Showing posts with label போகாத ஊருக்குக் கேட்காத வழி. Show all posts
Showing posts with label போகாத ஊருக்குக் கேட்காத வழி. Show all posts

செவ்வாய்க்கிழமைச் சுடுதல்கள்! டில்லித்தேர்தல் முடிவுகள்! ஏமாறப்போவது யாரோ?

டில்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகளை முற்றிலும் எதிர்பாராதது என்று சொல்லி விட முடியாது. ஆனாலும் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிகரித்திருக்கிற வாக்குசதவீதம் கொஞ்சம் ஆச்சரியப் படுத்தத்தான் செய்கிறது.  


வெஸ்ட்மினிஸ்டர் தேர்தல் முறையில்  கட்சிகள் வாங்குகிற  வாக்கு சதவீதத்துக்கும்  கெலிக்கிற சீட்டுகளுக்கும் சம்பந்தமே இருக்காது என்பதைப் புரிந்து கொண்டால் கிடைத்திருக்கிற சீட்டுக்கள் மயக்கத்தைத் தராது. தவிர இதற்கு முன்னால் ராஜீவ் காந்தி காலத்தில் இப்படிக் கிடைத்த அதிக சீட்டுக்கள் காங்கிரசுக்கு ஜன்னியை உண்டுபண்ணியதும்   கட்சித்தாவல் தடை சட்டம் கொண்டு வந்த கூத்தும்   நினைவுக்கு வருகிறதா? 


The AAP landslide is driven by the same junoon that propelled Modi into power. That exaggerated hope leads inevitably to exaggerated disillusionment. The BJP rout will undoubtedly hearten Modi critics but it should offer little comfort to Kejriwal who is likely to feel the brunt of all that impatience very soon.

ஊடகங்கள் கணிப்பதில் ஐந்து தவறுகளைச் செய்ததாகச் சொல்கிற இந்த செய்திக் கட்டுரை தான் இப்படி முத்தாய்ப்பாகவும் சொல்கிறது. இதே தளத்தில் டில்லியின் அர்பன் வாக்காளர்கள் பொறுமையற்றவர்கள்  என்றும் சொல்லி  ஒரு ஆறு விஷயங்களை டில்லித் தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும்  சொல்லியிருப்பது அதிகபட்ச ஊடக அபத்தக் காமெடி.  


பிஜேபி இந்தத் தோல்வியை எப்படி எடுத்துக்கொள்கிறது? இந்த முடிவுகளை எல்லோரையும்போல எதிர்பாராதது, இமாலயத்தவறு நடந்துவிட்டது என்று சொல்லப் போகிறார்கள் என நினைத்தால் அது தவறு. டில்லியில்  ஜனங்களுடைய மனநிலைமை  எதிராக இருப்பதை, டில்லி யூனியன் பிரதேசத்தில் பிஜேபியின் கட்சி அமைப்பு பலவீனமாக இருப்பதை, ஒரு நல்ல உள்ளூர்முகத்தைக் காட்டமுடியாமல், உட்கட்சிப் பூசல்களுடன் இருந்ததை நன்றாகவே உணர்ந்திருந்தார்கள் என்றே விஷயம் தெரிந்த அரசியல்பார்வையாளர்கள் சொல்கிறார்கள். யதார்த்தா பென்னேஸ்வரன்   போன்ற டில்லிவாசிகளின் கணக்குக் கூடக் கொஞ்சம் பொய்த்துப்போன அதிசயம், நடந்தது  உண்மையிலேயே அதிசயம்தானா என்ற கேள்விதான் இப்போது முன்னுக்கு வந்து நிற்கிறது.
 

