Showing posts with label அஞ்சறைப்பெட்டி. Show all posts
Showing posts with label அஞ்சறைப்பெட்டி. Show all posts

மண்டேன்னா ஒண்ணு! அரசியல்! அஞ்சறைப்பெட்டி#8

திண்டுக்கல்லில் தன்னெழுச்சியாக நாகல்நகர் பகுதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களோடு சாலை மறியலில் ஈடுபட்ட நிகழ்வை வைத்து கோமல் சுவாமிநாதன்எழுதிய நாடகம் தண்ணீர் தண்ணீர்! 1981 இல் கே பாலச்சந்தர் இயக்கத்தில் திரைப்படமாகவும் வந்தது. திண்டுக்கல்லில் தண்ணீருக்காகப் பெண்கள் நடத்திய அந்தப்போராட்டத்தின் பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது இன்றைக்கு பலருக்கும் மறந்து போன அல்லது மறக்கடிக்கப்பட்ட செய்தியாகக் கூட இருக்கலாம்! 

 தண்ணீர் தண்ணீர் படப் பாடல்கள் அனைத்தும் நேரமிருந்தால் 
கேட்டுப்பாருங்கள்!

கே பாலச்சந்தர் மாதிரி மிடில் கிளாஸ் மக்களை வைத்து மட்டும்  கதைகள் எழுதிப்படமாக்கியவரையே, ஒரு சமூகப்பிரச்சினையை  அதுவும் வேறொருவர் எழுதி இயக்கிப் பிரபலமான நாடகம், அதைத் தான் இயக்கிப் படமாக்க வேண்டுமென்று ஆசைப்பட  வைத்தது மிகவும் சுவாரசியமான விஷயம்.  

சென்னையின் தற்காலிக நிவாரணமாக வேலூரிலிருந்து தண்ணீர் கொண்டுவந்தால் போராட்டம் வெடிக்கும் என்று கூறிவிட்டு...இன்னொரு பக்கம் சென்னையின் தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்த்து மாபெரும் போராட்டமாம்!
ஒவ்வொரு மாவட்டத்தையும் .. தனி நாடு போல... எங்கள் தண்ணீர் எங்கள் உரிமை என்று பேச வைப்பதே இத்தகைய அரசியல் ஏற்படுத்தும் சீரழிவு.
சரி..தண்ணீருக்கான போராட்டம் என்றான பிறகு...காவிரி ஆணையத்தின் உத்தரவை மீறி காவிரி நீரை தர மறுத்துக் கொண்டிருக்கும் கர்நாடக அரசை எதிர்த்தும் அப்படியே சில பல கோஷங்களை போடுவார்களா என்றால்..மாட்டார்கள் !!
.மக்கள் கவனிக்க வேண்டியது இது போன்ற இரட்டை நிலைகளை தான்.


திமுக எப்போதுமே இரட்டைவேடம் இரட்டைநாக்கில் 
வீரவசனம் பேசுகிற ட்ராமா பார்ட்டி தான்! 


இது பிபிசி தமிழ் : திமுக அதிமுக இரண்டு ஆட்சிகளிலும் தண்ணீருக்காகச் செய்ததென்ன? 

இன்று சிறுகூடற்பட்டியில் முத்துவாகப்பிறந்து கவிஞர் கண்ணதாசனாக ஆனவருடைய பிறந்த நாள்..  திமு கழகம் அங்கிருந்து ஸ்தாபன காங்கிரஸ் அப்புறம் இந்திரா காங்கிரஸ் என்று பயணித்த அரசியல் ஒருபக்கம்! உள்ளுக்குள்ளே உறையும் பரமனைத் தேடியலைந்த  ஆன்மீகத் தேட்டம் இன்னொருபக்கம் என்று வாழ்ந்தவர் தன்னுடைய அரசியல் பயணத்தைக் குறித்து  எழுதியது  வனவாசம்.


வனவாசம் ஆடியோ புத்தகத்தின் சாம்பிள் இது. கேட்டுக் கொண்டே பதிவை மேலே வாசிக்கலாமே. கருணாநிதி அண்ணாதுரை அகியோரைப்பற்றிக்கொஞ்சம் சுவாரசியமான தகவல்கள் அடங்கிய புத்தகமும் கூட! .  கவிஞரை நினைவு கூரும் வண்ணமாக இந்தப்புத்தகத்தை இன்றைக்கு வாசித்துப் பார்க்கலாமே!  
  
இப்படி சொல்லிட்டுப்போன மவராசன் யாரோ தெரியாது! ஆனால் இந்திராவோட மருமகளாக்கும் நான் என்று மார்தட்டின சோனியாG க்கு அச்சு அசலாய்ப் பொருந்துதே!

