Showing posts with label ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன். Show all posts
Showing posts with label ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன். Show all posts

ஒரு புத்தகம்! அது தந்த அறிமுகத்தெளிவு! ஒரு விமரிசனம்

.....
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் எழுதிய ஹிந்துமதம்-ஒரு அறிமுகத் தெளிவு சென்னை சந்தியா பதிப்பக வெளியீடாக 277 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது.விலை ரூ.170/-
இந்தப்புத்தகத்தை, இதன் சிலபகுதிகள் கூகிள் வலைக் குழுமங்களில் வெளிவந்து கொண்டிருந்த தருணங்களிலேயே படித்திருக்கிறேன்.புத்தகத் தலைப்பே சொல்வது போல இது இன்றைய இந்திய இளைஞர்களுக்கான ஒரு நல்ல அறிமுகம், அவசியமானதும் கூட!


இப்படி இந்தப் புத்தகத்துக்கான முன்னோட்டமாக 2011 கடைசியில் கூகிள் ப்ளஸ்ஸில் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டது. என்னுடைய எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. எத்தனையோ ஆர்ப்பரிப்புக்களுடன் பல புத்தகங்கள் புத்தகக் கண்காட்சிகள் வந்து போகலாம் வந்த சூட்டுடனேயே மறந்து போகலாம். ஆனால் எந்த ஆரவாரமுமில்லாமல் வந்த இந்தப் புத்தகம் இளைய தலைமுறையினரிடம் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை இன்றைக்கு வந்த மின்னஞ்சல் தெளிவாகவே சொன்னது. பெங்களூருவில் இருந்து திரு கே வி முகுந்த் என்ற இளைஞரிடமிருந்து வந்த இந்த  விமரிசனத்தை  அவருடைய அனுமதி இல்லாமலேயே இங்கே  பதிவாகப் பகிர்ந்து கொள்கிறேன்.இன்றைக்கு கூகிள் ப்ளஸ்ஸில்   நண்பர்கள் ஹிந்து மதம் பற்றியும், வேறு சில விஷயங்களையும் விவாதித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது இந்த மாதிரித் தெளிவைத் தருகிற அறிமுகமாக நூல்கள் இன்னும் அதிகமாக வரவேண்டும் என்ற எண்ணத்தில் சம்பிரதாயமான அனுமதிக்கெல்லாம் காத்திருக்க வேண்டாம் என்று இங்கே...!
திரு கே வி முகுந்த்  எழுதுகிறார்.....



Overall, I found the book an engaging reading. The book should appeal to the logical mind of the present-day youth, who are products of the scientific education system and to whom atheism appears to be a fashionable option. Although the author claims that this book is primarily targeted at beginners, this book should serve as a good, clarifying, companion to even those who have had some kind of initiation into the literary works of Hinduism.

The author’s effort in demystifying Hinduism to the target audience is commendable. The book, to a greater extent, succeeds in unravelling the vedic religion in its truest form - free of its biases and abuses. The book answers some of the most fundamental questions and misconceived notions of Hinduism. Also, the choice of appropriate pramanams to drive home the concepts remains this book’s biggest asset. The chapters clarifying the ritual aspects of Hinduism make for interesting reading. In addition, the wealth of information representing different various traditions in the cross-references adds a lot of credibility to this book and reinforces its unbiased nature.

நுழைவு வாயில்’ chapter serves as a good introduction section. It helps to set the expectations right at the beginning. ‘உருவாய் அருவாய்’ chapter clarifies the foundations of Hindu philosophy quite well. However, when you point out that most schools draw from the same source (Veda/Vedanta) for Tattva Nirupanam, you could have added a couple more lines to explain why the knowledge of tattvams vary across siddhanthams, despite drawing from the same source. Though you have pointed out who the paramatma is according to each sampradhayam, an explanation regarding why Advaita recognizes one tattvam, while Visistadvaitam recognizes three and so forth could be a clarifying inclusion.

ஒரு ஜீவனுக்கு கர்மாதீனமாக ஒரு சம்பிரதாயத்தில் ஈடுபாடு கிட்டுவதாகவும், ஒரு ஆகம-ரீதியான சம்பிரதாயத்தை மற்றொரு சம்பிரதாயத்துடன் ஒப்பிடுகையில் ஏற்றத்-தாழ்வுக்கு இடம்  இல்லை என்று கூறியிருந்தீர்கள். கர்மத்தின் அடிப்படையில் மனிதர்களுக்குள் ஏற்றத்-தாழ்வு நிலவும் பொழுது, கர்மத்தின் அடிப்படையில் கிட்டும் சம்ப்ரதாய சம்பந்தத்தில் ஏன் ஏற்றத்-தாழ்வு இருக்கக் கூடாது என்ற கேள்வி எழுகிறது.

'நீயா நானா' தலைப்பில் மதத்தை ஒரு அலுவலகமாக பாவித்து செய்யப்பட்டுள்ள ஒப்பீடு மிக அருமை. இது தொடங்கி முடிவு chapter பர்யந்தமாக பல லௌகீக உவமைகள் தந்து கருத்துகளைக் கையாண்டிருக்கும் விதம் பாராட்டிற்குரியது.

In this age of information revolution, where every possible information (authenticated and false) is available to seekers at the click of the button, the chapters on what to read to know about Hinduism, how to read them and what to avoid is a welcome necessity. I also appreciate the provisioning of references at the rear end, thereby encouraging the reader to probe further if he/she is interested.

புத்தகம் முழுவதிலும் உங்கள் சுய-நம்பிக்கையை வெளிப்படுத்தும் கருத்துகள் இல்லாமல் பொதுவாக மதச்சார்பின்றி விஷயங்களைச் சொன்னது இந்த புஸ்தகத்தின் இன்னொரு விசேஷம்.  Today’s youth looks at religion with a lot of pessimism. It is imperative to be as unbiased as possible in demystifying Hinduism to such a target audience.

The book is replete with ‘‘warnings’, which I think will help the reader to exercise his/her judgment before accepting the words of such people/books at face value. One such example is reproduced below:

இதிஹாசங்கள்-புராணங்கள் எல்லாம் வேதாந்தம் புகட்டும் தத்துவ உண்மைகளை பல கதைகளின் மூலமும், பெரியோரின் விளக்கங்கள் மூலமும் நன்கு விளக்கி காட்ட வந்தவை. அவற்றில் மனிதனின் நடைமுறை வாழ்க்கைக்கு விதிமுறை தேடுதல் என்பது ஹிந்து மதம் சொல்லாதது.

