Showing posts with label சினிமா அரசியல். Show all posts
Showing posts with label சினிமா அரசியல். Show all posts

#துக்ளக் ரமேஷ்! #ரஜனிகாந்த் மறுபடியும் முதல்லேருந்தா? #சினிமா என்றால் சீரழிவு!

அரசியல் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்து அதன்மீது நேர்மையாகத் தனது விமரிசனங்கள், கருத்தைப் பதிவு செய்வது தமிழக ஊடகச் சூழலில் அரிதிலும் அரிது ஆனால் ஒரு சிலர் விதிவிலக்காகவும் இருப்பது உண்மை. துக்ளக் வார இதழின் தலைமைச் செய்தியாளராக இருக்கும் திரு.ரமேஷ், அப்படி ஒருசில விதிவிலக்குகளில் ஒருவர் என்பது என்னுடைய கருத்து சொல்லவந்ததைப் பூசி மெழுகாமல், பொய்க்கலப்பில்லாமல் ஆணித்தரமாக எடுத்து வைப்பது துக்ளக் ரமேஷுடைய பாணி! 


இந்த 26 நிமிட வீடியோவில் முதல் 3 நிமிடங்களை FF செய்துவிடலாம்! ஒரிஜினல் பேட்டி 23 நிமிடம் இதில் TTV தினகரனின் அமமுக (உண்மையில் VK சசிகலா) என்ன மாதிரியான தாக்கம், அதாவது அதிமுகவுக்கு எவ்வளவு சேதம் என்று இதர ஊடகங்கள் ஆவலோடு நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு அலைகிற சப்ஜெக்ட் மீது சிம்பிளாகச் சொல்லிவிடுகிறார் (சசிகலாவின் நோக்கம் என்னவாக இருந்தாலும் தீயசக்தி திமுகவை எதிர்ப்பது என்பதிலிருந்து விலகமுடியாது;விலகினால் அது  அரசியல் தற்கொலை என்பது புரிந்துகொள்ளமுடியாத ஒன்றா என்ன?) அப்படியே திமுகவின் வேல்பிடித்து போஸ் கொடுக்கிற அரசியலின் போலித்தனம், தேமுதிக கொஞ்சம் அதிக சீட் எதிர்பார்க்கிற விவகாரம், திமுக கூட்டணியில் இன்னும் தொடர்கிற குழப்பங்கள் என்று தமிழக அரசியல் களநிலவரங்களை, நேரடியாகவே சொல்லிவிடுகிறார் என்பது நான் இந்த நேர்காணலைப் பரிந்துரை செய்வதற்கான காரணம். பாருங்களேன்!


வீடியோ 3 நிமிடத்துக்கும் குறைவு, மறுபடியும் முதலில் இருந்தா? இப்படி அயர்ச்சி எல்லாம் எனக்கு இல்லவே இல்லை! நாயைஆட்டுவிக்கும் வாலாக இருப்பது யார்?சினிமா  KD brothers மட்டுமே தானா? அர்ஜுன மூர்த்தி, அப்புறம் லதா ரஜனிகாந்த், இப்போது இந்த RMM ராஜா. இன்னும் எத்தனைபேர் அந்த மனிதர்  பெயரைச் சொல்லிக்கொண்டு  யாரைக்குழப்ப அல்லது பயமுறுத்த நினைக்கிறார்கள்? ஏதாவது புரிகிறதா? 

தமிழக அரசியலில் சினிமா புகுந்து எப்படி இன்னும் சீரழித்துக் கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான்! ஆனால் இதைக்குறித்து என்ன செய்வது என்று யாருக்குமே, (சினிமாத்துறையில் சிக்கிச் சீரழிந்தவர்களையும் சேர்த்துத்தான்) தெரியவில்லை! 


7th சேனல் மாணிக்கம் நாராயணனுடன் சித்ரா லட்சுமணன் உரையாடல் 27 நிமிடம். வெள்ளித்திரைக்கு பின்னால் இருக்கும் அவலங்கள், துயரங்களை, இந்த வீடியோவை வைத்து முகநூலில் சிவகாசிக்காரன் வலைப்பதிவர் ராம்குமார் அருமையான பகிர்வை நேற்றைக்கு எழுதியிருக்கிறார்

மீண்டும் சந்திப்போம்.

