Showing posts sorted by relevance for query Rule of the Road. Sort by date Show all posts
Showing posts sorted by relevance for query Rule of the Road. Sort by date Show all posts

கொஞ்சம் கொறிக்க! #அரசியல் இன்று!

"in a healthy democratic and political environment, dissent is a necessary component." என்று சட்டப்பல்கலைக் கழகங்களின் மாணவர் கூட்டமைப்பு மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாகச் சொல்லியிருப்பதை, பல்வேறு நகரங்களில் போராட்டக்காரர்கள் அரசியல் சாசனத்தின் முகவுரையைப் படிக்க ஆரம்பித்திருக்கிற செய்தியை என்னமாதிரி எடுத்துக் கொள்வது?



சதீஷ் ஆசார்யா மாதிரிக் கார்டூனிஸ்ட் கிறுக்கர்கள் பார்வையில் வன்முறையில் இறங்கினாலும் மாணவர்களைப் போற்றிப்பாடடி பொண்ணே கதை தான் என்பதைத் தனியாகச் சொல்லவேண்டியதே இல்லை. எந்த ஒரு சமூகத்திலும்  உரிமைகளைப்  பேசுவதற்கு முன்னால், சில கடமைகள், பொறுப்பு இவைகளைப் பூர்த்தி செய்தாக வேண்டும். பொறுப்பற்ற போராட்டங்கள், வன்முறைகள், பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவிப்பதெல்லாம் என்ன மாதிரியான dissent? மாற்றுக் கருத்து, எதிர்ப்புக் குரல்  இருக்க வேண்டியதுதான்! அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய லைசன்ஸ் கொடுக்கப் பட்டிருப்பதாக எடுத்துக் கொள்ள முடியுமா? ON the Rule of the Road என்ற கட்டுரையில் A G Gardiner சொல்லி இருப்பதை இந்தப்பக்கங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துக்காட்டியிருக்கிறேன்.  In "On the Rule Of the Road" by A. G. Gardiner, says liberty is not a personal affair only, but a social contract. கட்டற்ற சுதந்திரம் என்பதே கவைக்குதவாத வெறும் பேச்சு. அதுவும் போக மாற்றுக்கருத்து, எதிர்ப்புக் குரல்கள் கண்ணியமான வழிகளில் தான் வருகிறதா? இல்லை என்றால் அந்த எதிர்ப்புக்குரல், மாற்றுக்கருத்துக்கு மரியாதை ஏது?      


சேகர் குப்தா காமெடிகளைப் பார்த்து நாட்கள் ஆகி விட்டது இல்லையா? பிரிட்டிஷ் தேர்தல் முடிவுகளோடு கொஞ்சம் ராகுல் காண்டியை ஒப்பிட்டு, தலைவராக வெற்றியா? தோல்வியா? என்று ஆராய்ந்து பார்க்கிறார்.  காஷ்மீரில் ராணுவத்தின் மீது கல்லெறிந்து விட்டு ஓடிப்போகிற விடலைகள் மாதிரி ட்வீட்டரில் மட்டுமே பெரும்பாலான தருணங்களில் அரசியல் நடத்துகிற ஒரு விடலை ராகுல் காண்டி! அவ்வளவுதான்!    கட்சித்தலைவர் பொறுப்பைத் தட்டிக் கழித்து ஓடிப் போனவரை சோனியா வேண்டுமானால் மீண்டும் கட்சித் தலைவராக்கிப்பார்க்க ஆசைப்படலாம். ஆனால் தேசம் இந்தக் கோமாளியை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறதா என்ன!? வீடியோ 15 நிமிடம். 

ஜாவேத் அக்தர்! ஹிந்தித் திரைப்படங்களில் பாட்டு எழுதுகிறவர்! ட்வீட்டரில் சட்டம் போதிக்கிறார். சும்மா விட்டுவிடுவார்களா என்ன? ஒரு ஐபிஎஸ் அதிகாரி எதிர்க் கேள்வி ஒன்றை எழுப்புகிறார்.

இதைப் பதிவிடுகிறவரை ஜாவேத் அக்தரிடமிருந்து, ஆதரவாளர்களிடமிருந்து  பதில் எதையும் காணோம்! இன்றைக்கு இதே  ரீதியில் உச்சநீதிமன்றத்தில் இந்திரா ஜெயசிங் என்ற வழக்கறிஞர் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் சார்பில் வாதாடிக் கொண்டு இருக்கிறார். நீதிமன்றம் என்ன சொல்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். 

இன்றைக்கு இசுடாலின் காமெடி  என்னவென்பதைப் பார்க்காமல் பதிவை முடிப்பதா? Never! 


மதன் ரவிச்சந்திரன் ட்வீட்டரில் லந்து அடிக்கிறார்!

மீண்டும் சந்திப்போம்.           
  
          

அந்த ஏழு நிமிடங்களும் பெருமாள் முருகனும் : கருத்துசுதந்திரம் எதுவரை?

ஏன் படிக்கிறோம், எதற்காகப் படிக்கிறோம்  என்ற கேள்வியை முந்தைய பதிவொன்றில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். ஏன், எதற்காக என்பதை விட, எப்படிப் படிக்கிறோம், என்ன படிக்கிறோம், என்ன புரிந்து கொள்கிறோம் என்பது தான் முக்கியமான கேள்வியாக இருக்க வேண்டும் என்ற முத்தாய்ப்போடு அந்தப் பதிவு முடிந்திருந்தது இல்லையா? 

