்ரீ அரவிந்த அன்னை அருளிய ஓரு பிரார்த்தனை!




Hidden in an earthly garment that survives,
I am the worldless being vast and free.
-Sri Aurobindo

March 1, 1914

 
“IT is in one’s own self that all the obstacles lie,

IT is in one’s own self that all the difficulties are found,

IT is in one’s own self that there is all the darkness and ignorance.


Were we to travel throughout the earth, were we to go and bury ourselves in some solitude, break with all our habits, lead the most ascetic life, yet if some bond of illusion held back our consciousness far from Thy absolute Consciousness, if some egoistic attachment cut us off from the integral communion with Thy divine Love, we would be no nearer Thee despite all outer circumstances.


Can any circumstances be considered more or less favorable? I doubt it; it is the idea we have about them which enables us to profit much or little by the lessons they give us.

O Lord, I implore Thee! Grant that I may be perfectly conscious and master of all that constitutes this personality, so that I may be delivered from myself and Thou alone mayst live and act through these multiple elements.



To live in Love, by Love, for Love, indissolubly united to Thy highest manifestation....



Always more light, more beauty, more truth!”

-The Mother

“Prayers and Meditations” 

1956 பிப்ரவரி 29! ஸ்ரீ அரவிந்த அன்னையின் அனுபவம்!



Meditation on Wednesday, the 29th February 1956. She gave us a passage from her own diary of experiences and realisations:
"This evening the Divine Presence, concrete and material, was there present amongst you. I had a form of living gold, bigger than the universe and I was facing a huge and massive golden door which separated the world from the Divine. As I looked at the door, I knew and willed, in a single movement of consciousness, that "the time has come", and lifting with both hands a mighty golden hammer I struck one blow, one single blow on the door and the door was shattered to pieces.
"Then the supramental Light and Force and Consciousness rushed down upon earth in an uninterrupted flow."
This reminds us of the 15th mantra of the Isha Upanishad as translated by Sri Aurobindo:
"The Face of Truth is covered with a brilliant golden lid; that do thou remove, O Fosterer, for the law of the Truth, for sight."
Sri Aurobindo goes on to explain the significance of the word "Fosterer": "In the inner sense of the Veda Surya, the Sun-God, represents the divine Illumination of the Kavi which exceeds mind and forms the pure self-luminous Truth of things.....
"He is the Fosterer or Increaser, for he enlarges and opens man's dark and limited being into a luminous and infinite Consciousness....His rays are the thoughts that proceed luminously from the Truth, the Vast, but become deflected and disordered in the reflecting and dividing principle, Mind. They form there the golden lid which covers the face of the Truth..."
In his New Gayatri mantra, Sri Aurobindo enthrones the Mother as the Devata of the mantra, whereas the original Gayatri mantra had placed the Lord or the Fosterer in the form of the Sun.


29 FEBRUARY THE DAY OF THE LORD
Amal Kiran Remembers...
Now again in 1956 I had to go to Bombay at the end of February. As 1956 was a leap year, it was actually on February 29 that I left Pondicherry. I was to catch the morning train to Madras. So I met the Mother pretty early in the day. She said: "I don't want you to stay away long. Can you come back by the 29th of March?" Evidently she was expecting "great things" once more - the Supramental Manifestation, though she did not specify anything - and she was expecting it within a month's time, perhaps on the 29th of March itself, the date on which, 42 years earlier, she had first come to Pondicherry. I replied, "Mother, I shall surely be back by then." Then I left.
That very day, in the evening, the stupendous thing happened! If I had known, I would never have gone. But I had a strange experience the same night. I need not recount it in detail, for I have told it elsewhere. At Madras I had caught the night-train to Bombay. I was alone in my compartment and I soon fell asleep. Almost at once I had a dream. I saw a huge crowd in an open place - something like the Ashram Playground - and I was on the fringe of the crowd. The Mother was sitting somewhere inside the open place and everybody was going in to do Pranam to her. I also wanted to do it, but somehow I couldn't get the slipper off my left foot - the lame one as you know. I was shaking the foot and trying to fling away the blessed slipper. In the final jerk of that action I woke up. when my eyes opened, I saw the Mother standing in front of me in the compartment. I am a very sceptical fellow as a rule; so I thought I was imagining things. I shut my eyes; I opened them again, and there she still was. I shut my eyes once more and opened them. She was yet standing. This was too much. So I shut my eyes now for a long time. When I opened them, she was gone. Perhaps I should have kept looking and not allowed the sceptic in me to have play. I might have had a deeper experience. But the benefit now was that the sceptic got completely routed. And indelible wonder filled me. And the memory of that strange calm translucent figure has stayed for ever with me.
I wrote of the experience to the Mother, but received no reply.. Only on my return to the Ashram she explained what had occurred. It sounds too self-glorifying to talk of it, but it was a very glorious thing to hear from her. She said: "There were only five people who knew about the Supramental Manifestation - two in the Ashram and three outside." I blurted out: "Then what's the idea of staying in the Ashram?" (laugher) She said: "I don't mean that anybody actually knew the Supermind had manifested, but something extraordinary happened to some people. Among those three who were outside, I count you." Puzzled, I asked: "How's that?" She answered: "Didn't you write to me that on February 29 at night you had seen me in the railway compartment?" I said: "Yes, but what did happen?" She replied: "Do you remember I promised in 1938 to inform you ? I came now to fulfil my promise." I was absolutely overwhelmed. My God! what Grace the Divine could give to a poor fool! I fell at the Mother's feet in deepest gratitude.
Light and Laughter Pg. 89
Amalkiran

ISTM முகநூல் குழுவிலிருந்து நன்றியுடன் இங்கேயும் பகிர்ந்து கொள்ளப்பட்டது