சண்டேன்னா மூணு! #கொரோனாவைரஸ் #அரசியல் #ரஜனிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடி வேண்டிக் கொண்டபடி இன்று நாடெங்கும் மக்களே முன்வந்து ஊரடங்கை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒழுங்கு, சுயகட்டுப்பாடு மிகவும் அவசர அவசியமாகத் தேவைப் படுகிற நேரம் இது. கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் பரவிவருவதில், வளர்ந்த நாடுகளே தடுமாறிக் கொண்டிருக்கின்றன. வர்த்தகப்போரில் மட்டுமல்ல, இந்த நோய்த்தொற்று பரவலைக் கையாளுவதிலும் கூட அமெரிக்கா தோற்று வருவதாக கடுமையான விமரிசனங்கள் வருகின்றன. நோய்த் தொற்று சீனாவிலிருந்துதான் ஆரம்பித்தது என்ற சர்ச்சையைத் தாண்டி, மருத்துவ உபகரணங்கள் சீனாவிடமிருந்துதான் வந்தாக வேண்டும் என்கிற கள யதார்த்தம் மிகவும் உறுத்தலாகத் தெரிகிறது. கொரோனா வைரசை சோதனை செய்வதற்கான கிட்  தென்கொரியாவிலிருந்து இறக்குமதி செய்ய இந்திய அரசு பேசி வருவதாகத் தெரிகிறது.

        
இது ஊரடங்கு உத்தரவல்ல! ஊரையும் மக்களையும் காப்பாற்றிக் கொள்ளச் செய்யப்படும் அக்கறை என்ற வாசகங்கள் சரிதான்! ஆனால் இது வெறும் டீசர் மட்டும் தான்! மெயின் பிக்சருக்கும் தயாராக இருக்கவேண்டும் என்று பிரதமர் சூசகமாகச் சொன்னதையும் புரிந்து கொள்ள வேண்டுமே! 

வீடியோ 35 நிமிடம் 

குவாரன்டைனுக்கு அனுப்பப் பட்ட பிறகும் கூட தான் ஒரு சினிமா பிரபலம் என்று காட்டிக் கொள்ளும் கனிகா கபூர் மாதிரியான பந்தா பேர்வழிகள் நிறைய உள்ள நாடு இது! இவர்போல சினிமா பந்தா பேர்வழிகளை  நிரந்தரமாக விலக்கி வைப்பது உத்தமம்! வீண் வதந்தி பரப்புகிறவர்களையும் சேர்த்துத் தான்! 


கொரோனா வைரஸ் உலக அரசியல், பொருளாதாரம், எல்லாவற்றிலும் அதிரடி மாற்றங்களை உருவாக்கி விட்டதா? வளர்ந்த மேற்கத்திய நாடுகள் தடுமாறுவதில், வளரும் நாடுகள் எதுவும் தயாராக இல்லாத சூழ்நிலையில், அடுத்தது என்ன என்பதை எவராலும் கணிக்க முடியாது என்று சொல்ல நினைத்தாலும் இங்கே இந்தச் செய்தி வேறுவிதமான சூழ்நிலையை சொல்கிறது.  சீனா உலகத்தின் நட்ட நடுநாயகமாய் ஆவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. American Tianxia பற்றி சால்வடோர் பாபோன்ஸ் இப்போது என்ன எழுதுவார் என்று யாருக்காவது கவலை இருக்கிறதா? ஒபாமா மாதிரியே டொனால்ட் ட்ரம்பும் கிடைத்த வாய்ப்புக்களை அலட்சியப் படுத்தி Making America Great Again என்பதை  வெறும் கோஷமாகக் குறுக்கிவிட்டார் என்று சொல்லி விடலாமா?

