Showing posts with label ஸ்டேன்லி ராஜன். Show all posts
Showing posts with label ஸ்டேன்லி ராஜன். Show all posts

மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் TN ஆளுநர் உரையும் அதன் எதிரொலிகளும்!

உலக அரசியல் வரலாற்றிலேயே முதன்முதலாக என்று ஆரம்பித்தால் அபஸ்வரமாகி விடுமென்று பயந்தோ  என்னவோ இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு புரட்சிகரமான அறிவிப்பை தி.மு. கழக அரசு இன்று ஆளுநர் உரையில் செய்துள்ளது.“வரும் சில ஆண்டுகளுக்கு மட்டும் கிடைக்கக்கூடிய மனித வளத்தின் பலன்களை முழுமையாகப் பயன்படுத்தி விரைவான பொருளாதார வளர்ச்சி பெற முற்படுவோம். இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பாதை அமைத்து தமிழக முதல்வருக்கு ஆலோசன கூற பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க இந்த அரசு முடிவெடுத்துள்ளது. இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சிபெறச் செய்து பொருளாதாரத்தின் பயன்களை அனைவரும் பெற இந்த அரசு உறுதி செய்யும்”  என்று 1. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்,2. நோபல் பரிசுபெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்ளோ,3. மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் 4. ராஞ்சி பல்கலைக்கழக டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஜீன் ட்ரெஸ்,5. மத்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர் நாராயணன் ஆகிய ஐவர் இந்தக் குழுவில் இருப்பர்.என இந்து தமிழ்திசை செய்தி சொல்கிறது.


இவர்கள் பொருளாதார நிலையை ஆராய்ந்து, பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வருக்கு ஆலோசனைகளை அளிப்பார்கள். இந்த முயற்சி அரசியல் வரலாற்றில் முதல் முயற்சி என்பதாகப் பார்க்கப்படுகிறதோ இல்லையோ, சட்டசபையின் முதல்கூட்டத்தை ஆளுநர் உரையுடன் தொடங்குவது என்கிற மரபையும் சன் டிவி விளம்பரக்கூவல் ரேஞ்சுக்குக்  கொண்டுவந்துவிட்டார்கள். Union Government (ஒன்றிய  அரசு) என்று ஆளுநரைத் தனது உரையில் சொல்லவைத்து அற்பத்திருப்தி அடைந்திருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் இதற்கு எதிர்வினைகள் நிறையவே எதிரொலித்து வருவது சிறப்பு மகிழ்ச்சி.

ஒரு விஷயத்தை பற்றி யாரும் பேசுவதில்லை.ஆம், ரகுராஜன் உள்ளிட்ட அந்த ஆறு முகங்கள் சாதாரணம் அல்ல, அவற்றின் ஒரு நிமிட வருமானமே பல்லாயிரம் டாலர்களை தாண்டும். சும்மா வந்து அவர்கள் ஆலோசனை சொல்வார்கள் என்பது பிரையன் லாரா கொட்டாம்பட்டிக்கு தெருவோர கிரிக்கெட் ஆட வருவார் என்பதற்கு சமம். ஆம், மிகபெரிய சம்பளம் அவர்களுக்கு செல்லும் இந்த 6 பேரின் சம்பளம் என்பது தமிழக அரசின் மிகபெரிய செலவு

அவர்களுக்கு சம்பள விவரம் என்ன? செலவு என்ன என ஆளும் கட்சியும் சொல்லவில்லை எதிர்கட்சியும் கேட்கவில்லை. சரி, இவர்கள் 6 பேருக்கு அவசியம் என்றால் எதற்கு தமிழக நிதியமைச்சர்? எதற்கு அவருக்கு பொறுப்பு வெட்டி சம்பளம்? அவர் என்ன திறமை இல்லாதவரா? திறமை வாய்ந்தவர் எனில் ஏன் 6 பேர் கொண்ட முட்டு, அதுவும் பிரமாண்டமான முட்டு?

