இட்லி வடை பொங்கல்! #45 இரு பிரதமர்கள்! ஐநாவில் சாதித்ததென்ன?

பிரதமர் நரேந்திர மோடி தனது ஒருவாரகால அமெரிக்கப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பியிருக்கிறார். Howdy Modi நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்டது முதல் சுமார் 40 நிகழ்ச்சிகளில் பிரதமரும், இருமடங்கு நிகழ்வுகளில் முன் எப்போதும் இல்லாதவகையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் வெளியுறவுத்துறை அதிகாரிகளும் ஐநா பொதுசபை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளோடு பேசி இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கியிருக்கிறார்கள்.ஐநா பொதுசபையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ்ப்புலவரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கிப் பேசியது இந்தப் பயணத்தின் உச்சம்!

 

பாகிஸ்தானியப் பிரதமர் இம்ரான் கானும் கூட அமெரிக்காவுக்கு வந்திருந்தார். டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்தார். நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட இந்திய எதிர்ப்பு நிலையில் உள்ள ஊடகங்களிடம் பேசினார். இந்தியப் பிரதமருக்கு அடுத்தபடியாக இம்ரான் கானும் UNGA ஐநா பொது சபையில் காஷ்மீர் விவகாரம் தொடங்கி  இங்கே ராகுல் காண்டி பேசுகிற மாதிரியே சுத்தப் பேத்தலாக RSS பற்றியும்  பேசியது இங்கே திமுக மாதிரி மோடி மீதுள்ள பயத்தை மோடி வெறுப்பாகவும் மோடி எதிர்ப்பாகவும் காட்டியது பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருந்தது!  

  
காங்கிரசுக்காக கூவுவதையே பிழைப்பாக வைத்திருக்கும் The Print தளத்தின் சேகர் குப்தா கூட, காஷ்மீரில் நடப்பது, ஆர்டிகிள் 370 abrogation எல்லாம் இந்திய உள்விவகாரம் என்கிற நிலையை பெரும்பாலான நாடுகள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கன்வின்ஸ் செய்து விட்டார் என்பதை ஒத்துக் கொள்கிறார். ஆனாலும் காஷ்மீரில் நடப்பதை உலகநாடுகள் கவனித்துக் கொண்டிருக்கின்றன என யாரைத் திருப்தி செய்வதற்காகச் சொல்கிறார்? 7 நிமி.


இம்ரான் கான் வெறுப்பு, வன்மத்தைக் கொட்டி ஐநா பொது சபையில் பேசியதற்கு, அங்கேயே இந்தியாவின் சார்பில்  பதில் சொல்கிறார் வெளியுறவுத்துறையில் செயலாளர் விதிஷா மைத்ரா! point by point பதில் சொன்னதிலேயே இம்ரான் கானுக்கு சில விஷயங்கள் புரிந்திருக்க வேண்டும். நான் சொல்ல வருவது என்னவென்று உங்களுக்குப் புரிந்தால் சரி! ஐம்பது நிமிடத்துக்கு மேலேயே அணு ஆயுதப் பூச்சாண்டி காட்டி UNGA வில் பேசினாரே இம்ரான் கான்! அதை யாருமே பொருட்படுத்தவில்லையா?


அல்ஜசீரா சேனல் இருக்கவே இருக்கிறதே! இம்ரான் கானுடைய பேச்சை 6 நிமிடத்திலேயே இங்கே சுருக்கிச் சொல்கிறார்கள்! 


News X சேனலின் ரிஷப் குலாடி இம்ரான் கான் புலம்பலுக்கு 8 நிமிட பதிலடியாகச் சொன்னது கூட சுவாரசியமாகத் தான் இருக்கிறது! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சொன்ன மாதிரி இம்ரான் கான் வரவர கார்டூனிஸ்டுகளுக்குப் பிரியமான காமெடிப் பீசாகி வருகிறார் என்பதுதான் விஷயம்!



காஷ்மீர் முஸ்லிம்களை பற்றிக் கவலைப்படுகிறீர்களே இம்ரான்! சீனாவில் உய்கர் முஸ்லிம்கள் நிலையைப் பற்றி எப்போது பேசுவீர்கள் என்று அமெரிக்கா கேள்வி எழுப்பி இருக்கிறது.

மீண்டும் சந்திப்போம்.    
       

2 comments:

  1. >>> இம்ரான்!.. சீனாவில் உய்கர் முஸ்லிம்கள் நிலையைப் பற்றி எப்போது பேசுவீர்கள் என்று அமெரிக்கா கேள்வி எழுப்பி இருக்கிறது... <<<

    அதில் ஏதும் ஆதாயம் இருக்காதோ என்னவோ!?...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை செல்வராஜூ சார்!

      அது பாகிஸ்தானுக்கு அல்ல! சீனாவுக்குப் போடப்பட்ட தூண்டில்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!