இந்தப் பக்கங்களில், பேசப்படும் புத்தகங்கள், கதைகள் வெறும் வாசிப்பு என்ற பொழுது போக்கு அம்சமாக வைத்து மட்டும் பேச முற்பட்டதில்லை. இலக்கியம், திறனாய்வு, விமரிசனம் என்ற ரீதியில் கூட இந்தப் பக்கங்களில் எழுதியதில்லை. வாசித்த ஒவ்வொரு படைப்பும் என்னுள் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தியது, சிந்தனையை எந்தெந்த திசைகளில் விரிவுபடுத்திக் கொண்டு போனது என்ற ஒரு அம்சத்தை மட்டும் வைத்துக் கொண்டு இங்கே தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்கள் கவனித்திருக்கக் கூடும்.

ஆர் டாகுமென்ட் புத்தகத்தோடு, இன்னும் சில நூல்களுக்கும் ஆர்டர் கொடுத்திருந்ததில், இர்விங் வாலஸ் எழுதிய The Seven Minutes புதினமும் ஒன்று! 

காமம், போர்னோ என்றாலே முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு, அதே நேரம் திருட்டுத் தனமாகப் படிக்கும் இயல்பு இங்கே நிறையப் பேருக்கு இருக்கிறது. அதிகம் தேடப்படும் வார்த்தைகள் என்று காமம், காமக் கதைகள் என்று கூகிளிட்டுப் பார்த்தாலே அந்த இயல்பு புரிந்துவிடும். புத்தகங்களைப் பற்றிப் பேசுகிற இந்தப் பக்கங்களில் கூட அம்மா மகன் உறவுக் கதைகள் என்று குறியீட்டுச் சொல்லை வைத்துப் பதிவுகளைத் தேடுகிற "தேடல்களை" நிறையவே பார்த்திருக்கிறேன். 

ஏழு நிமிடங்கள் என்ற இந்தப் புதினம் கூட, அப்படி போர்னோ என்றழைக்கப்படும் ஒரு கதைப் புத்தகம், அதை விற்பனை செய்த ஒரு கடைக்காரர், அதைப் பதிப்பித்த வெளியீட்டாளர், அவருடைய நண்பரான வழக்கறிஞர், அரசியலில் குதிக்க விரும்பும் ஒரு அரசு வழக்கறிஞர், என்று வரிசையாகப் பாத்திரங்களை அறிமுகம் செய்து கொண்டே ஒரு கைது, ஒரு கற்பழிப்பு, ஒரு மரணம், அதைத் தொடரும் வழக்கில், இந்த ஆபாசப் புத்தகம் முக்கிய குற்றவாளியாக ஆக்கப்படும் விந்தையை, ஒரு கோர்ட் ரூம் ட்ராமாவாக எழுதப் பட்டது தான் இர்விங் வாலஸ் எழுதிய ஏழு நிமிடங்கள்!  

1971 இல் இதைத் திரைப்படமாக்கிய இயக்குனர், கதையின் மைய நீரோட்டத்தை சரியாகப் புரிந்து கொள்ளாததாலோ என்னவோ, வெறும் சொதப்பலாகிப் போனது தனிக் கதை!

கதை என்று பார்க்கப் போனால், வழக்கமான இர்விங் வாலஸ் பாணியிலான ஒன்று தான்! ஒரு மையக் கருவை எடுத்துக் கொண்டு, பாத்திரங்களை வரிசையாக அறிமுகப்படுத்திக் கொண்டே, கதையை நகர்த்திச் செல்லும் கோர்ட் ரூம் டிராமா தான்! 
இப்போது படிக்கும் போது கூட இந்த கோர்ட் ரூம் டிராமா நன்றாகத் தான் இருக்கிறது!

கதை சொல்கிற போதே, ஆசிரியர் சில கேள்விகளை கதா பாத்திரங்களின் வழியாக எழுப்புகிறார், வாசகர்களை யோசிக்க வைக்கிறார் என்ற வகையில் வித்தியாசப்பட்டு நிற்பதாக சில படைப்புக்கள் இருக்குமல்லவா! அந்த வகையில், ஆர் டாகுமென்ட் புதினத்தைத் தொடர்ந்து, இந்த நூலில் எடுத்துக் கொண்ட விஷயம், கருத்து சுதந்திரம்,  இலக்கியங்கள், அதில் ஆபாசம் என்று சமூகத்தால் ஒரு கால கட்டத்தில் நிராகரிக்கப் பட்டு, அப்புறம் ஏற்றுக் கொள்ளப் பட்டவை, எது ஆபாசம், அதை எப்படி, எவர் நிர்ணயிப்பது போன்ற சில கேள்விகள் இந்தப் புத்தகத்தின் மையக் கருவாக இருக்கிறது.

மைகேல் பாரெட், ஒரு திறமையான வழக்கறிஞர். வசதி படைத்த தொழிலதிபரின் மகளைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் தருணம். அந்தத் தொழிலதிபரின் நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ள முடிவும் செய்து, வழக்கறிஞர் ப்ராக்டிசை நிறுத்திக் கொள்ள உத்தேசித்திருக்கும் தருணத்தில் புத்தகப் பதிப்புத் துறையில் இருக்கும் பழைய நண்பரிடம் இருந்து அவருடைய உதவியைக் கேட்டுத் தொலை பேசியில் அழைப்பு வருகிறது.

