Showing posts with label அவளே எல்லாம். Show all posts
Showing posts with label அவளே எல்லாம். Show all posts

"ஓரடி முன்னால்- ஈரடி பின்னால்"

 


ஸத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோகத்வம்
நிர் மோகத்வே நிஸ் சல தத்வம்
நிஸ் சல தத்வே ஜீவன் முக்தி:

ஆனந்த விகடனில் திரு பரணீதரன் அவர்கள் அருணாசல மகிமை தொடரை எழுதி வந்த நேரம்சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் சரித்திரத்தை எழுதி வந்த பகுதியில்ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய இந்த ஸ்லோகத்தை முதன் முதலாகப் படிக்கிற வாய்ப்புக் கிடைத்தது.
ஒன்றை விடுவதற்கோஅல்லது ஒன்றைப் பிடித்துக் கொள்வதற்கோ மனிதனுக்கு ஒரு இடைப்பட்ட சாதனம் தேவையாக இருக்கிறது.

நேரடியாகவே முழு உண்மையைசத்தியத்தை அறிந்து கொள்கிற வகையில் மனிதகுலம் சிருஷ்டிக்கப்படவில்லை

For man is not intended to grasp the whole truth of his being at once, but to move towards it through a succession of experiences and a constant, though not by any means perfectly continuous self -enlargement.

The first business of reason then is to justify and enlighten to him his various experiences and to give him faith and conviction in holding on to his self-enlargings.

It justifies to him now this, now that, the experiences of the moment, the receding light of the past, the half-seen vision of the future. Its inconstancy, its divisibility against itself, its power of sustaining opposite views are the wohle secret of its value. It would not do indeed for it to support too conflicting views in the same individual, except at moments of awakening and transition, but in the collective body of men and in the successions of Time that is its whole business. “

The Future Evolution of Man என்ற நூலில் ஸ்ரீ அரவிந்தர் மனிதனுடைய பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம் எப்படி இருக்கும் என்பதை விவரிக்கும் சில பகுதிகளைமுந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம்இந்த விஷயத்தைமுழு மொழிபெயர்ப்பாகவோவிமரிசனமாகவோ இங்கு எழுத முற்படவில்லைஇதைப் படிக்கிற போது எனக்குள் எழுகிற சிந்தனையின் தாக்கமே இந்தப் பதிவுஎன்னோடுஇதை படிக்க முன்வரும் நண்பர்களுக்கும் ஒரு சிறிய அறிமுகம்அவ்வளவு தான்.

ஒரு சிறு குழந்தையைப் போலதட்டுத் தடுமாறிகுளறிதடுக்கி விழுந்துஇப்படியாக trial and error ரீதியில் ஒவ்வொரு அனுபவமாகஅதன் படிப்பினையாகபிறகு வேறொரு அனுபவம் அதன் மேல் படிப்பினை என்ற தொடர் சுழற்சியிலேமனிதன் உண்மையை நோக்கி முன்னேறுகிறான்.
உண்மையைத் தேடுகிறேன் என்று எல்லோரும் தான் சொல்கிறார்கள்ஆனால் ஒவ்வொரு விதமாகச் சொல்கிறார்களே என்று தோற்றும்.குருடர்கள் கூடியானையைத் தடவியானை இப்படித் தான் இருக்கும் என்று தனக்கு அனுபவமாகப் பட்டது மட்டுமே உண்மை என்கிற கதை தான்ஒவ்வொருவருவர் சொல்வதிலும் ஒரு பகுதிமட்டுமே உண்மைஆனாலும் முழுமையான உண்மை அல்லஅதனால்சொல்லப் பட்ட பகுதி உண்மையில் கூட சந்தேகம் எழத்தான் செய்யும்.

எதை எதையோ தெரிந்து கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்ஆனால், "நான் யார்என்று கேட்டால் தடுமாறுகிறோம். "நான்என்று எண்ணிக் கொண்டிருப்பது எல்லாம் உண்மையான "நான்அல்ல என்பதைகொஞ்சம் தடுமாற்றத்திற்குப் பிறகு நமக்கே புரிய வரும்.