நிதி அமைச்சர் தன்மானம் உள்ளவர் எனில் ராஜினாமா செய்துவிட்டு வரவேண்டும் இது அவரின் சுயமரியாதைக்கான பெரும் சவால். மானமிருந்தால் அவர் ராஜினாமா செய்யட்டும் இல்லை ஹிஹிஹ்ஹி என பல்லிளித்தால் நீடிக்கட்டும்.

சரி பொருளாதாரத்தில் ஆளில்லை என பன்னாட்டு பெருமூளைகளை அழைக்கும் அரசு, நாளை தமிழக உளவுதுறையினை பலபடுத்த ரிட்டையர்டு இஸ்ரேல் மொசாட் ஆசாமிகளை அழைக்குமா? காவல் துறையினை வலுபடுத்த சர்வதேச போலீஸ் நிபுணர்களை அழைப்பார்களா? ஒவ்வொரு துறைக்கும்  ஆங்கிலேயனும் அந்நியனும் எனில் இவர்களுக்கு என்னதான் வேலை? ஏன் வெட்டியாக பதவி?

எதிர்கட்சி அதிமுக கோமாவில் சிக்கிவிட்டது இனி அது 5 வருடம் கழித்துத்தான் எழும். தேசிய கட்சியான பாஜக இதை கேட்கலாம், 6 பேர் நியமன சம்பளம், அந்நிய நாட்டவருக்கு ஏன் தமிழக வேலை வாய்ப்பு என கேட்கலாம்.கேட்பார்கள் என எதிர்பார்ப்போம். ஆக என்ன தெரிகின்றது?  

தமிழகத்தில் குறிப்பாக திமுகவில் ஒருவரும் திறமையானவர் இல்லை என்பதால் அமெரிக்காவிலும் லண்டனிலும் இருந்து மூளைகளை வாங்கியுள்ளார்கள் திமுக சுல்தான்கள்.இதற்கு தமிழக மக்களின் வரிபணம் வெட்டியாக செலவழிக்கபட வேண்டும்.இதற்கு ஏன் ஸ்டாலின் முதலமைச்சர், தியாகராஜன் நிதியமைச்சர்? நேரடியாக ரகுராம் ராஜனிடமே மாநிலத்தை ஒப்படைத்து விடலாம் என்று முகநூலில் சரமாரியாக கேள்வி எழுப்புகிறார் ஸ்டேன்லி ராஜன். அத்துடன் விட்டாரா?


சகோதரர்கள் பேசிக்கொள்வதாக இங்கே ஒரு பகடி 

"அங்க பாத்தியாண்ணே, ஒரு காலத்துல திமுகவுல பொருளாதாரம்னா நம்ம அப்பாவத்தான் கூப்பிடுவாக, டெல்லில அப்பா அமைச்சரால்லாம் இருந்தாக‌. அப்பாவுக்கு அப்புறம் நம்மளத்தானண்ணே சேர்த்திருக்கணும், என்ன விடுண்ணே வெறும் கேசட்டு கடைய இப்போ அம்பானி அளவுக்கு ஆக்கின உன் மூளைய விட இங்க யாருண்ணே வேணும், வேற எதுக்குண்ணே உனையெல்லாம் விலக்கி வச்சி இப்படி பண்றாங்க"

"தம்பி, அமெரிக்க மூளை எல்லா இடத்திலும் ஜெயிக்குமா? ஆப்கன் ஆப்ரிக்கான்னு அவனுக தலைய பிச்சிட்டு போறமாதிரி இங்கயும் ஓடபோறானுக பாரு... விமான பெட்ரோலை எவனாவது மண்ணெண்ணெய் ஜெனரெட்டர்க்கு பாவிப்பானா? முடியுமா? அவுக அதத்தான் பண்ணிட்டு இருக்காக‌ "


பொருளாதாரப்புளி ஜெயரஞ்சனுக்கு இதிலே என்ன வேலையாம்? 