இது எழுத்தாளர் மாலனுடைய முகநூல் பகிர்வு. இதில் சொல்லியிருப்பதில் ஒரு பகுதி உண்மை. நாடாளுமன்றத் தேர்தல்களில் கருத்துக் கணிப்பு, எதிர்பார்ப்புக்கள் எல்லாம் காங்கிரஸ், பிஜேபி அல்லாத மூன்றாவது அணி தான்  முன்னிலை வகிக்கும், அதிலும் மம்தா பானெர்ஜி, மாயாவதி, ஜெலலிதா ஆகிய மூவர்தான் அடுத்த அரசியல் திருப்பத்துக்கு முன்னிலை வகிப்பார்கள் என்று தேர்தகள் பண்டிதர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்ன படியே  மேற்கு வங்கத்திலும், தமிழ்நாட்டிலும்  தேர்தல் முடிவுகள் இருந்தன. தேர்தல் பண்டிதர்கள்  கணக்கைப் பொய்யாக்கி பிஜேபி  தனித்தே 283 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த வேகத்திலேயே கடந்த  எட்டு மாதங்களில்  காஷ்மீர்  கொல்கத்தா என்று வரிசையாக அடித்து  ஆடிக் கொண்டிருந்ததில் நிறைய சலசலப்புகள், எதிர்ப்புக்களை மோடிக்கு எதிராகத் திரட்டுவதில் அத்தனை கட்சிகளும் ஒன்று பட்டு நிற்கிற மாதிரி ஒரு சித்திரம் உருவானது. ஆனால் முற்றுப் பெறாத  சித்திரமாக, சரியான தலை(மை)யில்லாமல் இன்னமும் இருப்பதிலிருந்தே மாலன் சொல்ல விட்டுப்  போனதாக, மாநிலக்கட்சிகள் தங்கள் முக்கியத்துவத்தை வேகமாக இழந்து வருகிற விஷயம் இருக்கிறது.  அதே நேரம், காங்கிரஸ் விட்டுப்போன வெற்றிடத்தை இந்தியா முழுமைக்குமாக பிஜேபியால் நிரப்ப முடியவில்லை, அதற்கு இன்னும் கொஞ்ச காலம் பிடிக்கும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தில்லி தேர்தல் முடிவு திருப்பு முனையானது. ஜனநாயகத்தில் அரசியல் பழிவாங்கும் போக்குக்கு இடமில்லை என்பதை காட்டியுள்ளது. இந்த மாற்றம் இப்போதைக்கு அவசியமான ஒன்று என மம்தா பானெர்ஜி  கூறியுள்ளார். ஆனால் என்ன புலம்பினாலும் சாரதா சிட் ஃ பண்ட் ஊழல் விவகாரம் மம்தா பானர்ஜியின் அரசியல் சகாப்தத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிற அபாயம் நீடிக்கவே செய்கிறது.

இந்தப் பேட்டியில் சுதிப்தோ சென் கூறியிருப்பது என்னவெனில், ""சாரதா நிதி நிறுவனம் வாங்கிய பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கப் பிரிவு உடனடியாக இந்த வழக்கில் இணைக்காவிட்டால், "கொள்ளைக்கார கட்சி' எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டுவிடும்'' என்று கூறியுள்ளார். கட்சியின் பெயரை அவர் குறிப்பிடாவிட்டாலும், அது மாநிலத்தின் ஆளும்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் என்று பேசப்படுகிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள், அமைச்சர் உள்பட பலரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இனியும் மத்திய அரசு பழிவாங்குவதாக மம்தா பானர்ஜி சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.என்கிறது தினமணி தலையங்கம்   

இந்த எட்டு  மாதங்களில் மத்தியில் பிஜேபி ஆட்சி மிகப்பெரிய சாதனைகளைச் செய்து முடிக்காவிட்டாலும் . ஜீபூம்பா கூட, கெட்ட பெயரைச் சம்பாதிக்கவில்லை என்ற சூழ்நிலையில் டில்ல்லி வாக்காளர்கள் இப்படி ஒரு தேர்தல் முடிவைத் தர வேண்டிய காரணம் என்ன? 

முக்கியமாக பெருநகரங்களில் குறிப்பாக டில்லியில் வாக்காளர்களுடைய எதிர்பார்ப்பு, பொறுமையின்மை இரண்டுமே  அதிகரித்துக் கொண்டே வந்த விதம். ஏன்  எப்படி என்ற சால்ஜாப்புக்கெல்லாம் காது கொடுத்துக் டில்லி ஜனங்கள் கேட்பதில்லை என்பதில் தெளிவாக இருந்தார்கள்  ஜீபூம்பா என்பாயோ திறந்திடு செசேம் என்பாயோ எங்களுக்கு வேண்டியது எல்லாம் குறைந்த விலையில் மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து இப்படி அடிப்படை வசதிகள், அவ்வளவுதான்! ஜனங்களைக் கிளர்ந்தெழச்செய்வது மிக எளிது. ஆனால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது அவ்வளவு எளிதானது அல்ல. இப்படி ஒரு இடியாப்பச்சிக்கலில் தலையைக் கொடுத்துவிட்டு, பதில் சொல்ல முடியாமல்  49 நாட்களிலேயே ராஜினாமா செய்துவிட்டு ஓடிய ஒருவரை மறுபடி மொத்த சீட்டுக்களையும் கொடுத்துத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால் மஞ்சள் தண்ணீர் தெளித்து ஆட்டை ரெடி செய்து விட்டார்கள் என்பது மட்டும் தெளிவு. இப்படி ஒரு நிலைமை தங்களுக்கும்  வரலாம், அதைவிட டில்லி கைவிட்டுப் போனாலும் பரவாயில்லை என்ற தெளிவோடுதான்  பிஜேபியினர் இருந்தார்கள் என்று தான் படுகிறது.

