Showing posts with label ஊடக விவாதங்கள். Show all posts
Showing posts with label ஊடக விவாதங்கள். Show all posts

சண்டே Supplement! என்ன மாயமோ? #அரசியல்

ஜோதிராதித்ய சிந்தியா ஆரம்பித்து வைத்த நேரம் ரொம்ப ரொம்ப நல்ல நேரம் போல! காங்கிரஸ் கட்சிக்குள் விரிசலும் பிளவும் ஒவ்வொரு மாநிலமாக விரிவடைந்து கொண்டே போகிறது என்று தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. சோனியாG & Co என்ன நடக்கிறதென்றே தெரியாமல் செயலிழந்து நிற்பதும் கூடத் தெளிவாகப் புலப்படுகிறது. பர்கா தத், சாகரிகா கோஸ் போன்ற ஊடகக்காரர்கள் கூட சோனியாG & Co ஒதுங்கி விடவேண்டும்; சரத் பவார், ஜெகன் மோகன் ரெட்டி முதலானவர்கள் காங்கிரசுக்குத் திரும்ப வேண்டும்  என்றெல்லாம் எழுத ஆரம்பித்துவிட்டார்கள்!

 வீடியோ 7 நிமிடம் 

குஜராத்தில் 4+7 காங்கிரஸ் MLA க்கள் தங்களுடைய ராஜினாமா கடிதங்களைக் கொடுத்துவிட்டார்கள் என்கிறது இந்தச் செய்தி. மத்தியப் பிரதேசத்தில் நாளை திங்கட்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தும்படி மாநில ஆளுநர் கமல்நாத்துக்கு அறிவுறுத்தியிருசபாநாயகர் க்கிறார். நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதா இல்லையா என்பதன் மீதான தன்னுடைய முடிவை நாளை அறிவிக்கப் போவதாக சபாநாயகர் பிரஜாபதி சற்று முன் சொல்லி இருக்கிறார். கர்நாடகத்தில் அரங்கேற்றிய அதே நாடகத்தை அப்படியே அரங்கேற்ற காங்கிரஸ் கட்சி விரும்பினாலும், சபாநாயகரை வைத்து இன்னுமொரு நாலைந்து நாள் தள்ளிப்போடலாமே தவிர, ஆட்சி கவிழ்வதைத் தவிர்க்க முடியாதென்பது அவர்களுக்கே நன்றாகத் தெரிகிறது. வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்களில் பகுதி பகுதியாக ராஜினாமா கடிதங்களைக் கொடுத்த சிந்தியா ஆதரவு MLAக்களில் 6 பேருடைய ராஜினாமாவை, அவர்களைச் சந்திக்காமலேயே சபாநாயகர் ஏற்றுக்கொண்டு விட்டார். அதேபோல சபாநாயகரைச் சந்திக்காமலேயே தங்களுடைய ராஜினாமாக்களும் ஏற்கப்படவேண்டுமென்று மீதமுள்ள 16 MLAக்களும் கடிதம் எழுதியிருக்கிறார்கள். M.P. சபாநாயகர், கர்நாடக MLAக்கள் ராஜினாமா விஷயத்தில் உச்சநீதிமன்றம் கொட்டு வைத்ததை கவனத்தில் வைத்துக் கொள்வாரா அல்லவா என்பதை நாளைதான் தெரிந்துகொள்ள முடியும்.16 MLAக்கள் ராஜினாமா ஏற்கப்பட்டால் கமல்நாத் அரசு உடனடியாகக் கவிழும். அல்லாமல்  தள்ளிப்போட்டால் ஒருசில நாட்கள் நீடிக்கலாம், என்பதில் என்ன அப்படி அல்பசந்தோஷம் காங்கிரஸ்காரனுக்கு என்ற கேள்வியை யாருமே கேட்கமாட்டேன் என்கிறீர்களே! 


கொஞ்சகாலத்துக்கு முன்னால் இந்த S.P. லட்சுமணன் யாரென்றே தெரியாது! பேனைப் பெரியாளாக்கும் சேனல்கள் இருக்கும்போது இவரையும்  மூத்த பத்திரிகையாளர், அரசியல் விமரிசகராக  ஆக்கிவிட முடியாதா என்ன?ஆவுடையப்பன் திறந்தவாய் மூடாது 34 நிமிட  நேர்காணலை நடத்தி முடித்ததற்காகவே ஒரு அனுதாப உச்சுக் கொட்டிவிடலாம்!

மீண்டும் சந்திப்போம்.                

சண்டேன்னா மூணு! சாணக்யா! ஒரு சினிமா! H ராஜா!

சண்டே கொஞ்சம் relaxed ஆகப்பார்ப்பதற்கு 3 வீடியோ! அரசியல் கன்டென்ட் இல்லாமலா? மூன்றுமே உள்ளூர் அரசியலைத் தொட்டுத்தான் என்பது எப்போதும் போல இந்தப்பக்கங்களில் உள்ள விசேஷம்தான்! முதலில், சாணக்யா தளத்தில் இருந்து சுடச்சுட ஒரு கன்டென்ட். அவர்கள் வெளியிட்ட ஒருமணி நேரத்திலேயே இங்கும்!


