போதி மரம் எங்கேன்னு சொல்லுங்க! அங்கே வந்து முட்டிக்கறோம்!


இட்லி வடையில் வந்திருந்தது மாதிரி இதுவும் கூட அந்த 'வரும்' ஆனா...'வராது' ரகப் பின்விளைவுதான்! பின் விளைவுன்னா சும்மாவா?

படித்துவிட்டு, கண்ணில் தென்படுகிற எதிலாவது தலையை முட்டி மோதிக்கொள்ள விரும்புகிறவர்கள், தங்கள் சொந்தப் பொறுப்பிலேயே, செய்துகொள்ளும்படித் தாழ்மையோடு, திமிரோடு, கொழுப்போடு, அப்புறம் இதோடு அதோடு என்று ஏகப்பட்ட தோடுகளோடு உங்களை வேண்டிக் கொள்கிறேன்.

கல்லுளிமங்கன்னு கேள்விப்பட்டிருப்போம், ஆனா நேர்ல பாத்திருக்க மாட்டோம். அந்தக் குறையப் போக்கவும் ஒருத்தர் வந்துட்டாருய்யா...வந்துட்டாரு!
வேற யாரு? சாரு தான்!
இவருக்கு இருக்கிற தாக்குப் பிடிக்கிற சக்தி இருக்குதே, சும்மாப் போட்டுத் தாக்கு..சும்மாவே போட்டுத்தாக்கு ரகம் என்பது, தமிழ் இணைய வாசகர்களின் ஒரே சோகம்!

பாம்பும் கீரியும் சண்டை போடப்போகுது பாரு,,எல்லாரும் ஜோராக்க ஒரு தபா கையத் தட்டு! இப்படி வித்தை காட்டுகிறவன் சொல்றதைக் கேட்டு, நிறையத் தபா, கையத் தட்டியிருப்போம்! பாம்பு-கீரிப்பிள்ளை ரெண்டுமே வெளியிலேயே வராது..கையத்தட்டிக் கொண்டே இருக்க வேண்டியது தான்!

இப்பல்லாம் நிறைய காமெடிச் சானல்கள் வந்திருக்கிற மாதிரியே, இணையத்திலும் காமெடி தர்பார் எதுவும் காணோமே என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்காக, அந்தக் குறையைப் போக்க சாரு கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிட்டது மாதிரியே, சமீபத்திய நிகழ்வுகள், தகவல்கள் பேஜார் படுத்திக் கொண்டிருக்கின்றன.

இதுக்கெல்லாம் பேஜாராவாங்கோ, இன்னா இது குயந்தப்பிள்ள கணக்கான்னு கேக்குற தைரிய சாலிகள், சாருவோட இந்த வார்த்தைகளைப் படித்துப் பார்க்கவும்......பின்விளைவுகளுக்குப் படிப்பவர்களே பொறுப்பு!

"போகட்டும். இப்போது ஏழைக் குழந்தைகளைப் பிடித்துத் தரச் சொல்லுகிறீர்கள். இன்னும் அந்த மாதிரி பிள்ளை பிடிக்கும் வேலையில் நான் இறங்கவில்லை. சென்னையில் அல்லது தமிழகத்தின் எந்த மூலை முடுக்கில் திரும்பினாலும் ஏழைக் குழந்தைகளுக்குப் பஞ்சமில்லை. ஏதோ நான் படிக்க வசதியில்லாத ஏழைக் குழந்தைகளே இல்லாத ஸ்விட்சர்லாந்தில் வாழ்வது போல் ஏழைக் குழந்தைகளைத் தெரியுமா என்று என்னைக் கேட்டிருக்கிறீர்களே; கொழுப்புதானே?

