Showing posts with label உஷ்..ரகசியம். Show all posts
Showing posts with label உஷ்..ரகசியம். Show all posts

இந்தோ சீனி பாய் பாய்! இந்தமுறை கூவுவது சீனர்களாம்!

1950களில் இந்தோ சீனி பாய் பாய் என்ற முழக்கங்களை காங்கிரஸ்காரர்கள் எழுப்பிக்கொண்டு  இருந்த கதை இன்றைய தலைமுறை அறிந்திருக்க நியாயமில்லை. இந்தியாவும் சீனாவும் பஞ்சசீலக் கொள்கை என்ற ஒரு மாயஉலகில் ஒப்பந்தம் செய்துகொண்டபோது எழுந்த கோஷம் அது. 1962 இல் இந்திய சீனப்போருக்குப் பிறகு அந்த கோஷம் என்ன ஆனது என்பது அந்த நாளைய CONகிரஸ் ஆசாமிகளுக்கே நினைவிருக்காது. எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தோசீனி பாய்பாய் கோஷம் கடந்தவாரம் மறுபடி சீனத்தரப்பிலிருந்து வெகுவாகத் தம்பட்டம் அடிக்கப் பட்டிருக்கிறது என்பது காலமும் கொரோனா வைரசும் ஏற்படுத்தித் தந்திருக்கிற விசித்திரம்! இங்கே ஹிந்து நாளிதழுக்கும் செலெக்டிவாக வேறுசில ஊடகங்களுக்கும் இந்திய-சீன் உறவு: எழுபது ஆண்டுகள் என்று முழுப்பக்க விளம்பரங்கள் சீன தூதரகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டதைக்கூட  கவனித்திருக்க மாட்டோம் தானே! 


இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்துங் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவத் துறையினருக்காக தீபம் ஏற்றினாராம்!  உள்ளூர் கம்யூனிஸ்டுகள், பிரதமர் சென்ற 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு தீபம் ஏற்றச்சொன்னதை 
நக்கலடித்துக் கொண்டிருக்கிறார்கள்! அவர்களுடைய ஆதர்ச சீன தேசத்து தூதர் தீபமேற்றிக் கொண்டிருந்தது தெரியுமோ என்னவோ? அது போகட்டும்! திடீரென்று சீனாவுக்கு இந்தியா மீது எப்போதுமில்லாமல் இப்போது திடீர்க்கரிசனம் வருவானேன்? சீனர்கள் குடுமியும் காரணம், ஆதாயமில்லாமல் சும்மா ஆடுவதில்லை என்பது தெரியுமில்லையா?  

More than India, it was China which celebrated seventy years of Indo-China relations last week. Many newspapers carried an editorial written by the Chinese Ambassador to India on the event, but none from the Indian leadership. There were tweets from the Chinese ambassador and government on the growing relationship with mentions of telephonic contacts between the two foreign ministers.

The editorials praised the proximity between the leaders of the two countries and invariably had a paragraph on the two nations battling Covid-19 (Coronavirus) together. No formal event was organized on account of social distancing norms. The Chinese Ambassador also participated in the national Lighting of the Candle event on the weekend and tweeted, ‘we are standing together through thick and thin.’ என்றுஆரம்பிக்கும் கொல்கத்தா ஸ்டேட்ஸ்மன் நாளிதழ் செய்திக்கட்டுரை சீனர்களுடைய திடீர்க் கரிசனம், புகழ்ச்சிக்கான காரணங்களை மேலும் அடுக்குகிறது. அதுமட்டுமா? கடந்த மாதம் பாகிஸ்தான் சீனாவிடம் காஷ்மீர் பிரச்சினையை ஐநா பாதுகாப்புசபையில் எழுப்புமாறு விடுத்த கோரிக்கைக்கு சீனா செவி சாய்க்கவில்லை. அதுவும் தவிர கடந்த சிலமாதங்களாகவே சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைகிற வாடிக்கைகூட இல்லையாம்! 

கொரோனா வைரஸ் தடுப்புக்காக இந்தியாவுடன் எல்லாவகையிலும் ஒத்துழைக்கத்தயார் என்றும் உருகி இருக்கிறார்கள்! சீன அரசின் கண்ணசைப்பில் அலிபாபா  பவுண்டேஷன் முகக்கவசம். டெஸ்ட் கிட்  முதலான நிவாரணப் பொருட்களை டில்லிக்கு அனுப்பியிருக்கிறது. Tik Tok நிறுவனம் நூறு கோடி ரூபாய்களை நிவாரணநிதிக்கு அளித்திருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் சீனா உண்மையை மறைத்த்து, பெரும்பாலான நாடுகளில் கடும் அதிருப்தியை, கோபத்தை ஏற்படுத்தி இருப்பதைச் சமளித்தாக வேண்டிய நிலையில் இருப்பதே, சீனாவின் இந்த திடீர்க்கரிசனம், புகழ்ச்சி, உதவி என்பதற்கான காரணம்.

