ஒரு கதை! ஒரு பாடம்!

ஆரோவில் மாத்ரி மந்திர் உள் அறை


ஒரு முனிவருக்கு சாபம். பன்றியாகப் பிறக்க வேண்டுமென்று.

முனிவருக்குத் தாள முடியாத துக்கம், எவ்வளவு ஜபம், எவ்வளவு நியமத்தோடு காரியங்கள் ......கடைசியில் பன்றியாகப் பிறப்பதற்குத் தானா? மகனைக் கூப்பிட்டார்.

"மகனே, சாபத்தினால் பன்றியாகப் பிறக்க வேண்டியுள்ளது.அப்படிப் பிறந்தவுடன், தயவு தாட்சண்யம் பார்க்காமல் கொன்று விடு."

மகனும் தந்தைக்கு அப்படியே செய்வதாக வாக்களித்தான்.முனிவரும் பன்றியாகப் பிறந்தார். மகன், வாளை எடுத்துக் கொண்டு கொல்லப் போனான். புதிதாகப் பிறந்த குட்டிப் பன்றி சொன்னது, "மகனே, இப்போது தான் பிறந்திருக்கிறேன். ஆறு மாதம் கழித்து வா." மகனும் வாளை எடுத்துக் கொண்டு திரும்பிப் போனான்.

ஆறு மாதம் முடிந்தது. மகனும் வாளை எடுத்துக் கொண்டு பன்றியை வெட்டுவதற்காக வந்தான். பன்றி வளர்ந்து, பெண்பன்றி, குட்டிகள்எனப் பெருகி, குடும்பமாய் வாழ்வதைக் கண்டான். "நில்லடா, இப்போது தான் பன்றியாய் வாழ்வதிலும் ஒரு சுகம் இருக்கிறது எனத் தெரிந்து கொண்டிருக்கிறேன், சிறிது காலம் கழித்து வா."

மகனுக்குத் தாள முடியாத துக்கம். வேதம் படித்தவர். கல்வி, கேள்விகளில் சிறந்தவர்.ஏதோ, முன் வினை, இப்படி இழிபிறப்பாய்ப் பிறந்து, உழன்று கொண்டிருக்கிறாரே என்று வாளை ஓங்கி வெட்ட முனைந்தான்.

அவ்வளவுதான், முற்பிறப்பில் அவனுக்குத் தந்தையாய் இருந்த அப்பன்றி வெகுண்டெழுந்தது. கோபத்தோடு சொன்னது, "முட்டாளே, என்ன காரியம் செய்யத் துணிந்தாய்? பன்றி வாழ்க்கை என்றால் கேவலமா? இதில் எத்தனை சுகம் இருக்கிறது தெரியுமா உனக்கு? உனக்குத் தெரியவில்லை என்றால் ஒதுங்கிப்போய் விடு. எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன் தெரியுமா, அதைக் கெடுக்காதே, போய்விடு.வேண்டுமானால், வாளை உன் நெஞ்சில் பாய்ச்சிக் கொண்டு மடிந்து போ "

ஆக்ரோஷமாய் உறுமிவிட்டு, பன்றி தன் பெண்டு பிள்ளை குட்டிகளோடு ஓடி மறைந்தது. மகன் இந்த விநோதத்தைக் கண்டு விக்கித்து நின்றான்.

"செல்லடா! செல்க தீக்குணத் திழிஞ!
எனக்கிவ் வாழ்க்கை இன்பமுடைத் தேயாம்;
நினைக்கிதில் துன்பம் நிகழுமேல் சென்றவ்
வாளினின் நெஞ்சை வகுத்து நீ மடிக"
என்றிது கூறி இருந்தவப் பன்றிதன்
இனத்தோடும் ஓடி இன்னுயிர் காத்தது.

பாரதி கவிதை வரிகளில் இந்தக் கதையைக் கேட்டதுண்டு. கேட்ட பொழுதில், ஒரு வினோதமான கதை என்ற அளவிற்கு மேல் யோசிக்கத் தெரிந்ததில்லை.

நம்முடைய எண்ணங்கள் செயல்கள் எல்லாவற்றிற்கும் நாமே எஜமானர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். விருப்பமாக, ஆசையாக எழுபவை எல்லாம் நம்முடையவை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். கொஞ்சம் கூர்ந்து கவனித்துப் பார்த்தோமேயானால், எதுவெல்லாம் நம்முடையது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அத்தனையும் வெளியில் இருந்து வருவது, புலன்கள் வழி மனம் போகும் போது, ஏற்படுகிற மயக்கம், ஒரு விகாரம் அவ்வளவு தான்.

பழக்கம் எப்படி ஆரம்பிக்கிறது? முதலில், கொஞ்சம் சுகமாக, சௌகரியமாக இருப்பதாக நம்ப வைத்து, சமையல் அறைச் சுவற்றில், எண்ணைப் புகை அழுத்தமாகப் படிந்து போவது போல, நம்மிடம் ஒட்டிக் கொள்கின்றன. ஆரம்பத்தில், நாம் அதற்கு எஜமானர்களாக இருக்கிறோம். அல்லது அப்படி நம்மை நம்ப வைத்து, நம்மை அதனதன் போக்கில் அலைக்கழித்து, ஆட்டிவைக்கும் எதிரிகளாக ஆகி விடுகின்றன
.