நானே ஒரு ஏழை எழுத்தாளன்; அடுத்த வேளைக் கஞ்சிக்கே என் வாசகர்களை எதிர்பார்க்கும் ஒரு அன்றாடங் காய்ச்சி. நான் போய் ஏழைக் குழந்தைகளைத் தேட வேண்டுமாக்கும்? இதற்குப் பெயர் தமிழ்க் கொழுப்பா? குவைத் கொழுப்பா? "

இது என்ன மாதிரிக் கொழுப்புன்னு தெரியாம பேஜாராவுரவுங்கோ, அடுத்த கொழுப்புக்குத் தயாராவுங்கோ!
"குஜராத் கலவரத்தின் போது ஒரு முஸ்லீம் தன்னைக் கொல்ல வருபவர்களைப் பார்த்துக் கண்ணீர் மல்க தன் இரு கைகளையும் கூப்பிக் கெஞ்சுவார் இல்லையா; அதேபோல் அந்த ஓரினச் சேர்க்கை நண்பர் எழுந்து நின்று கைகளைக் கூப்பிக் கொண்டு “நான் இப்படி ஆணும் இல்லாமல், பெண்ணும் இல்லாமல் பிறந்தது என் குற்றமா, கடவுளின் குற்றமா? உங்கள் வீட்டில் உங்கள் சகோதரனோ சகோதரியோ என்னைப் போல் பிறந்திருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? ” என்றெல்லாம் என்னென்னவோ எடுத்துக் கூறிக் கெஞ்சினார்."

"இந்தக் கோபமும் வன்மமும்தான் மிகப் பெரிய படுகொலையாக மாறுகிறது. இதே மனோபாவம்தான் என்னை கக்கூஸ் சந்து என்று எழுதிய உயர்சாதிக் காரரிடமும், எனக்கும் ஜெயமோகனுக்கும் கடிதம் எழுதியவரிடமும் காணப்படுகிறது. மேலும் ஒரு தகவல், என்னை கக்கூஸ் சந்து என்று எழுதியவர் ஐ.ஐ.டி.யில் கணிதத்தில் தங்க மெடல் வாங்கியவர்; பிராமணர்."

"ஆக, தமிழின் மிக முக்கியமான மூத்த எழுத்தாளர் ஒருவரால் இவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்ட ஒரு நாவலை எழுதிய எழுத்தாளனை ஒரு ஆள் எப்படி அணுக வேண்டும்? ஒரு பணிவு வேண்டாமா? பணிவு இல்லாதது மட்டும் அல்ல; அந்த எழுத்தாளனை அவமானப்படுத்தியும் இருக்கிறார் மேற்படி நபர். அதனால்தான் இதில் நான் தலையிட வேண்டி வந்தது. இப்போது பாருங்கள்; அவருடைய உண்மையான முக விகாரம் தெரிந்து விட்டது. “நீ நட்சத்திர ஓட்டலில் ஓசியில் தண்ணி அடிக்க்கும் பாரஸைட்தானே? ” என்று என்னைப் பார்த்துக் கேட்கிறார்."

சாரு நிவேதிதா! மனுஷன் என்ன பண்ணினாலும், எத்தனை பட்டாலும் ஓய மாட்டார் போலிருக்கிறது! இணையத்தில் ஆதித்யா, சிரிப்பொலி மாதிரிக் காமெடிச் சானல்கள் இல்லையே என்ற குறை இல்லாமல், சாருவும் ஜெயமோகனும் அதிரடியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், சமீப காலமாகச் சாருவின் காமெடிக் கொடுமை கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.

ஏதோ இணையத்தில் வந்தோமா, எதையாவது படித்தோமா, ஏதோ பின்னூட்டம் போட்டோமா என்று சாதுவாகவே இருந்துவிட்டுப்போய் விடலாம்தான்! அப்படியெல்லாம், பதிவுலகமும், படிக்க வருகிறவர்களும் அமைதியாக இருந்துவிட்டுபோய் விட்டால், அப்புறம் காமெடி ஷோ நடத்துவது எப்படி? கேண்டிட் காமெரா என்ற பெயரில் லூசுத்தனமாக எதையாவது செய்து, அதையே காமெடி ஷோவாக மாற்றிக் காட்டுகிற தொலைகாட்சி சானல்களெல்லாம், சாரு சமீப காலமாக அவரது வலைப் பக்கங்களில் காட்டுகிற வித்தைகளுக்கு முன்னால் பிச்சை வாங்க வேண்டும்! அப்படி ஒரு வக்கிரம்! அப்படி ஒரு கொடூரமான எழுத்து! இதையும் இலக்கியம் என்று கொண்டாடுகிற சாக்கில், சாருவை இன்னமும் உசுப்பேத்தி விட ஒரு கும்பல்!