நண்பர் வெளியிட்ட  ஏழு நிமிடங்கள் என்ற புத்தகத்தை விற்பனை செய்த கடைக்காரரைப் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். பெண்கள் உரிமை பற்றிக் குரல் எழுப்பும் அமைப்பு ஒன்றின் தலைவி கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்தப் புத்தகம் ஆபாசமானது, விற்றது குற்றம் என்ற ரீதியில் கைது நடந்திருக்கிறது.

நண்பரின் வேண்டுகோளைத் தட்ட முடியாமல், அந்த வழக்கை மைகேல் பாரெட் எடுத்துக் கொள்கிறார். டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியிடம் (நம்மூர் பப்ளிக் பிராசிக்யூட்டர் பதவி மாதிரி) பேசி,  குற்றத்தை ஒப்புக் கொள்வதாக ஒரு சமரசம் பேசி, புத்தகக் கடைக்காரரை வெளியில் கொண்டு வந்து விடுவது என்ற யோசனையை முடிவெடுக்கிறார். எல்மோ டங்கன் என்ற டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியும் பாரெட்டின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு பரிசீலிப்பதாக உறுதி அளிக்கிறார். ஆனால், அடுத்தடுத்து நிகழும் சில சம்பவங்கள் ஒரு சாதாரணமான கைது விவகாரத்தை வேறு வேறு திசையில் வெகு வேகமாக இழுத்துக் கொண்டு போகின்றன.

இன்னொரு தொழிலதிபர், எல்மோ டங்கனை, அரசியலுக்கு கொண்டு வர முடிவு செய்கிறார். எல்மோ டங்கனை அரசியலுக்குக் கொண்டு வருவதற்கு, ஒரு பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கி, வெற்றி வேட்பாளராக அறிமுகம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது, ஒரு இளம்பெண் கற்பழிக்கப் பட்ட நிலையில், மரணமடைகிறாள். அவளைக் கற்பழித்த இளைஞன் காரில், ஏழு நிமிடங்கள் என்ற கதைப் புத்தகம் கிடைக்கிறது. அந்த இளைஞனை அப்படிக் கொடூரமான செயலுக்குத் தூண்டியதே, ஆபாசமான அந்தப் புத்தகம் தான் என்று வழக்கு திசை திரும்புகிறது.

டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியிடம் பேசி, புத்தகம் விற்ற குற்றத்தை ஒப்புக் கொண்டு, மிக லேசான அபராதத்தோடு விடுதலை செய்து விடலாம் என்ற நிலை மாறி, புத்தகம், புத்தகத்தை விற்பனை செய்தவர்  இருவருமே கற்பழிப்பு, கொலைக் குற்றத்தையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. பாரெட்டின் காதலி, அவளுடைய தகப்பனார் இருவரும், பாரெட் தன்னை அந்த வழக்கில் இருந்து விடுவித்துக் கொண்டு, அவர்களுடைய நிறுவனத்தின் வைஸ் ப்ரெசிடென்ட் பொறுப்பை உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். வழக்கறிஞராகக் கடமையா காதலா என்ற கேள்வியோடு, உத்தரவாதமான வருமானம்,செல்வாக்குடன் கூடிய வாய்ப்பை ஏற்றுக் கொள்வதா இல்லை சுதந்திரமாக தொழில் செய்ய முடிவெடுப்பதா என்ற கேள்வியும் எழுகிறது. பாரெட்டின் நண்பர்,ஏழு நிமிடங்கள் என்ற அந்த சர்ச்சைக்குரிய புத்தகத்தைப் பதிப்பித்தவர், தன்னுடைய இக்கட்டான நிலையை எடுத்து சொல்லி, பாரெட்டைத் தவிர வேறு எவருமே, அந்த வழக்கை எடுத்து நடத்துவதில் தனக்கு நம்பிக்கை இல்லை, தனக்காக இந்த வழக்கை எடுத்து நடத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார்.

ஆபாசம், சர்ச்சைக்குரியது, ஒரு இளம்பெண் கொடூரமாகக் கற்பழிக்கப் படத் தூண்டுகோலாக இருந்த அளவுக்கு குற்றம் உள்ளது என்று சொல்லப் படும் "ஏழு நிமிடங்கள்" என்ற அந்தப் புத்தகத்தை மைகேல் பாரெட் படித்துப் பார்க்கிறார். ஒரு இளம் பெண், தான் உடலுறவு கொண்ட  தருணங்களில் உச்சத்தை அடையும் அந்த ஏழு நிமிடங்களைப் பற்றித் தனக்குத் தோன்றும் எண்ணங்களைப் பதிவு செய்கிற விதத்தில் எழுதப் பட்டிருக்கும் அந்தப் புத்தகத்தில், மற்றவர்கள் குதிப்பது போல ஆபாசமானதோ, குற்றத்தைத் தூண்டுவதாகவோ எதுவுமில்லை என்று அபிப்பிராயப் படும் பாரெட், தன்னுடைய காதலி, காத்திருக்கும் செல்வாக்கான உத்தியோகம் இரண்டையும் துறந்து, அந்தப் புத்தகத்துக்காக, கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக, வழக்கை எடுத்து நடத்துவது என்று முடிவு செய்கிறார்.