இந்த வலைப் பதிவின் முக்கியமான நோக்கமே "நான் யார்இங்கு என்ன செய்கிறேன்என்னுடைய உண்மையான கடமை எதுஎன்ற தேடல் தான்
 
எதிலும் முழுமையான ஈடுபாடோ முயற்சியோ இல்லாத இவனுக்கும் அனுபவங்கள் நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தனகற்றது என்ன என்பதை புரிந்து கொள்ள முடியாத மண்டுவாக இருந்த போதிலும்அனுபவங்கள் இவனை ஒரு திசையிலேயே இழுத்து வந்ததை இப்போது நினைத்துப் பார்த்தால்இறைவன் எவ்வளவு கருணையோடு இவனது வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறான் என்பது நெகிழ்ந்து உருக்குகிறது

தாயிற் சிறந்த தயாவான சத்துவன்அவனது தொண்டர்கள் வழியாகவே இறங்கி வந்து இவனையும் ஒரு பொருளாக நயந்து ஏற்றுக் கொண்ட அற்புதம் நிகழ்ந்தது 1975, 1976 ஆம் ஆண்டுகளிலே. பரணீதரன் எழுதிய தொடரைப் படித்து விட்டுஏதோ ஒரு உந்துதலில்.சத்குரு சாது பார்த்தசாரதி பின்னாளில் சுவாமி அண்வானந்தா என்று அறியப்பட்ட வைஷ்ணவியின் அருட் குழந்தைக்குத் தன்னுடைய கவலைகளை வெளியிட்டுக் கடிதம் எழுதினான்.
அது தான் இவன் எடுத்து வைத்த முதல் அடி.

அடுத்துவைஷ்ணவிதேவியின் அணுக்கத்தொண்டர் குழாத்தில் முதல்வரான சத்குரு சாது ராம் சுவாமிகளை மதுரையில் நேரடியாகச் சந்தித்து வணங்கும் பெரும்பேறு கிடைத்ததுஇவ்விருவரே இவனுக்கும் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்,ஸ்ரீ ரமண மஹரிஷி, [வள்ளிமலைதிருப்புகழ் ஸ்வாமிகள் இவர்களுடனான சம்பந்தத்தை அருளியவர்கள்.
தந்தையின் மரணம்இவனை வேறு ஒரு திசைக்கு இட்டுச் சென்றது.

இடது சாரிச் சிந்தனைகள்நாத்திகம்எதையும் எதிர்மறை ஆகவே பார்க்கிற ஒரு வரட்டுப் பிடிவாதம் இப்படி ஏகப்பட்ட முரண்பாடுகள்லெனினுடைய வார்த்தைகளில் சொல்வதானால் "ஓரடி முன்னால்ஈரடி பின்னால்என்று சாண் ஏறி முழம் வழுக்குகிற கதையும் அரங்கேறியது.

ஆனாலும்இந்த சாபமும் ஒரு வரமே என்பது இப்போது திரும்பிப் பார்க்கையில் புரிகிறதுகுரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்றாலும்பரிணாமச் சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழற்ற முடியாதுகுரங்குச் சேட்டைகள் கொஞ்சம் மீதமிருந்தாலும்மனிதன் குரங்கின் நிலைக்கு ஒருபோதும் கீழிறங்கி விட முடியாது.

Forward, for ever forward!
At the end of the tunnel is the light…
At the end of the fight is the victory!

1948 ஆம் ஆண்டுத் தொடக்கத்தின் வாழ்த்துச் செய்தியாக ஸ்ரீ அரவிந்த அன்னை அருளிய இந்த வார்த்தைகள்

"முன்னேறு முன்னேறிக்கொண்டே இரு
பயணத்தின் முடிவில் வெளிச்சம்
போராட்டங்களின் முடிவில் வெற்றி!"