    
முதலிலேயே தமிழருவி மணியனை நான் ஒரு காமெடி வால்யூவுக்காக மட்டுமே  பொருட்டாக எடுத்துக் கொள்கிறேன் என்பதைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். ரஜனிகாந்த் குடும்பத்திலிருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்: எந்த நம்பிக்கையில் மனிதர் இத்தனை bold ஆகச் சொல்கிறார்? ரஜனிக்கே அதுபற்றிய தெளிவான பார்வை இருக்குமா? வீடியோ 42 நிமிடம்

மீண்டும் சந்திப்போம்.     

சண்டேன்னா மூணு! சாணக்யா! ஒரு சினிமா! H ராஜா!

சண்டே கொஞ்சம் relaxed ஆகப்பார்ப்பதற்கு 3 வீடியோ! அரசியல் கன்டென்ட் இல்லாமலா? மூன்றுமே உள்ளூர் அரசியலைத் தொட்டுத்தான் என்பது எப்போதும் போல இந்தப்பக்கங்களில் உள்ள விசேஷம்தான்! முதலில், சாணக்யா தளத்தில் இருந்து சுடச்சுட ஒரு கன்டென்ட். அவர்கள் வெளியிட்ட ஒருமணி நேரத்திலேயே இங்கும்!


கோலாகல ஸ்ரீனிவாஸ்! பத்திரிகையாளர், அரசியல் விமரிசகராகவும் தொலைக்காட்சி விவாதங்களில் அடிக்கடி பார்க்க முடிகிற முகம். பிரசாந்த் கிஷோர் திமுகவுடன் ஒப்பந்தம் போட்டு, தேர்தல் வேலைகளை ஆரம்பித்திருப்பது 2021 தமிழக தேர்தல் களத்தில் என்னமாதிரியான மாற்றங்களைக் கொண்டுவரும்  என்கிற கேள்வி எனக்குள் ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறது. டில்லி சட்டசபைத் தேர்தல்களில் அரவிந்த் கேஜ்ரிவாலுக்காக வேலை செய்த பிரசாந்த் கிஷோர் & டீம் இப்போது இசுடாலினுக்காக வேலை செய்கிறது என்பது என்ன மாதிரி இருக்கும்?  இந்த 34 நிமிட வீடியோவில் கோலாகல ஸ்ரீனிவாஸ், டில்லி சட்ட சபைத் தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு, வரவிருக்கும் தேர்தல்களிலும் கூட soft hindutvaவை  முன்னெடுக்காமல் ஜெயிப்பது மிகவும் கடினம் என்று சொல்கிறார். தமிழ்நாட்டுக்கு ஏதாவது செய்தி இருக்கிறதா? இசுடாலினும் அதேபாதையில் போவதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறார்! திமுக அப்படி அதிரடி மாற்றங்களுக்குத் தயாராக இருக்கிற கட்சி இல்லை என்று தான் இப்போதைய இமேஜ். அதை பிரசாந்த் கிஷோர் வருகிற 14 மாதங்களுக்குள் மாற்றி விடுவாரா? கொஞ்சம் சுவாரசியமான கேள்விதான்! விடை என்னமோ elusive ஆகவே இருக்கிறது!

    
நேற்றைக்குத்தான் வானம் கொட்டட்டும் திரைப்படம் பார்த்தேன். வழக்கமான மணிரத்னம் படம் போல இல்லை. ராதிகா, சரத்குமார் போன்ற திறமையான நடிகர்கள் இருந்துமே ரொம்பவும் சிலாகித்துச் சொல்வதற்கு அதிக இடம் கொடுக்காத blah blah ரகம் தான்! அந்தப் படத்தில் இருந்த அதே கெட்டப்புடன் சரத் குமார் இந்த 38 நிமிட கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில்! ஈவெரா ரஜனிகாந்த் சர்ச்சையை வைத்து எல்லாரிடமுமிருந்தும் கருத்து வந்தாயிற்று என்று நினைத்துக் கொண்டிருந்தவேளையில் ஹரிஹரனுக்கு சரத்குமாரை விட்டுவிட்டோமே என்ற ஞாபகம் வந்துவிட்டதுபோல! அந்த ஒரு கேள்வியை மட்டும் வைத்து ஓட்ட முடியாதல்லவா? சரத் குமார் சமத்துவ மக்கள் கட்சி என்று நடத்துகிறாரே, அதில் இருந்து ஆரம்பித்து ரஜனி, அப்புறம் விஜய் என்று எல்லாவற்றையும் கோர்த்து நிகழ்ச்சியை ஒப்பேற்றி விட்டார்! தந்திடிவி மீது எனக்கு தனிப்பட்ட அபிமானம், பரிதாபம் எதுவுமில்லை! முதலாளிகளை அனுசரித்துப் போகவேண்டிய நிலையில் இருக்கிற ஹரிஹரன் மாதிரி ஊடகக்காரர்களைப் பார்த்துப் பரிதாபப் படாமல் இருக்க முடியவில்லை!