பிரிட்டன், அமெரிக்கா இரண்டு நாடுகளிலும் வைரஸ் தொற்றுக்காக சீனாவிடமிருந்து இழப்பீடு பெறவேண்டும் என்ற குரல்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. மேற்கத்திய நாடுகளில் பலவும் #ChinaMustPay என்ற கருத்து வலுவாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் விவகாரம் சீனாவை அவ்வளவு எளிதாகத்தப்பிக்க விட்டுவிடாது என்றே நிலவரம் முற்றிவருவதாக செய்திகள் சொல்கின்றன.

ஸ்டேட்ஸ்மன் நாளிதழ் செய்திக்கட்டுரையை விரிவாக எழுதியிருப்பவர் ஹர்ஷாகாகர். இந்திய ராணுவத்தின் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல்.மேலேயே சுட்டி இருக்கிறது. வாசித்துப் பாருங்களேன்!

மீண்டும் சந்திப்போம். 

 



     

சண்டேன்னா மூணு! கேஜ்ரிவால்! முகுல் ராய்! நேரு!

எதிர்பார்த்தபடியே டில்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகள் பாரதீய ஜனதாக் கட்சிக்குக் கொஞ்சம் கசப்பு மருந்தைப் புகட்டியிருக்கிறது. எதிர்பாராத தகவல் என்னவென்றால் கேஜ்ரிவால் முதல்வராக இருப்பார், ஆனால் எந்த இலாகாப் பொறுப்புமில்லாதவராக இருப்பார் என்பது மட்டும் தான்! மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 இல் ஆம்ஆத்மிகட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதும் பதிவான வாக்குகளில் சுமார் 54% ஆம் ஆத்மி கட்சிக்கே கிடைத்திருக்கிறது என்பதும் மேலோட்டமாக கேஜ்ரிவால் ஆதரவாளர்களுக்கு இனிப்பான சேதியாக இருக்கலாம்.ஆனால்,டில்லி மக்களுடைய எதிர்பார்ப்புகளை வரு எந்த சாக்கும் சொல்லி திசைதிருப்பிப் பழைய மாதிரி, தப்பித்துக் கொண்டு ஓட முடியாது என்பது இந்தத்தேர்தல் முடிவுகள் கேஜ்ரிவால் அண்ட் கம்பனிக்குக் கொடுத்திருக்கும் எச்சரிக்கை! 



படத்தில் போஸ், ஸ்டன்ட் நன்றாக இருக்கிறது, இல்லையா? ஆனால் ப்ராக்டிகலாக முடியாது என்பது புரிகிறதா? இதே மாதிரித்தான் #கேஜ்ரிவால் அடிக்கிற கூத்துகள், ஸ்டன்ட் எல்லாமே! நடைமுறைக்கு உதவாது என்பது டில்லி வாசிகளுக்குப் புரியாமல் போனதேனோ?



  1. Delhi 2015 Election Results: Has BJP strategized its own defeat ?

    Tehelka-14-Feb-2015
    ... BJP strategized its own defeat ? | Tehelka.com ... TehelkaEditorial · IT and Systems · Tehelka.com · Home · Current Affairs · Investigations ...
நேற்றைக்கு தெஹெல்கா தளத்தில் பிஜேபி  டில்லியில் திட்டமிட்டே தோற்றது என்ற ரீதியில் ஒரு புலனாய்வுக் கட்டுரையை வாசித்தேன். தற்சமயம்  அந்தத் தளம் இயங்கவில்லை. தளம் இயங்க ஆரம்பிக்கும்போது மேலே உள்ள லிங்கில் புலனாய்வு லட்சணத்தைப் படித்துக் கொள்ளலாம் 


கிட்டத்தட்ட அதே பல்லவியை காங்கிரசின் உளறுவாயர் திக்விஜய் சிங் பாடியிருக்கிறார். Kejriwal Part of RSS Plan for Congress-Free India: Digvijay என்ற தலைப்பிட்டு வந்திருக்கிற இந்தச்செய்தியில்  காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குகிற ஆர்எஸ்எஸ் திட்டத்தின் ஒரு அங்கமே கேஜ்ரிவால் என்ற மிகப்பெரிய கண்டுபிடிப்பை டிக்கிசிங் கண்டு சொல்லியிருக்கிறார். போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் டெபாசிட் இழந்திருக்கிறது என்பதும் கூட  ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் டில்லி வாக்காளர்களும் சேர்ந்தே செய்த சதியாக இருக்கலாம் என்பதை டிக்கி சிங்குக்கு யார் புரிய வைப்பது? இதை வாசிக்கிற நீங்கள் கூட முயற்சிக்கலாம்! 

