Showing posts with label விடுதலை. Show all posts
Showing posts with label விடுதலை. Show all posts

துப்பில்லாத ஜனங்களுக்குக் கிடைப்பது இது தான்!



தொடர்ந்து அரசியலைப் பற்றியே பதிவெழுதிக் கொண்டிருப்பதில் வெறுத்துப்போய், வேறு உருப்படியான வேலை, படிப்பதைப் பார்க்கப் போகலாம் என்று தான் இருந்தேன்.

ன்றைக்கு சேத் கோடின் மார்கெடிங் துறையைப் பற்றி எழுதிய பதிவொன்றின் முதல் வரி இது:

"People who don't care, selling products to people who care less."

துப்புக் கெட்டவர்களிடமிருந்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் துப்பில்லாத ஜனங்களுக்குக் கிடைப்பது இது தான்!

பானா சீனாவின் பேட்டியை ஊடகங்களில் படித்த போது சேத் கோடின் மார்கெடிங் துறையைப் பற்றிச் சொல்லியிருந்த வாக்கியம் இப்படித்தான் நினைக்கத் தூண்டியது.  

டகங்களில் போபால் தீர்ப்பும், காங்கிரஸ் அரசின்  மெத்தனமும் கிழி கிழியென்று கிழித்துத் தோரணம் கட்டிச் சிவப்புச் சேலைகளாகத் தொங்க விடப் பட்டுக் கொண்டிருப்பதில், ஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 இற்குத் திடீர் சுரணை, சுறுசுறுப்பு வந்து விட்ட மாதிரிக் காட்டிக் கொள்வதற்காக அமைச்சரவைக் குழு அதிக நிவாரணத்தைப் பரிந்துரை செய்திருப்பதைக் கண்டனூர் பானா சீனா 
இன்னமும் மூன்று நாட்கள் அவகாசம் இருந்தும் முன்னாலேயே செய்தியாளர்களிடம் வெளியிட்டிருக்கிறார்.  

னால் அதன் பின்னணிப் பூனைக் குட்டியும் ஊடகங்களில் உடனேயே வெளியே வந்து விட்டதுதான் பரிதாபம்!

நாளைக்கு வாஷிங்டனில் கூடவிருக்கும் இந்திய -அமெரிக்கத்  தொழில் துறை தலைமை நிர்வாகிகளின் கூட்டத்தில் இந்திய அரசு அமெரிக்க மூலதனத்துக்கு எந்த விதத்திலும் இடைஞ்சல், சுமையைத் தராது என்பதைக் கோடிட்டுக் காட்டுகிற மாதிரித் தான், இந்த நிவாரணக் கண்துடைப்பு நாடகம் இருக்கிறது. 


த்தன் டாட்டாவின் தலைமையில் பன்னிரண்டு தலைமை நிர்வாகிகள், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

செத்தவர்களுக்குப் பத்து லட்சம், முழுமையாக
ஊனம் அடைந்தவர்களுக்கு ஐந்து லட்சம், அரைகுறை ஊனமுற்றவர்களுக்கு மூன்று லட்சம் என்று நிவாரணம் வழங்க அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்திருக்கிறது.  ராஜீவ் காந்தி போபால் விஷ வாயுக் கசிவு விவகாரத்தில்  எந்த விதத்திலும் சம்பந்தப்படவே இல்லை என்று  சான்றிதழும் கொடுத்திருக்கிறது.  

மைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு என்பது ராஜீவ் காந்திக்கு மட்டும் இல்லை போல இருக்கிறது!
 

தாயாருடைய மரணத்துக்குப் பழிதீர்ப்பதுபோல டில்லியிலும் சுற்றுப் புறங்களிலும் அதே நேரம் சீக்கிய மக்கள் பலியாகிக் கொண்டிருந்ததை சர்வசாதாரணமாக எடுத்துக் கொண்ட ஒரு பிரதமர், போபால் மக்களுக்கு என்ன ஆறுதல் சொன்னார், என்ன நிவாரணம் வழங்க முயற்சித்தார்? 

தையாவது நேர்மையாக நெஞ்சைத் தொட்டு எந்தக் காங்கிரஸ் காரராவது சொல்ல முடிகிறதா? அர்ஜுன் சிங், செத்துப் போன நரசிம்ம ராவ், இன்னும் பலர் மீது பழியைத் தள்ளிவிட்டு, ராஜீவ் காந்தி மட்டும் உத்தமர், இதெல்லாம் அவருக்கு ஒன்றுமே தெரியாது என்று சாதிக்க வேண்டிய அவசியம் என்ன? ராஜீவ் காந்தி பேர் சந்திக்கு வருகிறது என்றவுடனேயே அமைச்சரவைக் குழு அமைக்கப் பட்டு, நிவாரண அறிவிப்பு உடனே வருகிறதே, இதை ஏன் இருபத்தாறு ஆண்டுகளில் எந்த ஒரு தருணத்திலும் செய்ய காங்கிரஸ் ஆட்சியினால் முடியவில்லை?