 

இப்படி status ஜம்பமாகப் போட்டுக்கொள்வதற்காகவே நடத்திய  நேர்காணல் மாதிரி இந்த 32 நிமிட நிகழ்ச்சி இருந்தது! நேர்காணல் என்றால் மேலே விழுந்து பிராண்டுவது அல்ல என்பதை மதன் ரவிச்சந்திரன் எப்போது புரிந்துகொள்ளப்போகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. கேட்ட கேள்விக்கு பதில் வருகிறதா என்பதைப் பொறுத்திருந்து கவனித்துவிட்டு அப்புறம் அடுத்தகேள்வி அல்லது துணைக்கேள்வி கேட்பது என்பதான நல்ல நடைமுறையை பின்பற்றுவது எப்போது நம்மூர் ஊடகக்காரர்களுக்கு கைவரும்?

மீண்டும் சந்திப்போம். 

மண்டேன்னா ஒண்ணு! #அரசியல்! Queen! கிறிஸ்டின் கீலர்!

குடியுரிமைச் சட்டத்திருத்தம் சொல்வதென்ன என்பதைத்  தெரிந்துகொள்ளாமலேயே அர்த்தமற்ற போராட்டங்கள், கலகங்கள், வன்முறை என்று இந்திய அரசியலைத் திசை திருப்ப இடதுசாரிகள், திமுக, காங்கிரஸ் இன்னும் பல உதிரிகள் தொடர்ந்து முயற்சிப்பதன் 2வது பகுதி நேற்றைக்கு JNU பல்கலைக் கழகத்தில் ஆரம்பம் ஆகியிருக்கிறது

,

H ராஜாவை வெறுப்பவர்கள், அவர் எழுப்பும் கேள்விகளை எதிர்கொள்ள முடியாதவர்களே! இந்த 17 நிமிட வீடியோவில் ஒவ்வொரு கேள்விக்கும் தயங்காமல் தெளிவான பதில் சொல்வதை, சில விஷயங்கள்  ஏற்கெனெவே கேட்டிருந்தாலும், இன்னொரு முறை தெளிவாக  உள்வாங்கிக் கொள்வதற்காக கேட்பதால் தவறேதுமில்லையே!  CAA பற்றி மட்டுமல்ல, வங்கிகளின் வராக்கடன் சுமை, அண்மையில் நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பிஜேபி அதிமுக கூட்டணி இருந்ததா என்று பலவிதமான கேள்விகளுக்கும் பதில் சொல்கிறார். முன்பே சொன்னதுபோல H ராஜா எழுப்புகிற கேள்விகளும் சரி, அவரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சொல்கிற பதில்களும் சரி, இங்கே காங்கிரஸ் மற்றும் திராவிடங்களுக்கு அசௌகரியமாக இருப்பது, அவர்கள் பதிலுக்கு வாரியிறைக்கும் வன்மம் கலந்த பேச்சுக்களே சாட்சி. 