இது கல்வெட்டில் பொறித்து வைக்க வேண்டிய வாசகம். ஏனெனில், இன்று இதிஹாச-புராணங்களை கதா-காலக்ஷேபமாக சாதிக்கிறேன் என்று கண்டதையும் அர்த்த-விசேஷம், வாழ்வுக்கு விதிமுறை என்றெல்லாம் சொல்ல முனைபவர்களின் எண்ணிக்கை ஏராளம்.  

In sum, one needs to go through the book multiple times to understand it better. The book is a culmination (and a high-level synthesis) of the thoughts that have circumnavigated this country under the broad aegis of Hinduism. The author, while undertaking the arduous task of simplifying Hinduism for the present day youth, can be said to have broadly succeeded in his effort. The collection of essays could have been ordered better as I felt that the reader is taken back and forth between various topics. Also, it would have been better if the book went through one more round of proofreading as there are a few spelling mistakes.

This is all that comes to my mind now. If something is left unsaid, I shall follow it up.

இந்த இளைஞருடைய வலைத்தளத்தைப் பார்த்த பிறகு எனக்கேற்பட்ட பிரமிப்பை வார்த்தைகளில் சொல்ல முடியாது.

http://sreevaishnavam.wordpress.com/2013/01/16/hinduism-an-introduction-blurb/

திருத்தாளச் சதி! இது கவிதை நேரம்!




ராபர்ட் ஃபிராஸ்டின் ஒரு கவிதையை இங்கே அனுபவித்தது நினைவுக்கு வருகிறதா?
Something there is that doesn't love a wall,
That sends the frozen-ground-swell under it,
And spills the upper boulders in the sun,
And makes gaps even two can pass abreast

என்று ஆரம்பிக்கிற இந்தக் கவிதை, இரண்டு பேர் ஒரு குறுக்குச் சுவரைப் பற்றி பேசுவதாக உருவகத்தை எடுத்துக் கொண்டு நாற்பத்தாறு வரிகளில் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. வேலியை ஒட்டி  அனுபவத்தைச் சொல்பவனும், அண்டைவீட்டுக்காரனும் பேசிக் கொண்டே நடக்கிறார்கள். வேலி எதற்கு, என்னுடைய பக்கத்தில் இருப்பது, உன்பக்கம் வந்து என்ன செய்து விடும் என்று கேட்பதற்கு, அண்டைவீட்டுக் காரன் சொல்கிறான், நல்லவேலிகள் நல்ல அண்டை வீட்டுக் காரனை உருவாக்கும்!

மேற்கத்தியக் கவிஞன் இந்தக் கவிதையில் எழுப்புகிற கேள்விக்குத் தெளிவான பதில் கவிதையிலும் இல்லை, அதை விமரிசனம் செய்தவர்களுடைய  விமரிசனங்களிலும் கிடைப்பதில்லை என்பதை ஏற்கெனெவே இந்தப்பதிவில் பார்த்திருக்கிறோம். ஆனால், கீழைய மரபுகளில் ஊறியவர்களுக்கு இந்தக் கேள்விக்கு  பதில் காண்பதில் எந்த சிரமமும் இருப்பதில்லை. கேள்வியைத் தெளிவாகக் கேட்டுக் கொண்டு, அதற்கு மிகவும் தெளிவான விடையைக் காட்டுகிற லாவகத்தை, ஸ்ரீரங்கம் வி மோகன ரங்கனுடைய கவிதை ஒன்றை தமிழ் வாசல் கூகிள் வலைக் குழுமத்தில் மீள்வாசிப்பு செய்து கொண்டிருந்த தருணத்தில் சுகமாக அனுபவித்தேன் என்று தான் சொல்லவேண்டும்!  

இங்கே அந்தக் கவிதை ஜாலம்....!


ஒரு காலும் தாண்டிவிட முடியாத
சுவர்களின் பின்னே நின்றபடிதான்
ஒருவரை ஒருவர் சந்திக்கின்றோம்
கண்ணுக்குத் தெரியாத தடுப்புச் சுவர்கள்
அல்லது கண்களைத் தடை செய்யாது
வெட்ட வெளியாய் மறைந்து நிற்கும் தடைச்சுவர்.

மிகமிக நேரிடையான சுருக்கு வழியும்
சுற்றிவளைத்த சுழல்வழி என
சார்புநிலைப் பொது விஞ்ஞானம் பகரினும்
இடித்துத் தள்ள மூர்க்கம் எழுந்தாலும்
இணையும் கைகளுக்கு நடுவிலும்
அந்த மறைந்து வெளியான தடுப்புச் சுவர்.
சுவர் சமயத்தில் பல உடுப்புகளும்
வேஷங்களும் போட்டு ஏமாற்றுவதும் உண்டு.
 
ஆண் பெண் கிழவர் குழந்தை
அந்நியள், நம்மவள், எவனோ, இவளோ
இவரோ, அதுவோ,
அவர்களோ, இவர்களோ, உவர்களோ
எனப்பல எனப்பல எனப்பல
நினைப்பினில், நடப்பினில்,
நனவினில் நடைமுறை நிஜத்தினில்
கனவுகள் ஓய்ந்த நிதர்சனப் பொழுதினில்
தடைச்சுவர் கண் மறைக்காமல்
எண் மறைக்காமல்
எங்கோ எப்படியோ எவ்விதமோ
தட்டுப்படும் தடைச்சுவர்
தோன்றாமல் தோன்றி.
நீயும் நானும் வேறிலாது நிற்க
 
நயந்தாலும் நளினமான விலகல்
பயமற்ற நெருக்கமாய்ப் பயின்ற தொலைவு
அயலாகிப் போகும் அணுக்க ப்ரதேசம்
கடக்க முனைந்த கால்
தூரப்பட்டுப் பின்னடையும் மாயம்
இத்தனைக்கும் நீயும் நானும்
பக்கத்தில் பக்கத்திலேயே அமர்ந்துள்ளோம்.
 
இன்னும் சொல்லப் போனால்
என்னுள் நீயும் உன்னுள் நானும்
உயிர்த்த கணங்களும் உண்டுதானே!
ஆயினும் தொலைவு இடையிட்ட
பாடுடைப் போலிகளோ நாம்?
போயினும் வருவோம்
என்ற நம்பிக்கையில்
விலகிச் சேயிடைப்படா நிற்கும்
ஓருயிரின் பல பிம்பங்களாய்
ஒரு பிம்பத்தின் பல்லுயிர்களாய்த்
தனித்தனி உயிர்களின்
பிம்பங்களே மெய்மைகளாய்
அம்புவியில் வளைய வரும்
நெருக்க விழைவின் முறிவுகளாய்
உருவு சுமந்த அந்நியங்களாய்
உருக்கரந்த அந்நியோந்நியமாய்
வெருவரத் திரிதரும்
உயிர்க்குலக் கரவறப்
பயிலொளி அன்பென நின்றதும்
எதுவென அறியா முனைப்பினில்
கதுவிடும் மோனம் முகிழ்த்திடும்
சதுரது சத்தியம் என்றிடும்
குதுகுலம் உளத்தினில் குமிழ்வதும்
யதுகுல முரளியின் பண்களோ?