மீண்டும் சந்திப்போம்.    

மண்டேன்னா ஒண்ணு! அரசியல்! அஞ்சறைப்பெட்டி #7

பொதுவாக தமிழ் சேனல் விவாதங்களை உடனுக்குடன் பார்க்க எனக்கு நேரம் வாய்ப்பதில்லை. ஆங்கில சேனல் செய்திகளில் நடப்புநிலவரங்களைப்  பார்த்துக் கொண்டு, அவ்வப்போது யூட்யூப்   தளத்தில் தமிழ் சேனல்களில் கொஞ்சம் தேறுகிற மாதிரி செய்திகள், விவாதங்கள் இருக்கிறதா என்று பார்ப்பது தான்  காரணம். எந்த ஒரு செய்தியையும்  புறக்கணிப்பதில்லை. அப்படிப் பார்த்ததில் இன்று கண்ணில் பட்ட ஒரு நல்ல விவாதம் இது.



பழைய பழ. கருப்பையாவாக, இந்த வியூகம் நிகழ்ச்சியில், அவர் பேசுவதைக் கேட்பதில் வியப்பு மட்டுமல்ல, அவருடைய அரசியலைக் கூர்ந்து கவனிக்கிற விதம் வெளிப்பட்ட பேட்டி இது. குறிப்பாக மனிதர் கரூர் செந்தில்பாலாஜியை கணித்து அதை வெளிப்படையாகச் சொல்வதும் மிகவும் வித்தியாசமான எவரும் எதிர்பார்த்திருக்கமுடியாத பேட்டி இது. கவனத்தில் கொள்ள வேண்டிய  நேர்காணல்  இது. 

பழ. கருப்பையா சொல்வதைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், வலுவான எதிர்க்கட்சி என்பது வெறும் எண்ணிக்கையில் இல்லை, ஒருவரோ பலரோ, விஷயஞானத்துடன் நாடாளுமன்ற நடைமுறைகளில் பங்கு எடுத்துக் கொள்ளக்கூடியவர்களைப் பொறுத்தே இருக்கிறது என்பது முந்தைய காலங்களில் கம்யூனிஸ்டுகளும், சுதந்திரா கட்சியினரும், சோஷலிஸ்டுகளும் நிரூபித்திருக்கிறார்கள் ஆனால் இப்போதுள்ளவர்களுக்கு  அப்படி ஜனநாயகக் கடமை ஆற்றுகிற எண்ணமோ தகுதியோ இல்லை. ஸ்ட்ரைட்டாக ஆட்சி அதிகாரம், மந்திரிபதவி சம்பாத்தியங்கள் என்று மட்டுமே இருக்கையில், இவ்வளவு செலவழித்து  37 எம்பி ஜெயித்தும் ஏமாற்றம்தான் என்றால் ....?


லண்டனுக்கோ இத்தாலிக்கோ போய்விட்டதாகச் சொல்லப் பட்ட ராகுல் காண்டி இந்தியாவுக்குத் திரும்பி விட்டாராம்! வந்தவுடன் கர்நாடகா உள்ளிட்டு காங்கிரஸ் ஆளுகிற மாநிலங்களின் முதல்வர்களை சந்திக்கவிருக்கிறார் என்று செய்தி சொல்வதில் அர்த்தம் ஏதாவது விளங்குகிறதா?

பலத்த கரகோஷத்துடன் ஸ்ம்ருதி ஈரானி பதவியேற்பு
காரணம் புரியாதா என்ன? 

நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவராக அனேகமாக மனீஷ் திவாரியே தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற ஊகங்கள் பலமாக  எழுந்துகொண்டிருக்கின்றன. கேரளாவிலிருந்து சசிதரூர், சுரேஷ் இவருடைய பெயர்களும் முதலில் அடிபட்டாலும், ஹிந்தியில் சரளமாகப் பேசத்  தெரியாது என்ற குறையில் தள்ளுபடி செய்யப்படலாம் என்கிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் எம்பிக்கள் எவருக்குமே அந்தமாதிரி அபிலாஷைகள் தகுதிகள்  இல்லை போல இருக்கிறது.


நான்காவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட ராகுல் காண்டிக்கு கையெழுத்திட மறந்துபோய்விட்டதாம்! 2 நிமிட வீடியோதான்! கவனித்துப்பாருங்கள்!   

        
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அஜெண்டா என்னவாக இருக்குமென்பது பிரதமர் நரேந்திர மோடி கூட்டிய அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் ஒருவாறாகப் புலப்பட்டிருக்கிறது. ஒரு ஆக்கபூர்வமான விவாதம், ஒத்துழைப்பு என்றில்லாமல் அவைநடவடிக்கைகளை முடிவே இல்லாத சர்ச்சைகளில் முடக்க நினைக்கும் போக்கே தெரிகிறது. பட்டும் திருந்தவில்லை என்றால் என்ன செய்வது?     

