ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய !


Contemplation for The Day

But many-visaged is the cosmic Soul;
A touch can alter the fixed front of Fate.
A sudden turn can come, a road appear.
A greater Mind may see a greater Truth


Savitri B. II, C. X, P. 256



May I be nothing else any more than a flame of love!

“O THOU, sole Reality, Light of our light and Life of our life,

Love supreme, Saviour of the world, grant that more and more I may be perfectly awakened to the awareness of Thy constant presence.

Let all my acts conform to Thy law; let there be no difference between my will and Thine. Extricate me from the illusory consciousness of my mind, from its world of fantasies; let me identify my consciousness with the Absolute Consciousness, for that art Thou.

Give me constancy in the will to attain the end, give me firmness and energy and the courage which shakes off all torpor and lassitude.

Give me the peace of perfect disinterestedness, the peace that makes Thy presence felt and Thy intervention effective, the peace that is ever victorious over all bad will and every obscurity.

Grant, I implore Thee, that all in my being may be identified with Thee. May I be nothing else any more than a flame of love utterly awakened to a supreme realisation of Thee.”

The Mother

Prayers and Meditations

February 15, 1914

ஸ்ரீ அரவிந்தர் தன்னுடைய யோகம் பூர்த்தியாவதற்கு தன்னுடைய உடலையே த்யாகம் செய்த நாள் இன்று.

அருட்பெருஞ்சோதி என்று ராமலிங்க வள்ளலார் பெருமானாலும்,அதிமானச ஒளி என்று ஸ்ரீ அரவிந்தராலும் அழைக்கப்பட்ட அருட்பேரொளி ஸ்ரீ அரவிந்தர் உடலில் ஐந்து நாட்கள் பொன்னொளியாக இறங்கிய நாள் இன்று.

மரணம் என்பது பொய்மையின் தற்காலிக வெற்றி தானே அன்றி நிரந்தரமானது அல்ல. மரணம் என்பது வெற்றி கொள்ளக் கூடியதே. தென் தமிழ்க் கோடியில் சித்தர்களாலும், ஞானிகளாலும் மிக ரகசியமாக வளர்க்கப் பட்ட வித்யை இது. ராமலிங்க அடிகள் என்று அழைக்கப்பட்ட வள்ளல் பெருமானும், ஸ்ரீ அரவிந்தரும் சற்றேறத்தாழ சம காலத்தில் அறிவித்த உண்மை இது.

இருபத்து நான்காயிரம் வரிகளில் சாவித்திரி என்கிற தன்னுடைய பெருங்கவிதையில் ஸ்ரீ அரவிந்தர் இந்த பூரண யோகத்தின் அனைத்து அம்சங்களையும் மிக நுட்பமாகச் செதுக்கியிருக்கிறார். "கண்டவர் விண்டிலர்;விண்டவர் கண்டிலர்" என்று வழக்கில் இருந்தாலும் உரை, மனம் கடந்த ஒரு சத்தியப் பெருக்கை, தன்னுடைய யோக சாதனையில் கண்டதை சாவித்திரி எனும் மகா காவியமாக ஸ்ரீ அரவிந்தர் படைத்திருக்கிறார். 'உரை மனம் கடந்த ஒரு பெருவளி அதன் மேல் அரைசு செய்தோங்கும் அருட்பெருஞ்சோதி' என்று வள்ளல் பெருமான் கூறாமல் கூறியதை சாவித்திரி ஒரு பெரும் மந்திரமாக தன்னைப் படிப்பவர்களுக்கு பேரானந்த நிலையை அருளும் தாயின் தயவாக, நமக்கெல்லாம் வழங்கியிருக்கிறார்.

இந்தப் பெருங்கருணைக்கு எப்படி கைம்மாறு செய்ய முடியும்? எப்படி நன்றி செலுத்த முடியும்?


Om Sri Aurobindo Mirra!

Open my mind, my heart, my life

to

your Light, your Love, your Power.

In all things may I see the Divine!


கை கூப்பி, சிரம் தாழ்த்தி வணங்குவதை அன்றிக்கு வேறென்ன செய்ய முடியும்?

ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் இருவருடைய திருவடிகளிலும் எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் சமர்ப்பணம் செய்கிறேன்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய !

3 comments:

  1. அன்னையின் திருமொழிகளையும் அரவிந்தரின் திருமொழிகளையும் படிக்கும் போது ஒரு ஆழ்ந்த அமைதி உள்ளத்தில் உருவாகிறது. சில நேரம் குறைந்தது ஒரு அரை மணி நேரமாவது வேறெந்த செயலிலும் ஊக்கம் இல்லாதது போல் ஒரு மனநிலை உண்டாகிறது. வேறெதுவும் வந்து அந்த நிலையைக் கலைக்கும் வரை. இந்த நிலை சத்துவம் சார்ந்ததா தாமசம் சார்ந்ததா என்ற குழப்பம் உண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் இந்நிலை வருவது மட்டும் தொடர்ந்து நடக்கிறது. :-)

    Supramental Light என்று வேறு இடங்களில் படித்ததை அதிமானச ஒளி என்று இங்கே சொல்லியிருப்பதை இரு முறை படித்த பின்னரே புரிந்தது. :-) அதிமானசம் என்றால் Supermindஆ Overmindஆ? இரண்டுமே ஒன்று தானா?

