Showing posts with label திராவிடப் பம்மாத்து. Show all posts
Showing posts with label திராவிடப் பம்மாத்து. Show all posts

மண்டே ன்னா ஒண்ணு! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிர்வலைகள்!

மதச்சார்பின்மைக்கு எதிராகப் பேசிவரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று திமுக தலீவர் இசுடாலின் பொங்குகிற அளவுக்குப் போயிருப்பது தமிழக அரசியல் களத்துக்கு மிகவும் விசித்திரமானது! அந்த அளவுக்கு சமீப நாட்களில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவது, அரசியல் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.


அக்னிப் பரீட்சை என்றால் கேள்விகளில் தீப்பொறி பறக்கவேண்டும் இல்லையா? இங்கே கார்த்திகேயன் அமைச்சர் பதில் சொல்வதில் மேற்கொண்டு என்ன கேட்பது எனத்தெரியாமல் பம்முகிறார் என்றால் இது யாருக்கு  அக்னிப் பரீட்சை? கார்த்திகேயனுக்கா? புதிய தறுதலை சேனலுக்கா? வழக்கமான குறுக்கீடுகள், விஷமத்தனமான கேள்விகள் எதுவும் எடுபடாமல் போனதொரு வேடிக்கையான விவாதம்! வீடியோ 37 நிமிடம். வேடிக்கையை ரசித்துத்தான் பாருங்களேன்!

நெஞ்சில் நஞ்சும்,வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டமிடுவது வன்மையான கண்டனத்துக்குரியது. சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துவிட்டு, சட்டவிரோதி ஆகி வரும் ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்வதோடு; சட்டரீதியான நடவடிக்கை தேவை!
Quote Tweet
PuthiyathalaimuraiTV
@PTTVOnlineNews
·
’அக்னிப் பரீட்சை’ இஸ்லாமிய தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் சில இயக்கங்கள் தொடர்ந்து அரசியல் செய்தால் இந்து பயங்கரவாதம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  
#AgniParitchai #RajendraBalaji #BJP #ADMK #Rajinikanth #DMK #MKStalin  

அமைச்சருடைய அக்னிப் பரீட்சை நேர்காணலுக்கு இசுடாலின் இத்தனை கோபமாக ட்வீட்டரில் பொங்குவானேன்? ஊடக எடுபிடிகளுடைய முயற்சி தோற்றுப்போனதால் வந்த ஏமாற்றமா? கோபமா?  

 வீடியோ 9 நிமிடம் 

இப்படி இசுடாலின் பொங்கியதற்கெல்லாம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொஞ்சம்கூட அசருவதாயில்லை! அவர்பாட்டுக்குத் தன் மனதிற்கு சரி என்று படுவதை வெளிப்படையாகப் பேசிக் கொண்டே இருக்கிறார். இது நேற்றைக்கு முகநூல் துக்ளக் வாசகர் குழு ஒரு ட்ரஸ்ட் ஆகத் தொடங்கப்பட்ட நிகழ்வில் பங்குகொண்டு பேசியதென்ன என்பதைக் கொஞ்சம் பாருங்களேன்!

  
வைகுண்டராஜன் சேனல் நியூஸ் 7 மட்டும் இந்த விவகாரத்தை விட்டு விடுமா? பத்திரிகையாளர் மணி முதலில் பொங்குகிறார், அடுத்து விசிகவின் ஆளூர் ஷாநவாஸ்! இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற வார்த்தையை அமைச்சர் சொல்லலாமா? திராவிட அரசியலின் வழக்கமான கதைத்தல்களில் இருந்து விலகி ஒரு புதிய பாதையில் பயணிக்கிறதா அதிமுக என்ற முக்கியமான கேள்விக்கு சரியான பதிலை எவராலும் சொல்ல முடியவில்லை என்பது இந்த 55 நிமிட விவாதத்தின் சாரம்.

ஆக, தமிழக அரசியல்களத்தில் புதிய அதிர்வலைகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏற்படுத்திவிட்டார்! செக்கு மாடுகள் மாதிரி அய்யா புகழ் அண்ணா புகழ் கருணாநிதி புகழ்  எம்ஜியார் புகழ் அம்மா புகழ் என்றே லாவணி பயாடிக் கொண்டிருந்த திராவிட அரசியல் வேறுபாதையில் பயணிக்குமா? உள்ளது உள்ளபடியே பிரச்சினைகள், இருப்பதைத் துணிச்சலுடன் ஒப்புக்கொள்வது முதல்படி. அதிலிருந்து தீர்வுகள் காண முயற்சிப்பது அடுத்தபடி    

மீண்டும் சந்திப்போம்.      

