Supreme Lord! Eternal Truth! Let me obey Thee alone!


புதிய ஏற்பாட்டில் ஒரு பகுதி:

பிலாத்து மன்னனிடம் யாரோ ஒருவன் "உண்மையை" பற்றிப் பேசப் போக, பிலாத்து கேட்டானாம்

" உண்மை! யாருடைய உண்மை? உன்னுடையதா அல்லது என்னுடையதா?"
இப்படித் தான் ஒவ்வொருவரும் உண்மையை தாம் அறிந்து கொண்டிருப்பதாக அல்லது தமது வசதிக்கேற்றபடி புரிந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டுகாலம் கடத்திக் கொண்டிருக்கிறோம். யானையைக் குருடர்கள் தடவிப் பார்த்து, ஒவ்வொருவரும் யானை இப்படித் தான் இருக்கும் என்று சொன்ன கதையைப் போல.

கதையைப் படித்துவிட்டு, அடுத்த நபர் எப்படி இந்த கதையில் வரும் குருடனைப் போல யானை இப்படித் தான் இருந்தது என்று சொல்வதாக, அவரை விமரிசிக்கவும் தயங்குவதில்லை. அதே கதையில் வரும் இன்னொரு குருடன் யானையைப் பற்றித் தன் கருத்தை சொல்வது போலவே தானும் சொல்லிக் கொண்டிருப்பது மட்டும் நமக்குப் புரிவதேயில்லை.

"Were Truth to manifest in such a way as to be seen and understood by all, they would be terrified by the enormity of their ignorance and false interpretation."

விலகி நின்று பார்க்கும் போது தான் இவனும், பிலாத்து மாதிரியே உண்மையை தன் வசதிக்கேற்றபடி புரிந்து கொண்டு அதுவே உண்மை என்று பினாத்திக் கொண்டிருந்தது புரிகிறது. ஜெபக்குமார் ஒரு தடவை சொன்னது நினைவிற்கு வருகிறது:

"நீங்கள் நேர்மையானவர் தான், சரி, அதற்காக மற்ற எல்லோரும் நேர்மை இல்லாதவர்கள் என்கிற மாதிரி தம்பட்டம் அடித்துக் கொள்ள வேண்டுமா என்ன?"

The defenders of the truth are often worse than the enemies of the truth.

"உண்மையின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், உண்மையின் விரோதிகளை விட மோசமானவர்கள். "

ஸ்ரீ அன்னைக்கும், சத்ப்ரேம் என்று அழைக்கப் பட்ட பிரெஞ்சு அன்பர் ஒருவருக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடல் தொகுப்பின் இந்த ஒரு பக்கத்தைப் படித்த போது கூட பிலாத்து மாதிரித் தான், உண்மையைத் தேடுகிறேன் என்ற சாக்கில் என் வசதிக்கேற்றபடி தான் உண்மையைத் தேடிக் கொண்டிருந்தேன் என்பது புரியவில்லை.

அதற்கும் இப்போது தான் நேரம் வந்திருக்கிறது.

"Were Truth to manifest in such a way as to be seen and understood by all, they would be terrified by the enormity of their ignorance and false interpretation."

சத்தியம் என்பது ஒரு வறட்டுத்தனமான கோட்பாடு அல்ல.

"Truth is not a dogma that one can learn once and for all and impose as a rule. Truth is as infinite as the supreme Lord and It manifests every instant for those who are sincere and attentive."

உண்மை என்பது தேடப்படுவது மட்டும் அல்ல.

உரை, மனம், கடந்து அனுபவிக்கப் படுவது.

சாட்சிகளால் மட்டும் நிரூபிக்கப் படுவதல்ல.

சாட்சியமே தேவைப்படாத அனுபவ சத்தியம்.

நான் எனது என்கிற புகை படிந்த கண்ணாடி வழியாக ஒருபோதும் உண்மையை உணர முடியாது என்பது புரிய வந்திருக்கிற இந்த வேளையில், ஸ்ரீ அரவிந்தரிடம், ஸ்ரீ கிருஷ்ண சைதன்யம் புகுந்த இந்த நாளில் November 24, The Day of Victory or Siddhi Day

ஸ்ரீ அரவிந்த அன்னையே!

உன்னிடம் இவனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தும் சமர்ப்பணம் ஆகட்டும்.இன்னமும், நான் எனது என்கிற இருளில் தோய்ந்திருக்கிற பகுதிகள் அனைத்தும் உனது ஒளியால் நிறைவிக்கப் பெறட்டும்.

இந்த வெற்றி தினம் இவனுக்கும் இருளில் இருந்து விடுபட்ட விடுதலை தினமாக வரம் அருள்வாய், தாயே!



"Supreme Lord! Eternal Truth!

Let me obey Thee alone and

live according to Truth."


இங்கே மற்றும் இங்கே மேலதிகமாகத் தெரிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!