அஞ்சறைப்பெட்டி நிரம்பி விட்டதோ?

மீண்டும் சந்திப்போம்.
  

    

மண்டேன்னா ஒண்ணு! அரசியல் அஞ்சறைப்பெட்டி #6

சர்ச்சை வரும் என்று தெரிந்தே பேசுகிற கலகக்  குரல்கள் இங்கே ஒன்றும்  புதிதல்ல. அப்படிச் செய்வதில் எளிதாக  ஜனங்களுடைய கவனத்தை அதிகமாக ஈர்க்க முடிகிறது என்பது மட்டுமே மிக முக்கியமான காரணம். திராவிடம் வளர்ந்ததும், பின்னால் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று கலகக்குரல் எழுப்பி தமிழ்த்தேசியம் கொஞ்சம் தலைதூக்க ஆரம்பித்ததும் கண்முன்னே நடந்துகொண்டிருக்கிற சமகால வரலாறு தான்! ஆகிவந்த அதே உத்தியைக் கையில் எடுத்துக் கொண்டு இயக்குனர் பா. ரஞ்சித், வரலாற்றைத் திரித்துப் பேசுவதில் ஒரு கலகக்குரலை அம்பேத்கர் பெயரைச் சொல்லி ஆரம்பித்து வைத்திருக்கிறார்.
.

மாடு கடவுள் என்றால் நான் கடவுளையே சாப்பிடுகிறவன்,  ராஜராஜ சோழன் ஆட்சிக்  காலம் தான் இருண்டகாலம், மிகப்பெரிய சூழ்ச்சியில் எம் நிலம் பறிக்கப் பட்டது அவனது ஆட்சிக்காலத்தில் தான் என்றெல்லாம் முழங்கி இருக்கிறார். முகநூலில் இரண்டுநாட்களாக பலரும் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள். 


ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்தவனைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம்! வாயில் போட்டு மெல்லலாம்!ஆனால் ரஞ்சித்  கண்முன்னால் பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்திருக்கிற நிகழ்கால கல்வித்தந்தைகளைப் பற்றிப் பேசமாட்டார்! ரஞ்சித் திருக்குவளைச் சோளர்களைப் பற்றிக் கூடப் பேசமாட்டார்! ஆக, அடுத்தபடம் வெளி வருவதற்கு முன்னாலேயே ரஞ்சித் இங்கே பேசுபொருளாகி விட்டார்! ஆதரித்தோ எதிர்த்தோ, எதுவாக இருந்தால் என்ன? ஓசி விளம்பரம் நிறையக்கிடைப்பதில் கசக்கிறதா என்ன?!



ராகுல் காண்டியும் அதே மாதிரித்தான்  பொய்களையும் வெறுப்பையும் விதைக்கிற மாதிரித்தான் தன்னுடைய அரசியலைத் தொடர்கிறார் என்பது ஆகப்பெரிய பரிதாபம், மரண வியாபாரி என்று சோனியாG        நரேந்திர மோடியை 2014 தேர்தல்களில் சொன்னது எடுபடவில்லை. அதேபோல 2019 தேர்தல்களில் சௌக்கிதார் சோர் ஹை என்று ராகுல் காண்டி திரும்பத்திரும்பச்சொன்னதும் எடுபடவில்லை. ஏனென்று ஆராயத் துப்பிருந்தால் தேர்தல்முடிவுகளுக்குப் பிறகும் அதே பழைய பல்லவியைக் கீறல் விழுந்த கிராமபோன் ரெகார்ட் மாதிரிப் பேசுவதிலேயே தேங்கி நின்றிருக்க மாட்டார்கள்.  


காங்கிரசுடைய பொய்கள், அவதூறுகள், கோஷங்கள் முந்தைய நாட்களிலேயே நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும், சமீபத்தில் தேர்தல் முடிவுகளிலும் தவறானதென்று தெளிவாக்கப்பட்ட பிறகும் ராகுல் காண்டி இன்னும் அதேபாணியைத்தொடர்கிறார் என்றால், காங்கிரசின்  நிலைமை மிகப்பரிதாபம் தான்! சந்தேகமே இல்லை!

 

Times Now  NewsHour  விவாதத்தில் நேற்று முன்தினம் விவாதிக்கப் பட்டது  நரேந்திரமோடி ராகுல் காண்டி இருவரும் அரசியலை எப்படிக் கையாளுகிறார்கள் என்பதைப்பற்றித் தான்! 28 நிமிடங்கள் தான், பார்க்கலாம்! 