    அரவிந்தர் அன்னை இருவரின் திருவடிகளில் என் கரணங்கள், மனம், ஜீவன் இவற்றை அர்ப்பணிக்கிறேன் என்று நிறைவு செய்திருக்கிறீர்கள். 'சரணம் அஹம் ப்ரபத்யே' என்று வேறு இடங்களில் இதே கருத்து சொல்லப்பட்டிருப்பதையும் பார்க்கிறேன். இறைவனுக்கே உரிய நம் கரணங்கள், மனம், ஜீவன் போன்றவற்றை நாம் மீண்டும் அர்ப்பணிக்க வேண்டுமா? இறைக்கே உரியவற்றை என்னுடையது என்று எண்ணுவது சரி தானா? பெரும் திருட்டு என்று அதனைச் சில பெரியவர்கள் குறிக்கிறார்களே?!

    Consent to be nothing என்று சொல்லியிருக்கிறீர்கள். இறை ஒளி புகுந்து செல்லும் ஊடகமாக இருக்க being nothing தேவை தான். அப்படி இருக்க நம் consent தேவையா?

    ReplyDelete
  2. வருகைக்கும், கேள்விகளுக்கும் நன்றி குமரன் சார்! முதல் பத்தியில், உங்களுடைய அனுபவத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். சத்துவமா, தாமசமா என்று புரியாத ஒரு அமைதி வந்து சூழ்வதை, நீங்களே தான் கண்டுகொண்டாக வேண்டும். தாமச, ராஜச அமைதி ரொம்ப நேரம் நீடித்திருக்காது.

    அதிமானச ஒளி என்று இங்கு குறிப்பிடப் படுவது Supramental Light தான். Supermind, Overmind இரண்டும் வெவ்வேறு படிநிலைகள். ஸ்ரீ அரவிந்தரின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்த முன்னோடிகள் என்னை வெகுவாகவே குழப்பியிருக்கிறார்கள். அல்லது, அரைகுறையான நான் ரொம்பவே குழம்பியிருக்கிறேன்-எப்படியிருந்தாலும், ஒரு தெளிவு பிறக்கும் அல்லவா? தமிழில், திருமதி பிரேமா நந்தகுமார் எழுதுவது மிகத் தெளிவாக இருந்த போதிலும் கூட, அவரும் இந்த மாதிரி நுட்பமான சொற்களுக்கு, இப்படிக் கரடுமுரடான வார்த்தைப் பிரயோகங்களையே உபயோகித்துக் கொண்டிருக்கும்போது, நான் எம்மாத்திரம்?

    பிரபத்தி என்பதை, அதன் ஆழ்ந்த பொருளை, வைணவக் கோட்பாடுகளை அறிந்தவர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். ஒன்றும் கடினமில்லை, 'என் செயலாவதொன்றுமில்லை' என்று கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தும் ஒருமிக்க, அங்கே இறைவன் பொறுப்பேற்றுக் கொள்கிறான். கீதையின் சாரமும் அதுவே.

    consent to be nothing....இந்த வரிகள், சாவித்ரியில் இருந்து எடுக்கப் பட்டவை. வலைப் பதிவின் கீழேயே பார்த்தீர்களேயானால், நான்கு வரிகள் சாவித்ரி சொல்லும் செய்தியாக இருக்கும். நான்கு வரிகளையும் சேர்த்துப் படித்தால், விடை கிடைக்கும்.

    அடுத்து, consent, to be nothing and none நம்முடைய விருப்பம் எதுவோ அதை, நம்மை விட நம்மைப் படைத்தவன் மிகவும் மதிக்கிறான் என்பது தான். இந்த இப்பிறவியில், ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு முடிவையும் தேர்ந்தெடுக்க உங்களுக்கு பரிபூரண சுதந்திரம் இருக்கிறது. என்ன, நீங்கள் எதைத் தேர்ந்தேடுத்தீர்களோ, அதன் விளைவையும் சந்தித்தேயாக வேண்டிய consequence உம் இருக்கிறது.

    Fate and Free Will, Karma Theory, இப்படி நிறைய ........
    எல்லாவற்றையும் விட்டு விட்டு, எதுவானாலும், எந்த நிலையிலும், உன்னுடைய சித்தத்தின் படியே, நடந்தேறட்டும். எனது ஆசைகளின் படியல்ல, உனது சங்கல்பப்படியே ஆகட்டும் என்கிற நிலை வரவேண்டும் என்பதற்காகத் தான், consent to be nothing and none என்கிற சம்மதப் பட்ட நிலை வர வேண்டியிருக்கிறது.

    ReplyDelete
  3. //கை கூப்பி,சிரம் தாழ்த்தி வணங்குவதை அன்றிங்கு
    வேறென்ன செய்ய முடியும்?//

    வேறொன்றும் வேண்டாம் இது மட்டுமே போதும்.

    ஓம் நமோ பகவதே அரவிந்தாய!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!