ஈவெரா! பகுத்தறிவு பரிசுத்த ஆவி இனிமேலும் வேகுமா?

பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா? இப்படி கேள்வி எழுப்பிய திராவிடர்கழகத்தின் சேலம் வழக்கறிஞர் அருள்மொழியின் தந்தை கைது செய்யப்பட்டார் என்பதை இப்போது சொன்னால் அதுதானையா செகுலரிஸம் என்று ஈஸியாகக் கடந்துபோய்விடுகிற ஒரு வினோதமான சமூகம் நம்முடையது! துக்ளக் 50வது ஆண்டுவிழாவில் ரஜனிகாந்த் பேசியது என்னவோ 12 அல்லது 13 நிமிடம்தான்! என்ன context இல் பேசினார் என்பதை மறந்து மனம்போன போக்கில் இங்கே சில சேனல் விவாதங்களிலும், அச்சு ஊடகங்களிலும் திரித்துப் பேசினார்கள்! ஆனால் அதை திராவிட jingoism என்று இனம் கண்டுகொள்ள முடியாதபடி வெறும் பரப்புரைகளிலேயே வளர்ந்த திராவிடப் பம்மாத்து தான் என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்?


தந்தி டிவியின் ஆயுத நிகழ்ச்சிக்கு ரஜனியின் நிறம் காட்டுகிறதா பெரியார் பேச்சு என்று தலைப்பிட்டு அந்தப் பேச்சுக்கு சாயம் பூசமுற்படுவது போல இருந்தாலும், ஹரிஹரன் நிகழ்ச்சியை நடத்தியவிதம் தந்திடிவியின் பச்சோந்தித்தனத்தை, இப்போதிருக்கும் திமுக சார்புநிலை இனிவரும் நாட்களில் மாறினாலும் மாறலாம் என்பதைக் காட்டுவதாக இருந்தது என்றே எனக்குப் படுகிறது. வீடியோ 44 நிமிடம்  முதலில் பேசிய துக்ளக் ரமேஷ், ரஜனி துக்ளக் ஆண்டுவிழாவில் என்ன context இல் பேசினார் என்பதைச் சொல்கிறார். சேலம் பேரணியைக் குறிப்பிட்டதில் என்ன நடந்தது என்று தான் சொன்னாரே தவிர ஈவெரா பெயரைக் குறிப்பிடவே இல்லை, ரஜனி தன்னுடைய கட்சியை ஆரம்பித்து அதனுடைய கோட்பாடு என்ன என்று சொன்ன பிறகே அது என்ன சாயம் என்று பார்க்க வேண்டும் என்று மேற்கொண்டு விவாதிக்க விஷயமே இல்லை என்றாக்கி விட்டார். க்ளைமேக்சுக்குப் பிறகு நீட்டிக்கப் படுகிற விஷயத்தை anti climax என்று மட்டும் தான் சொல்ல முடியும். ஆனால் விவாதத்தில் பங்கு கொண்டவர்கள் அத்தனைபேரையும் தனியாகச் சமாளிக்க முடியாமல் திக சார்பில் பேசவந்த ஓவியா திணறியதை ஹரிஹரன் குறுக்குச்சால் ஓட்டிக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? தந்திடிவி ஆதித்தன்கள் நடுநிலை வகிக்க முடிவு செய்துவிட்டார்கள் என்றா? மதில்மேல் பூனை என்றா? ஆனால் நேற்றைய சேனல் விவாதக் கூச்சல்களில் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருந்தது இது தான் என்று தோன்றுகிறது. 