சாண் ஏறி முழம் சறுக்குகிறது ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்பதெல்லாம் ஆக்க மாட்டாதவன்தன்னுடைய இயலாமையை மூடி மறைக்கும் வார்த்தைகள் மட்டுமே.
நாம் எதிர் கொள்ளும் ஒவ்வொரு தருணமும்நிகழ்வும் தெய்வ சித்தத்தினாலேயே தீர்மானிக்கப் படுபவைஇன்றைய வலிதுயரம்,தோல்வி என்பதெல்லாம்உண்மையில் வெற்றிக்கான படிக்கட்டுகளே என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை.

எனது அறியாமையில் எழுகிற ஆசைகளின் படியல்லதெய்வ சங்கல்பப் படியே எல்லாம் நடந்தேறட்டும்தெய்வ சங்கல்பத்தை நிறைவேற்றுகிற ஒரு கருவியாகஇவனையும் திருத்திப் பணி கொள்வாய் என்பதே ஸ்ரீ அரவிந்த அன்னையிடத்தில்இன்றைக்கு வேண்டிக்கொள்ளும் வரம்.

**2009 ஜனவரியில் எழுதியதன் மீள்பதிவு. இங்கே பதிவுகள் எழுதி என்னஆகப்போகிறது என்ற மனநிலை இன்னமும் நீடிப்பதால் இப்படி ஒரு மீள் பதிவு.    

நான் ஏன் பிறந்தேன்?

நான் ஏன் பிறந்தேன்?  எதற்காகப் பிறந்தேன்? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்ற கேள்விகள் அவ்வப்போது ஒவ்வொரு மனிதனுக்கும் வந்துபோகும். மரணபயம் அல்லது மரணத்தைப் பற்றிய சிந்தனைகள் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு அடிப்படையாக இருப்பதையும்   கொஞ்சம் கூர்ந்து கவனித்துப்  பார்த்தால் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் மரணமிலாப் பெருவாழ்வு பற்றிய சிந்தனையோட்டம் மனிதகுலத்தின் ஆரம்பநாட்களில் இருந்தே  இருந்துவருவதையும் இந்தப்பக்கங்களில் அவ்வப்போது பேசி வந்திருக்கிறோம். முந்தைய பதிவில் சத்தியவான் -சாவித்திரி கதையை வைத்து ஸ்ரீ அரவிந்தர்  சாவித்ரி என்ற மகாகாவியத்தை எழுதியதையும் பார்த்திருக்கிறோம். 


மேலே மதுரை மீனாக்ஷி கோவில் தெற்கு கோபுரம் எதிரே இருக்கும் சொக்கப்ப நாயக்கன் கோவில் தெருவில் இருந்த உறவினர் வீட்டில்தான் பால ரமணனுக்கு மரண அனுபவமும் அதைத் தொடர்ந்து நான் யார்  என்ற கேள்வியும்  அதைத் தொடர்ந்த தேடலில் திருவண்ணாமலைக்குப் புறப்படுகிற நிகழ்வுமாக ......


வீட்டை விட்டு வெளியேறிய  தருணத்தில் ஸ்ரீ ரமணர் எழுதி  வைத்து விட்டுப்போன கடிதம் இன்றைக்கு ஸ்ரீ ரமண மந்திரமாக இருக்கும் அந்த வீட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது  நான் என்று ஆரம்பித்துச் சொல்லப்படுவது  இந்தக் கடிதத்தின் முடிவில் இது என்று ஆகிப்போன முதிர்ச்சி,பக்குவத்தை பகவான் ஸ்ரீ ரமணரின் சரிதத்தில் பார்க்க முடியும்.
மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்தப்பக்கங்கள் உதவியாக இருக்கும் 

ரமணருடைய பாதையை, 'மலைப் பாதைஎன்றே வைத்துக் கொள்ளலாம்.  ஆனால்இந்த மலைப்பாதை,எல்லோருக்கும் எளிதில் வாய்க்குமோ?  இப்படி ஒரு பாதை இருப்பது தெரிந்தாலும்எல்லோருக்கும் அதில் ஈடுபடும் மனமும்வாய்ப்பும் வாய்த்து விடாது என்பதே