Queen! இது ஜெ.வுடைய கதை என்று சொல்லாமல் ஆனால் பூடகமாக இது அவருடைய கதைதான் என்று கௌதம் வாசுதேவ மேனன் இயக்கி வெளிவந்திருக்கிற வெப் சீரீஸ் மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. நம்மூரில் அரசியல் தலைவர்களுடைய கதையைப் படமாக்குவது மிகவும் risky என்பதை மணிரத்னம் அந்த நாட்களில் இருவர் படம் எடுத்துச் சுட்டுக்கொண்டார். அன்றிலிருந்து தமிழ்நாட்டில் அரசியல்படம் பண்ணுவது ஒருபக்கச் சார்பாகவே போய்க்கொண்டிருக்கிற சங்கதி தெரியும் தானே!? கௌதம் மேனன் எடுத்த வெப் சீரிசில் ஜெயலலிதா என்கிற அரசியல் தலைவர் உருவான விதம் சரியாகச் சொல்லப்படவில்லை. நிறைய இடங்களில் சொதப்பியிருக்கிறார். 11 எபிசோடுகளில் முதல் 8 எபிசோடுகள் நத்தைவேகத்தில், அரை குறைத்தனமாக நகர்ந்து, கட்சித்தலைமை அவர் கைகளுக்கு வந்துசேர்ந்ததைக் கூட சரியாகச் சொல்லாமல் .  முடித்திருப்பது என்னமாதிரி biopic என்பதை கௌதம் மேனன் தான் சொல்லவேண்டும்! ஆனால் அவரைத்தவிர மற்றவர்கள் மட்டும்தான் என்னென்னமோ சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்! இதில் கிட்டத்தட்ட ஐந்தரை மணி நேரத்தை வீணாக்கிவிட்டேனே என்பதுதான்  என்னுடைய கருத்து! மேலே சௌகார்ஜானகி சீரிசைப் பார்க்காமலேயே தன்னுடைய அபிப்பிராயத்தை அல்லது ஜெ மீதிருந்த பழைய கோபங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். வீடியோ 17 நிமிடம்.

    The Trial of Christine Keeler 
BBC One சீரிசிலிருந்து ஒரு ஸ்டில் 

56 வருடங்கள் ஆனபின்னாலும் கூட  Profumo Affair என்கிற பெண்பிள்ளை சங்காத்தத்தால் வீழ்ந்த மந்திரி ஒருவருடைய  விவகாரம், ஆறுபகுதிகள் கொண்ட web seriees ஆக BBC One இல் சென்ற ஞாயிறு, திங்கள் என்று முதலிருபகுதிகளும்  தொடங்கி நேற்றோடு மூன்றுபகுதிகள் ஒளிபரப்பாகி விட்டன. பிரிட்டனுடைய துரதிர்ஷ்டம், நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் தான் இல்லையென்றால், ஆட்சியே கவிழ்கிற அளவுக்குப் போன Profumo விவகாரம் ஒன்றுதான் தம்பட்டம் அடித்துக் கொள்கிற அளவுக்கு இன்று வரை இருக்கிறது என்று தெரிந்தால் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள்! இங்கே மணிரத்னங்களும் கௌதம் மேனன்களும் தடுமாறுகிற மாதிரி எல்லாம் இல்லாமல், ஓரளவுக்குப் பிரச்சினையை நியாயமாகவே படமாக்கி இருக்கிறார்கள். பாதிவரைதான் ஒளிபரப்பாகி இருக்கிறது, இன்னும் 3 எபிசோடுகள் பாக்கி இருக்கின்றன. DH Lawrence  எழுதிய Lady Chatterley’s Lover நாவலில் கொஞ்சம்  செக்ஸ் பேசப்பட்டிருந்தது என்பதற்காக 1960 வரை தடை விதிக்கப்பட்டிருந்த ஒரு நாடு பிரிட்டன்  என்பது பிரிட்டிஷ் சமூகத்தின் போலிக் தனத்துக்கு ஒரு நல்ல உதாரணம் என்பது கொசுறு தகவல். இப்படியாகப்பட்ட கண்ணியவான்கள் நாட்டில் ஒரு செல்வாக்குள்ள மந்திரி John Profumo கிறிஸ்டின் கீலர் என்ற ஒரு விபச்சாரியுடன் 1961 முதலே காமவசப் பட்டிருந்தார் என்கிற விவகாரமே 1963 இல் தான் பூதாகாரமாய் வெடித்துக் கிளம்பியது. பிரிட்டிஷ் பார்லிமென்டில் காரசாரமான விவாதம், மந்திரி முதலில் மறுத்துப் பார்த்தார், பிறகு வேறு வழியே இல்லாமல் ராஜினாமா செய்தார். ஒரு விலைமாதுடன் உறவு என்ற பிரச்சினைக்காக அல்ல, அந்தப் பெண்ணின் சில  நண்பர்கள் ரஷ்ய உளவாளிகள் என்று தெரியவந்ததால் தான் என்பது கதைச் சுருக்கம். அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் மோனிகா லெவின்ஸ்கி விவகாரத்தோடு ஒப்பிட்டால், வெறும் சப்பை மேட்டர்! ஆனால் பிரிட்டிஷ் மக்களுக்கு வரலாறுதான் இல்லையென்றால் இந்த மாதிரி மேட்டர் கூட சப்பை என்பது எவ்வளவு பெரிய சோகம்?!

