இட்லி வடை பொங்கல்! #80 #ராயல்அக்கப்போர் #தடுப்பூசிஅக்கப்போர் #மீசைஅக்கப்போர்

கொஞ்சம் உள்ளூர் அக்கப்போர்களிலிருந்து விடுபட்டு வேறு செய்திகளைப்பார்க்கப்போகலாம் என்று பார்த்தால் பிரிட்டிஷ்.அரசகுடும்பத்து அக்கப்போர்கள் முன்னே வந்து நிற்கின்றன  இன்று இங்கே சென்னையில் மறைந்த நடிகர் விவேக் அவர்களுடைய இறுதிச்சடங்கு மாலை 5 மணிவாக்கில் மாநில அரசு மரியாதையோடு நடக்கவிருக்கும் அதே வேளையில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்குகளும் செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் நம்மூர் நேரப்படி இரவு 8.30 மணிக்குத் துவங்கவிருக்கிறது. பேரன் ஹாரி மனவருத்தப்படக்கூடாது என்பதற்காக இறுதிச் சடங்கில் பங்கேற்கிற அரசகுடும்பத்தவர் எவரும் ராணுவ உடையணிந்து வரவேண்டாம் என 95 வயதாகும் ராணி  கருணையோடு சொல்லி இருக்கிறாராம்.

 

ராயல் அக்கப்போர்கள் அத்தனை சீக்கிரமாக முடிந்து விடுவதில்லை. கொரோனா முன்னெச்சரிக்கை என்ற சாக்கில் கூடுமானவரை சர்ச்சைகளைத் தவிர்க்க முயற்சித்தாலும், ராணியின் வாரிசுகளான இளவரசர் வில்லியம் இளவரசர் ஹாரி இருவருக்குமிடையிலான துவந்தம் இன்னும் முடியவில்லை. ராணியின் 4 மக்களும் சவப்பெட்டியைத் தொடர்ந்துவரும்போது பேரன்கள் இருவரும் தோளோடு தோள் உரசப் பின்தொடர மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ராணியின் மகள் இளவரசி ஆனியின் மகன் பீட்டர் பிலிப் சகோதர்களுக்கிடையில் சேர்ந்துவருவாராம்! இந்த ராயல் தமாஷாவை ஒரு திருவிழா மாதிரி ஆங்கிலேயர்கள் கொண்டாடுவது விசித்திரம்தான் இல்லையா?


மேலே படத்தில் செயின்ட் ஜார்ஜ் சேபலில் தரைக்கு 16 அடி கீழே இருக்கிற 200 வருடப் பழமையான அரச குடும்பத்தினருக்கான சவப்பெட்டகத்தில் ராணி எலிசபெத்  இறக்கும் வரையில்  இளவரசர் பிலிப்பின் உடல் வைக்கப் படுகிறது. ராணி இறந்த பிறகு இருவரது உடல்களும் விண்ட்ஸர் மாளிகையில் இருக்கும் இன்னொரு  இடத்தில் சேர்த்தே புதைக்கப்படும் என்கிறது செய்தி The Prince Consort passed away earlier this month at the age of 99 and his funeral is set to take place this afternoon.His remains will be placed behind a set of iron gates around 16ft underground and will stay there until his wife Queen Elizabeth II dies.They will both then be placed in the King George VI Memorial Chapel, Windsor, alongside George VI and Queen Elizabeth.


இந்த வீடியோ செய்தியின் நம்பகத்தன்மை என்ன? ப்ரம்ம செலானி கொஞ்சம் தரவுகளோடு கேள்வி எழுப்பியிருக்கிறார்.


கொரோனாவின் புதிய வடிவம் இந்தியாவில் வேகமாகப் பரவி வருவது கவலையளிப்பதுதான் என்றாலும் அதை விட ஜனங்களுடைய பொறுப்பின்மையும், குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளுடைய விஷமத்தனமான பிரசாரங்களும், ஏற்கெனெவே தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயங்குகிற ஜனங்களை இன்னமும் தேவையே இல்லாத குழப்பம் அச்சத்தில் தள்ளுகிற மாதிரித் தான் இருக்கிறது. உள்ளூர் திருமா முதல் நேருபரம்பரையின் தத்தி வாரிசு ராகுல் காண்டிவரை கைகோர்த்துச் செயல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இங்கே பார்க்கலாம்.  


பந்தயம் கட்டுவதும் தீனா மூனா கானா ஆசாமிதான்!

மீண்டும் சந்திப்போம்.  


No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!