ஒரு அஞ்சலி! சில நினைவுகள்!

பொதுவாக அஞ்சலிப் பதிவுகள் எழுதுகிற வழக்கமான நடைமுறை எனக்குப் பிடித்தமானதாக இருந்ததில்லை. ஆனால் எப்போதாவது ஒருசில விதிவிலக்குகளும் இருந்தே ஆகவேண்டும் இல்லையா? Take off மலையாளத் திரைப்படம் மாதிரி ஒருதலைப்பட்சமாக மலையாளி முதலமைச்சர், மலையாளி தூதரக அதிகாரி, ஒரு மலையாளி தொழிலதிபர், ஒரு மலையாளி நர்ஸ் என்று மலையாளிகள் கூட்டு மட்டுமே சிரியாவில்  ISIS பிடியில் சிக்கிய 46 மலையாளி நர்ஸ்களை மீட்டதாகக் கதை பண்ணிவிடக் கூடாதல்லவா?  வெளியுறவுத்துறை அமைச்சராகக் கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பாகப்பணியாற்றிய திருமதி ஸ்வராஜ் நேற்றிரவு டில்லியில் மாரடைப்பால் காலமான செய்தியைக் கேட்டதும் நினைவுக்கு வந்த விஷயம், இதற்கு முன்னால்  இருந்த வெளியுறவுத்துறை அமைச்சர் எவரையும் விட, வெளிநாடுகளில் சிக்கலில் மாட்டிக் கொண்ட இந்தியர்களை மீட்பதில் அவர் காட்டிய அசாத்திய வேகம், திறமை இவைகள் தான்!     


प्रधान मंत्री जी - आपका हार्दिक अभिनन्दन. मैं अपने जीवन में इस दिन को देखने की प्रतीक्षा कर रही थी. ji - Thank you Prime Minister. Thank you very much. I was waiting to see this day in my lifetime.
7:23 PM · Aug 6, 2019Twitter Web App



गृह मंत्री श्री अमित शाह जी को उत्कृष्ट भाषण के लिए बहुत बहुत बधाई. I congratulate the Home Minister Shri ji for his outstanding performance in Rajya Sabha.
7:09 PM · Aug 5, 2019Twitter Web App


பாஜக மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவால் நேற்று இரவு உயிரிழந்தார். பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய ஆட்சியில் அவர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். 
இளம் வயதிலேயே அமைச்சரான பெண் என்ற பெருமைக்குரியவர், அதுமட்டுமில்லாமல் டெல்லியில் முதலமைச்சராக  பதவி வகித்தவர். அதைபோன்று  பாஜகவில் பல முக்கிய பொறுப்புகளை வகித்து இருக்கிறார். சட்ட துறையில் பட்டம் பயின்று இருக்கிறார். சமூக வலைத்தளங்கள் வாயிலாக மக்களுடைய கோரிக்கைகளுக்கு உடனடியாக பதிலளித்ததின் காரணமாக மக்கள் மத்தியில் நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.

வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்ற மக்கள் கோரிக்கைகளை உடனடியாக நடவடிக்கைகள் எடுத்து மக்கள் மத்தியில் நன்மதிப்பையும் பெற்றியிருந்தார். 

வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் தன்னுடைய ட்விட்டரில் தீவிரமாக செயல்பட்டவர். பல்வேறு விவகாரங்கள் குறித்து அவ்வவ்போது ட்விட்டரில் கருத்துக்களையும், செய்திகளையும் பதிவிட்டு வந்தவர். 

சுஷ்மா வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில், வெளிநாட்டில் சிக்கிக் கொண்ட பல்வேறு இந்தியர்களை மீட்டு தாயகம் கொண்டு வந்தவர். 

குறிப்பாக சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய 46 இந்திய செவிலியர்களை பத்திரமாக மீட்டு வர நடவடிக்கை மேற்கொண்டார். வளைகுடா நாடுகளில் கொத்தடிமைகளாக இருந்த இந்தியர்கள் மீட்பு, நைஜீரியாவில் சிக்கிய இந்திய மாலுமிகள் மீட்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை துரிதமாக செய்துமுடித்தார் சுஷ்மா.என்று அஞ்சலி செய்வது NDTV தமிழ் செய்திகள்! அவர்களால் கூட மறைக்க அல்லது குறைத்துச் சொல்ல முடியாத விஷயங்களாக இருந்தது. மாநிலங்களவையில் திரு வெங்கையா நாயுடு சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு இரங்கல்  செய்தியை வாசித்து விட்டு ஓம் சாந்தி சாந்தி சாந்தி: என்று மனம் மொழி மெய் என மூன்றும் அமைதிபெறப் பிரார்த்தனை செய்த மாதிரி,  நாமும் அவரது ஆன்மா சாந்திபெற பிரார்த்தனை செய்வோம்!  

  கண்ணன் கழலிணை சேர சிந்தைவைப்போம்!  

1 comment:

  1. சிறந்த ஒரு அரசியல்வாதியை, சிறந்த ஒரு மனிதாபிமானியை, சிறந்த ஒரு பெண்மணியை இழந்து விட்டோம்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!