ஒரு தீர்ப்பு, முன்ஜாக்கிரதை முத்தண்ணா, புத்தகத்தின் தலைப்பு!


இது நேற்று தினமணியில் வெளியான செய்தி...

சென்னை, ஜூலை 27: "குடியரசு' இதழில் வெளியான பெரியாரின் எழுத்துகளை, "பெரியார் திராவிடர் கழகம்' புத்தகமாக வெளியிட தடை கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனுவை விசாரித்த பிறகு நீதிபதி அளித்த தீர்ப்பு:

பெரியார் "குடியரசு' இதழில் மதம் மற்றும் சமூக, பொருளாதார விஷயங்கள் குறித்து நிறைய எழுதியுள்ளார்.
இந்தப் படைப்புகளுக்கு பெரியார்தான் உரிமையாளர் ஆவார். எனவே, இந்த எழுத்துகளை மீண்டும் பதிப்பிப்பதற்கான உரிமை முழுவதும் பெரியாரிடமே உள்ளது.
எழுத்துகளுக்கான உரிமை அறிவுசார் சொத்துரிமையின்கீழ் வருகிறது. எனவே, இந்த உரிமையை மனுதாரரிடம் பெரியார் அளித்ததற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.
பெரியார் தன் படைப்புகளுக்கான பதிப்புரிமையை கி. வீரமணியிடம் அளித்ததாக எந்த ஆவணங்களிலும் குறிப்பிடப்படவில்லை.
இதுதொடர்பாக, பெரியாரின் உயிலிலோ அல்லது வேறு ஆவணங்களிலோ எந்தக் குறிப்பும் இல்லை.
பெரியாரின் எழுத்துகளுக்கான பதிப்புரிமை தன்னிடம் உள்ளது என்பதை மனுதாரர் நிரூபிக்கத் தவறியதால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
பெரியாரின் எண்ணங்கள் மக்களைச் சென்றடைய, "குடியரசு' வின் பல இதழ்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளன. இது பெரியாரின் 130-வது ஆண்டு ஆகும். இந்நிலையில், அவரது எழுத்துக்கான பதிப்புரிமை தொடர்பான சட்ட விவாதம் வேதனையைத் தருகிறது என்று நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு ஒருபுறம் இருக்கட்டும், தீர்ப்பைப் பற்றிய இந்த செய்தியை வாசித்தவர்கள் , படித்துவிட்டுப் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கும் இந்தத் தீர்ப்புக்கள் இன்னமும் கூர்மையாக, இருக்கிறது!

"பெரியார் பெயரை பஞ்சத்துக்கு பயன்படுத்தும் வீரமணியையும், பரம்பரைக்காக அவ்வப்போது பயன்படுத்தும் கருணாநிதியையும் கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பினால் தான் திராவிட இயக்கமும் தமிழ் நாடும் உருப்படும்."
இது மலேசியாவிலிருந்து டாக்டர் சொக்கலிங்கம் கருப்பணன் சொன்ன கருத்து

"வீரமணி கும்பலிடமிருந்து பெரியாருக்கு விடுதலை! இனிமேலாவது நாகரிகமாக, பெரியார் மக்களின் சொத்து, யார் வேண்டுமானாலும் பதிப்பிக்கலாம் என்று சட்டவிரோத குத்தகை வீரமணியும், நாட்டுடைமையாக்க வேண்டிய தேவையேயில்லை என்று கூறி `நாகரிகமாக' நாட்டுடைமையாக்கிக் கருணாநிதியும் அறிவிக்க வேண்டும்!"

இது நந்தன் என்பவர் சொன்ன கருத்து.

“Because of this type of politicians and half bugged literates, we and ous siblings will live only with hatred, without any development, not able to cross the border of Tamilnadu, ruin ourself anid fight among ourself by the caste ridden politics of Pillais and Mudalis and Naidus. I am setled in US. I am a software engineer from a backward community, from a backward village ruled by caste leaders. In my village I have seen no Avaal or parpanar. But I have seen the caste leaders who talk on Periyar gave me tea in a plastic cup. --...................But who will save Tamil Inam misguided by Pillai, Mudali and Naidus.”

இது தமிழ் மறவன் என்ற பெயரில் அமெரிக்காவிலிருந்து ஒருவர் சொன்னது, ஒன்றல்ல நான்கைந்து பின்னூட்டம் எழுதியிருக்கிறார். இப்படிப் பலரும் பெரியாரைப் பற்றிஎழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தொடர்புடைய, படித்தால் கொஞ்சம் விஷயங்களையும் தெரிந்துகொள்கிரமாதிரி இருக்கும்இந்தப் பக்கத்தையும் தவறாமல் படித்து விடுங்கள்!

இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து, இங்கே ஒருவர் 'வீரமணி ஐயாவின்பகுத்தறிவு எத்தன்மையது ? தமிழ் ஓவியா ஐயா விளக்க வேண்டும் !' என்று கேட்டிருக்கிறார்.அவரும் வந்து, இங்கே படித்துப் பாருங்கள் என்று ஒரு லிஸ்டும் கொடுத்திருக்கிறார்!

கிழக்கு பத்ரியும் தன பங்குக்கு இதைப் பற்றி எழுதியிருக்கிறார். ஒரு பதிப்பாளர் என்ற முறையில் காப்புரிமை பற்றி எழுதியிருந்தால், அது புரிந்துகொள்ளக் கூடியதே. ஆனால்,

"ஆனாலும் knee-jerk எதிர்வினை ஒன்றை ஆற்றவேண்டும் என்ற ஆவலால் அவசர அவசரமாக இந்தப் பதிவை எழுதுகிறேன்.

பெரியாரின் எழுத்துகள் பரவலாக அனைவருக்கும் போய்ச் சேரவேண்டும் என்பதில் எனக்கு மிகுந்த பற்று உண்டு என்பதை முதற்கண் disclaimer ஆகச் சொல்லிக்கொள்கிறேன்."
என்பதையும் சேர்த்துச் சொல்லியிருப்பதால், முன்ஜாக்கிரதை முத்தண்ணாவை நினைவு படுத்திக் கொள்ள வேண்டி வந்தது.

கூடிய சீக்கிரமே, இந்த வழக்கைப் பற்றியும், தீர்ப்பைப் பற்றியும் சுடச் சுட அலசி, இன்றைக்கோ, நாளைக்கோ ஒரு புத்தகம் வெளியிடும் எண்ணம் இருக்கிறதா, பத்ரி?!

செய்தி எதுவானாலும், அதற்குச் சூடான தலைப்பு வைத்துப் புத்தகமாக்கி சுடச் சுட விற்பனை செய்கிற சாமர்த்தியத்துக்காக, 'கிழக்கு' பத்ரியைப் பாராட்டியே ஆக வேண்டும்!

இப்போது என்னைக் குடைந்துகொண்டிருக்கும் ஒரே கேள்வி, கிழக்கு வழக்கம் போலவே இதற்கும் ஒரு புத்தகத்தை ரெடி செய்தால், வைக்கப் போகும் சூடான தலைப்பு என்னவாக இருக்கும்?

உங்களுக்குத் தெரியுமா, தெரிந்தால் எனக்கு மட்டுமாவது சொல்லுங்களேன்!

"One of the greatest comforts of religion is that you can get hold of God sometimes and give him a satisfactory beating. People mock at the folly of savages who beat their gods when their prayers are not answered; but it is the mockers who are the fools and the savages".

Sri Aurobindo
Thoughts and Aphorisms - 60

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!