******
டில்லித் தேர்தல் முடிவுகள் ஒருசிலருக்குக் கொஞ்சம் இதமாக,ஆறுதலாக இருந்திருக்கக் கூடுமோ?

சாரதா சிட்  ஃபண்ட் ஊழல் விவகாரம் திரிணமுல்   காங்கிரஸ்  கட்சியை விடாது கருப்பு என்று துரத்திக் கொண்டு வருவதில் கட்சியே கலகலத்துப் போய்க் கிடக்கிறது. 

The relationship between Mamata and Mukul had gone from bad to worse ever since he had publicly distanced himself from a railway-linked deal with a Saradha company but today's snub was the most resounding yet. "The party chief has appointed another all-India general secretary for the party.... Subrata Bakshi will have the additional responsibility as all-India general secretary," Chatterjee announced after a 75-minute meeting at Mamata's Kalighat residence.

எந்த நேரத்தில், எவர்  காலைவாருவார், யார் மாட்டிக்கொள்வார் என்பது தெளிவில்லாமல் இருக்கும் சூழ்நிலையில் மம்தா பானெர்ஜி துணிந்து ஒரு அதிரடி ஆட்டத்தைக் கட்சிக்குள் ஆரம்பித்து வைத்திருக்கிறார். கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளராகவும் தீதியின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்த முகுல் ராய்க்கும் சமயம் பார்த்து வேலி  தாண்டக்  காத்திருந்தவர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் செய்கிற மாதிரி கட்சிப் பொறுப்புக்களை தன்னுடைய விசுவாசிகளுக்கு மாற்றிக் கொடுத்திருக்கிறார். பலன் தருமா என்பதிக் கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், மேற்கு வங்கத்தில் பிஜேபி காலை ஊன்றிக் கொள்ளக் கிடைத்த வாய்ப்பைக் கொஞ்சமும் தவறவிடவில்லை,

******


நேரு என்றால் வழிசல் என்பதைத்  தனியாகச் சொல்லவே வேண்டாம்!

கொஞ்சம் பழைய கதைதான்! மேலே கடைசிப் பாராவைப் படித்து விடுங்கள்! உலக உத்தமர்களுடைய வரலாற்றைவேறு  எப்படித் தெரிந்து கொள்வதாம்?

******

என்னை அறிந்தால் திரைப்படம் பார்க்கப்போய்க் கசப்பான அனுபவம் தான்!முதல்குறை தன்னுடைய சொந்தப்படங்களில்  இருந்தே ரீமிக்ஸ் மசாலா தயாரிக்கும் இயக்குனருடைய obsession அடுத்துப் படத்தின் நீளம். மூன்று படங்களைத் தொடர்ச்சியாகப் பார்க்கிற அலுப்பு இந்த ஒருபடத்தைக் கொஞ்சம் பார்ப்பதற்குள்ளாகவே வந்து விடுகிறது. சென்ற வாரம் மகன் வீட்டுக்கு வந்திருந்தபோது அவனுடன் மீண்டும் பார்த்த படம் Dead Poets Society அதில் வித்தியாசமான ஆசிரியராக நடித்திருந்த ராபின் வில்லியம்ஸ் பேசுகிற வசனம் ஒன்று தான் மேலே நீங்கள்  பார்த்தது.

உங்களுக்கு என்ன தோன்றுகிறது? கொஞ்சம் சொல்லுங்களேன்!  





ரகசியம், பரம ரகசியம்! காங்கிரஸ் இஷ்டைல்!


ஷ்..ஷ்..! ரகசியம்! பரம ரகசியம்!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காண்டி என்ன செய்கிறார், எப்போது எதற்காக வெளிநாடு போகிறார் என்பது இந்த தேசத்தின் ராணுவ ரகசியத்தைவிடப் பெரிய, பரம ரகசியம். அதில் அப்படி என்ன தான் ரகசியமோ என்று, சந்தேகங்களை நிறைய எழுப்புகிற அளவுக்கு பரம ரகசியம்!!