காலையில் எழுந்தவுடன் சிலருக்கு காபி அல்லது டீ உடனே குடித்தாக வேண்டும். அப்புறம் செய்தித்தாள் படிக்கிற வேலை, வெண்குழல் வத்தியைப் பற்ற வைத்துக் கொண்டு சிந்தனை வருகிறதோ இல்லையோ, புகையை விட்டுக்கொண்டு, பெரிய சிந்தனாவாதி போல, ஒரு லுக்கு விட வேண்டியது. இப்படி ஒவ்வொருவரும், நம்மையே கூர்ந்து கவனித்துப் பார்த்தோமேயானால், நம்முடைய வாழ்க்கையின் பெரும் பகுதியைப் பழக்கங்களின் அடிமையாகவே இருந்து கழிப்பதை, உணர முடியும்.

நமக்குக் கற்பிக்கப் பட்டிருக்கிற பழக்கங்கள், நம்முடைய ஒவ்வொரு சிந்தனை இழையையும், செயலையும் தன்னுடைய கட்டுப்பாட்டில்வைத்திருப்பதைக் கூட நம்மால் உணர முடிவது இல்லை. நம்முடைய எண்ணங்களுக்கு, செயல்களுக்கு, நாம் எஜமானனாக இருப்பதற்குப் பதிலாக, பழக்கங்கள், மிக சாமர்த்தியமாக நம்மை அடிமையாக வைத்திருக்கின்றன.

ஸ்ரீ அரவிந்தர், தாயகத்திற்குத்திரும்பிய புதிதில் மும்பையில் சந்தித்த ஒரு யோகி, விஷ்ணு பாஸ்கர லீலே சொன்னபடி, எண்ணங்கள் ஆசைகள் எல்லாம் எங்கிருந்து வருக்கின்றன என்று ஆராய்ந்து, வெளியிலிருந்து என்றால், அவற்றைத் திருப்பி அனுப்பிவிடும் பயிற்சியில். மூன்றே நாட்களில், சித்தி பெற்றதை முந்தைய பதிவொன்றில் பார்த்திருக்கிறோம்.

ஸ்ரீ ரமண மஹரிஷி காட்டிய "நான் யார்" என்ற விசார மார்க்கமும் இதுவே.

Emptying the cup என்பதாக ஜென் கதைகளில் படிக்கும் போது, வடிவேலு மாதிரி 'அட, ஆமா இல்லே' என்று நம்மைப் பற்றிய ஞானம் கிடைத்து விட்டதாகத் தோன்றும்.ஆனால் அது அவ்வளவு எளியது இல்லை.


Karikal, April 13, 1914

" EVERYTHING works together to prevent me from remaining a creature of habits, and in this new state, in the midst of these circumstances, so complex and unstable, I have never before so completely lived Thy immutable peace or rather the “I” has never before disappeared so completely that Thy divine peace alone is alive there.

All is beautiful, harmonious and calm, all is full of Thee. Thou shinest in the dazzling sun, Thou art felt in the gentle passing breeze, Thou dost manifest Thyself in all hearts and live in all beings.

There is not an animal, a plant that does not speak to me of Thee and Thy name is written upon everything I see.

O my sweet Lord, hast Thou at last granted that I may belong entirely to Thee and that my consciousness may be definitively united with Thine?

What have I done to be worthy of so glorious a happiness? Nothing except to desire it, to want it with constancy — that is very little.

But, O Lord, since now it is Thy will and not mine that lives in me, Thou wilt be able to make this happiness profitable to all; and its very purpose will be to enable the greatest possible number of beings to perceive Thee.

Oh, may all know Thee, love Thee, serve Thee; may all receive the supreme consecration!

O Love, divine Love, spread abroad in the world, regenerate life, enlighten the intelligence, break the barriers of egoism, scatter the obstacles of ignorance, shine resplendent as sovereign Master of the earth."

The Mother,

Prayers and Meditations

April 13, 1914

ஸ்ரீ அரவிந்த அன்னையின் இந்த பிரார்த்தனை மலர், பலமுறை படித்தபோதும், விளங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது. பழக்கங்கள் தீயவை என்று தெரிகிறது, ஆனாலும் அவற்றை விட முடியவில்லை என்று மட்டுமே நினைக்கிறோம். ஆனால், பழக்கங்கள், நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை, பின்வழியாக நம்முடைய எஜமானர்களாகவே ஆகி விட்டன என்பது காலம் கடந்து தான் தெரிகிறது.

பழக்கங்களின் அடிமையாக இருப்பதிலிருந்து விடுபடுவது எப்படி என்பதையும் ஸ்ரீ அரவிந்த அன்னை இந்த பிரார்த்தனை மலரிலே சொல்லியிருக்கிறார் என்பதும் இப்போது தான் புரிகிறது. இரண்டு பகுதிகளாகப் பாருங்கள்-

1. Nothing except to desire it, to want it with constancy — that is very little.

2. It is Thy will and not mine that lives in me.

ஸ்ரீ அன்னை சொல்கிறார்:

The true path is surrender, complete, absolute, unconditioned surrender to the Divine.


. . .If you give yourself entirely to the Divine without asking for anything in exchange, if you merge your consciousness in the Divine, it will put an end to your sufferings - but the surrender must be total, unconditional, unbargaining and absolute, including all desires, your needs, your likings, your dislikings, your wishes, your wants, your wills, everything, everything that constitutes your small person and then you will find peace and your torments will come to an end.”

The Mother,

White Roses, Sixth Edition, 1999, pp.7

பழக்கங்களின் அடிமையாகவே இருந்துவிடாமல், என்னை மீட்பாய் தாயே!

ஸ்ரீ அரவிந்த அன்னையே உனது திருவடிகளைச் சரண் அடைகிறேன்.

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!