இங்கிலாந்து தேர்தலும் இளம்பருவக கோளாறும்!

பிரிட்டனில் நேற்றைக்கு ஒரு பொதுத்தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அங்கே 650 இடங்களில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 358 முதல் 368 இடங்கள் வரை கிடைக்கலாம் என்று செய்திகள் சொல்கின்றன. போரிஸ் ஜான்சன் ஜெயித்து மீண்டும் பிரதமராகிறார் என்று சொல்வதைவிட ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது என்று பிரிட்டன் எடுத்த முடிவுக்கு ஆதரவாகவே வெகுஜன ஆதரவு இருக்கிறது என்று மட்டுமே இதை எடுத்துக் கொள்ளமுடியும் என்று சொல்கிறார்கள்.


மெஜாரிட்டியோடு ஜெயித்ததனால் போரிஸ் ஜான்சன் இன்னுமொரு முறை பிரதமராகிறார். ஜெயித்த வேகத்தோடு கிறிஸ்துமசுக்கு முன்னாலேயே Brexit குறித்த தனது தரப்பை நாடாளுமன்றத்தில் மறுபடி முன்வைக்கிற வாய்ப்பு ஜான்சனுக்குக் கிடைத்திருக்கிறது. வெளியிலிருந்து ஆதரவை எதிர் பார்க்க வேண்டிய அவசியமில்லை. Boris Johnson may be prime minister for a long time, but he may be the last prime minister of the UK. என்று   இந்தத் தேர்தல் முடிவுகளைக் குறித்து ஜான் ரெண்டோல் சந்தேகப்படுகிறார்   

பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து நாடாளுமன்ற ஜன நாயகத்தை மட்டும் இரவல் வாங்கினோமா அல்லது அதில் இருந்த குழப்பங்களை மட்டும் சுவீகரித்துக் கொண்டோமா என்ற சந்தேகத்தில் அவ்வப்போது அங்கே நடப்பதையும் இங்கே நடப்பதையும் ஒப்பிட்டுப் பார்க்கிற கெட்ட வழக்கம் என்னிடம் இருக்கிறது. என்ன செய்வேன்?

  
அம்ரிந்தர் சிங்  மம்தா பானெர்ஜி, பிணரயி விஜயன்  முதலான எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் கடைப்பிடிக்கிற மோதல் போக்கு, ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல. அதேபோல இங்கே தமிழகத்தில் திமுகவும் ஒரு பப்ளிசிட்டி அடித்துப் பார்த்திருக்கிறது.

   
இந்தமாதிரி இளம்பருவக் கோளாறுகளுக்குச் சரியான பதில் சொல்ல ஆளே இல்லையா? ஏனில்லை? நான் இருக்கிறேனே என்று விவாதக்களத்தில் இறங்குகிறார் மதன் ரவிச்சந்திரன்!

  
இஸ்லாமியர்கள் மத்தியில் ஒருவித பதட்ட உணர்வைத் தூண்டுவதைத் தவிர இங்கே திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளுடைய நோக்கம் வேறென்ன?  விவாத நேரம் 59 நிமிடம். நேரம் ஒதுக்கிப் பாருங்களேன்! 

மீண்டும் சந்திப்போம். 


No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!