ஜான் ப்ரொஃயூமோ ராஜினாமா செய்துவிட்டு அமைதியாக ஒரு தொண்டுநிறுவனத்தில் தன்னுடைய பணிகளை செய்துவந்தார். 1975 இல் மார்கரெட் தாட்சர், ராணி எலிசபெத்துடன் ஒரே வரிசையில் அமர்ந்து கௌரவிக்கப்பட்டார் என்று உள்ளதைச் சொல்வது ஆன்டி க்ளைமேக்சாக உங்களுக்குத் தெரியலாம்! ஆனால் அதுதானே அரசியல்! கிறிஸ்டின் கீலர் தான் பாவம்! மந்திரி நாடாளுமன்றத்தில் மறுப்புத் தெரிவித்த சமயத்தில் ஸ்பெயினுக்கு ஓடி நிம்மதியற்ற ஒரு வாழ்க்கை. 2017 டிசம்பர் 5 அன்று நுரையீரல் தொற்று நோயால் 75 வயதில் மரணத்தைச் சந்திக்கிற வரை கிறிஸ்டின் கீலரைத் துரத்திக் கொண்டே இருந்தது போல. 
இப்போது எனக்கிருக்கிற ஒரே கேள்வி, ஜவஹர்லால்  நேரு, அவர் தங்கை விஜயலட்சுமி பண்டிட், மகள் இந்திரா இப்படியான பிரசித்திபெற்ற நபர்களுடைய வெளியே தெரியாத இன்னொரு பக்கத்தைத் துணிச்சல் உள்ள ஆசாமி யாராவது எப்போது இந்தமாதிரி சீரியல் எடுத்து  ஆவணப் படுத்துவார்கள் என்பதுதான்! M O மத்தாய் புத்தகத்தின் மீதான தடை இன்றுவரை நீக்கம் செய்யப்படவில்லை என்பதாவது  தெரியுமா?இல்லையா?

The Nation wants to know, Sir! மீண்டும் சந்திப்போம்      
                    

இட்லி வடை பொங்கல்! #16 சனிக்கிழமை ஸ்பெஷல்

இங்கே சினிமாவில் ஹீரோவாக இருந்தவர்களில் இரண்டே இரண்டுபேர்கள் தான் அரசியலிலும் ஹீரோவாக ஆனார்கள்! தமிழ்நாட்டில் எம்ஜியாரும் அடுத்த வீடான ஆந்திராவில் NT ராமாராவும்! அவர்களும், அப்படியே  நீடிக்க முடிந்ததா இல்லையா என்பது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்! 


இங்கே பரட்டைகள் அரசியல் பிரவேசம் குறித்து அவ்வப்போது வாய்ஸ் கொடுத்துக் கொண்டே வருகிறபோதிலும், இன்னமும் வெட்டி வாய்சாக மட்டுமே இருக்கிற சூழ்நிலையில், 2005 ஆம் ஆண்டு, தேதிமுக என்று கட்சியை ஆரம்பித்து, உள்ளாட்சி, சட்டசபை, நாடாளுமன்றம் என்று தேர்தல்களில் தனித்தே போட்டியிட்டு கணிசமான வாக்குவங்கியை உருவாக்கியவர் விஜயகாந்த்! வாய்ப்பேச்சு வீரரல்ல என்று தொடர்ந்து நிரூபித்தவரும் கூட!