அரவிந்த் கேஜ்ரிவால் அனுபவமில்லாத ஒரு அவசரக்குடுக்கை . குருட்டுப் பூனை எங்கே எப்படித் தாவும்  என்றெல்லாம் இப்போதே சொல்ல முடியாது.

அர்பன் வாக்காளர்கள் ஓர் புதிய போக்கைக் காட்டியிருக்கிறார்கள். எந்த அளவுக்கு ஏமாறப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்திய ஜனநாயகம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அது.

..

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்! குறட்டை விட்டோரெல்லாம்....?



இன்றைய ஜூனியர் விகடனில், வைகோவை ஒரு மாற்று அரசியல் சக்தியாக அடையாளம்காட்டி, தமிழருவி மணியன் நடத்திய ஒரு கூட்டத்தைப் பற்றிய செய்திக்கட்டுரை வெளியாகி இருக்கிறது.மாற்று அரசியல் தீர்வாக வைகோ தமிழக முதல்வராவது ஒன்று தான் வழி என்று தமிழருவி மணியன் முழங்கியிருக்கிறார். கூட்டத்தில், மதிமுக தவிர இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும்  கலந்து கொண்டிருக்கிறார்கள்

ஜெயலலிதாவிடம் கெஞ்சிப் பார்த்து கேட்ட சீட் கிடைக்கவில்லை என்றதும் விசயகாந்திடம் ஓடிப்போய்  மூன்றாவது அணி அமைக்க முயன்ற கம்யூனிஸ்ட் கட்சிகளை நம்பி  தமிழருவி மணியன் எந்த தைரியத்தில் இந்தக் கூட்டத்தை நடத்தினார், கம்யூனிஸ்ட் கட்சிகள் இதற்கு ஒப்புக் கொண்டனவா என்பது கூட கட்டுரையாளருக்குத் தெரியவில்லை. ஏற்கெனெவே மதிமுகவிடம் கூட்டணி வைத்திருந்த கட்சி மார்க்சிஸ்ட் கட்சி என்பதும் மார்க்சிஸ்டுகளின் அரசியல் கணக்கே வேறு என்பதும் கட்டுரையாளருக்குக் கொஞ்சமும் தெரியவில்லை. போகட்டும்!

வைகோ மீது ஒரு தனிமனிதராக, ஒருதிறமையான நாடாளுமன்றவாதியாக, எனக்கு மட்டுமல்ல, இங்கே நிறையப்பேருக்கு  மரியாதையும் நம்பிக்கையும் இருக்கிறது. ஆனால், ஒரு இயக்கத்தைத் தலைமை தாங்கி நடத்துவதில் வைகோவுக்கு சாமர்த்தியமில்லை! குறிப்பாக தனக்கு அடுத்த படியாக ஒரு நம்பிக்கையான ஆதரவாளர்களை இரண்டாவது மட்டத் தலைவர்களாக உருவாக்குவதில் கூட வெற்றி பெற முடியாதவர் அவர்.. அதுவும் கருணாநிதி விரிக்கும் வலைக்குள் சிக்குகிறவர்களாகவே அவரைச் சுற்றி ள்ளவர்கள் இருப்பது வைகோவின் தலைமை எந்த அளவுக்கு பலவீனமாக இருக்கிறது என்பதைக் காட்டும் ஒரு அடையாளம்.

ஆளை மாற்றினால் அரசியல் சூழலும் மாறிவிடுமா? தனி ஒரு நபரால் இத்தனை சீரழிவையும் மாற்றி விட முடியுமா?தமிழருவி மணியன் சொல்கிற தீர்வு உண்மையிலேயே, சரியான தீர்வு தானா? நடைமுறை சாத்தியம் தானா? முதலில் அந்த செய்திக் கட்டுரையைப் படித்து விடுவோம்.

