ஒரு புதன்கிழமை! சரத் பவார்! தகர உண்டியல்! கிரேட்டா தன்பெர்க்!

சரத் பவார்! மஹாராஷ்ட்ரா அரசியலில், பலமுறை  ஊழல் குற்றச்சாட்டுக்களில் பெயர் அடிபட்டுக் கொண்டிருந்தாலும் இதுவரை அவர்மீது கிரிமினல் வழக்கு எதுவும் பதிவு செய்யப் பட்டது இல்லை. 2015 இல் சுனில் அரோரா என்பவர் தாக்கல் செய்த ஒரு பொதுநல வழக்கில், கடந்த மாதம் மும்பை உய்ரநீதிமன்றம் பிறப்பித்திருக்கிற ஒரு உத்தரவால்  சரத் பவார்,அவருடைய அண்ணன் மகன் அஜித் பவார் உட்பட பலர்மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 



கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில், சர்க்கரை வணிகத்தில் சரத் பவாருக்கு இருந்த மிகப்பெரிய ஆதிக்கத்தில், நஷ்டத்தில் இயங்கிய சர்க்கரை ஆலைகளை அடிமட்ட விலைக்கு விற்க வைத்ததில் கூட்டுறவு வங்கிகள் சுமார் 25000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பைச் சந்தித்தன என்கிறார்கள். கிரிக்கெட் சூதாட்டங்களில் இருந்து தாவூத் இப்ராஹிமுடனான நிழல் உலகத் தொடர்புகள் என்று சரத் பவாருடைய ஊழல் சாம்ராஜ்யம் 2Gஸ்பெக்ட்ரம் விவகாரம் வருகிறவரை          கருணாநிதியைவிட மிகப் பெரியதாக இருந்தது என்று சொல்வார்கள். அமலாக்கத்துறை இப்போது இந்தவழக்கைக் கையால் எடுத்திருக்கிறது. 


2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் தான் போட்டியிடப் போவதில்லை என்று சரத் பவார் அறிவித்தது கூட, பிரதமர் பதவி மீது அதுவரை கண்வைத்திருந்தவர், சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்று ஒதுங்கிப்போன நரி கதைதான்! 

ஒரு இத்தாலியப் பெண்மணி நாடாளக்கூடாதென்று சிலவருடங்களுக்கு முன்னால் Ex சபாநாயகர்    PA சங்மாவுடன் சேர்ந்து காங்கிரசிலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP)  ஆரம்பித்ததும், அதே இத்தாலியப்பெண்மணியின் குடும்பக் கம்பெனியாகிப் போன காங்கிரசோடு இன்று  கூட்டுச் சேர்ந்து அரசியல் நடத்திவருவதும் ஜனங்கள்  மறந்து போன பழைய கதைதான்!  பழம்தின்று கொட்டைபோட்ட இந்திய ஊழல் அரசியல்வாதிகளுக்கே உரிய தெனாவட்டில் மகாராஷ்டிரா டில்லிக்குத் தலைவணங்காது என்றும்  தன்னை யாராவது சிறைக்கு அனுப்ப திட்டமிட்டால் அதை தான் வரவேற்பதாகவும்  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்திருக்கிறார். பண மோசடி வழக்கில் தன் பெயரையும் தனது உறவினர் பெயரையும் அமலாக்கத்துறை சேர்த்துள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் சிறைக்கு செல்லவும் தயார் என சரத் பவார் சொன்னதாக தற்போதைய செய்திகள் சொல்கின்றன. 


இங்கே கழகங்களுடன் சேர்ந்து xxx திங்கப்போவதற்கு முன்னால். கம்யூனிஸ்ட் என்று  சொல்லிக்கொண்டவர்களுக்கு நிறைய மரியாதை இருந்தது! தேர்தல் அரசியலே போதும் என்று ரெண்டு சீட்டுக்காக கழகங்களோடு ஒட்டி உறவாடினால் கிடைப்பது வேறே!



