Open yourself to the New Light and walk with a joyful step!


ஸ்ரீ அரவிந்த அன்னை, ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் என்றவுடனேயே நம்மில் நிறையப் பேருக்கு உடனே நினைவுக்கு வருவது, Blessing Packet உம், பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியும் தான்.ஆசிரமத்திற்குச் செல்லும் பொழுதோ, ஒரு சிறு காணிக்கையை அனுப்பி வைக்கும் பொழுதோ, ஆசிரமத்தில் இருந்து, ஒரு Message Card-ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அரவிந்த அன்னை உருவப்படமோ, சின்னமோ, அவர்களுடைய அமுதமொழிகளில் ஏதோ ஒரு பகுதியைத் தாங்கி, அப்புறம், ஒரு குட்டி பாக்கட், சமாதி மேல் அலங்காரம் செய்யப் பட்டிருந்த பூக்களின் காய வைத்த இதழ்கள் பெரும்பாலும் ரோஜா இதழ்கள் தான், பெறுவதைப் பலர் அறிந்திருக்கக் கூடும்.

மலர்களைப் பிரசாதமாக அருளுவது அனேகமாக, எல்லாக் கோவில்களிலும் நடைமுறையில் இருந்து வரும் பழக்கம் தான். இதில் என்ன புதுமை இருக்கிறது என்கிறீர்களா?

இருக்கிறது!

மலர்கள் ஒவ்வொன்றும் ஒரு செய்தியை, அருளைத்தாங்கி வருகின்றன என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை. மலர்களும் அவைகளின் சேதியும் என்ற தலைப்பில் ஏறத்தாழ எண்ணூறு மலர்களுக்கும் மேலாக, அவை தாங்கி வரும் செய்தியை, அவ்வப்போது அன்பர்களுக்கு சொன்னதைத் தொகுத்து ஒரு நூலே வெளி வந்திருக்கிறது.

தன்னைப் பார்க்க வருகிற குழந்தைகளுக்கு ஒரு மலரைத் தருவது ஸ்ரீ அன்னையின் பழக்கமாக இருந்தது. அதுவே, அவர்களது பிறந்த நாள் என்றால், இரண்டு மலர்கள் கிடைக்கும்ரோஜா மலரைத் தருவதும் ஆரம்பமாயிற்று. 1927 ஆம் அண்டு முதலே தொடங்கிய இந்த முறை,எப்போது பிறந்தநாள் வாழ்த்துச் செய்திகளோடு மாறியது என்பதை நினைவு கூற முடியவில்லை என்கிறார் சம்பக்லால் என்கிற அடியவர்.

மலர்களோடு, ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை உரையாடல்களில் இருந்து, சிறு பகுதிகள், படங்களோடு கூடிய மடல்களும், மலர்களோடு சேர்ந்து கொண்டன. அன்னையிடம் ஆர்வத்தோடு வருகிற குழந்தைகளுக்கு இன்னும் ஏதாவது தரவேண்டும் என்கிற ஆர்வத்தோடு சம்பக்லால் தன் கைகளினாலேயே தயார் செய்த வாழ்த்து மடல்கள் தான் இவற்றுக்கு முன்னோடி.

மலர்களைத் தரும் அன்னை, இன்னொன்றும் சொல்கிறார். மனிதனுக்கு, அலை பாய்கிற மனத்தை உடையவனாய் இருப்பதால் தேடி வருகிற இறையருளை உணரவோ, இறையருளுக்கு இசைந்து நடக்கவோ முடிவதில்லை. மலர்களோ, ஒளியை,அருளை முழுதுமாக ஏற்கிற தன்மை உடையனவாய் இருக்கின்றன. அதனால் தான், எனது அருளையும், ஆசீர்வாதத்தையும் மலர்கள் வழியாகத் தருகிறேன் என்கிறார் ஸ்ரீ அன்னை.

அப்படி வரும் ஒரு செய்தியை, அருள் ஒளியைப் பார்க்கலாமா?

A Birthday message and blessings given to a devotee...!

The Mother on birthday card


Let this day of your birth be for you an occasion to give yourself a little more, a little better to the Divine. Let your consecration be more total, your devotion more ardent, your aspiration more intense.


Open yourself to the New Light and walk with a joyful step on the path.


Resolve on this day that it may be thus and the day will not have passed in vain.


Blessings.

The Mother

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!