ஆளுநர் உரை, பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனை எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்! திமுக தேர்தல் வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவோம் என்று தேதி போட்டுச் சொன்னார்களா என்று நிதியமைச்சர் கேட்டார் அல்லவா!  அதற்கு ஸ்டேன்லி ராஜன் பதில் சொல்லியிருக்கிறார் பாருங்கள்! 

 


கார்டூனிஸ்ட் அமரன் இதே விஷயத்தை இன்னமும் தெளிவாகப் படம் போட்டே சொல்லியிருக்கிறார்.


திமுக ஆட்சிக்குவந்த நாட்களிலிருந்தே கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றியதே இல்லை என்பதை இதைவிடத்தெளிவாக சொல்லிவிட முடியுமா?   

அமைச்சர் தியாகராஜன் கொஞ்சம் திமிருடனேயே கொடுத்த பேட்டியின் வீடியோ நேற்றைய பதிவில் இருந்ததே, எத்தனை பேர் முழுதாகப்பார்த்தீர்கள்? ஸ்ரீராம்! உங்களுக்கும் தான் இந்தக்கேள்வி! இன்றைய தினமலரில்  நிஜத்தைப் பேசாமல் காற்றில் வாள் வீசும் தியாகராஜன்! என்று நிதியமைச்சருடைய முழக்கத்தில் இருந்த தவறான விஷயங்களை பட்டியலிட்டு பதிலும் சொல்லி இருக்கிறார்கள். 



மாநில அரசு விதிக்கும் VAT ரூ. 34.03 இலிருந்து ஒரு ஐந்து ரூபாய் குறைத்துக்கொள்ள முடியாதா? இதற்கு நேரடி பதில் சொல்ல முடியாத அமைச்சர் பிரதமர் என்னவோ வரிப்பணத்தில் தனக்காக சொந்தவீடு கட்டுகிற மாதிரி மழுப்பினார். இப்படி அவதூறாகப் பேசி தடைகோரிய  ஒருவருக்கு நீதிமன்றம் மனுவைத்தள்ளுபடி செய்ததோடு ஒரு லட்சரூபாய் அபராதம் விதித்ததே! அந்த விஷயத்தை அமைச்சருக்கு நினைவு படுத்தாமல், அதன்மீது தமிழக பிஜேபி வழக்குத் தொடருமா என்ற கேள்வியை எழுப்பும் அப்பாவி இணையவாசி மீது பரிதாபப்படுவதைத் தவிர நம்மால் என்ன செய்துவிடமுடியும்?


ஆட்சிக்கு வந்தே வெறும் 46 நாட்கள் தானே ஆகிறது! அதற்குள் மார்க் போடுவதா என்று கேட்கிறீர்களா? வந்தது போனதையெல்லாம் சிக்சர்களாக சாதனைப் பட்டியலில் திமுகவினர் சேர்த்துக்கொண்டே போவதில் கார்டூனிஸ்ட் அமரன் கொடுத்திருக்கிற பூஜ்யம் மார்க் சரிதான் என்று படுகிறது.

மீண்டும் சந்திப்போம்.         


ஏழு பேர் விடுதலை :: சாத்தியமா? நிஜமாகவே அவசியமா?

நீட் தேர்வு, ஏழு தமிழர் விடுதலையில் மு.க.ஸ்டாலின் வெற்றியுடன் திரும்புவார் என்று நம்புகிறேன் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கையோடு சொன்னாரா? அல்லது நக்கலாகவா?  அது எப்படி இருந்தாலும், ஆகிற கதை மட்டும் இல்லை என்பது இங்கே அரசியல் பழகாதவருக்கும் கூடத் தெரியும். 