''கருணாநிதி, ஜெயலலிதாவை விட்டால் வழியே இல்லையா?

தகதகக்கும் தமிழருவி மணியன்


மிழக அரசியல் வெளியில் தமிழருவி மணியனால் புதிய காற்றழுத்தம் ஒன்று உருவாகி இருக்கிறது. 'மாற்று அரசியல்’ எனும் மேடையில் வேறு பட்ட அரசியல் தலைவர்கள் சிலரை ஒருசேர நிறுத்தி நெடிய அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறார்!

தமிழருவி மணியனின் 'காந்திய மக்கள் இயக்கம்’ கடந்த 7-ம் தேதியன்று தனது இரண்டாவது ஆண்டில் காலெடுத்து வைத்திருக்கிறது. இதை முன்னிட்டு திருப்பூர் யூனியன் மில் சாலையில் பொதுக்கூட்டம். மேடையில்... ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரை அழைத்து வந்து மணியன் அமர்த்த, மக்கள் மனதில் ஆயிரம் கேள்விகள் ப்ளஸ் ஆச்சரியங்கள். '

'இது காந்தியச் சிந்தனைகளை விளக்குவதற்கான மேடை மட்டும் அல்ல. இது ஒரு போராட்டக் களம். நம்மை ஆள வேண்டியோரைத் தேர்ந்தெடுப்பது மட்டும் அல்ல ஜனநாயகம். அவர்கள் தவறிழைக்கும் போது அதை எதிர்த்துப் போராடுவதும்தான் ஜனநாயகம்...'' என்று ஒரு பொறியைப் பற்றவைத்து விட்டு அமர்ந்தார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், இந்த இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளருமான பெரியவர் லட்சுமிகாந்தன் பாரதி.

'இன உணர்வாளர்’ என்ற முறையில் இந்தக் கூட்டத்துக்கு  அழைக்கப்பட்டு இருந்தார் இயக்கு நர் தங்கர்பச்சான். ''தயவுசெஞ்சு என்னோட பேச்சுக்கு யாரும் கை தட்டாதீங்க. கை தட்டி, விசிலடிச்சே நாசமாப் போயிட்டிருக்கோம் நாம...'' என்று ஆவேசப்பட்டவர், ''இந்த மேடையில் அச்சப்படாமல் பேசலாம். காரணம், இங்கு அமர்ந்திருப்பவர்கள் நேர்மையானவர்களே தவிர, அரசியல் பிழைப்புவாதிகள் அல்ல. சுதந்திரத்துக்கு பின் 50 ஆண்டு காலமாக ஒரே குடும்பம் நம்மை ஆண்டுகொண்டு இருக்கிறது. இதை ஜனநாயகம் என்கிறோம். மக்களாட்சி என்கிறோம். கேடு கெட்ட விஷயம் இதுதான். ஓட்டுப் போடுற மக்கள் பிச்சைக்கார மனநிலையில் இருப்பதுதான் அரசியலைப் பிழைப்புக்குப் பயன்படுத்தும் பேர் வழிகளுக்கு வசதி யாகிவிட்டது. கொடுக்கின்ற இலவசத்தை வாங்கி இனி அவன் மூஞ்சியிலே விட்டெறியுங்கள். அதன் பிறகு கதை வேறு விதத்தில் பயணிக்கும்'' என்றார் குரல் உயர்த்தி.

மைக்கைப் பற்றிய தமிழருவி மணியன் ரௌத் திரமும், ஆதங்கமும் ஒரு சேர வீசிய பேச்சு தமிழக அரசியல் மேடைகளுக்கு விதிவிலக்கு.

''இந்த நிகழ்ச்சியை 'மூன்றாவது அணி’ அமைப்புக்கான வேலை என்று சிலர் மிகத்தவறாகப் புரிந்துகொண்டு விட்டார்கள். இல்லை... இது, 'மாற்று அரசியல்’ அமைவுக்கான தளம். மேடையில் இருக்கும் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். இன்னும் எத்தனை நாட்கள்தான் கருணாநிதிக்குப் பின்னும், ஜெயலலிதாவுக்குப்  பின்னும் மறைந்தே அரசியலை நடத்துவது? தேர்தல் முடியும் வரை உங்களைப் பயன் படுத்திவிட்டு, பிறகு தூக்கி எறியப்படும் நிலை எத்தனை நாளைக்கு வேண்டும்? எங்களுக்குத் தேவை ஊழலின் நிழல் படாத அரசியல். 