நியூஸ் 7 சேனலில் ஈவெராவைத் தொட்டுப் போரைத் தொடங்குகிறாரா ரஜனி என்று தலைப்பு மட்டும் பிரமாதமாக! ஆனால் 62 நிமிட விவாதத்தின் சாரம் மானாவாரியாக சேற்றை வாரிவீசுவது என்றே இருந்ததால் அதிகப் பொறுமை இருப்பவர்கள் மட்டுமே பார்க்கக் கூடியதாக! வரவர சேனல் விவாதங்களைப் பார்க்கவும் கூட எதையும் தாங்கும் இதயம் வேண்டி இருக்கிறதே! இதயத்தை இரவல் கொடுத்தவரும் வாங்கியவரும் போய்ச் சேர்ந்து விட்டார்கள் என்கிற நிலையில் அவர்கள் ஆரம்பித்துவைத்த தெருக்கூத்தின் தாக்கம் இன்றைக்கு அவர்கள் வழி வந்தவர்களைப்  பதம் பார்க்கக் கிளம்பியிருக்கிறதோ? News 18 தமிழ் சேனலின் குணசேகரன் எப்படித் துடித்திருப்பார், தவித்திருப்பார் என்பதைக் கற்பனை செய்து பார்ப்பதே சுகமாக இருக்கிறது! லிங்க் வேண்டுமா? பின்னூட்டத்தில் கேளுங்கள் தருகிறேன்!😎😎😎     

இப்போதும் கூட ரஜனியை ஒரு மாற்றத்துக்கான தொடக்கம் என்றோ நம்பிக்கை நட்சத்திரம் என்றோ என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் செலெக்டிவாக இந்துமதத்தை இழிவுபடுத்துவதை ஒரு தொழிலாகவே வைத்திருக்கும் உதிரிகள், திக, விசிக, மார்க்சிஸ்டுகள் இப்படிப் பலவிதமான கும்பல்களைக் கதற விட்டிருக்கிறார் ரஜனி என்பதில் சந்தேகமே இல்லை! 


ரஜனியை ஏற்காத டாக்டர் சுப்ரமணியன் சுவாமியே கூட இந்தவிஷயத்தில் ரஜனி உறுதியாக நின்றால் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ள உதவி செய்வேன் என்று சொல்லியிருக்கிறார்! அது மட்டுமா? சோனியா மாப்பிள்ளை ராபர்ட் வாத்ரா நில ஊழல் விவகாரங்களில் சிக்கியிருப்பதில் நேற்று ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதில் டாக்டர் சுவாமி என்ன சொல்லியிருக்கிறார் என்றும் பாருங்கள்! வீடியோ 10 நிமிடம்.    


மாப்பிள்ளை செல்லம் ராபர்ட் வாத்ரா நில ஊழல்களில் மாமியார் பெயரும் சிக்கியிருப்பது இந்திரா மெச்சிய இத்தாலிய மருமகளின் விதி! 

மீண்டும் சந்திப்போம்.
       

அரசியல் இன்று! தகர்க்கப்படும் பிம்பங்கள்! ஈவெரா!

பதிவர் கிரி சுவாசிக்கப்போறேங்க தளத்தில் எழுதிய ஒரு கருத்துக்கு எதிராகத் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். ரஜனி காந்த் என்கிற ஒரு நடிகனை நான் ரசித்தது இல்லை என்பதை இந்தப் பக்கங்களில் மிகவெளிப்படையாகவே எழுதி வந்திருக்கிறேன். அதேபோல அவருடைய அரசியல் பிரவேசம் குறித்தான  ஊகங்களைப் பற்றி இன்னொரு ஊகமாகச்  சொல்வதற்கு ஒன்றுமே இல்லை என்பதால் அதைப் பற்றி எதையுமே நான் எழுதியதில்லை.

ஆதாரம் வேண்டுமா? கி வீரமணியின் 
ஒப்புதல் வாக்குமூலம் இருக்கவே 
இருக்கிறது! இன்றைய துக்ளக் 
அட்டைப்பட நையாண்டி!  

ஆனால் எப்போதும் சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் எதையாவது சொல்லிவிட்டுப் போய்விடுகிற ரஜனி ஒருவாரத்துக்கு முன்னால் துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய ஒருவிஷயத்துக்காக, இங்கே திராவிடங்கள்   கதறுவது, பதறுவது, சமாளிப்பு, மறுப்பு, மன்னிப்புக் கேள் இல்லையேல் வீடு முற்றுகை என்றெல்லாம் கூவுவதற்கெல்லாம்  இன்று காலை ஒரு  தெளிவான பதிலைச் சுருக்கமாகச் சொல்லி விட்டார்.
ஒரு தீர்மானத்தோடுதான் இருக்கிறார்  என்பதைக் காட்டிய முதல் நிகழ்வு இதுதான் என்பது என் பார்வை.


