இட்லி வடை பொங்கல்! #8

ஸ்டாலின் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்த ராசி ரொம்ப நல்ல ராசி தான் போல ! ஹிந்து தமிழ் நாளிதழ் இப்படிப் படம்போட்டுக் கலாய்க்கிறது!

அங்கே அப்படியென்றால் #துக்ளக் இந்த வார அட்டைப் பட நையாண்டிஇப்படி!



செய்தாலும் செய்வார்கள் என்கிறீர்களா? #கழகங்கள் எந்தக் காலத்தில் எதையும் நேர்வழியில் நேரடியாகச் செய்திருக்கிறார்கள்? இப்படி வேண்டிக் கொள்ளவும் ப்ராக்சிகள் இல்லாமலிருக்குமா?

ராகுல் காந்தி தன்னைக் காஷ்மீரி கௌல் பிராம்மணன் என்று சொல்லிக் கொள்கிறாராம்! யாராவது எப்படி என்று கேட்டிருப்பார்களோ? அப்பா வழிப் பாட்டன் ஃபெரோஸ் கான்= பெரோஸ் காந்தியாக பின்னாட்களில் அறியப்பட்டவரை, பாட்டி இந்திரா முஸ்லிமாக மதம் மாறித் திருமணம் செய்து கொண்ட கதை தெரியும் இல்லையா? அப்புறமும் எப்படி கௌல்?
சரி, அதுதான் போய்த்தொலைகிறது, அம்மாவழியில் பார்த்தாலுமே கூட இத்தாலியக் கிறித்தவர்தானே?!

அப்பன்வழி, அம்மா வழி இரண்டிலுமே வேறுவேறு மதங்கள் தான்! ஆனாலும் ராகுல் காந்தி தன்னை எந்த அடிப்படையில் தன்னைக் காஷ்மீரி கௌல் பிராமணன் என்று சொல்லிக் கொள்கிறாராம்? உங்களுக்காவது ஏதாவது புரிகிறதா? கான் gandhe ஆகி டூப்ளிகேட் காந்தியாகவும் ஆன கதை மாதிரிக் கூட இல்லாமல் இது என்ன புதுக்கதை?

நேற்று காங்கிரஸ் கட்சியின் 134-வது நிறுவன நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கேக் வெட்டி கொண்டாடினர். படம்: பிடிஐ என்று செய்தி வெளியாகி இருக்கிறதே! யார் கண்ணிலாவது பட்டதோ? 

1885 இல் ஒரு பிரிட்டிஷ் ஐசிஎஸ் அதிகாரி ஆரம்பித்த காங்கிரஸ் அல்ல இன்றிருப்பது! இந்தியர்கள் தலைமை ஏற்றபிறகும் கூட பிரிட்டிஷ் அரசிடம்  சலுகைகளை மட்டும் கோரிய அமைப்பாக இருந்த அந்தக் காங்கிரசும் இல்லை. 

Many Muslim community leaders, like the prominent educationalist Syed Ahmed Khan, viewed the Congress negatively, owing to its membership being dominated by Hindus. Orthodox Hindu community and religious leaders were also averse, seeing the Congress as supportive of Western cultural invasion.
The ordinary people of India were not informed of or concerned about its existence on the whole, for the Congress never attempted to address the issues of poverty, lack of health care, social oppression, and the prejudiced negligence of the people's concerns by British authorities. The perception of bodies like the Congress was that of an elitist, then educated and wealthy people's institution. இதுதான் காங்கிரசின் ஆரம்பகால நிலைமை! பால கங்காதர திலகர் வந்த பிறகுதான் காங்கிரசுக்கு தேசிய உணர்வே வந்தது. திலகரும் பிபின் சந்திரபாலும், ஸ்ரீஅரவிந்தரும் வ உ சியும் ஊட்டி  வளர்த்த தேசிய உணர்வுடன் இருந்த காங்கிரசல்ல இன்றிருப்பது!

1915 இல் தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி  என்கிற ஒரிஜினல் காந்தி வந்த பிறகு காங்கிரஸ்  என்பது தியாகம் செய்யத் தயாராக இருந்த தொண்டர்களோடு, மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு இயக்கமாகவும் இருந்ததே, அந்தக் காங்கிரசல்ல இன்றிருப்பது!

நேரு கைகளில் ஆட்சி வந்ததுமே நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. தனக்குப் பிடிக்காத ஒருவர், புருஷோத்தம்தாஸ் டாண்டன் 1950 இல் காங்கிரஸ் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக நாடகம் நடத்தியதும் 1959 இல் தன் மகளையே காங்கிரஸ் தலைவராக்கி, மக்கள் சிபாரிசின் பேரில் உலகில் முதல் முறையாக கேரளாவில் ஜனங்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த கம்யூனிஸ்ட் கட்சி அரசை 356 வது பிரிவின் கீழ் கலைத்ததும் ஆன அந்தக் காங்கிரசும் அல்ல இன்றிருப்பது. இந்திரா தன்னுடைய சுயநலத்துக்காகக் காங்கிரசை இரண்டாக உடைத்ததும் எண்பதுகளின் தொடக்கத்தில் ஆட்சியில் இருந்தபோது தன்னுடைய பிரிவுக்கு இந்திய தேசிய காங்கிரஸ் என்று பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கிற மாதிரி செய்து கொண்டது பழைய கணக்கு, வரலாறு! அதுகூட அல்ல இன்றிருப்பது!   

இந்திரா, ராஜீவ் மரணத்தைத் தொடர்ந்து சோனியா தன்னுடைய வாரிசுகளுக்காகத் தயார் செய்து வைத்திருக்கிற சுயநலக்கும்பலால் மட்டுமே ஆன ஒரு உருவகம் இப்போது காங்கிரஸ் கட்சி என்ற பெயரில்!  அவ்வளவுதான்!    

Jaya produces proof on Gandhi’s intent to dissolve Congress

PTI  Updated on April 02, 2013
Tamil Nadu Chief Minister J. Jayalalithaa






Tamil Nadu Chief Minister Jayalalithaa today presented documentary evidence to Congress members in the state Assembly to validate her minister’s argument that Mahatma Gandhi wanted to dissolve the century-old political party after Independence.

    
         

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!