குடியுரிமைச் சட்டத் திருத்தமும் வாக்குவங்கி அரசியலும்!

மாநிலங்களவையில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்துபேச ஆரம்பித்தபோது பல எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அரைகுறை மீறி நடந்து கொண்டதில்  அவைத்தலைவர் உத்தரவின் பேரில் நேரடி ஒளிபரப்பு சிறிது நேரம் நிறுத்தப்பட்டு அவை ஒழுங்குக்கு வந்தபிறகு மீண்டும் தொடங்கியது என்ற செய்தி, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர் எவரையும் தலைகுனியச் செய்கிற ஒன்று. உளறுவாயர் கபில் சிபல் பேச ஆரம்பித்தவுடன் ராஜ்யசபா நேரலையை நிறுத்திவிட்டு, வேறு செய்திகள், காணொளிகள் என்று பார்க்க ஆரம்பித்ததில் இந்த 38 நிமிட காணொளி கிடைத்தது.


2008 ஜனவரியில் நடந்த துக்ளக் இதழின் 38வது வருடக் கூட்ட நிகழ்வின் முதற்பகுதி இது. இதன் முதல் பத்துப் பன்னிரண்டு நிமிடங்களைக் கவனித்தீர்கள் என்றால் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள்! இன்றைய நடப்போடு 11 ஆண்டுகளுக்கு முன்னர் பேசியது எந்த அளவுக்குப் பொருந்திப் போகிறது என்பதைப் பார்க்கும் போது சோ அவர்களுக்கிருந்த தொலைநோக்குப்பார்வை தெளிவான கருத்துக்கள் என்று ஒவ்வொன்றையும் பார்த்து மிகவும் வியந்து போனேன். #GoBackModi என்ற அசிங்கத்தை 2008 இலேயே இங்கே ஆரம்பித்து விட்ட விஷயம் கூட! சோ அதைப்பற்றி என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் கேளுங்களேன்!  இங்கே சட்ட விரோதமாகக் குடியேறுகிறவர்கள் பற்றி  பிஜேபி, அந்த நாட்களிலேயே என்ன கருத்தை கொண்டிருந்தார்கள் என்பது ஏற்கெனெவே தெரிந்த விஷயம் என்பதால், இன்றைக்கு குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவைக் குறித்து எனக்கு ஆச்சரியம் எதுவுமில்லை. தவிர இந்த மசோதா கடந்த பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப் பட்டபோது எதிர்க்கட்சிகளின் ரகளை காரணமாகத் திரும்பப்பெறப்பட்டது. ஆக இது ஒன்றும் புதிதாகக் கொண்டு வரப்பட்ட விஷயமல்ல. எதிர்க்கட்சிகள் அமளிதுமளியில் இறங்குவதற்கு வாக்குவங்கி அரசியலைத் தவிர வேறு உண்மையான காரணம் எதுவுமில்லை. 

மக்களை பிரிக்கும் இத்தகைய மசோதா ..இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. இதற்கு எதிராக நாங்கள் அனைத்து தளங்களிலும் போராடுவோம் - எச்சூரி
கம்யூனிஸ்டுகள் நிகழ்த்திய ரத்த வரலாறுகளில் ஒன்றான 1978 மாரீச்சபி படுகொலைகளை..இந்நாட்டின் யெச்சூரிகளுக்கு நினைவூட்ட வேண்டிய தருணம் இது !
பங்களாதேஷிலிருந்து மாற்று மத அடக்குமுறையின் காரணமாக அடைக்கலம் கேட்டு மேற்கு வங்காள மாநிலத்திற்கு தப்பித்து வந்த ஹிந்துக்களை ..தண்டகாருண்ய காட்டுப் பகுதிகளில் அடைத்து வைத்ததும், மாரீச்சபி தீவில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு குடிநீர் , உணவு போவதை தடுத்து நிறுத்தி பலரை சாகடித்ததும், அதன் பின்னரும் துப்பாக்கி சூடு நடத்தி பல நூறு பேரை கொன்று குவித்ததும்..என்று கம்யுனிஸ்டுகளின் மேற்குவங்காள ஆட்சி அதிகார கொடூரங்கள் மிக மிக அதிகம்.
வாய் கிழிய பேசும் கம்யூனிஸ்டுகள்..ஆட்சி அதிகாரம் கிடைத்த போதெல்லாம்..கொடும் ஹிட்லர்களாக மாறி.. மக்களை சொல்லொணா துயரத்திற்கும், படுகொலைகளுக்கும், பஞ்சம்- பட்டினி சாவுகளுக்கும் ஆளாக்கியது தான் உலக வரலாறு முழுவதும் பதிந்திருக்கும் உண்மைகள்.


தானே சட்டமும் நீதிபதியாகவும் தீர்ப்பாகவும் இருப்பதான மிதப்பில் பானாசீனா என்னென்னவோ சொல்கிறார் என்கிற ஒன்றே போதாதா இந்தச் சட்டத் திருத்தம் நியாயமானதுதான் என்று முடிவு செய்ய? அஸ்ஸாம், திரிபுரா மாநிலங்களில் கலவரம் தூண்டப்  படுவதில் ராணுவம் அழைக்கப் பட்டிருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜ்யசபா விவாதத்துக்குப் பதிலளித்துப் பேச ஆரம்பித்திருக்கிறார். அடுத்து வாக்கெடுப்பு இன்றே நடந்துவிடும் என்றுதான் தெரிகிறது. 

                                                          நேரடி ஒளிபரப்பு

இந்திய ஜனநாயக நடைமுறைகளில் கோளாறுகள் குறைபாடுகள் இருக்கலாம். ஆனாலும் இன்னமும் கூட நம்பிக்கை இருக்கிறது .

மீண்டும் சந்திப்போம்.                                                          

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!