ன்றைக்கு அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் சோனியா காண்டிக்கு அறுவை சிகிச்சை நடந்ததாக,காங்கிரஸ் பேச்சாளர் ஜனார்தன் த்விவேதி தகவல் தெரிவித்திருக்கிறார். 
றுபத்து நான்கு வயதான சோனியாவுக்கு, ஐந்து நாட்களுக்கு முன்னால் வைரஸ் காய்ச்சல் என்று சொல்லப் பட்டது. 

ருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நேற்றைக்கு அமெரிக்காவுக்குப் போன அவருக்கு, இன்று வியாழக் கிழமை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாகவும், இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு நாடு திரும்ப மாட்டார் என்றும், சோனியா நாட்டில் இல்லாத இந்த சமயத்தில் காங்கிரஸ் விவகாரங்களைக் கவனிக்க, ராகுல் காந்தி, ஏகே அந்தோணி, அஹமது படேல் மற்றும் ஜனார்தன் த்விவேதி ஆகியோர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும் திவிவேதி தகவல் தெரிவித்தார்.என்ன கோளாறு, எதற்காக அறுவை சிகிச்சை என்ற தகவல்களை அவர் சொல்லவில்லை.

என்னவென்று  தெஹெல்காவும்அப்புறம் சி என் என்-ஐ பி என் செய்தியும் அடிக் கோடிட்டுக் காட்டின.


பெயரளவுக்கு நான்கு பேர் இருந்தாலும் சோனியாவின் உதவியாளர் அஹமது படேல் தான் உண்மையான ரிமோட் கன்ட்ரோல் என்பது காங்கிரஸ் விவகாரங்களைக் கவனித்து வருகிற எல்லோருக்கும் தெரியும்.

சில வாரங்களுக்கு முன்தான், தேசீய ஆலோசனைக் குழுவின் தலைவர் என்ற முறையில் இவர் அடிக்கடி மேற்கொள்ளும் வெளி நாட்டுப் பயணங்களைப் பற்றிய விவரம், செலவு குறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பதாரர் ஒருவருக்குத்  தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தப்பக்கங்களிலேயே அந்தத் தகவல் பேசப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.

காண்டி குடும்ப வாரிசுகள் வெளிநாடுகளுக்குப் போய்வருவதைக் குறித்து செய்திகள் எப்போதுமே இதுவரை வெளியானதில்லை. இதுதான் முதல் தரம் என்பதால், இந்தப் பக்கங்களிலும் இந்த அதிசயமான செய்திக்கு ஒரு இடம், அவ்வளவுதான்!

கொஞ்சம் கூர்ந்து இந்த செய்தியைக் கவனித்தீர்கள் என்றால், மன்மோகன் சிங் கழற்றி விடப்பட்டால், அல்லது தானாகவே விலகினால், பிரதமர் நாற்காலியைப் பிடிப்பதில் பிரணாப் குமார் முகர்ஜி, கண்டனூர் பானா சீனா இருவருக்கும் இடையில் தான் கடும் போட்டி இருக்கும் என்று  ஆரம்பகாலங்களில் பரவலாக சொல்லப் பட்டது. 

ன்னுடைய வாய்க் கொழுப்பினால் எல்லோரையும் பகைத்துக் கொண்ட சால்வை அழகர். சமீபத்தில் தன்னையும் உள்ளிட்டு அறுபது வயதைக் கடந்தவர்கள் பதவியில் இருப்பது தவறுதான் என்றும், பிரதமராகும் எண்ணமில்லை ஆனால் எழுத்தாளராகும் எண்ணம் ருக்கிறது என்று சொன்ன சேதி நினைவிருக்கலாம். பானா சீனா, சோனியாவின் பின்னால் ஒளிந்து கொண்டு, பதவியில் நீடிக்கிறார், அவ்வளவுதான்!

போதாக்குறைக்கு, இன்றைக்கு சென்னை உயர்நீதிமன்றம், சிதம்பரம் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அதிமுக வேட்பாளர் தாக்கல் செய்திருந்த மனுவைத்  தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி சால்வை அழகர் பானா சீனா தாக்கல் செய்திருந்த மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது!

ன்னொரு பக்கத்தில் இருந்தும் இடி!

