மண்டேன்னா ஒண்ணு! #காஷ்மீர் அரசியல்!

புதுப்புது அர்த்தங்கள் என்று நிகழ்ச்சிக்குத் தலைப்பு வைத்து இருந்தாலும், புதிய தலைமுறைக்கு அதன் இன்றைய அரசியல் கூட்டுக்கு ஏற்றவிதத்திலேயே செயல்படுவது தெரிந்தது தான்! அப்படியானால்,இங்கே எதற்காக அவர்களை, அவர்கள் நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்துகிற மாதிரி எடுத்துப் போட வேண்டும் என்றொரு கேள்வி நண்பர்களுக்கு வரலாம்!


துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் இரண்டாண்டு கால மாநிலங்களவை உரைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்ட நிகழ்ச்சியில் ரஜனிகாந்த் பேசியது வழக்கம்போல சர்ச்சைக்குள்ளாக்கப் பட்டிருக்கிறது. 


எனக்கு  ரஜனியைபற்றியோ அவரது so called அரசியல் பிரவேசம் பற்றியும் நல்ல அபிப்பிராயம் எதுவுமில்லை என்றாலும், இந்த ஒரு நபரின் பேச்சை மட்டுமே வைத்து தமிழக அரசியல் களம் ரியாக்ட் செய்வது மிகவும் வினோதமாக இருக்கிறது. அதேபோல விஜய்சேதுபதி கூடத் தன மாறுபட்ட கருத்தை இங்கே உள்ளூரில் பேசாமல் வெளிநாட்டுக்குப் போய்ப் பேசி இருக்கிறார். ஆனால் ஒரு   குறுகிய கண்ணோட்டத்தைத் தாண்டி, ஒரு பரந்த கண்ணோட்டத்தில் எல்லாத்தரப்பையும் உள்ளடக்கியதாக ஒரு அரசியல்விவாதம் நடத்துவதற்கு என்ன தடை  இருக்க முடியும்? முதல் வீடியோ 22 நிமிடம்தான். 2வது 6 நிமிடம்.


இந்த 22 நிமிட வீடியோ 7 வருடப் பழசுதான்! இன்றைக்கும் கூட சுவாரசியமான நேர்காணலாக இருக்கிறதே! என்ன காரணம்  என்று பார்த்துவிட்டு ஊகிக்க முடிகிறதா சொல்லுங்களேன்!

இன்றைக்குப் பார்த்தது, படித்தது, அதில் பிடித்தது:
ஈவேரா இதையும் சொன்னார்:- "தமிழனின் 4 எதிரிகள்...
1)பார்ப்பனர்கள் 2)கிறிஸ்தவர்கள் 3)முஸ்லீம்கள்
4)நம்மில் கீழ்த்தரமானவர்கள்...
இதில் 'நம்மில்' கீழ்த்தரமானவர்கள் என்று அவர் எந்த சமூகப் பிரிவைக் குறிக்கிறார் என்பதை அவரே விளக்கியும் உள்ளார்.
குறிப்பிட்ட சாதிப்பெண்கள் ரவிக்கை போட ஆரம்பித்த பிறகுதான் துணி விலை ஏறிவிட்டது என்றும் ஈவேரா கூறி இருக்கிறார்!
பார்ப்பானுக்கு பயந்து கொண்டு முஸ்லீமை ஆதரிப்பது, சேற்றுக்கு பயந்து மலத்தில் கால் வைப்பது போல என்றும் ஈவேரா கூறி உள்ளார்!
'இந்தத் தமிழ்ப் பைத்தியத்தை விட்டு ஒழியுங்கள்'- 'தமிழ் காட்டுமிராண்டி மொழி'... என்றும் ஈவேரா கூறி உள்ளார்!
சிலப்பதிகாரத்தைப் பற்றிப் பேசும் போது 'கண்ணகி முலையைக் கிள்ளி எறிந்தாளாம் - மதுரை பத்தி எரிஞ்சுதாம்! இதோ இங்க இருக்கற பொம்பளைகளில் ஒருத்தி கூடவா பத்தினி இல்லை? இதோ இந்தப் பென்சில் துண்டை எரி பார்ப்போம்?'- என்றும் மேடையிலேயே சவால் விட்டார் ஈவேரா!
இதை எல்லாமும்....
வி ஜ ய் சே து ப தி....
ஆதரிக்கிறாரா?
விஜய் சேதுபதிக்கு ஒரு ஆலோசனை! குச்சி மிட்டாயை சப்பினால் முழுசா சப்பணும்!
ஈவேரா என்ற குச்சிமிட்டாயின் ஏதோ ஒரு முனையை மட்டும் காஷ்மீர் விஷயத்தில் சப்பி இருக்கிறீர்கள் விஜய் சேதுபதி!
குச்சிமிட்டாயின் உருண்டையான நுனியின் ஏதோ ஒரு ஓரத்தைச் சப்பி உள்ளீர்கள்!
அடுத்த முறை ஈவேரா என்ற குச்சிமிட்டாயை சப்பும்போது முழுவதுமாக வாயில் செலுத்தி சப்புங்கள் விஜய் சேதுபதி!   

ஈவெராவைப் பற்றி பேசப்புகுந்தால் ஏகப்பட்ட முன்னுக்குப்பின் முரணான விஷயங்களையும் சேர்த்தேதான் பேச வேண்டியிருக்கும்!

மீண்டும் சந்திப்போம்,   
                

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!