"ஒரு தரம் கபாலி சாஸ்திரியாரிடம் கேட்டேன், "உங்களை வணங்கும் போது, உங்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கிற அதே மாதிரி வாசிஷ்ட கணபதி முனி, ஸ்ரீ ரமண மஹரிஷி, ஸ்ரீ அரவிந்தர் மூவருடைய ஆசியும் ஒருங்கே கிடைக்கும் அல்லவா?!"

"ஆமாம்உனக்குக் கிடைக்கும்என்று தனக்கே உரித்தான பாணியில் சாஸ்திரியார் பதிலிறுத்தார்.

இந்தப் பகுதியில் படித்த 'சின்ன நாயனா'வின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப என்னைச்சுற்றி வந்து கொண்டே இருந்ததுஇந்தப் புண்ணிய புருஷர்கள்ஸ்தூல சரீரத்தில் இருந்த காலத்தில்நான் பிறக்கவில்லைநேரடி தரிசனம் பெறுகிற வாய்ப்பும் எனக்கு இருந்ததில்லைஎழுதியவர் எத்தனைபாக்கியம் செய்திருமுடக்கி க்க வேணும் என்கிற நினைப்பிலேயே, எழுத உத்தேசித்திருந்தது தள்ளிப் போனது.கபாலி சாஸ்திரியாரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று மறுபடி அமரும் போதுசங்கரநாராயணன் வார்த்தைகளில் பொதிந்திருந்த திரிவேணி சங்கமத்தைக் கண்டேன். இப்படி மனம் கசிந்து எழுதியது இங்கே 

இப்போது இதெல்லாம் எதற்காக என்கிறீர்களா?

கடந்த இரண்டு வருடங்களாகவே உடல் உபாதைகள்  என்னை முடக்கி வைத்திருப்பதோடு மரணத்தை வலிந்து வரவேற்கிற மனநிலையைத்தூண்டி விட்டுக் கொண்டே இருப்பதை என்னதான் அசட்டை செய்துவிட்டுப் போய்க்கொண்டிருந்தாலும் முற்றிலும் தவிர்க்க முடியவில்லை.

अप्ना तो कोई नहीं, हम काहे को नांहि ।
पार पहूंची नाव जब, मिलि सब बिछुडे. जांहि ॥


தன்னவரென்று எவரும் ஏது, தானும் பிறர்க்கு உறவேது
முன்னம் சேர்ந்தவர் பிரிவரே, படகு கரைதொடும் போது 


மாற்று :

என்ன வரென்று எவருமில்லை, யானும் பிறர்க்கு றவில்லை
பரிசல் கரைசேர்ந்த பின்னே, பயணியர் போவார் தம் வழியே


வாழ்க்கைப் பயணம் ஏதேதோ காரணங்களால் திசை மாறிக் கொண்டே இருக்கிறது. ஏதோ ஒரு இலக்கு வந்ததும் ஒரு சிலர் விட்டு போகிறார்கள் அல்லது நாம் விட்டுச் செல்கிறோம். புது உறவுகள் அல்லது நண்பர்கள் சில காலத்திற்கு சேர்கின்றனர். இவையெல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன. மரணம் என்கிற இலக்கை அடைந்தவுடன் எல்லாமே அர்த்தமற்ற உறவுகளாகி விடுகிறது. அதை ராமகிருஷ்ணர் இப்படிச் சொல்கிறார்.