நேர்மையான அரசியலைத் தேடி நான் அறிவாலயமா செல்ல முடியும்?
போயஸ் தோட்டம்தான் செல்ல முடியுமா? 

ஊழலைப் பொதுப்புத்தி ஆக்கிவிட்டார் கருணாநிதி. அரசு அதிகாரிகளை சசிகலா கூட்டம் ஆட்டுவித்தபோது ஆத்திரப்படாத ஜெயலலிதா, பொதுப் பணத்தை அந்த மன்னார்குடி குடும்பம் வாரிச் சுருட்டியபோது ஆத்திரப் படாத ஜெயலலிதா, எப்போது ஆத்திரப்பட்டார்? பெங்களூருவில் இருந்தபடி தனக்கு எதிராக அவர்கள் சதியாலோசனை நடத்துகிறார்கள் என்று தெரிந்ததும்தானே? இந்த ஜெயலலிதாவிடம் எப்படிப் பொது நலனை எதிர்பார்க்க முடியும்? 

காங்கிரஸும் ஊழலுக்கு விதிவிலக்கு இல்லை. அதனால் அவர்களைப் புறந்தள்ளிவிட்டு பொது நலனுக்காக உருகும் நீங்கள் கைகோக்க வேண்டும். நீங்கள் மாற்று அரசியலைக் காண்பித்தால், மக்கள் உங்களை விரும்புவார்கள். அதில் எனக்குத் தெரிந்த மாற்று வழி, வைகோ முதல்வர் ஆவதுதான். அதற்கு நீண்ட பயணம் செல்ல வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். மாற்றத்தை உருவாக்க நாங்கள் தயார். மற்றபடி உங்கள் விருப்பம்'' என்றார் அழுத்தம் திருத்தமாக.

எதிர்பார்ப்புகளுக்கிடையில் தன் உரையைத் துவங்கிய வைகோ, ''தமிழகம் கட்டுக்கடங்காத பிரச்னைகளை சந்தித்துக்கொண்டு இருக்கும் வேளை யில் இப்படி ஒரு தளத்தில் கூடியிருக்கிறோம். தமிழருவி... நீங்கள் உங்கள் விருப்பத்தை வெளியிட் டிருக்கிறீர்கள். தியாக இயக்கமாம் ம.தி.மு.க. தேர்தல் அரசியலில் இயங்குவதுதான். நாங்கள் சில கால கட்டங்களில் சிலரோடு கூட்டணி வைத்திருந் தோம் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் என்றுமே தமிழர்நலன் என்ற கொள்கையை விட்டுக்கொடுத்ததும் இல்லை, சுயமரியாதைக்குப் பங்கம் வரும்போது பொறுத்துக்கொண்டதும் இல்லை. அதனால் பதவி, அதிகாரம் இதை எல்லாம் நாங்கள் என்றுமே எதிர்பார்த்ததும் இல்லை. நாங்கள் அண்ணாவின் வார்ப்புகள். விஷச் சூழலில் இருந்து தமிழகம் விடுபட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் கனன்று கொண்டேதான் இருக்கிறது. எரிமலை, அறிவித்துவிட்டு வெடிப்பது இல்லை, புயல் சொல்லிக்கொண்டு அடிப்பது இல்லை. அது போல் மக்கள் புரட்சி வரும்... கூடவே மாற்றமும் வரும்'' என்று ஒரு புள்ளி வைத்தார்.


விடை தெரியாத கேள்வியோடு கூட்டம் விடை பெற்றது!

(கட்டுரையாளர் ஒரே ஒரு உண்மையைத் தன்னையறியாமலேயே சொல்லியிருக்கும் வார்த்தைகள் இவை தான்!) 
 (அதிமுக நாடாளுமன்றத் தேர்தல்களில் மதிமுகவை அரவணைத்துக் கொள்ள தயாராகிவிட்டதாகவே இப்போதைய செய்திகள் சொல்கின்றன).