                                                             
                                                                      
கிரிஷ் கர்னாட்      81 வயதில்  கிரேசி மோகன் 67 வயதில் இன்று இயற்கை எய்தியிருக்கிறார்கள். இரண்டு கலைஞர்களுக்கும் ஆழ்ந்த அஞ்சலி.
          

மண்டேன்னா ஒண்ணு! அரசியல்! அஞ்சறைப்பெட்டி #4

தமிழ்நாட்டில் இதரஊடகங்கள்,  சேனல்களுக்கு கொஞ்சம்கூடக்  குறையாமல் வெறும் விவாத அக்கப்போர்களில் ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா தளமும் போட்டி போட்டுக் கொண்டு விவாதங்கள் நடத்த ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமான போக்கா? அல்லது இது தான் தமிழகத்தின் தலைவிதியா?



  • கர்நாடகம், குஜராத், ஒரிசா, மே.வங்கம், அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்கள் எல்லாம் இந்தி பேசும் மாநிலங்களா? கிணற்றுத் தவளை.
    Quote Tweet
    ·
    #BIGNEWS "இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே இந்தியா அல்ல; அனைத்து தேசிய இனங்களையும் மத்திய அரசு அரவணைத்துச் செல்ல வேண்டும்!" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் ns7.tv | @mkstalin | #HindiStates | #CentralGovt | @PMOIndia
    11:25 PM · May 25, 2019 · Twitter for Android  

    இதற்கு H ராஜாவின் கமெண்ட், ஒருவிதத்தில் சரிதான்! ஆனால் ஸ்டாலின் பேச்சின் உள்ளர்த்தம் ஏதோ கொஞ்சம் ஜெயித்திருக்கிறோம்! ஆதரவு தேவை இல்லாவிட்டால் கூட, ஏதோ கொஞ்சம் பார்த்து அனுசரணையாகச் செய்யுங்கள் என்பதாக மட்டுமே இருக்கிறது. பழையபடி திமுக, அடைந்தால்  திராவிடநாடு இல்லையேல் இடுகாடு என்று முருங்கை மரம் ஏற ஆரம்பித்து விடவில்லை.
      
        
    தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்பு என்கிற சிக்கலை எதிர்கொள்ளும் கட்சிகளின் தலைமைகள் அனைத்தும் ஒரே தந்திரத்தையே கையாள்கின்றன.
    ராகுல், மம்தா, மாயாவதி, கெஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு, லாலு, அகிலேஷ்,.. என்று மிக நீளமானது இந்த பட்டியல் .
    இந்தப் பக்கமிருந்து...கட்சியின் தலைமையாக .. தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா என்று பேசுவதும்...அந்தப் பக்கமிருந்து கட்சியின் உயர்மட்டக் குழுவின் தலைமையாக இருந்து ..தன் ராஜினாமாவை தானே நிராகரித்துவிடுவதுமாக ...நல்ல நகைச்சுவை.
    கூடுதல் நகைச்சுவையாக... கட்சியிலுள்ள பிற இரண்டாம் நிலை -மூன்றாம் நிலை அரசியல்வாதிகள்.. கட்சி தலைமை ராஜினாமா செய்தால்....தொண்டர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்று தப்பித்து கொள்கிறார்கள். சம்பிரதாயமாகக் கூட...தாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என்று சொல்வதில்லை.
    சுருக்கமாக சொல்வதானால்..தலைமை பதவி வேறு யாருக்கும் கிடையாது. கட்சியின் இரண்டாம் நிலை அரசியல்வாதிக்கு தொண்டன் எப்படியோ..அது போல தான்..தலைமைக்கு ..இரண்டாம் நிலை அரசியல்வாதி!
    காங்கிரஸ், திரிணாமுல் கட்சிகளில் நடந்த ராஜினாமா நாடகங்களை இந்தப் பக்கங்களில் ஏற்கெனெவே பார்த்து இருக்கிறோம்!  
    பித்தம் தெளிய மருந்தில்லையாம்! 

    இத்தனை பார்த்துவிட்டு உள்ளூர் காமெடி ஒன்றைப்  பார்க்க வேண்டாமா? வைகோ ஆதரவாளர்கள் போஸ்டர் ஒன்றை இப்படி மதுரையில் தெறிக்க விட்டிருப்பதாக!


    வைகோவின் ராசி எப்பூடி என்று கேட்கிறார்கள்! பாவம்! அதில் கூட ராசி முக்கியமில்லை என்று தான் சொல்ல முடிகிறதே தவிர வைகோ ராசியானவர்தான் என்று சொல்ல முடியவில்லையே! 

    மீண்டும் சந்திப்போம்.