மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் தேசம் என்ன நினைக்கிறதாம்?

இந்தியா டுடே இதழ் வருடத்துக்கொருமுறையோ என்னவோ Mood of The Nation தேசம் என்ன நினைக்கிறது என்ற மாதிரி ஒரு சர்வே எடுத்துப் போடுவதுண்டு! இந்த ஜனவரி 23 அன்று அப்படி ஒரு சர்வே நடத்தி முனகி இருப்பதன் சாரம் இங்கே.  சர்வே முடிவாக Economy and CAA protests hurt, but Narendra Modi's chest size almost intact: Mood of the Nation 2020 என்று இருந்தால் ராஜதீப் சர்தேசாய் முகத்தில் ஈயாடாதா பின்னே? !! 
  

சேகர் குப்தா கூட காங்கிரசுக்கு ஆதரவாகக் கூவும் ஊடகக்காரர் தான்! அவரையே இந்த தேசம் என்ன நினைக்கிறதாம் சர்வே முடிவுகளை விளக்குகிற மாதிரி ஒரு 12 நிமிட வீடியோவில் பார்த்து விடலாம்! என்ன சொல்கிறார் என்பதற்கு நான் விளக்கவுரை தனியாக எழுதப்போவதில்லை! காங்கிரசுக்கு நல்ல சேதி எதுவும் இந்த சர்வே முடிவுகளில் இல்லை! இன்றே தேர்தல் நடந்தால் பிஜேபி+ (NDA) வுக்கு 303 சீட்டுகள். சிவசேனா கழன்று கொண்டதால் மேற்குப்  பகுதியில் 50 இடங்கள் குறையலாம் என்றதற்குப் பின்னாலும் 303 சீட்டுகள்! காங்கிரசின் ஐமுகூ (UPA) வுக்கு அதிகபட்சம் 108 சீட் என்றால், சுவாரசியம் என்ன இருக்குமாம்? 



வடகிழக்கு மாநிலங்களில், குறிப்பாக அஸ்ஸாமில் அமைதியை ஏற்படுத்துகிற விதத்தில் போடோ இனத் தீவீரவாதக்குழுக்களுடன் அசாம் அரசு, மத்திய அரசு சார்பில் அமித்ஷா என ஒரு முத்தரப்பு உடன்பாடு  கையெழுத்திடப் பட்டிருப்பதில்  ஜனவரி 30 ஆம் தேதி அன்று சுமார் 1550 போடோ தீவீரவாதிகள் தங்களது ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்து சரணடைவார்கள் என்பது ஒரு நல்ல செய்தி. கொஞ்சம் விரிவாகப் படிக்க இங்கே   

Earlier this month, The Amit Shah led Home Ministry also inked an agreement to end the 22-year-old Bru refugee crisis by facilitating their resettlement in Tripura. The refugees numbering over 34,000 belong to 5,300 families. They were forced to migrate from Mizoram following tribal unrest, back in 1997. ஒரே இந்தியா நியூஸ் தளத்தில் நண்பர் LK என்று நண்பர்கள் வட்டாரத்தில் அழைக்கப்படும் கார்த்திக் லட்சுமிநரசிம்மன், 22 ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ப்ரு அகதிகள் பிரச்சினை பற்றி எழுத ஆரம்பித்தார். அவர்களுக்கும் ஒரு விடிவுகாலம் ஜனவரி 16 ஒப்பந்தப் படி பிறந்திருக்கிறது. ஒப்பந்தம், பிரச்சினை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள மேலே சிவப்பெழுத்தில் இருக்கும் சுட்டிகளில் க்ளிக் செய்து வாசிக்கலாம். ஒரு பக்கம் அரசுக்கு எதிராக போராட்டங்கள், வன்முறை எனப் போய்க்கொண்டிருந்தாலும் மத்திய அரசு, நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைக் கண்ணிருப்போர் பார்க்கட்டும்!   


பானாசீனாவை வழிமொழியவில்லை என்கிற சோகம் சதிஷ் ஆசார்யாவுக்கு! அதற்காக The Wire தளம் மாதிரி, பிஜேபி பக்கம் சாய்கிற மாதிரி சொல்லப் பட்டதற்கே MNS தனிக்கடை நடத்தும் ராஜ் தாக்ரேவுக்கு பிடி சாபமா விட முடியும்? அசோக் சவான் வேறு இன்றைக்கு, உத்தவ் தாக்கரேவிடம் எழுதி வாங்கிக் கொண்ட பிறகுதான் அரசு அமைக்கவே சம்மதித்தார் என்று ஜம்பம் அடித்துக் கொண்டிருக்கிறார். சதீஷ் ஆசார்யா என்னதான் செய்வார்?


ஹிந்துவில் சுரேந்திரா டாம் அண்ட் ஜெரி கார்டூன் மாதிரி ஆம் ஆத்மி கட்சி கோட்டையாக டில்லி இருப்பதாக வரைந்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்.
டில்லியின் மிடில் கிளாஸ் வாக்காளர்கள் ஆம் ஆத்மி கட்சியைக் கைகழுவுகிற  அடையாளம் எதுவும் தென் படவில்லை என்பதென்னவோ நிஜம்!


இங்கே கழகங்களை பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று குறைப்பட்டுக் கொள்ளக் கூடாது இல்லையா? !!
     
   
அமேசான் எழுத்தார்களைப் பற்றிச் சொல்லாவிட்டாலும் கூட சாமிகுத்தம் ஆயிடுமோ? 😎😎 

மீண்டும் சந்திப்போம்.  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!