எல்மோ டங்கனை  அரசியலுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யும் தொழிலதிபரின் செல்வாக்கினால், அரசுத் தரப்புக்கு வலுவான சாட்சியங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. வாடிகனில் இருந்து திருச்சபையின் ஆதரவையும் தெரிவித்து ஒரு பாதிரியார், சாட்சியமளிக்கவும் முன்வருகிறார்.

இப்படி நீதி மன்ற விசாரணை, தன்னுடைய தரப்புக்கு ஆதரவாக சாட்சியங்களை மைகேல் பாரெட் தேடியலைவது என்று மாறிமாறிக் கதை நகர்கிறது. இதற்குமேல் கதையைப் பற்றி எழுதுவது, மொத்தக் கதையையும் இங்கேயே சொல்லி விடுவது போலாகி விடும் என்பதால் இந்த மட்டோடு நிறுத்திக் கொள்வோம்.

கதையின் முடிவில் தெரிய வரும் ஒரு சஸ்பென்ஸ் முடிச்சு மிக சுவாரசியமாகஇருக்கிறது. 

1969 இல் வெளியான இந்தப் புதினத்தை இன்றைக்குப் படிக்கும் போது கொஞ்சம் மெதுவாக நகர்கிற மாதிரி இருக்கிறது என்பதைத் தவிர, இர்விங் வாலசின் கதை சொல்லும் பாணியில் இருக்கும் வழக்கமான சுவாரசியம் இதிலும் இருக்கிறது! கதை சொல்லும் போதே, சில அடிப்படைக் கேள்விகளைப் படிப்பவர்கள் மனதில் விதைத்துக் கொண்டே போகும் இர்விங் வாலசின் உத்தி எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது.

இந்தப் புத்தகத்தை, இப்போது மறுவாசிப்பு செய்த பிறகு எனக்குள் எழுந்த சிந்தனை, இந்தக் கதையைப் பற்றியது மட்டுமே அல்ல! ஆபாச எழுத்து, கிளர்ந்தெழச் செய்யும் எழுத்து, கலகத்தை விதைக்கும் எழுத்து என்றெல்லாம் குற்றம் சொல்கிறோமே, அதை எல்லாம்  எதை வைத்து வரையறை செய்வது? கருத்து சுதந்திரம் 
என்றெல்லாம் சொல்கிறோமே அது எது வரை? அடிப்படை உரிமைகள் பற்றிப் பேசுகிறோமே அதற்கு அர்த்தம் என்ன? ஏதோ ஒரு சட்டப் புத்தகத்தில் அல்லது அரசியல் சாசனத்தில் எழுதி வைத்து விடுவதாலேயே நமக்கு அளிக்கப்பட்டு விட்டதாக அர்த்தமாகி விடுமா, அல்லது நாம் தான் அவைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா?

ஆர் டாகுமென்ட் புதினத்தைப் படித்து முடித்த 
கையோடு  இதைப் படித்ததால் மட்டுமே இந்தப் புத்தகம் எனக்குள் இப்படிப்பட்ட யோசனைகளைக் கிளப்பியதா அல்லது தன்னளவிலேயே இந்தப் புத்தகம் இந்தக் கேள்விகளை எனக்குள் எழுப்பியதா?

The Seven Minutes! 
இந்தப் புத்தகம், பெங்களூரு வாசன்  பப்ளிகேஷன்ஸ் வெளியீடாக, இந்தியப்பதிப்பிலேயே தற்சமயம் கிடைக்கிறது..என்று இந்தப் பக்கங்களில்  எழுதி ஐந்து வருடங்களுக்கும் மேலாகி விட்டது. ஆனால் சில புத்தகங்களும், கலைப்படைப்புக்களும் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக் கொள்வது இன்னமும் தொடர்கதையாகத்தான் இருக்கிறது.

பெருமாள் முருகன் எழுதி 2010 இல் வெளியாகி இப்போது பெருத்த சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் மாதொருபாகன் நூலைக்குறித்து நடந்த ஆர்டிஓ விசாரணையைத் தொட்டு மணற்கேணி வலைப்பதிவரும் வழக்கறிஞருமாகிய திரு பிரபு ராஜதுரை முகநூலில் ஒரு கருத்தை, ஒரு வழக்கின் தீர்ப்பைத்தொட்டு சுருக்கமாக இப்படி எழுதியிருக்கிறார் 

அவர் சுட்டிக் காட்டியிருக்கும் தீர்ப்பு விவரம் இங்கே  தீர்ப்பின் 50வது பாராவை முக்கியமானதாக மேற்கோள் காட்டப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்.அந்தப் பகுதி மட்டும் உடனடி வாசிப்புக்காக இங்கே 
50. Krishna Iyer, J., speaking for the Court in Raj Kapoor v. State , dealing with a pro bono publico prosecution against the producer, actors and others connected with a film called "Satyam, Shivam, Sundaram" on the ground of prurience, moral depravity and shocking erosion of public decency held that the censor certificate is a relevant material, important in its impact, though not infallible in its verdict and observed as under:

...Art, morals and law's manacles on aesthetics are a sensitive subject where jurisprudence meets other social sciences and never goes alone to bark and bite because State-made strait-jacket is an inhibitive prescription for a free country unless enlightened society actively participates in the administration of justice to aesthetics.