ஒரு சாம்பிளுக்கு,

அன்புடைய சாரு ,

நாம்தான் சிறிது மென்டல்; பாவம் என் மனைவி என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். நம்மை விட பல மடங்கு வன்மமும் , குரோதமும் , மனக்குஷ்டமும் உடைய ஒரு மென்டலை அறிமுகப்படுத்தியதுக்கு மிக்க நன்றி. இந்த லூஸு படித்ததாகவும் கேட்டதாகவும் சொன்ன மேதைகள் இது எழுதியதை கேட்டால்.. பாவம்.. நல்ல வேளை யாரும் உயிரோடு இல்லை. "ஜும்ப்பாவைக் குறிப்பிட்டிருந்தேனே; நாய்ப்பாலை குறிப்பிட்டிருந்தேனே - இது கூட தெரியாதா" என்று இந்த மென்டல் கேட்கலாம். நான் சொன்னது மேதைகள். ஜும்ப்பா போன்ற லைட் வெயிட்டை ப்ளேட்டோவுடன் வைத்திருப்பதிலேயே இதன் அறிவின்மை தெரிகிறது.

ஆங்கில மொழிக் கல்வி எப்படி மற்ற பண்பாடுகளைச் சீரழிக்கிறது என்பதற்கு இந்த மென்டல் மிக முக்கியமான எடுத்தக்காட்டு. இதன் மெயில்களை அச்சிட்டு அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பி அதை வைத்து ஒரு பாடத் திட்டத்தை ஆரம்பிக்க வேண்டுகிறேன்.

பி.கு - இது திரும்ப எழுத எழுத அப்படியே ஏற்றி விடுங்கள் சாரு. படு டமாஸா இருக்கு.

அன்புடன்

சிவா – ஹ்யூஸ்டன்


இத்தனைநாள், இந்தமாதிரி உசுப்பேத்தி விடுகிறவர்களால் தான் சாரு இப்படியெல்லாம் எழுதுகிறார், உண்மையில் அவர் மென்மையானவர், ஜெயமோகனைப் போல வேஷம் போடத் தெரிந்தவரல்ல என்ற சாருவின் ஆதரவாளர்கள் சொன்ன வாதத்தில் உண்மை ஓரளவுக்கேனும் இருக்கும் என்று நம்பினதுண்டு.. இந்த மாதிரி "ஆதரவாளர்கள்" சாருவை ஒருவிதமான பைத்தியக்காரத்தனத்தின் உச்ச கட்டத்திற்குத் தள்ளிவிடாமல், விட மாட்டார்கள் என்று கூட ஒரு நண்பர் என்னிடம் சொன்னதுண்டு.

சாரு பைத்தியக்காரத்தனத்தின் உச்சத்திற்குப் போவது ஒருபக்கம் கிடக்கட்டும், படிக்கிற அத்தனை பேரையுமே ஒரு வழி பண்ணாமல் விட மாட்டார் போலிருக்கிறதே? இவரது படைப்புக்களைப் படிக்காதவர்கள் கூட இணையத்திற்கு வந்தால் இப்படி வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறதே,
"நான் ஆயிரமாயிரம் பக்கங்கள் எழுதியிருப்பேன். அதைப் பற்றியெல்லாம் சொல்வதற்கு உங்களிடம் ஒரு வார்த்தை உண்டா? ராஸ லீலா 700 பக்கம். காம ரூப கதைகள் 350 பக்கம். இதையெல்லாம் பற்றி உங்கள் கருத்து என்ன? இதையெல்லாம் விட்டு விட்டு ஏதோ தெருச் சண்டையை வேடிக்கை பார்க்கும் மனோபாவத்துடன் வேடிக்கை பார்த்துக் களித்து விட்டு என்னங்கடா எனக்கு அறிவுரை?"

இந்தக் கொடுமையை முந்தின பதிவொன்றில் பார்த்திருக்கிறோம்.

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனா அங்கே இன்னும் ரெண்டு ஜிங்குச்சான் , ஜிங்குச்சான்னு ஆடிட்டிருக்கே, என்னத்தைச் சொல்ல?

ஐயா, ப்ளீச்சிங் பௌடர் ஐயா, நீங்க கண்டுபிடிச்ச போதி மரம் எங்கேன்னு சொல்லுங்க! அங்கே வந்து முட்டிக்கறோம்!

அது மட்டும் தான் நம்மால முடியும்!

'

1 comment:

  1. நானும் வந்து முட்டிக்கிறேன்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!