ஆயினும் ……….

உன்னில் உள்ள ஏதோ ஒன்று என்னுடன்
என்னில் உள்ள ஏதோ ஒன்று உன்னுடன்
நம்முள் உள்ள ஏதோ ஒன்று நம்முடன்
நாமாய் நின்ற ஏதோ ஒன்று அவர்தம்முடன்
நம்மிலும் அவர்தம்மிலும் உள்ளதாம் ஒன்று
மற்றவர்தம்முளும் நின்ற ஏதோ ஒன்றுடன்
சுற்றமாய்க் கலந்து கலக்க
உற்றதும் உறுவதுமாய்
நிலவிடும் ஒரு பெரும் விழைவு
அகண்ட சத்சங்கமாய் விழைந்திடும் ஏகம்
அதுதானோ நீ நான் நாம் அவர் அனைத்துலகும்?


அத்வைத நிலையிலும் தீருமோ
இந்த அணுகலால் விலகும் மாயமும்
விலகிட அணுகிடும் விழைவும்?

******

கவிதையின் வீச்சு அங்கேயே நின்றுவிடுவதில்லை! ஒரு கவிஞனுக்கு எல்லைகளே இல்லை என்பதை மெய்ப்பித்துக் கொண்டு அது இது என்று எங்கெங்கோ தொட்டுப் போய்க் கொண்டே இருக்கிறது!

திருஞான சம்பந்தர் திருத்தாளச்  சதி என்ற சந்தத்தில் ஒரு பதிகம் பாடியிருக்கிறார், அவருக்குப் பின் வேறெவரும் அந்த சந்தத்தில் பாடியதில்லை என்ற தகவலைக் கேட்டதும் தானே திருவரங்கர் திருத்தாளச்சதி என்று ஒரு பதிகம் பாடியிருப்பதை இங்கே  பகிர்ந்து கொண்டிருக்கிறார்

பெருகி வரும் மோகனத்தமிழுக்கு வந்தனம் செய்வோம்!

அரங்கன் இந்த வலைப்பக்கங்களில் எழுதிவரும் "ஹிந்துமதம்: ஒரு அறிமுகத்தெளிவு" தொடரைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறீர்கள் தானே! 








>
பதிவு பிடித்திருந்தால் பக்கத்தில் தெரியும் ப்ளஸ் ஒன் பட்டனை அழுத்திப் பகிர்ந்து கொள்ளுங்களேன்!

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனின் "அறிவும் நம்பிக்கையும்"!



இணையத்திலேயே ஆர்டர் செய்கிற வசதியைப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்த பிறகு,சமீபகாலமாக புத்தக் கடைகளுக்குச் சென்ற புத்தகம் வாங்குகிற வழக்கம், அநேகமாகக் காணாமலேயே போய்விட்டது. 

என்னதான் இணையத்தில் சுளுவாக வாங்க முடிந்தாலும், நேரடியாகப் புத்தகக் கடைக்குச் சென்று, நூலை கொஞ்சம் புரட்டிப் பார்த்து புத்தம்புதிய காகித மணம், அச்சு நேர்த்தி, உள்ளடக்கம் இவற்றை அவதானித்து வாங்குகிற சுகத்துக்கு இணையாகுமா?

இணையத்தில் தமிழ்ப் புத்தகங்களை வாங்குவதில் உள்ள பெரிய சிக்கல். நாம் ஒரு நல்ல புத்தகத்தை வாங்குகிறோமா, அல்லது குப்பையையா என்று தெரிந்து கொள்ள முடியாது.புத்தகத்தைப் பற்றி, புத்தக ஆசிரியரைப் பற்றிப் பதிப்பகத்தாரும் சரியான தகவல்களைத்தருவதில்லை. புத்தக விமரிசனங்கள் என்பது தமிழைப் பொறுத்தவரை இன்னமும் சரியாக வளராத ஒரு துறைதான்.ஆக, இங்கே அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் விமரிசனங்களை வைத்து மட்டும் ஒரு புத்தகத்தைப் பற்றி எடைபோட முடியாது என்பது தான்!

அந்தவகையில் புத்தகக் கடையில் நேரே சென்று, புத்தகங்களைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்து, அதை எழுதியவரின் நடை, சொல்லப்படுகிற விஷயம், சொல்லப்படும் விதம் எல்லாவற்றையும் அவதானிப்பது மிகவும் அவசியமாகிறது.

சமீபத்தில் மதுரை, சர்வோதய இலக்கியப் பண்ணைக்குச் சென்று, ஒரு சிறிய போராட்டத்தை  நடத்திய பிறகு வாங்கிய நூல்களில் ஸ்ரீரங்கம் வி மோகன ரங்கன் எழுதிய இந்தப் புத்தகமும் ஒன்று! இந்தப்பக்கங்களில் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனின் மோகனத்தமிழை பலமுறை மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்துக்கு நன்றி சொல்லியும், பலமுறை சொல்லாமலும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். 

இப்போது தமிழ்வாசல் கூகிள் வலைக் குழுமத்துக்கு நன்றியுடன்! 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் எழுதிய இந்தப் புத்தகத்துக்கு விமரிசனமாகத் திருமதி பவளசங்கரி அவர்கள் ஓர் இழையில் எழுதியதை, விருந்தினர் இடுகையாக அளிப்பதில் சந்தோஷம் கொள்கிறேன். இப்போதும் கூட, தமிழ் வாசல் குழுமத்திடமோ, திருமதி பவளசங்கரியிடமோ அனுமதி கேட்கவில்லை. அவர்கள் இதைப் பகிர்ந்துகொள்வதில் எந்த ஆட்சேபமும் தெரிவிக்க மாட்டார்கள் என்கிற தைரியம் தான்!!

தவிர ஏற்கெனெவே நீண்ட நாட்களுக்கு  முன்னால், விருந்தினர் இடுகையாக எவரேனும் எழுத முன்வந்தால் சந்தோஷத்தோடு பகிர்ந்து கொள்ளத்தயாராக இருப்பதை ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். 