...The world's greatest paintings, sculptures, songs and dances, India's lustrous heritage, the Konarks and Khajurahos, lofty epics, luscious in patches, may be asphyxiated by law, if prudes and prigs and State moralists prescribe paradigms and prescribe heterodoxies.

நம் சமூக பெண்களை அவமானப்படுத்தி விட்டான் எனும் கொச்சையான அவப்பெயர் அவர் மீது சுமப்பத்தபடும் போது கிராமியச் சூழலில் அது தரும் நெருக்கடி கடுமையானது. தொடர்ச்சியான போராட்டங்கள், கடை அடைப்பு அச்சுறுத்தல் எனும் நிலை வரும் போது மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்கிறது. அங்கு அவர் அச்சுறுத்தப்படுகிறார். மன்னிப்பு கேட்கிறார். பிறகு மன்னிப்பு கேட்ட கூச்சமும் சங்கடமும் அவமானமும் வரை இந்த அறிக்கையை எழுத வைக்கிறது"" என்று பெருமாள் முருகன் தரப்பை இந்த வலைப்பக்கம் எடுத்துச் சொல்கிறது.

கொங்கு வெள்ளாளர்கள் என்று மட்டுமில்லை, பொதுவாகவே விவசாயபின்புலம் கொண்ட சமுதாயம் எதுவானாலும் சாதிப்பிடிமானம் அதிகம் இருக்கும் நாடு இது. ஒரு கல்லூரிப் பேராசிரியராக, அந்தப்பகுதியிலேயே பிறந்து வளர்ந்ததாக, அந்த சமூகத்தை அறிந்ததாகச்  சொல்லிக் கொள்கிற ஒருவர் இந்த அடிப்படையான விவரம் கூடத் தெரியாத அப்பாவியாக இப்போது சித்தரிக்கப்படுவது உண்மையிலேயே நம்பத்தகுந்ததுதானா? மாயவரத்தான் கி.ரமேஷ் குமார் தன்னுடைய முகநூல் பக்கத்தில் சொல்லியிருப்பது இது  
எனக்கென்னவோ இந்தப் பிரச்னை பரபரப்புக்காக வேண்டுமென்றே கிளப்பி விடப்பட்டது போல தான் தெரிகிறது.

மதுரையில் சகாயம் மாவட்ட ஆட்சியராக இருந்த சமயத்தில், திடீரென பெருமாள் முருகன் சகாயம் குறித்து தனது வலைப்பதிவில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ஒரு புத்தகம் வெளியிட உள்ளதாகவும், அது குறித்து அவருடைய முன்னுரை தேவை என்றும் கேட்டிருந்தார்.

ஆனால் அந்தக் கட்டுரைகளில் முக்கால்வாசிக்கு மேல் எல்லாமே செவி வழிச் செய்திகள் தான். அவற்றில் கூட நிறைய சம்பவங்கள் கப்ஸா.

அதைப் படித்து விட்டு, இந்த மாதிரி இல்லாத சம்பவங்களை வெளியிடச் செய்தால் சரியல்லவே என்று சகாயம் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் “எழுத்தாளனுக்கு தன் காதில் கேட்ட, கண்ணில் பட்ட அனைத்தையும் எழுத முழு உரிமை உண்டு” என்று சொல்லி விட்டு, சகாயம் அவர்களின் அனுமதி இதற்கு தேவையில்லை என்று சொல்மிக முக்கியமான லி புத்தகம் வெளியிட சில பதிப்பகங்களையும் அணுகினார் பெருமாள் முருகன்மகிக முக்கியமான கேள்வியாக .
என்ன காரணத்தினாலோ அப்போது புத்தகம் வெளியிடப்படவில்லை.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னதாக நிகழ்ந்த சம்பவங்கள் என்பதிலேயே இப்படிப்பட்ட கதை என்றால் 50, 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்று ‘கதை’ எழுதிய நாவலில் சொல்லவா வேண்டும்?

எழுத்தாளர் என்பதற்காக எது வேண்டுமானாலும் எழுதி விடலாமா?

எழுதுவதற்கு பெருமாள் முருகன், ஏச்சும் பேச்சும் வாங்குவதற்கு பெருமாள் முருகன், போராடுவதற்கு கருத்துரிமைவாதிகள். கல்லா கட்ட கண்ணனும் காலச்சுவடும். தேசமே தீப்பிடித்து எரிந்தாலும் சாம்பலை விற்று சம்பாத்தியம் நடத்து என்கிற கவிதை வரி கண்ணனுக்கும் காலச்சுவடுக்கும் மிகச்சரியாய் மறுபடியும் பொருந்தி நிற்கிறது. காலச்சுவடை சுருக்கி காசு என்றும், அது காலச்சுவடு அல்ல காலச்செவிடு என்றும் இலக்கிய வட்டாரத்தில் புழங்கும் பகடிகள் உண்மைதான் என்பதும் மறுபடி நிரூபணமாகியுள்ளது. என்று பொங்குகிறார் ஆதவன் தீட்சண்யா 

இப்போதும் கூட  மிக முக்கியமான கேள்வியாக நிற்பது கருத்து சுதந்திரம், எழுத்தாளன், கலைஞன் என்ற போர்வையில் என்ன வேண்டுமானாலும் எழுதிவிடலாமா?