ரஜினிகாந்தும் மற்றவர்களும் காட்டுகிற ஆதாரம், திராவிடங்களின் வெற்றுக்கூச்சல், மிரட்டல்கள் எல்லாமே ஒருபொய்யைத் திரும்பத்திரும்பச் சொல்வதாலேயே உண்மையாகிவிடாது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.


யார் சொல்வது பொய் என்ற கேள்விக்கு சாணக்யா தளத்தின் இந்த 3 நிமிட வீடியோ விடை சொல்கிறது.


நேற்றே WIN News மக்களுக்காக நிகழ்ச்சியை உண்மை கண்டறியும் விவாதமாக ஒரு 59 நிமிடம் நடத்தி முடித்து விட்டார் மதன் ரவிச்சந்திரன். திராவிடப்புரட்டுகள் சாயம் வெளுத்துப்போனது எல்லாத்திக்கிலும் பரவுகிறதே!   உண்மை என்று பத்திரிகை நடத்தினால் மட்டும் திராவிடர் கழகம் செய்கிற புரட்டுகள் உண்மை ஆகிவிடுமா? 


1971 இல் நடந்தது என்ன? நேரடியாகப் பார்த்தவர், எதிர்த்து கண்டன கோஷம் போட்டவருமான  திரு K N லட்சுமணன், ஒரு வழக்குப் போட்டதையும் தானும் சோவும் சாட்சியம் சொன்னதையும் அது தள்ளுபடி செய்யப் பட்டதையும் சொல்கிறார். சுபவீக்கள் என்ன தான் மழுப்பலான சமாளிப்பு செய்தாலும் உண்மையை நீண்டகாலம் மறைக்க முடியாது.

ஆக தமிழக அரசியலில் ரஜனிகாந்த், ஈவெரா மீது கட்டமைக்கப்பட்ட மாயபிம்பத்தை பங்ச்சர் செய்து முடித்துவிட்டார் என்பதை மறுக்க முடியாது என்பது தான் செய்திகள் காட்டும் உண்மை. 

மீண்டும் சந்திப்போம்.       

கேட்டது கிடைக்கும்! #அரசியல் செய்தி! அக்கப்போர்! எதுவேண்டும் சொல் மனமே!

இன்றைக்கு காலையில் பார்த்த முதல் காமெடிச் செய்தி, நாளை திமுக நடத்துவதாக இருந்த மொழிப் போராட்டம் தற்காலிகமாக  ஒத்திவைக்கப்படுவதாக! வேடிக்கைதான்!  அதென்ன தற்காலிகமாக ஜகா வாங்குவது என்று திமுகவின் இசுடாலினிடம் யாரும் கேட்காமலேயே அவரே விளக்கமும் சொன்னார் என்கிறது செய்தி!


தமிழக ஆளுநர் உறுதி அளித்தாராம்! அதைக் கேட்டுக் கொண்டு திமுக தலீவர் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைத்தாராம் என்பது காதில் பூ சுற்றுகிற வழக்கமான திராவிடப்பம்மாத்து தான்!  கீழே சுபவீ எப்படி பூ சுற்றுகிறார் என்பதை ஒரு 23 நிமிட வீடியோவாக 



இது 1965 இல்லை. அந்தநாட்களில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை என்னமோ தாங்களேதான் உருவாக்கி, வழி நடத்தி 1967 இல் தமிழ்நாட்டில் ஆட்சியையும் பிடித்ததாக நினைத்துக் கொண்டிருந்தால், அதைவிட காமெடி வேறொன்று இருக்க முடியாது!1967 இல் நடந்தது ஒரு விபத்து மட்டும் தான்! அந்த சிறுவிபத்தைக் கூடத் தாக்குப்பிடிக்க முடியாமல் காங்கிரஸ் 52 வருடங்களாக கோட்டைவிட்டுக் கொண்டிருப்பது காங்கிரசின் பலவீனமே தவிர திமுகவின் பலத்தால் அல்ல! 