ஸ்பெக்ட்ரம் விவகாரம் மட்டுமல்லாமல் அப்பச்சிக்கு "இடி"யாப்பச் சிக்கல்களாகவே தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த முறை ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி ராஜ.கண்ணப்பன் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்தத் தொகுதியில் இரண்டாவதாக வந்தவர் அதிமுகவைச் சேர்ந்த ராஜ.கண்ணப்பன். இவர் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடை பெறும் நிலையில், ராஜ.கண்ணப்பன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யுமாறு ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் ப.சிதம்பரத்தின் இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

யர்நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராஜன், ராஜ.கண்ணப்பன் தாக்கல் செய்த தேர்தல் மனுவில் குறைபாடு இருப்பதால் அது தொடர்பான ஆவணங்கள் திருப்பி அனுப்பப்பட்டு சரிசெய்யப்பட்டன. இதன் காரணத்தால் அவர் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சிதம்பரம் தரப்பில் கோரப்பட்டது. 

னால், ஆவணங்கள் திருப்பி அனுப்பப்பட்டு சரிசெய்யப்பட்ட காரணத்துக்காக ராஜ.கண்ணப்பனின் தேர்தல்மனுவை நிராகரிக்க முடியாது. இன்னும் மூன்று வாரகாலத்துக்குள் சிவகங்கை தேர்தல் வழக்கு விசாரணை நடைபெறும் என்றார் அவர். 
போட்டியில் ஒருவர் காலி! அப்படியானால், அடுத்த வாய்ப்பு  பிரணாப் குமார் முகர்ஜிக்குத் தானா? 

ப்படியும் சொல்லிவிட முடியாதபடி, காங்கிரஸ் அவ்வளவு குழப்பத்தில் இருக்கிறது. தியாக சிகரம் பட்டத்தை ஏற்றுக் கொண்டு, ஏழாண்டுகளுக்கு முன்னால், டம்மிப் பீசாக மன்மோகன் சிங்கைப் பதவியில் அமர்த்தி வைத்த சோனியாவின் அரசியல் சாதுர்யம் அளவுக்கு மீறியே புகழ்ந்து தள்ளப்பட்டது. இந்தப் பெண்மணிக்கோ, வாரிசுகளுக்கோ அரசியல் அரிச்சுவடியே தெரியாது என்பது இந்த ஏழாண்டுகளில் ஒவ்வொரு தருணத்திலும் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டப் பட்டிருக்கிறது.

பிரணாப் என்னவோ தனக்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருப்பதாக நம்பிக் கொண்டு இங்கே திமுக உள்ளிட்ட ஐமு கூட்டணிக் குழப்பங்களிடம் ஆதரவு திரட்டிக் கொண்டிருக்கிறார்! முன்னர் ஒருதரம் இதே மாதிரி, பிரதமர் நாற்காலியில் உட்கார ஆசைப்பட்டு அவசர அவசரமாகக் காய் நகர்த்தி, மேலிடத்தின் நம்பிக்கையை இழந்த கதை பிரணாபுக்கு மறந்து போய் விட்டதோ என்னவோ!

ட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சல்மான் குர்ஷீத், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மாதக் கணக்கில் ஜாமீன் மறுக்கப் பட்டு வருவது சரியானதல்ல என்றும், அரசு தலையிட வேண்டி வரலாம் என்றும் சொன்னதாக என்டிடீவீ தொலைக்காட்சியில் செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது.

திமுக புள்ளிகளுக்கு அடுத்து, திஹார் சிறைக்குள் காங்கிரஸ் வாலாக்கள் தான் போக வேண்டியிருக்கும் என்பதால் எழுந்த கரிசனமோ இது என்று கொஞ்சம் ஆச்சரியம், சந்தேகப்பட வைக்கிறது. 

டில்லி முதலமைச்சர், ஷீலா தீட்சித் கூடிய விரைவிலேயே கல்மாடிக்குக் கம்பனி கொடுக்க வேண்டியிருக்கும், ஸ்பெக்ட்ரம் வழக்கில் மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்ட பிறகோ, அல்லது அதற்கடுத்தோ, பானா சீனாவும் உள்ளே போய் உட்கார வேண்டியிருக்கும் என்ற சூழ்நிலையில் சட்ட அமைச்சரின் கரிசனம், ஜனங்களைக் கொந்தளிக்க வைக்கப் போகிறது.

ரசியல்வியாதிகளுக்கு  தங்களுக்கு ஒன்று என்றால் மட்டும் எத்தனை வித்தைகள் கை வருகிறது பாருங்கள்!








 
பதிவின் உள்ளடக்கம் பிடித்திருக்கிறதா? அடுக்கில் உள்ள ப்ளஸ் ஒன் பட்டனை அழுத்தித்தெரிவியுங்களேன்!