வாக்குவங்கி இருந்ததே தவிர அது சீட்டுகளாக மாறவில்லை என்பது, இப்போதுள்ள winner takes all என்பதான வெஸ்ட்மின்ஸ்டர் தேர்தல் முறையில் உள்ள மிகப்பெரிய கோளாறு! அடிப்படையில் உள்ள கோளாறுகளை சரிசெய்யாமல் மறந்துவிட்டு இங்கே ஊடகங்களில் பிரேமலதாவையும் ரெண்டு முருகனையும் மட்டுமே மையப்படுத்திக் கூவிக் கொண்டிருப்பது மிகப்பெரிய நகைமுரண்!


தொடர்புடைய பதிவாக

புதன்கிழமை! படத்தில் ஹீரோ! நிஜத்தில்....?


NT ராமாராவ் கடைசி காலத்தில் லட்சுமி பார்வதியைத் திருமணம் செய்துகொண்டதில் அவருடைய குடும்பம் எதிராக இருந்ததும் மாப்பிள்ளை சந்திரபாபு நாயுடு தெலுகு தேச கட்சி, ஆட்சி இரண்டையும் கைப்பற்றிக் கொண்டதும் நடந்து முடிந்த சமகாலக் கதை. இப்போது அதை நினைவுபடுத்திக் கொள்கிற மாதிரி ஒருபடம்! லட்சுமியின் NTR பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கி வருகிற 22 ஆம் தேதி வெளியாகிறது. ஆந்திர அரசியலில் சந்திரபாபு நாயுடுவை சங்கடப் படுத்துவதற்காகவே எடுக்கப்பட்ட படம் என்பதுமட்டும் இப்போது தெளிவாகி இருக்கிறது. ஒரு சராசரி சினிமா ரசிகனுக்கு  அல்லது அரசியல் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்தப்படம் எப்படி இருக்கப்போகிறது என்பது இனிமேல் தான் தெரியவரும்! Mirchi 9 பண்டிதர்கள் ரிலீசுக்கு முன்னாடியே தோல்வி என்று சொன்னால் சரியாக இருந்துவிடுமா என்ன?

TTV தினகரனோடு ஒட்டிக்கொள்வதில்தான் இப்போது தன் வாழ்வும் உரிமையும் இருப்பதாக பாமகவிலிருந்து பிரிந்து வந்து ஒரு உதிரிக்கட்சியை நடத்திவரும் வேல்முருகன் வேண்டுமானால் நினைக்கலாம்!

கூடுதல் வேடிக்கை என்னவென்றால் காங்கிரஸ் மதிமுக விசிக இடதுசாரிகள், பச்சமுத்து கட்சி, ஈஸ்வரன் கட்சி, முஸ்லீம் லீக் என்று கூட்டணிவைத்தபிறகும் கூட அரசியல்களத்தில் நேரடியாக இயங்காத RM வீரப்பன் கட்சி, சுபவீ செட்டியார் என்று இன்னும்பல உதிரிகளோடும் இசுடாலின் கலந்தாலோசனை செய்த காட்சி, இங்கே உதிரிகளுடைய nuisance value என்னவென்று காட்டுவதாக இருந்ததே!     

சிறிதோ பெரிதோ நாய்க்குடைமாதிரி பெருகி வரும் உதிரிக்கட்சிகளை முற்றொட்டாக நிராகரிப்பதில்தான் ஒரு வாக்காளனுடைய சரியான அரசியல் செயல்பாடு அழுத்தமாகப் பதிவுசெய்யப்படுவதாகவும், அரசியலில் உண்மையான எஜமானர்கள் யார் என்று காட்டுவதாகவும் இருக்கும் என்று இந்தப்பக்கங்களில் தொடர்ந்து சொல்லிவருவதை கவனிக்கிறீர்களா?