து போக, நிவாரணம் எதில் இருந்து கொடுக்கிறார்கள் என்று பார்த்தால், இந்திய அரசு வரியாக வசூலிக்கும் பணத்தில் இருந்து தானாம்! செத்ததற்கு நிவாரணம் கொடுப்பது மத்திய அரசின் பொறுப்பாம்! போபால் யூனியன் கார்பைட்
ஆலை வளாகத்தில் கொட்டிக் கிடக்கும் நஞ்சுக் கழிவை அகற்றும் பொறுப்பு மத்தியப் பிரதேச மாநில அரசை சேர்ந்ததாம்! வருகிற இருபத்தைந்தாம் தேதி, அமைச்சரவைக் கூட்டத்தை இது விஷயமாகக் கூட்ட இருப்பதாகவும் பானா சீனா தெரிவித்திருக்கிறார்.

ண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்று எங்கும் எதிலும் ஊழல் செய்து சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தைப் பறிமுதல் செய்து, அதில் இருந்து நிவாரணம் கொடுத்திருந்தால் கூடப் போகிறது என்று சொல்லலாம்! உங்கள் சட்டைப் பையில் இருந்தே பிக்பாக்கெட் அடிக்கிற மாதிரி வரி வசூல் செய்து, அதில் கொஞ்சம் ஊழல் போகக் கிள்ளி எடுத்து  உங்களுக்கே நிவாரணமாகக் கொடுப்பது என்றால்.....? பானா சீனா உள்ளிட்ட அமைச்சரவைக் குழு செய்திருக்கும் வேலை அதுதான்!

ழிசடைக் காங்கிரஸ் அதைவிடக் கடையழிந்த கட்சிகளோடு  கூட்டணி சேர்ந்து நடத்தும் குழப்பமான இந்த அரசிடம் இருந்து வேறெதையும் எதிர்பார்க்க முடியாதுதான்! 


சொந்த ஜனங்களை நொந்து சாகவிட்டு,வெள்ளைத் துரைமாருக்கு அடிமைச் சேவகம் செய்கிற குணம் காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இன்னமும் இருப்பது கேவலமாகக் கூட அவர்களுக்குத் தான் தெரியவில்லை!

டி மேல் அடி வாங்கிக் கொண்டிருக்கிற ஜனங்களுக்குமா இன்னமும் தெரிந்து கொள்ள முடியவில்லை?

வர்கள் நடத்துகிற அரசியல் கூத்துக்கள், தமிழ் சினிமாவில் வரும் நாட்டாமைகள் சொல்கிற தீர்ப்பு மாதிரியே இருப்பது தான் பெரும் கொடுமை! கற்பழித்துச் சீரழித்துவிட்டான் என்று விசாரணை செய்ய வந்தவர்கள், வெறும் ஆயிரமோ, இரண்டாயிரமோ தண்டம் கட்டி விட்டுப் போ என்று சொல்கிற மாதிரிக் கூட இல்லை! நீ பத்திரமாகப் போய்ச் சேர், தண்டத்தை  நாங்களே கட்டிக் கொள்கிறோம் என்று சொல்கிற மாதிரிக் கேவலத்தைத் தான் கண்டனூர் பானா சீனா, இன்றைக்கு செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

ப்படிக் கடையழிந்த காங்கிரஸ் அரசு அணு உலை விபத்து நட்ட ஈடு வரையறை செய்யும் மசோதாவிலும் இந்த மாதிரித் தான் எவனோ வந்து இந்த தேசத்தை சீரழித்து விட்டுப் போவானாம், அவனை ஒன்றுமே செய்யக் கூடாதாம், கட்டுப்படுத்தவோ, நட்டத்தை ஈடு செய்யச் சொல்லிக் கேட்கவோ முடியாதாம்!எல்லாவற்றையும் ஜனங்கள் தலையிலேயே கட்ட முயற்சிக்கிற அயோக்கியத்தனம் அடுத்து, தலைக்குமேல் கத்தி தொங்குவது போல ஒரு சூழலை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.


மெரிக்காவில், இதே யூனியன் கார்பைட் தனது ஊழியர்கள் நச்சுத் தன்மை கொண்ட வேதியியல் பொருட்களால் பாதிக்கப் பட்டபோது வழங்கிய ஈட்டுத் தொகை இரண்டாயிரத்து இருநூறு கோடி டாலர்கள்!  அங்கே உயிர்ச் சேதமோ, போபாலில் நடந்த மாதிரிப் பேரழிவோ இல்லை.

ந்திய உயிர்கள்  அவ்வளவு கேவலமா? அமெரிக்க உயிரை விட இந்திய உயிர் எந்த விதத்தில் தாழ்ந்து போய்விட்டது?




தற்கான ஒரே பதில், துப்புக் கெட்டவர்களை ஆட்சியில் அமர்த்திய ஒரே குற்றத்திற்காக இந்திய மக்கள் சர்வதேச அரங்கில் கேவலப் படுத்தப்பட்டு வருகிறோம். வெள்ளைத் துரைமாருக்குத் தலை வணங்கும் அடிமைகளுக்கு, நாம் அடிமைகளாக ஆக்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம்.

விடுதலை நம் கைகளில் மட்டுமே இருக்கிறது! துப்புக் கெட்ட
அரசியல்வாதிகளிடம் நம்முடைய விடுதலையையும் தொலைத்து விட்ட துப்புக் கெட்டவர்களாக ஆகிவிடாமல் பாதுகாத்துக் கொள்வதும் நம்மிடமே இருக்கிறது.

ன்ன சொல்கிறீர்கள்?

ன்ன செய்யப் போகிறீர்கள்?

கொஞ்சம் உரக்கச் சொல்லுங்கள்!