இப்படி சுட்டுப் போட்டாலாவது, எவரேனும் விருந்தினர் இடுகை எழுத முன் வருகிறார்களா என்ற நப்பாசைதான்!




அறிவும் நம்பிக்கையும்:

பிரியும் இடத்தில் நிற்கும் மனிதன்

- ஆசிரியர் திரு ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் அவர்கள்.


திரு இராஜகோபாலாச்சாரி அவர்கள் கூறிய, இந்து மதத்தையும், இந்தியாவையும் காப்பாற்றியவரே சுவாமி விவேகானந்தர்தான் என்பதையும், சுவாமிஜியின், சிகாகோ பயணச் சொற்பொழிவுகளின் மாபெரும் வெற்றியையும், உலகெங்கும் சுற்றியலைந்து, தாய்த்திரு நாட்டிற்குத் திரும்பியபோது, இந்தியாவின் ஆன்மாவே திரும்பி வந்துவிட்டதாக புளங்காகிதமடைந்த இந்திய மக்களின் மன நிலையையும், நடு நிசி நேரம் தன்னுயிர் பிரியும் வேளையில், [ஆகஸ்ட் 16, 1886]  தன் ஆன்ம சக்திகள் அனைத்தையும் தன்னுடைய மிக நெருக்கமான சீடரான நரேந்திரருக்குத் தாரை வார்த்துக் கொடுத்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வள்ளல் வரை பல விசயங்கள் நமக்குப் பரிச்சயமானதாக இருப்பினும், ஆசிரியரின் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அனைத்தையும் பார்க்கும் போது, பல்வேறு சிந்தனைகள் நம் மனதிலும் விரிவதையும் தடுக்க இயலவில்லை. ஒரு நல்ல நூலின் இலக்கணம் ஒரு வாசகனை கண்மூடித் தனமாக நம்பச் செய்வதை விட, சுயமாக சிந்திக்கத் தூண்டச் செய்வதாக இருக்க வேண்டும். அந்த வகையில் இந்நூல் வெற்றி பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது.

சுந்தரத் தமிழ் துள்ளி விளையாடும் படைப்பு! 
“இரவும், பகலும் முடைந்து நெய்யப்பட்ட ஆடையாய்ச் செல்கின்றன நாட்கள் .............. அறிவும், அறியாமையுமாய்ச் செல்கிறது மனிதனின் முன்னேற்றப் பாதை” ................. இப்படி முன்னுரையின் முதல் வரியிலேயே வார்த்தை ஜாலங்கள் கொண்டு, வாசகர்களை சுண்டியிழுக்கும் நுண்கலை கற்றவர் என்று நிரூபிக்கிறார் ஆசிரியர்.

பறக்க எத்தனிக்கும் தன் குஞ்சுகளைக் காக்கும் பொருட்டு, பெற்ற காக்கைகளின் பரிதவிப்பை, ஒரு கவிதையாக மாற்றியமைத்த பாங்கு, கையில் எடுத்த நூலை கீழே வைக்க முடியாமல் ஒரே மூச்சில் படிக்கத் தூண்டுகிறது.

பதஞ்சலி யோக ஸூத்திரம் தொடங்கி, ஆதாம் ஏவாள் வரை மனம் படுத்திய பாட்டினால், சபிக்கப்பட்ட மனிதனின் நிலையை அழகு கவிதையாக வடித்திருக்கிறார் ஆசிரியர். ‘தான்’ என்ற அகங்காரம் தொலைந்தால்தான் மெய்ஞ்ஞானம் சித்திக்கும் என்பதனை விவரித்திருக்கும் விதம் தெளிந்த நீரோடை..

“அந்த அனுபவங்களின் விஷத்தையெல்லாம் குடித்துக் கழுத்தில் தேக்கியபடி இந்து சமுதாயத்தின் உன்னதத்தையும், இந்து மதத்தின் ஆக்கப்பூர்வமான உயிர்வடிவத்தையும் தம் உணர்வுக் கண்னால் கண்டு, உள்ளம் கசிந்து காதலாகி வந்துற்ற தீங்கிற்கு நெஞ்சம் விதிர்த்துக் கண்ணீர் மல்கி, உயர்வையே எடுத்துரைத்த நரேந்திரனின் பக்குவம் வியத்தற்குரியது”, என்று ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!

ஆசிரியர் உள்ளம் உருக, அத்துணை உணர்வுகளையும் சொல்லால் வடித்து, வாசகரை மெய்சிலிர்க்கச் செய்திருப்பதும் நிதர்சனம்.

ஆலகாலத்தை கண்டத்தில் தாங்கிய சிவபெருமானை முன்னிறுத்தியிருக்கும் பாங்கு அவர்தம் ஆன்மீக உணர்வையும் பிரதிபலிக்கிறது.

ஒரு சில இடங்களில் ‘ பரிவ்ராஜக வாழ்க்கை’ போன்று வடமொழிப் பயன்பாடு இருந்தாலும், அதற்கான தமிழாக்கமும் வாசகருக்குப் புரியும் வண்ணம் எளிய நடையில் வழங்கியிருப்பதும் சிறப்பு.

படிப்பறிவற்ற வாழ்க்கையை ‘ஊருண்கேணி’ என்று உவமைப்படுத்திய விதம் அற்புதம்.

” அறிவு என்பது முதலில் நம்பிக்கைகளின் தளைகளை அவிழ்க்கும், சிறைப்படுத்தும் வழக்க நெறிகளினின்றும் மனிதனை புறத்தனாக்கும் “ - என்ற ஆசிரியரின் கூற்று, Bertrand Russellன் "Useless Knowledge ", என்ற கட்டுரையை நினைவு கூறும் விதமாக அமைந்துள்ளது.

நரேந்திரர், விவேகாநந்தராக மாறிய சந்தர்ப்பத்தை நயம்பட எடுத்து உரைத்திருக்கின்றார்.

நரேந்திரர் மதக்கல்வியை கையாண்ட விதம் பற்றிய ஆசிரியரின் பார்வை வாசகரையும் சிந்திக்க வைக்கக் கூடியதாகவே உள்ளது.

வேதாந்தம் அமைப்பியல் குறித்த ஆசிரியரின் ஆழ்ந்த ஞானம் வியப்பில் ஆழ்த்துகிறது. " வேதத்திலேயே வந்திருந்தாலும் அறிவுக்குப் பொருத்தமாக இருந்தால் மட்டுமே ஏற்கத் தகுந்தது’, என்ற ஆசிரியரின் தீர்ப்பு பாரபட்சமற்றது.