In "On the Rule Of the Road" by A. G. Gardiner, says liberty is not a personal affair only, but a social contract.

we cannot simply think “I have liberty, and therefore I may do whatever I want.”  We have to realize that there are times when our actions can take away liberty from other people. 
Because our actions can take away liberty from other people, we have to have a social contract.  We have to agree to give up some of our liberty in order to keep most of that liberty.  Earlier in the essay, Gardiner writes about what would happen if we did not give up our liberty when told to do so by a traffic cop (or, in modern times, a stop light).  If everyone tried to keep their liberty to drive whenever and wherever they wanted, no one would have any liberty to drive at all.  The intersections would be jammed as everyone tried to drive at once.  It would be chaos.
Therefore, we cannot simply think that liberty means that we can do whatever we want.  Instead, we have to make a social contract with other people.  When we do that, we all give up some of our liberties so that everyone can live together in harmony.
கொஞ்சம் இருதரப்பையும் யோசித்துப் பார்த்து விட்டுக் கருத்துச் சொல்லுங்களேன்!


யாருக்கும் வெட்கம் இல்லை, அட, எனக்கும் வெட்கம் இல்லை அதனால் பதிவு எழுதுகிறேன்!

சூரியனை மறைத்த கிரகணமும் முடிந்தது!
சுமுகத்தைக் குலைக்கும் கிரகணம் முடிவது எப்போது?

ஒரு வலைக்குழுவில், திரு எம்.செல்வமுரளி, ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் கம்ப்யூட்டர் இதழில், ப்ளாக்எழுதுவது எப்படி என்று சொல்லியிருந்த தகவல்களில், "அந்த வலைப்பூ தகவலில்
* கருத்துச்சுதந்திரம் மிக்க ஒர் இடம் வலைப்பூ* என்ற வார்த்தை மட்டுமே என் மனதில் ஆழப்பதிந்த விஷயம். உண்மையில் ஒரு வலைப்பூவில் நாம் நமக்கு தெரிந்ததையும், தெரியப்படுத்த விரும்பும் தகவலையும் தரலாம் என்றாலும் கருத்துச்சுதந்திரம் என்றால் என்ன என்பதை எடுத்துச் சொல்லுங்களேன். " இது அவருடைய கேள்வி.

கருத்துச் சுதந்திரம், கட்டற்ற சுதந்திரம் என்பது கட்டவிழ்த்துவிட்ட
காளையைப் போல அடுத்தவன் வயலில் மேயப் போவது போல என்று இன்றையசூழலில் ஆகிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. சுதந்திரம் என்பது சுயகட்டுப்பாட்டுடன் கூடியது, என்ன வேண்டுமானாலும் எழுதுவேன், பேசுவேன்,செய்வேன் என்பது அல்ல.

On the rule of the road என்ற ஒரு கட்டுரை, கல்லூரிக்குள் நுழைந்தபோது பாடமாகப் படித்தது, மனதில் தங்கி விட்ட கருத்து, அந்தக் கட்டுரையிலே ஆரம்பத்தில் ஒரு பெண்மணி நட்ட நடு வீதியில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நடந்துபோய்க் கொண்டிருப்பார். வண்டி ஓட்டிக் கொண்டு வருகிறவர்கள் அல்லவா கவலைப்பட வேண்டும்!

நடப்பதற்கு சாலையின் இரு பக்கங்களிலும் நடை பாதை இருப்பதைக் காட்டி அதில் நடக்கலாமே என்று ஒருவர் நல்லெண்ணத்தோடு சொல்கிறார், உடனே அந்தப் பெண்மணி சொல்வார், "எதற்காக? நமக்குத் தான் சுதந்திரம் கிடைத்து விட்டதே!"

அதாவது, சுதந்திரம் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வது!

கருத்துச் சுதந்திரம் என்பது, இப்படி எல்லைகளே இல்லை என்று சொல்வதற்காக
இல்லை. நாமாக உணர வேண்டும். ஒரு பொது விதிக்கு உட்பட்டு நடந்து கொண்டால் எவர்க்கும் பிரச்சினை இல்லை. இணையத்தில், குறிப்பாகத் தமிழ்
வலைப்பதிவர்களிடத்தில், இந்த ஒரு அம்சம் மிகவும் குறைந்து காணப்படுகிறது
என்பதே என் வருத்தம். அந்த வருத்தம் தீர, ஒரு பழைய, ஆனால் இந்த
விஷயத்திற்குப் பொருத்தமான ஒரு கதையைப் பார்ப்போம்.

"குருஷேவ் ஒரு முட்டாள்", "குருஷேவ் ஒரு அடிமுட்டாள்" என்று மாஸ்கோ நகர
வீதியில் ஒருவன் கத்திக் கொண்டே ஓடினான். காவலர்கள் அவனைக் கைது செய்து, நீதி மன்றத்தில் ஆஜர் செய்தார்கள்.