-------------------------------------------------------------------------------------------------------------

இங்கே அரசியல், நிர்வாகம் நீதித்துறை, ஜனநாயகத்தின் நாலாவது தூண் என்று சொல்லப்படும் ஊடகங்கள் என்று எல்லாமே சீரழிக்கப்பட்டு விட்ட நிலையில் மாற்றம் என்பது ஒரு கட்சியை அகற்றி விட்டு இன்னொரு கட்சியைக் கொண்டுவருவதாலோ வராது.

ஒரு நபரைக் குற்றம் சொல்லி அகற்றி விட்டு, வேறொரு நபரை மாற்றுவதால் மட்டுமே இங்கே கோளாறுகளுக்குத் தீர்வாகி விடாது.

மூன்றாவது அணி, மாற்று அணி என்பதெல்லாம் இன்றைய நிலையில் வெறும் கற்பனை தான். தானே உச்சாணிக் கொம்பில்  தலைமை ஏற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் மட்டுமே நிறைந்த சூழலில் இவர்களால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.

அப்படியானால் தீர்வே இல்லையா? வேறு வழியே இல்லையா?

நிச்சயமாக இருக்கிறது. கொஞ்சம் பொறுமை வேண்டும். விழிப்புடன், ஒருங்கிணைந்து செயல்படும் சக்தியாக மக்களுடைய குரலை எதிரொலிக்கும் இயக்கமாக உருமாற்றம் காண்பதற்கு---

முதலில் தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தவேண்டும்! இப்போதிருக்கும் வெஸ்ட்மினிஸ்டர்  முறையிலான ஜெயித்தவனே எல்லாற்றையும் சுருட்டிக் கொண்டு போக அனுமதிக்கும் நிலை மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு கட்சிக்கும் அது வாங்கும் வாக்குகளின் சதவீதத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் என்று தேர்தல் முறை மாற்றப்படவேண்டும்.

ஆபீஸ் பையன் உத்தியோகத்துக்குக் கூட குறைந்தபட்சக் கல்வித்தகுதி கேட்கிற தேசம் அரசியல் வாதிக்குத் தகுதி கேட்கக் கூடாதா? அரசியலில் இறங்குவதற்குக் குறைந்தபட்ச வயது இருக்கிற மாதிரியே, குறைந்தபட்சக் கல்வித் தகுதி தீர்மானிக்கப்பட வேண்டும். சட்டங்கள்  இயற்றுகிற அதிகாரம் படைத்த சட்ட மன்றம், நாடாளுமன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப் படுகிறவர்களுக்கு, நம்முடைய அரசியல் சாசன, சட்டம் இயற்றும் முறைகளைப் பற்றிய அடிப்படை ஞானம் இருக்க வேண்டும். அதில் ஒரு பட்டயப்படிப்பாவது பெற்றிருக்க வேண்டும்!

குறைந்த பட்ச வயது இருப்பது போலவே போட்டியிட அதிகபட்ச வயது வரம்பும் வேண்டும். அறுபது வயது என்று வைத்துக் கொள்ளலாம். சரியான உடல் நலம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அறுபத்தைந்து வயது வரை வேண்டுமானால் தளர்த்திக் கொள்ளலாம்.

கேபினெட் அமைச்சர், முதல்வர், பிரதமர்  ஜனாதிபதி பதவிகளுக்கு,ஒரே நபர் இரண்டு முறைக்கு மேல் பதவி வகிக்கத் தடை வேண்டும்.

மாநில அரசுகளைக் கலைப்பதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இருப்பது போலவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படாத மாநில அரசுகளைக் கலைப்பதற்குப் பரிந்துரை செய்ய உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.அரசியல் சாசனத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பை, மக்களுடைய பிரதிநிதிகள்  பொறுப்பேற்கத் தயாராகவும் தகுதியுள்ளவர்களாகவும் ஆகிற வரை உச்சநீதி மன்றமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்னும் கொம்ஞ்சம் விரிவாகவே பேசலாம்! இதெல்லாம் நடைமுறைக்கு வருகிற சாத்தியம் உண்டா என்று சந்தேகம் எழுகிறதா? தூக்கத்தில் கனவு காண்பது மட்டுமே பிழைப்பு என்றிருப்பவர்களுக்கு எதுவுமே சாத்தியமில்லை.

மாற்றங்களை வேண்டு
ம் மக்கள் குரல் உரத்து ஒலிக்கும் நாளில், எல்லாம் நிறைவேறும்.