“கடலில் மிதக்கும் சில கட்டைகள் ஏதோ ஒரு அலையால் நெருங்கி வருகின்றன. அடுத்த ஒரு பெரும் அலை வந்து பிரிக்கும் வரை அருகருகே மிதக்கின்றன. உலகின் உறவுகள் தந்தை-தாய், கணவன் -மனைவி, மகன்-மகள் என்ற உறவுகளும் இப்படிப் பட்டவைதான். எதுவும் உண்மையானது கிடையாது. உண்மையான உறவு என்று ஒன்று உண்டானால் அது இறைவனுடைய திருவடிகள் மட்டுமே” என்று கபீரன்பன் இந்தப் பக்கங்களில்அழுத்தம்திருத்தமாகச்சொல்கிறார்.

பொதுவாக என்னுடைய பிறந்தநாளை நினைவில் வைத்துக் கொள்வதோ கொண்டாடுவதோ வழக்கமே இல்லை என்றாலும் இன்றுடன் 61 வயது நிறைந்து நாளை பிறந்தநாள் (20 மார்ச்) என்று நினைவு  வரும்போது நான் ஏன் பிறந்தேன், எதற்காகப் பிறந்தேன், இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்ற கேள்வி எதற்கும் விடை காணமுடியாமல், கிடைத்த வாய்ப்புக்களை எல்லாம் தவற  விட்டுவிட்டேனோ என்ற  தவிப்பு மட்டும் உருக்கிக் கொண்டிருக்கிறது.


அண்டினபேரை நழுவவிடாதவன் அச்சுதன் என்னை மட்டும் விடுவானோ?

அவன் கைவிடமாட்டான் என்கிற நம்பிக்கையோடு ......

நாளை புதிதாய்ப் பிறக்கிறேன்!

அன்னை பிறந்தாள்! எங்கள் அன்னை பிறந்தாள்!


ஆரோவில் மாத்ரி மந்திர் உள் அறை 


பிப்ரவரி மாதம் பிறந்தாலே, ஒரு இனம்புரியாத பரவசம் வந்து சேர்ந்து விடுகிறது!
வெளியே எத்தனையோ விஷயங்களில் மனம் அலை பாய்ந்தாலுமே கூட, மனம் ஸ்ரீ அன்னையின் பிறந்த நாள் பிப்ரவரி 21 ஆம் தேதி வருவதை ஒட்டி, தரிசன நாள் செய்திக்காகக் காத்துக் கிடக்கிற தவம் கூடவே தொடங்கி விடுகிறது. பல்வேறு காரணங்களால், புதுச்சேரி ஆசிரமத்திற்குச் சென்று நேரில் தரிசன நாள் சிறப்புப் பிரார்த்தனையில் கலந்து கொள்ள நேரம் கைகூடாமல் இருந்தபோதிலுமே கூட, மனம் அங்கே தான் மையம் கொள்ள விரும்புகிறது. அவளே எல்லாம் என்று இருந்துவிடத் தவிப்பு  இப்போதுதான் பற்றிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

 
பிரபலமாக இருப்பது எப்படி இருக்கும் என்பதையும் பார்த்தாயிற்று! போலித்தனமான தலைவரே என்ற அழைப்பில், கூடியிருந்த கூட்டங்கள் எதிலுமே மயக்கம் அதிகமிருந்ததில்லை என்றாலும் அதிலேயே உழன்ற வாழ்க்கையில் இருந்து வெளியே வந்தாயிற்று! நண்பர்களே பகையாகி, உடல்நலமும் கெட்டு, மன நிலையும் ஒத்துழைக்காமல் இருந்த நரகம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. 

 
அனுபவங்கள் ஒவ்வொன்றும், ஒரு காரணத்திற்காகவே நமக்கு அருளப் படுகின்றன. ஒவ்வொரு அனுபவமும் நம்மை உயர்த்துவதற்காகவே! நம்மைப் பக்குவப்படுத்துவதற்காகவே! 

அவரவர்க்கு வேண்டிய விதத்தில், வேண்டுகிற நேரத்தில் கிடைப்பதை என்னுடைய அனுபவத்தில் உணர்ந்து வியந்திருக்கிறேன். வெற்றிகளாக நான் எண்ணிய எதுவும் நிலைக்கவில்லை என்பதோடு வெற்றிகளே என்னுடைய சுமையாகவும் ஆகிப்போனதாய் அறியவும் ஒரு நேரம் வந்தது. உலக அளவீடுகளின்படி நான் வெற்றி பெற்ற மனிதனில்லை! புத்திசாலியுமில்லை!