இலங்கைத்தமிழர் பிரச்சினையின் மீது ஆரம்ப காலத்தில் எல்லோரையும் போலவே எனக்கும் அனுதாபம் இருந்தது. நாளடைவில் விடுதலைப்புலிகள் மீது மிகைப்படுத்தப் பட்ட  பிம்பங்கள் கலைந்து போனது, ராஜீவ் காண்டி படு கொலை செய்யப்பட்ட அந்தத் தருணம், ஈழத்தமிழர் மீதிருந்த  கொஞ்சநஞ்ச அனுதாபமும் ஆதரவு உணர்ச்சியை அறவே அற்றுப் போகச் செய்தது. ஆனாலும் பொதுவெளியில் என் கருத்தாக எதையும் எழுதியதில்லை. காரணம் ஏற்கெனெவே நொந்து போயிருக்கிற ஈழத்தமிழர்கள் மனம் நொந்துவிடக்கூடாதே என்பது மட்டும்தான்! நான் அறிந்த ஈழத்தமிழர்கள் பலர் தொட்டாற்சுருங்கிகளாக இருந்ததும் ஒருகாரணம்.    



இந்த ஒப்புதல் வாக்குமூலம் எழுத்து வடிவில் KP யின் ஒப்புதல் எல்லாம் ரொம்பப்பின்னாடி. 

ஸ்டேன்லி ராஜன் இன்று முகநூலில் பகிர்ந்திருக்கிற  இந்தப்பதிவு நிறையவே கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது:

ராஜிவ் கொலைவழக்கினை விசாரித்தவர்களுக்கும் அந்த குற்றபத்திரிகையினை முழுக்க‌ தெரியும்

பேரறிவாளன் மேல் உள்ள குற்றசாட்டு பேட்டரி வாங்கி கொடுத்தான் என்பது, அதுவும் ரிமோட் கண்ட்ரோலில் மாட்டபடும் சிறிய பேட்டரி வாங்கி கொடுத்தான், அதற்கா தூக்கு என்பது தமிழ்நாட்டில் பலபேரின் நம்பிக்கை.பேரறிவாளன் மேல் ஏகபட்ட குற்றசாட்டுக்கள் உண்டு, யாழ்பாணம் சென்றது , குண்டுவெடிப்பில் கொல்லபட்ட ஹரிபாபுவோடு அவனுக்கு இருந்த தொடர்பு, ஹரிபாபு வீட்டில் கண்டெடுக்கபட்ட ஆதாரப்படி அவன் யாழ்பாணம் செல்ல திட்டமிட்ட விஷயம் என நிறைய உண்டு

ஆம் 1990ல் தன் 16ம் வயதிலே யாழ்பாணம் சென்று பல பயிற்சிகளை பெற்று திரும்பியவன் அவன், அவனோடு அந்த ஹரிபாபு என்பவனும் நெருக்கமான புலி ஆதரவாளனாக இருந்தான். ஹரிபாபுதான் ராஜிவ் கொலையினை படம் எடுத்து சிக்கி செத்தான், இவன் முதலாளிதான் ஸ்டூடியோ அதிபர் சுபா சந்தரம், அவரும் புலி அபிமானி. பேரறிவாளன் சிவராசனுக்கு கவசாகி பைக் வாங்கி கொடுத்தது முதல் நிறைய உதவினான், பேட்டரி என அவன் வாங்கியது பேட்டரி செல் அல்ல, காருக்கான பேட்டரி வகை.

ஆம் , சிவராசன் இயக்கிய வயர்லெஸ் கருவிக்கு தேவையான சக்திவாய்ந்த பேட்டரி. அதை வாங்கி கொடுத்தது ஆதாரமாக சிக்கியது, இன்னும் நிறைய உண்டு.ராஜிவ் கொலை நுணுக்கமாக திட்டமிடபட்டது, சிக்கினால் ஏகப் பட்டோரை இழுத்துவிடும் மர்ம தந்திரம் அது. அப்படித்தான் மரகதம் சந்திரசேகர் வரை சிக்கவைக்கபட்டனர். ஆனால் இந்திய புலனாய்வு துறை எதை வெட்ட வேண்டுமோ அதை வெட்டினார்கள், எதை விடக்  கூடாதோ அதை சரியாக பிடித்தார்கள்.