19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலக் கல்வியின் விடியலில் மகிழ்ந்து அறிவியக்கக் கதிர்களில் குளித்த நெஞ்சங்களின் சூழலை, மனோத்தத்துவ முறையில் ஆய்ந்தறிந்து விளக்கமளித்துள்ளது வரவேற்கத்தகுந்தது.
ஆண்டவன் மீது பக்தர்கள் கொள்ளும் பக்தியை காதலன், காதலி மீது கொள்ளும் தீராக் காதலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நவீன வேதாந்தப் போக்கும் காணப்  பெறுகிறது.கடவுளின் அருகில் எளிதாகச் சென்றடையும் மார்கத்தை மேலும் எளிதாக்க முயற்சித்திருக்கிறார் ஆசிரியர்.
பிரம்மம் சத்யம், உலகம் மாயை, ஜீவன் பிரம்மமே என்ற அத்வைதத்திற்கு ஆசிரியரின் வியாக்கியானம் தேர்ந்த ஞானமுள்ளதாகவும் பல இடங்களில் ஓஷோவின் தத்துவங்களோடு ஒத்துப் போவதாகவுமே உள்ளது.

விசிஷ்டாத்வைதத்தையும் விட்டுவைக்கவில்லை இந்த வித்தகர். ஸ்ரீநாத முனிகள் அருளிய மறைந்து போன ‘யோக ரகஸ்யம்’, நூல் குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சங்கப் புலவர்களின் பார்வையில் காதல் மற்றும் காமத்தின் விளைவுகள், அன்பின் ஐந்திணை என்ற குறியீட்டால் அடி முதல் நுனி வரை அலசி ஆய்ந்திருக்கிறார்.

விவேகாநந்தரின் உபதேசங்களை ஊடுறுவி அதனைத் தெளிவுற தம் பாணியில் விளக்கியுள்ளார். ஒரு வேறுபட்ட கோணத்தில், ஹெர்மன் ஹெஸ்லேயின் ‘சித்தார்த்தாவில்’, சித்தார்த்தனின் தனிமையை வெகு நேர்த்தியாக விவேகாநந்தரின் தனிமையுடன் ஒப்பிட்டு , அதன் ரணம் குறித்தும் விவரித்திருக்கிறார்.

உணர்ச்சிச் சூழல்களும், அறிவுச் சுடர்களும் மாறி மாறி வரும் ஒரு பின்னிப் பிணைந்த ஆளுமையாக நம்மில் பதிவு பெறுகிறவர் விவேகாநந்தர் என்ற ஆசிரியரின் கூற்று ஏற்புடையதாகவே உள்ளது.

விவேகாநந்தரையும், நரேந்திரரையும் இரு வேறு உயிர்களாக உருவகப்படுத்தி, இருவரையும் ஒப்புமைப்படுத்தி, இரண்டிற்குமான பிணக்கத்தையும் துல்லியமாக எடுத்துக் காட்டியிருப்பதிலும் வெற்றி கண்டுள்ளார் என்றே கூறலாம்.

மேலை நாட்டு மத நம்பிக்கைகள், அராபிய தத்துவ அறிஞர் அவர்ரோஸ், கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில், அக்லினாஸ் இப்படி அனைவரின் தத்துவங்களையும் அலசி ஆயத் தவறவில்லை இந்த தத்துவ ஞானி.

சுருங்கச் சொன்னால், விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீராமானுஜர், ஆழ்வார்கள் மட்டுமன்றி உலகின் பெரும்பாலான மதங்களையும்,  தத்துவ ஞானிகளையும் கலந்தாய்ந்து தம் கருத்துக்களையும் உள்ளிருத்தி ஒரு அரிய படைப்பாக்கியிருக்கிறார் ஆசிரியர்.

‘பிற்றை நிலையில் சிந்திக்கும் பொழுது’, என்ற அழகிய தலைப்புடைய இறுதி அத்தியாயம், இம்முழு நூலின் முத்தாய்ப்பாக அமைந்திருக்கிறதென்றால் அது
மிகையாகாது.மஜீம்தாரின் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றிய கட்டுரையை , அதன் உணர்வலைகளில் ஏதும் மாற்றம் வந்துவிடக்கூடாது என்ற உந்துதலினாலோ என்னவோ அதனை அப்படியே ஆங்கிலத்திலேயே அளித்துள்ளார்.

குறிப்புதவி நூல்கள் என்று 67 பெயர்கள் கொண்ட ஒரு பெரும் பட்டியலையே குறிப்பிட்டும், மனம் நிறைவடையாத ஆசிரியர், “இப்படியா அப்படியா என்று தீர்ந்துவிடாத இத்தகைய தொல்லை இன்பமான அவஸ்தையில் இருந்து கொண்டு தான் இந்த நூலாக்கம் வெளிவருகிறது”, என்று முடித்திருப்பது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதோடு, திரும்பவும் முதல் பக்கம் நோக்கி பார்வையைத் திருப்பவும் வைக்கிறது....................

இந்த நூல் உண்மையிலேயே மனித குலத்தின் மிகப் பெரிய சமன்பாடுகளில் ஒன்றின் தீர்வு என்பதிலும் மிகையில்லை !!

88 பக்கங்கள் கொண்ட, தமிழினி வெளியிட்டுள்ள இந்நூலின் விலை ரூ.55.

இதை எழுதிய திருமதி.பவள சங்கரிக்கு நன்றியுடன்!

இந்த இழையில் திருமதி பவளசங்கரியின் விமரிசனத்துக்குத் திரு ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஒரு பதில் எழுதியிருந்தார். விமரிசகரின் பார்வைக்குத் தப்பிய சில விஷயங்களைத் தெளிவு படுத்தியதாக இருந்த அந்தப் பதிலையும் காணலாம்!

1)  பதஞ்சலி யோக ஸூத்திரம் தொடங்கி, ஆதாம் ஏவாள் வரை மனம் படுத்திய பாட்டினால், சபிக்கப்பட்ட மனிதனின் நிலையை அழகு கவிதையாக வடித்திருக்கிறார் ஆசிரியர். ‘தான்’ என்ற அகங்காரம் தொலைந்தால்தான் மெய்ஞ்ஞானம் சித்திக்கும் என்பதனை விவரித்திருக்கும் விதம் தெளிந்த நீரோடை..


2)படிப்பறிவற்ற வாழ்க்கையை ‘ஊருண்கேணி’ என்று உவமைப்படுத்திய விதம் அற்புதம்.


--- இங்கு வெறும் படிப்பறிவற்ற வாழ்க்கையௌக் குறிக்கவில்லை. ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையைக் குறித்தது.