நீதிபதி, விசாரித்துவிட்டுத் தீர்ப்புச் சொன்னார்:
"இந்த நபருக்கு ஏழாண்டுகள் கடும் உழைப்பு தண்டனை தருகிறேன், குருஷேவ் ஒரு முட்டாள் என்று சொன்னதற்காக அல்ல, அரசாங்க ரகசியத்தை, இப்படி நடுத்தெருவில் சொன்னதற்காக"

பழைய திரைப்படம் ஒன்றில் என் எஸ் கிருஷ்ணனும், மதுரமும் சேர்ந்து கலக்கிய "ராஜா காது கழுதைக் காது...ராஜா காது கழுதைக் காது.. " காட்சி நினைவுக்கு வருகிறதா? ராஜா காது கழுதைக் காதாகஇருக்கலாம்,அதை அப்படியே சொல்லி விட முடியுமா? இங்கே ராஜா இடத்தில், நம்மையே வைத்து யோசித்துப் பாருங்கள்!

பொருத்தமே இல்லாமல், இந்தக் குழுமத்தில், ஒரு நண்பர் ஒரு தகவலின் மீது தன சொந்த வெறுப்பைக் கொட்டி எழுதியது போல, வேறு 'அரசாங்க ரகசியத்தை' எழுதி விட முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன என்பது, கொஞ்சமாவது புரிய வரும். இது அங்கே அவருக்கு சொன்ன பதில். இந்தக் கருத்துச் சுதந்திரம், கட்டற்ற சுதந்திரம் என்றெல்லாம் பேசிக் கொண்டேஇருக்கிறோமே இதை நடைமுறை வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எப்படிஅணுகுகிறோம் என்ற யோசனை கொஞ்சம் பலமாகவே இருந்தது.


என்ன நினைப்போடு எழுதியிருந்தாலும் சரி, சில வலைப் பதிவுகள்எழுதியவர்களுடைய எதிர்பார்ப்பையும் மீறி, படிப்பவர் மனத்தில் ஒருதாக்கத்தையும், ஏதாவது செய்ய் வேண்டும், இதற்குப் பதில் சொல்ல வேண்டும்என்ற தவிப்பையும் உண்டு பண்ணுவதை அனுபவித்திருக்கிறீர்களா? அப்படிச்சில பதிவுகளைக் கடந்த சில நாட்களாகப் படித்துக் கொண்டும், பதிலையோசித்துக் கொண்டும் இருந்ததன் எதிரொலி தான் இந்தப் பதிவு.

திரும்பிப்பார்க்கிறேன் -கிணறுவெட்ட பூதம் என்ற தலைப்பில், சென்னைசூளைமேடில் உள்ள ஒரு மேன்ஷனில் கடந்த ஒன்பது மாதங்களாகக் குடிநீரில், கழிவுநீரும் கலந்து வருவதைத் தட்டிக் கேட்டதற்காகத் தானும் தன் நண்பர்களும் அனுபவித்து வரும் கொடுமையான சூழலை, நடத்திவரும் போராட்டத்தை, திரு.ரமேஷ்
சதாசிவம் எழுதியிருந்ததைப் படித்த பிறகு, நாமெல்லாம் மனிதர்கள் தானா, மனிதர்களுக்கு நடுவில் தான் வாழ்கிறோமா என்றெல்லாம் ஐயப்பட வேண்டியதாகிவிட்டது. சங்கம் வைத்துக் கொடி பிடித்துக் கோஷம் எழுப்பாமலேயே, இணையம் வழியாக, திரு ரமேஷ் சதாசிவம் ஒரு புதுமையான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழக முதல்வர் கவனத்திற்கும் அவரது இணையப் பக்கங்கள் வழியாக இந்த செய்தி கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. ஜுனியர் விகடன் செய்தி வெளியிட்டிருக்கிறது. இணையத்தில் நிறையப் பதிவர்கள், இந்தப்பக்கங்கள் உட்பட, இந்த செய்தியை முடிந்தவரை பரப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனாலும், இந்த நிமிடம் வரை, அரசு இயந்திரம் விழித்துக் கொண்டதாகவோ, ஒரு நியாயமான தீர்வு பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைத்த மாதிரித் தெரியவில்லை.

ஆகஸ்ட் பதினைந்து நெருங்கிக் கொண்டிருக்கிறது. கோட்டையில் மூவர்ணக் கொடி பறக்கும். எல்லாத் தொலைக்காட்சிகளிலும், 'சுதந்திரத்திருநாளை முன்னிட்டு சிறப்புத் திரைப்படம், திரைப்பட நடிகர் பெட்டி' எல்லாம் வரும்- சுதந்திரத் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பாருங்கள், சுதந்திரத்தைப் போற்றுங்கள்' என்று விளம்பரம் வேறு! நமக்கும் அது தானே வேண்டும்!

எவனுக்கு, எங்கே, என்ன நடந்தால் நமக்கு என்ன வந்தது?