ஹிந்தி தேவையா? இல்லையா?  இதை   யார் முடிவு செய்வது? இந்த 18 நிமிட விவாதம் மூன்று மாதப் பழசுதான்! ரங்கராஜ் பாண்டேவிடம் Behindwoods கற்றுக்குட்டி கேபிரியல் தேவதாஸ் விவாதிக்கிறார் அல்லது கேள்வி கேட்கிறார், இப்படியெல்லாம் சொல்ல ஆசைதான்! வீடியோவுக்கு அவர்களாகவே தலைப்பு வைத்துக் கொண்ட மாதிரி காரசாரமான விவாதம் எங்கே என்று என்னிடம் கேட்கவேண்டாம்!😎🙏  


அமைச்சர் ராஜேந்திர பாலாஜி! ஆரம்பநாட்களில் இவர் போன்ற அதிமுக ஆசாமிகளை நான் அவ்வளவாக சட்டை செய்ததுமில்லை, பதிவுகளில் பேசுபொருளாக எடுத்துக் கொண்டு  எழுதியதுமில்லை! ஆனால் எல்லோருக்கும் ஒரு காலம் வரும் இல்லையா! இது ராஜேந்திர பாலாஜியின் காலம் போல! திருச்சி வேலுசாமி போன்ற காங்கிரஸ்காரரை இங்கே நன்றாக வெளுத்து வாங்குகிறார்! கொஞ்ச காலத்துக்கு முன் திமுக பெருந்தலைகள் மாட்டிக் கொண்டார்கள்! வீடியோ 15 நிமிடம்! 

Kiran ji, a few things. This press conference was dedicated to Cabinet decisions. I began by saying that I was there in my capacity as Chair of the GoM which has dealt with the matter. is out of country for an international meet. 1/3
Quote Tweet
Kiran Mazumdar Shaw
@kiranshaw
·
E-cigarettes banned, says Finance Minister Nirmala Sitharaman - Shd this not come from Min of Health? How about banning gutka too? How about MoF announcing some fiscal measures to revive economy? ndtv.com/india-news/e-c
9:08 AM · Sep 19, 2019 

ட்வீட்டர் அக்கப்போர்களில் இது கொஞ்சம் ஆக்கபூர்வமான அக்கப்போர் என்று நான் சொன்னால் நம்புவீர்களா? Biocon நிறுவனத்தின் கிரண் மஜும்தார் ஷா எலெக்ட்ரானிக் சிகரெட்டுகளைத் தடை செய்வதாக சமீபத்தில் நிதியமைச்சர் நிருபர்கள் கூட்டத்தில் அறிவித்ததைக் குறித்து  கேள்வி கேட்டிருக்கிறார்! இது ஹெல்த் மினிஸ்டர் சொல்லியிருக்க வேண்டிய விஷயமில்லையோ? இது அம்மணியுடைய கேள்வி! இது அடுத்தது: குட்காவையும் தடைசெய்திருக்க வேண்டாமோ?  பொருளாதாரத்தை   புத்துயிரூட்ட  நிதியமைச்சகம் என்ன அறிவிக்கப்போகிறது? இதுதான் மெயின் கேள்வி! அதற்கு 2 துணைக்கேள்விகள் வேறு! அதற்கு நிர்மலா சீதாராமன் மூன்று ட்வீட்டுகளில் பதில் சொன்னார்.

As Finance Minister — you might’ve observed — I’ve been working on and regularly speaking about measures we’ve been taking on matters of the economy. 3/3
135
150
1.3K
I now understand n I stand corrected. Tks for explaining my confusion. Really grateful for your response.

நம்மூர் திராவிடப்பம்மாத்துகள் மாதிரி, வெட்டிஜம்பத்துக்கு  ஷோ காட்டிக்கொண்டு இருக்காமல் கிரண் மஜூம்தார் தன்னுடைய 3 கேள்விகளுக்கும் நிதியமைச்சர் சொன்ன பதில்களை ஏற்றுக் கொண்டு, தன்னுடைய தவறைத் திருத்திக் கொண்டதாக, நன்றியும்  தெரிவித்திருக்கிறார்.

அக்கப்போர் கழகங்கள் என்றைக்காவது தங்கள் தவறைத் திருத்திக் கொண்டதாகப் பொதுவெளியில் எப்போதாவது சொல்லக் கேட்டிருக்கிறீர்களா?   

மீண்டும் சந்திப்போம்.