வாக்கெடுப்பில் வெளிநடப்பு! தனித்துவிடப்பட்ட காங்கிரஸ்!

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா லோக்சபாவில் சுமார் 12 மணிநேர விவாதத்துக்குப் பிறகு நேற்றிரவே நிறைவேற்றப்பட்டு விட்டது. மக்களவையில் ஆதரித்து வாக்களித்த சிவசேனா காங்கிரசின்  எதிர்ப்புக்குப் பிறகோ என்னவோ, சிலவிஷயங்களைத் தெளிவு படுத்தினாலொழிய மாநிலங்களவையில் ஆதரிக்க மாட்டோம் என்று காமெடி செய்திருக்கிறது. இதில் சிவசேனாவுக்கு ராஜ்யசபாவில் வெறும் மூன்றே உறுப்பினர்கள் என்பதோடு சேர்த்துப் பார்க்க வேண்டும். கட்சிவாரியான பலம் முழுப்பட்டியல் இங்கே.   


காங்கிரஸ் பெருந்தலைகளுக்குக் கிறுக்குப் பிடித்து விட்டதோ இல்லையோ, சார்புநிலையெடுக்கும் சதீஷ் ஆசார்யா போன்ற கார்டூனிஸ்டுகளுடைய தூரிகைக்குப் பிடித்துவிட்ட மாதிரித்தான் தெரிகிறது.


விவரங்கள் வேண்டும்
நேற்று பின்னிரவு மக்களவையில் குடியுரிமைத் திருத்த மசோதா ஆதரவு 311, எதிர்ப்பு 80 என்று வாக்கெடுப்பில் நிறைவேறியது என நாளிதழ் செய்திகள் கூறுகின்றன (டைம்ஸ் ஆஃப் இந்தியா)
மக்களவையில் பாஜகவின் பலம், 302 (சபாநாயகர் நீங்கலாக) அதன் கூட்டணிக் கட்சிகளின் பலத்தையும் சேர்த்தால் 358
எதிரணியில்,(உதிரி கட்சிகளைச் சேர்க்காமல்) 129
இரு தரப்பிலும் அவர்களின் பலத்திற்குக் குறைவாக வாக்குகள் பதிவாகி இருக்கின்றன
என் கேள்விகள்:
1. கட்சிகள் கொறடா ஆணை ஏதும் பிறப்பிக்கவில்லையா?
2.ஆளும் கட்சிக் கூட்டணியில் இருந்து கொண்டு வாக்களிக்காதவர்கள் யார், யார்? (உதாரணமாக அதிமுக அன்று நாள் முழுவதும் நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை)
3.எதிர்கட்சிகளில் வாக்களிக்காதோர் யார். யார்?
4. எல்லாக் கட்சிகளிலும் உள்ள எல்லா உறுப்பினர்களும் வாக்களித்தார்களா? (அல்லது, பின்னிரவு நேரம் என்பதால் குளிர் நிலவும் தில்லியில் உறங்கப் போய்விட்டார்களா?) அப்படியானால் வாக்களிக்கும் நேரத்தில் அவைக்கு வராதோர் யார்? அவர்கள் எந்தக் கட்சி?
வாக்கெடுப்பின் போது மக்களவையில் இருந்த உறுப்பினர்களோ, செய்தியாளர்களோ விவரங்கள் தர இயலுமா?
சிவசேனாவை விடுங்கள்! இங்கே கடுமையான எதிர்ப்பு என்பது உதட்டளவில் மட்டுமே வாக்கெடுப்பில் அல்ல! காங்கிரசின் நிலைமைதான் மிகவும் பரிதாபம்! எதிலும் ஒரு தெளிவான முடிவெடுக்க முடியாமலும், எதிர்க் கட்சிகளின் ஆதரவைப்பெற முடியாமலும் முட்டுச் சந்தில் தனித்து விடப்பட்டிருக்கிறது.

   
ஏண்ணே வீராவேசமா பேசிட்டு, வாக்கெடுப்புல கலந்துக்காம, எல்லாரும் ஓட்டு போடாம வெளி நடப்பு செஞ்சீங்க ?
தம்பி...நம்மாளுக பாதி பேருக்கு 6 மணிக்கு மேல ஆட்டோ ஓடாது. சரக்கடிக்க விடாம அவனுகள அவ்வளவு நேரம் பிடிச்சு வெச்சதே பெரிய விஷயம்.
ஜோதிமணி குறட்டைக்கு பதில் சொல்ற மாதிரி தமிழச்சி 8 மணிக்கே குறட்டை விட்டு எசப்பாட்டு பாடுது. எழுப்பிவிட்டா டச்சப் செய்ய மேக்கப் மேன பாராளுமன்றத்துக்குள்ளயே கூப்பிடுது. அந்த நாதாரிப்பய வாங்குற 200 ரூபாய் பேட்டாக்கு நல்லா சோலி பாக்குறான் தம்பி.
சொல்றான்...அவ்வ்வ்...அக்கா இந்த நாலு A 4 பேப்பபர கைல வெச்சுகிட்டு கோபமா போஸ் குடுங்கன்னு சொல்லி போட்டோ எடுக்குறான் தம்பி...
சுத்தி கேமரா வேற இருக்கு. கழக மானம் போகக்கூடாதுன்னு கெளம்பிட்டோம்.


மதன் ரவிச்சந்திரன் தனது பரிவாரங்களோடு விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறார் இப்போது.

மீண்டும் சந்திப்போம்.  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!