குர்பானி ஆடு! விலைபோன ஊடகங்கள்! அம்பேத்கர் விருது!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக வெட்கமே இல்லாமல் இந்திய ஊடகங்களில் பலர் எப்படி இன்னமும் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்? எப்படி மணிசங்கர் ஐயர், ராகுல் காண்டி உட்படக் காங்கிரஸ்காரர்கள் பலரும் இங்கே பாகிஸ்தானுக்கு அனுசரணையாகவே இன்னமும் பேசுகிறார்கள்?



சத்ய விஜய் தளத்தில்  முன்னாள் பாகிஸ்தானிய தூதர் அப்துல் பாசித் எப்படி ஒரு இந்தியப்பத்திரிகையாளரை வளைத்துப் போட்டார் என்ற செய்தி இன்றைக்கு வெளியாகி இருக்கிறது.  
In a shocking revelation, former Pakistani High Commissioner to India, Abdul Basit has said that during his time in the country he was successful in influencing an Indian journalist to write an article which suited the agenda of the Pakistan. The journalist who under his influence agreed to do the dirty job, was, according to Basit, none other than Shobhaa De. என்கிறது அந்தச் செய்தி! இதே போல பர்கா தத் முதலான ஊடகக் காரர்கள் வளைக்கப்பட்டது எப்படி என்ற கதையெல்லாம் வெளியே வந்தால் ரொம்பவுமே நாறிப்போய்விடுமோ? குர்பானிக்கான  பலி ஆடாக்கப் பட்டுள்ளார் ஷோபா டே!
A desperate move by a beleaguered mafia: Pakistan offers Shobhaa De as Qurbani on Eid

In the aftermath of the abrogation of Article 370, it has become evident that the narrative peddled by a certain section of liberals is extremely conducive to Pakistani interests. Furthermore, it was revealed earlier today by none other than Abdul Basit, former Pakistani High Commissioner to India, that he had managed to influence Shobhaa De into furthering the Pakistani agenda in an article and advocating for plebiscite in Kashmir.என்று சொல்கிறது OpIndia தளம்.    

இந்து என் ராம் வளைக்கப்பட்டாரா? அவரே வளைந்து கொடுத்தாரா?  இது நம்மூர்ச் செய்திதான்! வாருங்கள்  பார்க்கலாம்!

ருடாவருடம் ஒரு ஐந்து பேருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ரொக்கப் பரிசுடன் கூடிய விருதுகள் வழங்கி வருவது இதுவரை அத்தனை கவனிக்கப்படாத நிகழ்வாக இருந்திருக்கலாம். ஆனால் இந்த வருடம் ஆகஸ்ட் 8 அன்று சென்னையில் நடந்த விருதுவழங்கும் விழா  கொஞ்சம் கவனிக்கப் படாமல் விடுபட்டு விட்டதோ? யோசித்துப் பார்க்கையில் எம்பியான பிறகு திருமாவளவனைப் பற்றிப் பேசவே இந்தப்பக்கங்களில் வாய்க்கவில்லை என்பதே நினைவுக்கு வருகிறது. 


  
ந்து பத்திரிக்கை குழுமத்தின் தலைவரும் பத்திரிக்கையாளருமான என். ராம் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் விருதும், விஐடி பல்கலைகழக வேந்தர் விஸ்வநாதன் அவர்களுக்கு பெரியார் ஒலி விருதும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு, காமராஜர் கதிர் விருதும், தொழிலதிபர் நல்லிகுப்புசாமி அவர்களுக்கு செம்மொழி ஞாயிறு விருதும், தமிழ் இலக்கியவாதிகளில் ஒருவரான நாகப்பனுக்கு அயோத்தி தாசர் ஆதவன் விருதும், இஸ்லாமிய வரலாற்று ஆய்வாளர் எஸ்.திவான் அவர்களுக்கு காயிதே மில்லத் பிறை விருதும்  வழங்கப்பட்டதாக செய்திகள் சொல்வதில் விருதுக்கும் வாங்கியவர்களுக்கும்  கொடுத்தவர்களுக்கும் என்ன பொருத்தம் இருந்தது என்பது யாருக்காவது புரிகிறதா? ஒரு ஆரம்பமாக இந்து என் ராமுக்கும் அம்பேத்கருக்கும் விருதுக்கும் என்ன சம்பந்தம்? இதே மாதிரி பீட்டர் அல்போன்சுக்கும்  காமராஜர் விருதுக்கும் என்ன சம்பந்தம்?

படத்துக்கு நன்றி: திரு K T ராகவன் 

இந்தப்பக்கத்தில் கோடிட்டுக் காட்டியிருக்கிற பகுதியில் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர் ஷேக் அப்துல்லாவுக்கு என்ன பதில் சொன்னார் என்பது அம்பேத்கர் பெயரால் விருது கொடுத்தவருக்கும், வெட்கம் இல்லாமல் வாங்கிக்  கொண்ட இந்து என் ராமுக்கும் தெரியுமா? தெரியாதா?  போகட்டும்! அவர்களுடைய  உள்நோக்கங்களே வேறு! நாமாவது தெரிந்து கொள்ள வேண்டாமா?  

மீண்டும் சந்திப்போம்.

   

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!