தோல்விகள், அவமானங்கள் என்னைச் சுருட்டி முடக்கி வைத்து விடவில்லை! ஒவ்வொரு தோல்விக்குப் பின்னாலும், நான் எங்கே தவறு செய்தேன் என்பதைத் தெளிவாகக் காட்டி, நான் போக வேண்டிய பாதை எது என்பதை வழிநடத்தும் வெளிச்சமாக இருப்பதையும்  அறிகிற நேரமும் வந்தது. பூஜ்யத்தைச் சின்னதாக வரைந்தால் என்ன, பெரிதாக வரைந்தால் என்ன? வட்டம் மா'வட்டமாகி விடுமா? அப்போதும் அது பூஜ்யம் தானே!

Consent to be nothing and none என்று  ஸ்ரீ  அரவிந்தர் சாவித்திரி மகாகாவியத்தில் சொல்கிற நிலையை வேண்டிக் காத்திருக்கிறேன் தாயே!


 
மேலே காண்பது  நாளை, 21 ஆம் தேதி புதுவை ஆசிரமத்திற்கு நேரில் செல்ல முடிகிறவர்களுக்கு வழங்கப்படும் தரிசன நாள் செய்தி! இதனுடன்,  பூக்களும் பிரசாதமாகக் கிடைக்கும்! சமாதியைச் சுற்றி அமர்ந்து கூட்டுத் தியானம் செய்கிற நல்ல வரமும், அன்னையின் அறைக்குச் சென்று, அன்னையின் அருளே இன்றைக்கும் சூக்குமமாகச் செயல்படுவதைப் புரிந்துகொள்கிற உன்னதமான அனுபவமும் கிடைக்கும். ஏதோ ஒரு முறை அப்படியொரு நல்வாய்ப்புக் கிடைத்த தருணத்தை நன்றியோடு இப்போது நினைத்துப் பார்க்கிறேன். ஸ்ரீஅரவிந்த அன்னையின் மலர்ப்பதங்களில் சரணடைகிறேன். 

பிரச்சினைகள் சூழும்போது..!


1971 ஆம் ஆண்டு ஆரம்பத்தில்ஒரு நாள், ஸ்ரீ அரவிந்த அன்னை, உதார் பின்டோ என்கிற அடியவரிடம் சொல்கிறார்: "இந்தியாவைக் கருமேகங்கள் சூழ்வதைக் காண்கிறேன்" ஸ்ரீ உதார் பின்டோ அன்னையிடம், அவர் அதைக் குறித்து ஏதாவது செய்ய முடியாதா என்று கேட்க, ஸ்ரீ அன்னை, அதற்கான காலம் கடந்து விட்டதாகக் கூறுகிறார். ஸ்ரீ உதார் பின்டோ: "அப்படியானால், நாங்கள் பிரார்த்தனை செய்வதற்கு ஒரு மந்திரத்தை அருளுங்கள்" அன்னை சிறிது நேரம் சமாதி நிலையில் இருந்த பிறகு அருளிய இந்தப் பிரார்த்தனை, இன்றைக்கும் நம்மை பிரச்சினைகள் சூழும்போது, அவற்றை எதிர்கொள்ளும் வலிமையைத் தருவதாக இருக்கிறது.

இந்த உரையாடல் நடந்த சில மாதங்களிலேயே, பங்களாதேஷ் பிரச்சினை பூதாகாரமாக வெடித்தது, இந்திய-பாகிஸ்தான் யுத்தமாகவும் உருமாறியது.

என்ன செய்வது என்பதைத் தெளிவாக அறிய முடியாத சூழ்நிலையில், இந்தப் பிரார்த்தனை எவ்வளவு வலிமையைத் தந்திருக்கிறது என்பதை, பிரார்த்தனைகளை நம்புகிறவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
“Supreme Lord, eternal Truth, let us obey Thee alone and live according to Truth.”