கோலாகல ஸ்ரீனிவாஸ்! பத்திரிகையாளர், அரசியல் விமரிசகராகவும் தொலைக்காட்சி விவாதங்களில் அடிக்கடி பார்க்க முடிகிற முகம். பிரசாந்த் கிஷோர் திமுகவுடன் ஒப்பந்தம் போட்டு, தேர்தல் வேலைகளை ஆரம்பித்திருப்பது 2021 தமிழக தேர்தல் களத்தில் என்னமாதிரியான மாற்றங்களைக் கொண்டுவரும்  என்கிற கேள்வி எனக்குள் ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறது. டில்லி சட்டசபைத் தேர்தல்களில் அரவிந்த் கேஜ்ரிவாலுக்காக வேலை செய்த பிரசாந்த் கிஷோர் & டீம் இப்போது இசுடாலினுக்காக வேலை செய்கிறது என்பது என்ன மாதிரி இருக்கும்?  இந்த 34 நிமிட வீடியோவில் கோலாகல ஸ்ரீனிவாஸ், டில்லி சட்ட சபைத் தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு, வரவிருக்கும் தேர்தல்களிலும் கூட soft hindutvaவை  முன்னெடுக்காமல் ஜெயிப்பது மிகவும் கடினம் என்று சொல்கிறார். தமிழ்நாட்டுக்கு ஏதாவது செய்தி இருக்கிறதா? இசுடாலினும் அதேபாதையில் போவதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறார்! திமுக அப்படி அதிரடி மாற்றங்களுக்குத் தயாராக இருக்கிற கட்சி இல்லை என்று தான் இப்போதைய இமேஜ். அதை பிரசாந்த் கிஷோர் வருகிற 14 மாதங்களுக்குள் மாற்றி விடுவாரா? கொஞ்சம் சுவாரசியமான கேள்விதான்! விடை என்னமோ elusive ஆகவே இருக்கிறது!

    
நேற்றைக்குத்தான் வானம் கொட்டட்டும் திரைப்படம் பார்த்தேன். வழக்கமான மணிரத்னம் படம் போல இல்லை. ராதிகா, சரத்குமார் போன்ற திறமையான நடிகர்கள் இருந்துமே ரொம்பவும் சிலாகித்துச் சொல்வதற்கு அதிக இடம் கொடுக்காத blah blah ரகம் தான்! அந்தப் படத்தில் இருந்த அதே கெட்டப்புடன் சரத் குமார் இந்த 38 நிமிட கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில்! ஈவெரா ரஜனிகாந்த் சர்ச்சையை வைத்து எல்லாரிடமுமிருந்தும் கருத்து வந்தாயிற்று என்று நினைத்துக் கொண்டிருந்தவேளையில் ஹரிஹரனுக்கு சரத்குமாரை விட்டுவிட்டோமே என்ற ஞாபகம் வந்துவிட்டதுபோல! அந்த ஒரு கேள்வியை மட்டும் வைத்து ஓட்ட முடியாதல்லவா? சரத் குமார் சமத்துவ மக்கள் கட்சி என்று நடத்துகிறாரே, அதில் இருந்து ஆரம்பித்து ரஜனி, அப்புறம் விஜய் என்று எல்லாவற்றையும் கோர்த்து நிகழ்ச்சியை ஒப்பேற்றி விட்டார்! தந்திடிவி மீது எனக்கு தனிப்பட்ட அபிமானம், பரிதாபம் எதுவுமில்லை! முதலாளிகளை அனுசரித்துப் போகவேண்டிய நிலையில் இருக்கிற ஹரிஹரன் மாதிரி ஊடகக்காரர்களைப் பார்த்துப் பரிதாபப் படாமல் இருக்க முடியவில்லை!

 

இப்படி status ஜம்பமாகப் போட்டுக்கொள்வதற்காகவே நடத்திய  நேர்காணல் மாதிரி இந்த 32 நிமிட நிகழ்ச்சி இருந்தது! நேர்காணல் என்றால் மேலே விழுந்து பிராண்டுவது அல்ல என்பதை மதன் ரவிச்சந்திரன் எப்போது புரிந்துகொள்ளப்போகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. கேட்ட கேள்விக்கு பதில் வருகிறதா என்பதைப் பொறுத்திருந்து கவனித்துவிட்டு அப்புறம் அடுத்தகேள்வி அல்லது துணைக்கேள்வி கேட்பது என்பதான நல்ல நடைமுறையை பின்பற்றுவது எப்போது நம்மூர் ஊடகக்காரர்களுக்கு கைவரும்?

மீண்டும் சந்திப்போம்.