3)‘ வேதத்திலேயே வந்திருந்தாலும் அறிவுக்குப் பொருத்தமாக இருந்தால் மட்டுமே ஏற்கத் தகுந்தது’, என்ற ஆசிரியரின் தீர்ப்பு பாரபட்சமற்றது.


இது ஆசிரியரின் தீர்ப்பு அன்று. வேதாந்தத்தின் தீர்ப்பு. அதைத்தான் வியந்து ஆசிரியரும் விளக்கியிருக்கிறார். மிகப் பழஙகாலத்திலேயே இவ்வாறு அறிவின்  கறார்தனங்களை மிகக் கச்சிதமாக வேதாந்தம் அறுதியிட்டு உரைத்துவிட்டது என்பதும் அதை மழுங்க அடித்துப் பல இயக்கங்கள் மீதூர்ந்ததும் ஆசிரியரால் கவனப் படுத்தப் படுகிறது. பரவாயில்லை அடுத்த அடுத்த ரீடிங்குகளில் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.


4)ஆண்டவன் மீது பக்தர்கள் கொள்ளும் பக்தியை காதலன், காதலி மீது கொள்ளும் தீராக் காதலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நவீன வேதாந்தப் போக்கும்
காணப்பெறுகிறது


இது நவீன வேதாந்தப் போக்கு அன்று. தமிழ் கூறும் நல்லுலகத்துச் சான்றோரும், தமிழ் நாட்டு வேதாந்திகளும் ஆயிரத்தி ஐந்நூறு வருஷங்களுக்கு முன்னமேயே கூட்டிணைந்து இயற்றிய பக்தி இயக்கங்களான ஆழ்வார்களின் சங்க அகத்திணைக் காதல் கெழுமிய பக்தி சாதித்த உன்னதம். அதைத்தான் நூல் விளக்க அரும்பாடு படுகிறது.


5)விவேகாநந்தரையும், நரேந்திரரையும் இரு வேறு உயிர்களாக உருவகப்படுத்தி, இருவரையும்..


இருவேறு உயிர்கள் அன்று அம்மா, இரு வேறு ஆளுமைகள் என்பது பொருத்தம்.  எனினும் இது மைனர் பாயிண்ட்.


ஒரு நல்ல சஹ்ருதயரை (ஒத்த உள்ளத்தர்) உங்களுக்குள் காணக் கொடுத்தமைக்கு நன்றி.

என்ன இது! கட் அண்ட்பேஸ்ட் வேலைகளைக் குறித்துப் பல இடங்களில் கிண்டல் செய்த இவனும் இந்த வேலையை ஆரம்பித்துவிட்டானா என்று ஆச்சரியப்பட வேண்டாம்! 

கொஞ்சம் ஆழ்ந்து படித்து, சொல்லப்பட்டதைக் கவனமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டிய புத்தகம் இது. வெறும் கதையைப் போல மேலோட்டமாக வாசித்து முடித்துவிடுகிற ரகமல்ல.அதனால் இதைப் பற்றி எழுதுவதற்கே, நான் நிறைய உழைத்தாக வேண்டும்!இப்போது புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய பார்வையில், இதன்மீதான கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்கு முன்னால்..........!


அதற்கு முன்னால் இந்த நம்பிக்கை, அறிவு என்று இரண்டு விதமாகச் சொல்லப் படுகிறது இல்லையா, அதில் நம்பிக்கை என்பது என்ன என்பதைக் கொஞ்சம் பார்த்துவிடலாம்!

அறிவு என்பது தேடலில் கிடைப்பது! அதே சமயம் நம்பிக்கையோ தேடலுக்குத் தூண்டுதலாக இருப்பது! தேடியது இதைத்தானா என்பதைத் தெளிவு படுத்தக் கூடியதாகவும் இருப்பதும் நம்பிக்கைதான்!  

"In the ignorance and darkness of the beginning, faith is the most direct expression of the Divine Power which comes to fight and conquer. "


அறியாமையும்
, இருளும் கூடிய தொடக்கத்தில், நம்பிக்கை ஒன்றே மனிதனுக்குத் துணையாக வழங்கப்பட்ட சாதனமாக இருக்கிறது, என்று ஒரு உரையாடலில்  ஸ்ரீ அரவிந்த அன்னை தெளிவுபடச் சொல்கிறார். 

இன்னொரு இடத்தில், இன்னும் கொஞ்சம் விரிவாக,
 
“Faith is the movement of the soul whose knowledge is spontaneous and direct.

Even if the whole world denies and brings forward a thousand proofs to the contrary, still it knows by an inner knowledge, a direct perception that can stand against everything, a perception by identity.

The knowledge of the psychic is something which is concrete and tangible, a solid mass. You can also bring it into your mental, your vital and your physical; and then you have an integral faith - a faith which can really move mountains.”


 -ஸ்ரீ அன்னை 

டிஸ்கி 1: இந்தப்பதிவு இரண்டுமூன்று நாட்களுக்கு முன்னாலேயே வந்திருக்க வேண்டியது! ப்ளாக்கரில் என்ன தகராறு என்று தெரியவில்லை, பப்ளிஷ் ஆனபிறகும் உரலியை அணுக முடியவில்லை. திரட்டிகளில் இணைக்கவும் முடியவில்லை. இரண்டு மூன்று தரம் டெலிட் செய்துபார்த்தும் பயனில்லாமல் போனது . ரீடரில் வாசிப்பவர்களுக்கு மட்டும் மூன்று முறை வந்திருக்கும்! பொறுத்துக் கொள்ளவும்!

டிஸ்கி 2இந்தப் புத்தகம், பதிவர் வால்பையன் அவசியம் படிக்க வேண்டிய புத்தகமாக சிபாரிசு செய்கிறேன்! போனபதிவிற்கு முந்தைய பதிவில், அவர் சரவெடியாக வெடித்த கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் இன்னொரு பரிமாணத்தில் இருந்து விடை சொல்வதாக இருப்பதால், நண்பர் வால்பையனுக்காக இந்தப் புத்தகம் என்னுடைய பரிசாக ரெடியாக இருக்கிறது!



பாரதியார்! ஆய்வுகள், அவதூறுகள்..! திரித்துச் சொல்லப்படும் உண்மைகள்!


மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் மோகனத் தமிழாக வரும் ஸ்ரீ ரங்கம் வி.மோகன ரங்கனைப் பற்றி, அவருடைய பரந்த வாசிப்பு அனுபவம் பற்றி இந்தப்பக்கங்களில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். (சு)வாசிக்கப்போறேங்க வலைத்தளத்தில் ஸ்ரீ ரங்கம் மோகன ரங்கனுடைய "படித்தான் பரிந்துரையாக" சீனி.விசுவநாதன் அவர்கள் எழுதிய பாரதி ஆய்வு:சிக்கல்களும் தீர்வுகளும் நூல் விமரிசனத்தை, மின்தமிழில் இருந்து அப்படியே மீள்பதிவு செய்திருந்தேன்! மின்தமிழில் இருந்து எடுத்துப் போடுவதற்கு அதன் நிர்வாகிகளுள் ஒருவரான  முனைவர் நா.கண்ணன் ஆட்சேபமெல்லாம் சொல்ல மாட்டார் என்ற தைரியம் தான்!

ஸ்ரீ ரங்கம் மோகன ரங்கன், என்னவென்று விவரித்துச் சொல்லாமல், திலகர் மறைந்தபோது பாரதி ஏன் அவரைப் பாடவில்லை  என்ற கேள்வியைத் தாங்களே கேட்டுக் கொண்டு, பாரதியைப் பற்றித் திரித்துச் சொல்வதற்கு, சீனி விசுவநாதன் எழுதிய இந்தப் புத்தகத்தில் தெளிவான விடை இருக்கிறது என்பதை மட்டும் சொல்கிறார். 


எழுத்தாளரும், பதிவருமான ஜீவி தன்னுடைய பின்னூட்டத்தில் திரு. வ.ரா  எழுதிய புத்தகத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார்.

கீற்று தளத்தில் பாரதியாரின் புதுச்சேரி வாசத்தைப் பற்றி பாரதி வசந்தன் என்பவர் எழுதிய ஒரு கட்டுரையை இது தொடர்பாக வாசித்ததில், அதில் இருந்து ஒரு பகுதியை எடுத்து ஜீவி சாருக்கு பின்னூட்டமாகப் பதிவிலும் எழுதினேன். அது வருமாறு:


"உண்மையில் பாரதியின் இந்தச் 'சித்தக்கடல்” நூல்தான் அவனின் புதுச்சேரி வாசத்தை உள்ளது உள்ளபடி நமக்குக் சொல்லிக்கொண்டிருக்கும் காலக் கண்ணாடி; இலக்கிய சாசனம். 1908ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகே பாரதி புதுச்சேரி வந்திருக்கக்கூடும் என்பது பாரதி ஆய்வாளர்களின் முடிவு. அந்தக் காலம் பாரதியின் இலக்கிய வாழ்வில் மிகவும் நெருக்கடியான காலம். அவன் சூரத்திலிருந்து சென்னைக்குத் திரும்பி வந்ததும் திலகரின் கொள்கையையும், வழியையும் ஆதரித்துத் தம்முடைய 'இந்தியா” பத்திரிகையில் 'எரிமலையாய்...” எழுதிக் கொண்டிருந்தான். அப்போது திலகருக்கு ஆறு வருஷம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திலகர் கோஷ்டியைச் சேர்ந்தவர்களையெல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கம் அடக்குமுறைக்கு ஆளாக்கியபோது பாரதி மீதும் அவர் நடத்திய 'இந்தியா” பத்திரிகை மீதும் சென்னை சர்க்கார் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கத் தலைப்பட்டதும் பாரதியின் நண்பர்கள் அவரை உடனே புதுச்சேரிக்குப் போய்விடும்படி ஆலோசனை வைக்கிறார்கள். இந்தச் சமயத்தில் பாரதி, தேச விடுதலைக்காகச் சிறை செல்வதைக் காட்டிலும் கவிதைத் தொண்டு மூலமாக விடுதலை வேள்வியை வென்றெடுக்க வேண்டும் என்று அவர்கள் விருப்பப்பட, அதன்படியே அவனும் புதுச்சேரி வர நேர்ந்தது.

இந்த அரசியல் பின்புலத்தை அறிந்து கொள்ளாது, 'பாரதியார் கோழை, பயங்கொள்ளி என்று சிலர் தவறாக எண்ணிக் கொண்டிருந்தார்கள். சிலர் வாய்விட்டும் சொன்னார்கள். பாரதி பயங்கொள்ளி அல்ல. ஒரு மனிதனுடைய உள்ளத்தின் உண்மையான நிலைமையை, அவன் பேசுகிற பேச்சு தெளிவாகக் காண்பித்துவிடும். பாரதியின் எழுத்திலே அச்சத்தை, தாட்சண்யத்தை லவலேசமும் காண முடியாது. நெருக்கடியில் பயப்படுகிறவன் அவன் அல்லன். பாரதி புதுச்சேரி போவதற்குக் காரணம் அவனுடைய நண்பர்கள். நண்பர்களின் யோசனைத் திறனில், பாரதிக்கு எல்லையற்ற நம்பிக்கை. நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கிப் புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்தபின் பாரதி பட்ட கஷ்டங்கள், சிறைக் கஷ்டங்களைக் காட்டிலும் நிரம்ப ஜாஸ்தி என்றுதான் சொல்ல வேண்டும். 'எண்ணெய் காய்கிற இருப்புச் சட்டியிலிருந்து, எரிகிற நெருப்பில் வீழ்ந்த கதையைப் போல ஆயிற்று பாரதியாரின் புதுச்சேரி வாசம்...” என்று பாரதியால் 'தமிழ்நாட்டுத் தேசபக்தன்” என்று அரவிந்தரிடத்தில் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட வ.ரா. என்கிற வ. ராமஸ்வாமி ஐயங்கார் தம்முடைய 'மகாகவி பாரதியார்” நூலில் குறிப்பிடுவது பாரதியின் புதுச்சேரி வாழ்வின் இன்னுமொரு இலக்கியப் பதிவு."

முழுக் கட்டுரையையும் படிக்க இங்கே



அதைப் படித்துக் கொண்டிருந்தபோது, நம்முடைய கட் அண்ட் பேஸ்ட் தமிழ் ஓவியா ஐயா "பாரதி பாடல் புரட்டு: "பார்ப்பனர்களின் அயோக்கியத்தனம் " என்ற தலைப்பில் பெரியாரின் குடியரசு கட்டுரையில் இருந்து ஒரு பகுதியை வெட்டி ஒட்டி  செய்திருந்த வேலை ஒன்றையும் பார்த்தேன்!