இப்போது நான் சந்தித்துக் கொண்டிருக்கும் சில தனிப்பட்டபிரச்சினைகள் ஏகப்பட்ட வலி, வேதனைகளைத் தருவதாக, மறுபடியும் தனித்து விடப்பட்டதாக உணர்கிற அளவுக்கு முற்றிக்கொண்டு வருகிறது. இப்படிச் சோர்ந்து விழுகிற தருணங்களில் எல்லாம் ஸ்ரீ அரவிந்த அன்னை என்னோடு துணையாக இருப்பதை வழிநடத்திச் செல்வதை அறிந்தே இருக்கிறேன். நான் தனியன் இல்லை எனக்கொரு அன்னை இருக்கிறாள் அவளே எல்லாமுமாக இருந்து என்னை வழி நடத்துகிறாள் என்கிற நம்பிக்கையே என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.   
   

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே 

புத்தாண்டு குதூகலங்கள், தரிசன நாள் செய்தி,, பின்னே நானும்!



வ்வொரு புத்தாண்டு தினமும் ஸ்ரீ அரவிந்தாசிரமத்தில் மிக சிறப்பாகக் கொண்டாடப்படும் தரிசன நாள். ஸ்ரீ அரவிந்த அன்னை ஸ்தூல உடலில் இருந்த நாட்களில் ஆசிரமத்தில் இருந்த சாதகர்கள் ஒவ்வொருவருக்கும் அந்த வருட காலண்டர், மற்றும் புத்தாண்டு செய்தியுடன் வாழ்த்து அட்டை, எப்போதும் போல அவரவர் பக்குவத்துக்கேற்ப மலர்கள் என்றுஅன்னையின் திருக்கரங்களாலேயே பெறுவார்கள்.


ஸ்ரீ அன்னையை ஆராதிப்பவர்கள், தவமிருந்து அவளுடைய செய்தியை, ஆசியைப் பெறுவதற்காகக் காத்திருக்கும் பொழுது இது.

 
ஸ்ரீ அரவிந்த அன்னையே! உ ன் திருவடிகளை வணங்குகிறேன்.



இரண்டு நாட்களாகவே இணையத்தில் நுழையவே முடியாதபடி, மோடம், கணினி இரண்டுமே படுத்திக்கொண்டிருந்தன.நேற்றிரவே வலையேற்றம் ஆகியிருக்க வேண்டிய இந்தப் பதிவு சுமார் பதினான்கு மணி நேரம் தாமதமாக.இது ஒரு புறம்! இரண்டு வருடங்களாக ஒரு இட ஆக்கிரமிப்புப் பிரச்சினை, உடல்நல குறைவு இப்படி  எல்லாம் சேர்ந்து ஒரு  சோதனையை அனுபவித்தே தாண்டியாக வேண்டிய நேரம்..போதாக்குறைக்கு, நான் சொல்து ஒன்று, அது அர்த்தப் படுத்தப் படுது வேறாக, அதைத் தொட்டு எழும் மனச் சலிப்பு போனஸ் அல்லது இலவச இணைப்பாக! கர்மவினை என்பது இதுதான்!!

என்செயலாவதொன்றுமில்லை என்பதை எனக்கு உணர்த்துவதற்காகவே இத்தனையும் சேர்ந்து நடக்கிறதோ?.

எது எப்படியாகினும், அவளே எல்லாம் என்று இருகைதூக்கி, என்னால் ஆவதொன்றுமில்லை, நீயே பார்த்துக் கொள் என்று ஸ்ரீ அரவிந்த அன்னையிடம் தஞ்சம் புகுந்தாயிற்று.
 



http://www.aurosociety.org/Admin/fckeditor/editor/filemanager/connectors/aspx/fckeditor/userfiles/file/ny2013.jpg