மாற்றுவெடிகுண்டாக வந்த ஆதிரையே விடுவிக்கபட்டபொழுது பேரறிவாளன் ஏன் விடுவிக்கபடவில்லை என்றால் விஷயம் அவனின் பிடிவாதம்.இன்றுவரை புலிகளுடனான தன் தொடர்பை அவன் ஒப்புக் கொள்ளவில்லை, அவன் செய்த புலி ஒத்துழைப்பை எங்குமே ஏற்கவில்லை. விஷயம் வேறு எங்கோ இருக்கின்றது, அவனிடம் பெரும் பிடிவாதமும் இன்னும் பிடிக்கும் வீண் அடமும் உண்டு. சரி அவன்மேல் குற்றம் இல்லை என்றால் புலிகளால் வஞ்சகமாக ஏமாற்றப் பட்டேன் என் ஒருவார்த்தை சொன்னானா?

இல்லை, அவன் சொல்லவில்லை சரி, அவன் தாயான அற்புத நடிகையான அற்புதம்மாளாவது சொன்னாளா?

இல்லை. பின் எங்கிருந்து விடுவார்கள்?

இதில் சிலர் உடனே சுப்பிரமணிய சாமி, சந்திரா சாமி என பொங்கலாம். ராஜிவ் கொலைக்கு பின் காங்கிரஸ் இந்நாட்டை 20 வருடம் ஆண்டது, என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? சரி, சு.சாமி சந்திராசாமியினை விசாரித்து உள்ளே போடவேண்டுமென்றால் வை.கோப்பால்சாமியினை என்ன செய்யவேண்டும்?

"திமுக ஆட்சியும் அவர்கள் ஒத்துழைப்பும் இருந்திராவிட்டால் ராஜிவ் கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை" என சொன்ன ஜெயின் கமிஷன் அறிக்கைபடி என்ன செய்யலாம்? ராஜிவ் கொலைக் கைதிகள் 7 பேரில் 3 பேரே இந்தியர்கள் நால்வர் இலங்கையர்கள், நாடுவிட்டு நாடு கொல்லவந்தவர்களை விடுவி என்பது முட்டாள் தனமானது. மீதி மூவரில் நளினி கடைசி வரை முழு உண்மையினை சொல்லவில்லை, காதலனை காப்பாற்ற சில உண்மைகளை சொன்னாளே தவிர இன்னும் முழு அப்ரூவர் ஆகவில்லை. குறைந்த பட்சம் தான் செய்தது தவறு என்று கூட சொன்னதில்லை

இந்த பேரறிவாளன் சாதாரண நபர் அல்ல, 16 வயதிலே இலங்கை சென்றவன், இந்திய ராணுவத்துக்கு எதிராக சாத்தானின் படைகள் எனும் புத்தக தயாரிப்பில் முழுக்க உதவியன். ராஜிவ்கொலையில் பிடிபடாவிட்டால் அவன் இலங்கைக்கு தப்பியிருக்கும் அபாயமும் உண்டு.

பேரறிவாளன் இன்னும் உண்மையினை ஒப்புக் கொள்ளாதவன், இவ்வளவு நடந்தபின்னும் அவன் மேலான புலிதொடர்பு ஆழமாக நிரூபிக்கபட்டபின்பும் இன்னும் தான் அப்பாவி என சொல்லி கொள்ளும் ஒரு குற்றவாளி. முதலில் அவன் தன் தவறை ஒப்புக் கொள்ளட்டும்,  16 வயதில் மகனை தறுதலையாக்கி தேசவிரோதியாக்கிய அந்த அற்புதம்மாளும் தன் தவறை ஒப்புகொள்ளட்டும். அதன்பின் அடுத்த காட்சியினை பார்க்கலாம்

மேலே பகிர்வின் சுட்டியில் பின்னூட்டங்கள் இன்னும் அதிகத் தகவல்களைக் கொட்டுகின்றன. நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதும், எழுவர் விடுதலையும் ஆகிற கதை போலத் தெரியவில்லை என்றாலும், என்னமோ உடனே  சாதித்துக் காட்டப்போகிறமாதிரி என்னமாய் பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!! 

மீண்டும் சந்திப்போம் .