"பாரதி பாடல் என்பதாக சில பாட்டுகள் காலம் சென்ற திரு.சுப்பிரமணிய பாரதி என்கின்ற ஒரு பார்ப்பனரால் பாடப்பட்டிருந்தது. அவர் இறந்தவுடன் அவர் குடும்பத்தாருக்கு வயிற்றுப் பிழைப்புக்கு ஆதாரமாக அந்தப் பாடல்களைப் பற்றி பிரமாதமாக விளம்பரப்படுத்தி பொதுப் பணமாகிய காங்கிர பணத்திலிருந்து சுமார் ஆயிரம் ரூபாய் பாரதியின் பெண் ஜாதிக்கு தர்மமாகக் கொடுத்து, அந்தப் புத்தகத்தை அச்சுப் போடும்படி சொல்லி, ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் அந்தப் பாட்டுகளை விளம்பரப்படுத்தி ஒவ்வொருவரையும் அதை வாங்கும்படி செய்யப்பட்டது. அந்தப் புத்தகம் சாதாரணமாய் இரண்டரையணா அல்லது மூன்று அணாவுக்குள் அடங்கக் கூடியதாயிருந்தும் புத்தகம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் விலை போட்டு ஏழைகள் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. அது மாத்திரமல்லாமல் முதல் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம், நான்காம் பாகம் என்பதாக அவர்கள் பணத்தாசைக்குத் தக்கபடியும் நம்மவர்கள் மூடத்தனத்திற்குத் தக்கபடியும் புதுப்புது பாகங்கள் வெளியாகிக் கொண்டே வந்தன.

இவ்வளவு கொள்ளையையும் சகித்துக் கொண்டே வந்தும் கடைசியில் அதுதன் ஜாதிப் புத்தியைக் காட்டியேவிட்டது. எப்படியென்றால். சாதாரணமாக அப்புத்தகத்தின்பேரால் சில பார்ப்பனக் குடும்பம் கொள்ளை அடித்ததை, சிலர் பொறுத்துக் கொண்டு இருந்ததற்குக் காரணமே அப்புத்தகத்தில் அவர் பார்ப்பனர்களை உயர்வாக சில இடத்தில் சொல்லியிருந்தாலும். சில இடத்திலாவது உண்மை பேசி இருக்கின்றார் என்ற எண்ணமேயாகும். ஆனால், இப்போது அதையும் கொஞ்சம் கொஞ்சமாய் திருத்த ஆரம்பித்து விட்டார்கள் எனத் தெரிய வருகின்றது.

அதாவது பாரதிபாடல் முதற் பாகத்திலுள்ள பாட்டுகளில் ஒன்றான மன்னும் இமயமலை எங்கள் மலையே என்னும் பாட்டின் அடிகளில் உன்னத பாரத நாடெங்கள் நாடே என்னும் வாக்கியம் ஒரு அடியாக இருந்து வந்தது. இது யாவருக்கும் தெரிந்ததேயாகும். இப்போதைய பதிப்புகளில் பாரத நாடு என்பதை எடுத்துவிட்டு உன்னத ஆரிய நாடெங்கள் நாடே என்று திருத்திப் பதிக்கப்பட்டிருக்கின்றதாம். இம்மாதிரியாகவே அதில் வேறு பல விஷயங்களும் சந்தேகிக்க வேண்டியதாகவே இருக்கின்றன.

இரண்டரையணா புத்தகத்திற்கு ஒரு ரூபாய் விலை கொடுத்து வாங்கிப் படிப்பதின் மூலம் நமது பொருள் வீணாகுமன்றி, அது நம்மை ஏய்த்துத் தாழ்த்திவைத்திருக்கும் அயோக்கியர்களுக்கு ஆக்கத்தையும் கொடுக்க உபயோகப்படுகின்றது. நிற்க.

இந்தப் புத்தகம் அரசாங்கத்தாரால் பறிமுதல் செய்யப்பட்டபொழுது, வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்ட யோக்கியர்களின் கண்ணுக்கு இந்த மாதிரி அயோக்கியத்தனங்கள் சற்றும் தென்படாமலிருப்பது நமக்கு ஆச்சரியமல்ல என்றாலும், நாட்டின் தேச பக்தர்கள் யோக்கியதைக்கும் பார்ப்பனர்களின் அயோக்கியத் தனத்திற்கும் இதுவரை அவர்கள் இந்த மாதிரி எத்தனை புரட்டுகள் செய்து நம்மவர்களை கண்மூடி முட்டாள்களாக அடிமை கொண்டிருக்கிறார்கள் என்பதற்கும், முழு மூடர்களுக்கும்கூட உதாரணம் வேண்டுமானால் இந்த பாரதிப் பாடல் புரட்டே போதுமென்று நினைக்கின்றோம்."
-------------------
தந்தை பெரியார்- “ குடிஅரசு”, கட்டுரை, 10.02.1929 -
நூல்: “பெரியார் களஞ்சியம் குடிஅரசு” தொகுதி - 8 பக்கம் 38-39
அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா

இது, இரண்டு எதிர்முனைகளைப் புரிந்து கொண்டு யோசிப்பதற்காக! அப்படிப் பேசுகிற நபர்களின்  உள்நோக்கம், அந்தரங்க சுத்தியையும் தெரிந்து கொள்வதற்காக!

இப்படி எதிர்மறையாக, ஆதாரமோ, பகுத்தறிந்து பார்க்கும் திறமோ இல்லாமல் சேற்றை அள்ளி வீசுவதன் மூலம் மட்டும் எந்த உண்மையை இவர்களால் நிறுவ முடிந்திருக்கிறது?

பாரதியைப் பற்றிச் சொல்லியிருக்கும் வாசகங்கள்,  பாரதிக்குப் பொருந்தியதோ இல்லையோ, தனக்கு கன கச்சிதமாகப் பொருந்தியதை, பெரியார் அந்தக் கட்டுரையை எழுதிய நேரத்தில் அறிந்திருக்க முடியாது.  இந்த வார்த்தைகள் பொய்த்துப் போனதை அறிந்த  பிறகும் கூடப் பெரியார் அடிப்பொடிகள் இன்னமும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாதது  ஏன்?   பெரியார் நூல்களின் பதிப்புரிமை யாருக்கு என்ற பிரச்சினையும், அப்படி உரிமை கொண்டாடியது எதற்காக  என்பது வெளிப்பட்டுப் போன பிறகும் கூட, கட் அண்ட் பேஸ்ட்  வேலையைக் கடமையாகச் செய்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, இந்தப்  "பகுத்தறிவு" படும், அல்லது படுத்தும் பாட்டை நினைத்துச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை!


எவரெவரோ பாரதியைப் பற்றி எழுதுகிறார்கள்! என் கணவர் பாரதி என்று திருமதி செல்லம்மாள் பாரதி, தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதைப் படிக்க இங்கே. (1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்" என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.)