ஐ நாவில் மனிதர்கள் வாழ முடியாத அளவிற்கு சுற்றுசூழல் சீரழிந்து கொண்டிருக்கும் போது..அதை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க உலக நாடுகளின் தலைவர்களுக்கு என்ன ஒரு தைரியம் ?! என்று உணர்ச்சி கரமாக கேள்வி எழுப்பிய Greta Thurnberg ஸ்வீடனை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி .
மேலும்.. இவரோடு சேர்த்து 15 பள்ளி மாணவ மாணவிகள் .. பிரேசில், பிரான்ஸ், அர்ஜென்டினா, துருக்கி , ஜெர்மனி ஆகிய ஐந்து நாடுகள் மீது ஐ.நா.வில் புகார் அளித்திருக்கிறார்கள்.
இதில் மேலோட்டமாக தெரியும் உணர்ச்சிகளையும், பரபரப்புகளையும் தாண்டி பார்த்தால்.. உலக நாடுகளின் Convention on the Rights of the Child [ CRC ] ஒப்பந்தத்தில்.. சுற்றுசூழலுக்கு பெரும் கேடுகளை விளைவிக்கும் சீனா கையெழுத்திடவில்லை. அமெரிக்காவும் கையெழுத்திடவில்லை.
அதனால்...உலக மக்களின் கவனம் பெற்றதை தாண்டி .. உடனடி பலனோ..பெரிதான பலனோ ஒன்றும் இருக்காது.
அமைதிக்கு மலாலா ஒரு brand ஆக உருவாக்கப் பட்டது போல...இன்னும் இரண்டு வருடங்களுக்குள் Greta-வும் சுற்றுசூழலுக்கான brand-ஆக உருவாக்கப் பட்டு, நோபெலை கொடுத்து ivory tower-க்குள் அடைக்கப் பட்டிருப்பார்.
சுற்றுசூழல் பழைய வழியிலேயே நகரும்.
இப் பிரச்சினையில்..இன்னொரு கோணமாக...சுற்றுசூழல் குறித்த பெரும் பீதி திட்டமிட்டு பரப்பப் படுகிறது என்று ஆய்வுக்கட்டுரைகளாகவும், அறிவியல் கட்டுரைகளாகவும் ஏராளம் காணக் கிடைக்கின்றன. துறை பேராசிரியர்கள் , ஆய்வாளர்கள் பலரும் எதிரெதிர் அணியில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களுக்கு வழக்கம் போல குழப்பமும், அதனால் ஏற்படும் எரிச்சலும் மட்டுமே மிச்சம். 

Swedish teenage climate activist Greta Thunberg was named on Wednesday as one of four winners of the 2019 Right Livelihood Award, known as Sweden's alternative Nobel Prize. Ms. Thunberg shares the award with Brazilian indigenous leader Davi Kopenawa of the Yanomami people, Chinese women's rights lawyer Guo Jianmei and Western Sahara human rights defender Aminatou Haidar.

இந்தச்சிறுமிக்கு இப்போதே விருது கொடுத்துவிட்டார்கள் என்பது இப்போதைய செய்தி  வாயை மூட ஒரு விருது, அப்படித்தானா?  

புதன்கிழமைச் செய்திகளாக உலகம் போகிற போக்கைக் கொஞ்சம் பார்த்தோம்! மீண்டும் சந்திப்போம்.  

2 comments:

  1. >>> இன்னும் இரண்டு வருடங்களுக்குள் Greta-வும் சுற்றுசூழலுக்கான brand-ஆக உருவாக்கப் பட்டு, நோபெலை கொடுத்து ivory tower-க்குள் அடைக்கப் பட்டிருப்பார்..<<<

    வழக்கம் போல கூட்டுக் கும்மி தான்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை செல்வராஜூ சார்!

      பானு கோம்ஸ் ஆப்படிச் சொன்ன வாய் முகூர்த்தம் அந்தச் சிறுமிக்கு 2019 Right Livelihood Award, known as Sweden's alternative Nobel Prize அறிவிக்கப்பட்டிருக்கிற செய்தியைக் கீழே இப்போதைய செய்தி என்று லிங்க் கொடுத்திருக்கிறேனே!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!