இந்த யோசனையோடு இருந்தவனை, இன்னொரு பதிவு வேறு விதமாக அசைத்துப் பார்த்தது.அதிகாரத்தின் பீடங்கள் என்று தலைப்பிட்டு, பாண்டியன் கிராம வங்கியில் இரு ஊழியர்களை, வங்கியில் நடக்கும் சில விஷயங்களை Bank Workers Unity என்ற பத்திரிகையில் எழுதியதற்காகத தற்காலிகப் பணி நீக்கம் செய்திருப்பதைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார் திரு. மாதவராஜ் . அந்த இருவரில் ஒருவர் இளைஞர், அன்டோ கால்பட் என்பது பெயர் கொக்கரகோ என்ற பெயரில் வலைப்பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். இளமையின் ஆவேசமும், பொறுமையின்மையும் எழுத்தில் நன்றாகவே வெளிப்படுகிறது. அவருடைய, இந்த வார்த்தைகளில், ஒரு சிறு பகுதி இது.

"எனக்கு மாலை அணிவித்து பாராட்டு கோஷங்கள் எழுப்பியதை பார்த்த எங்கள் கிளை வாடிக்கையாளர்களில் ஒருவர் ஏதோ எனக்கு ’பதவிஉயர்வு’ கிடைத்துள்ளது என நினைத்து விசாரித்தார்.அப்போது தோழர்கள் சுப்பிரமணியனும்,அருண் பிரகாஷ் சிங்கும் எனக்கு ’சஸ்பன்ஷன் ஆர்டர்’ வழங்கப்படுவதாக தெரிவித்தபோது விசாரித்தவர் மட்டுமல்லாமல் அருகிலிருந்த அத்துணை வாடிக்கையாளர்களும் அதிர்ந்தே போய்விட்டார்கள்.

பணி நீக்கம், போராட்டம் என்று பாண்டியன் கிராம வங்கியில் ஆரம்பமாகியிருக்கிறது. இத்தனைக்கும், சில பொதுத்துறை வங்கிகளைப் போல ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிற வங்கியில்லை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. 'மாமன் ஆடிச்சாரோ மல்லிகைப் பூச் செண்டாலே' என்று தாலாட்டுக் கேட்டிருப்பீர்களே, அந்த மாதிரி கொஞ்சம் நிதானமான அணுகுமுறை கொண்ட வங்கி, அது நிர்வகிக்கும் ஒரு கிராம வங்கியிலே இப்படி என்றால்....! நல்லது நடக்கும், வருத்தங்கள் தீரும் என்று நம்புவோம்!

பணிவிதிகளில் வலைப்பதிவில் எழுதுவது, வேறு ஊடகங்களில், பணிபுரியும் நிறுவனத்தைப் பற்றி எழுதுவது பற்றித் தெளிவான வரையறைகள் இந்தியாவில் இல்லை. நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, அதிலே வேலை செய்யும் ஊழியர்களுக்கும் கூட இந்த விஷயத்தில் இதில் எந்தத் தெளிவும் இல்லாத நிலையில், தெளிவு படுத்திக்கொள்வது நிறுவனங்கள்,தொழிற் சங்கங்களுடைய கடமை மட்டுமல்ல, அவசியமும் கூட.

பொறுப்புணர்வும், புரிந்துகொள்ளுதலும் ஒன்று சேரும்போது தான், உண்மையான தீர்வு கிடைக்கும்.

அதுவரை, ஊருக்கும் வெட்கமில்லை, இந்த உலகுக்கும் வெட்கமில்லை! யாருக்கும் வெட்கம் இல்லை, அட, எனக்கும் கூடவெட்கம் இல்லை அதனால் பதிவு எழுதுகிறேன்!

வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! பதில் எங்கே?

ம்மூரில் ஊடகங்கள் பொய் சொல்வதையே முழுநேரப் பிழைப்பாக வைத்திருப்பது அடிக்கடி அம்பலப்பட்டுக் கொண்டே வந்தாலும் அதற்குமேல் ஒன்றுமே நடப்பது இல்லையே! ஏன்? என்று எப்போதாவது யோசித்துப் பார்த்து இருக்கிறீர்களா? நேற்று முன்தினம் எழுதிய இந்தப்பதிவில் முதல் வீடியோ உங்களுக்கு   யோசிக்கக் கொஞ்சம் உதவியாக இருக்கும்! கட்டுப்பாடற்ற, எல்லையற்ற சுதந்திரம் என்று ஒன்று இல்லவே இல்லை என்று இந்தப்பக்கங்களிலேயே பலமுறை AG Gardiner எழுதிய The Rule of the Road கட்டுரையை மேற்கோள் காட்டி மாதொரு பாகன் புத்தக சர்ச்சையின் போதும், அதற்கு முன்னாலும் எழுதியிருக்கிறேன்.

1 நிமிட வீடியோ 

மும்பை உயர்நீதி நீதிமன்றம் சமீபத்தில் கோரேகான் என்ற இடத்தில் வெடித்த கலவரம் குறித்தவழக்கில் குறிப்பிட்டுச் சொன்னது தோல்ஸ்தோய் எழுதிய போரும் அமைதியும்  நாவல் பற்றி அல்ல! உள்ளூர் ஆசாமி ஒருத்தர் எழுதிய War and Peace in Junglemahal என்ற தடைசெய்யப்பட்ட புத்தகத்தைப் பற்றித்தான்  என்று தெளிவாகச் சொன்ன பிறகும் கூட எந்த ஊடகமாவது பொய்ச் செய்தி பரப்பியதற்கு தவறுக்கு    வருந்துகிறோம் என்று திருத்தம் வெளியிட்டார்களா? பார்த்த நினைவாவது இருக்கிறதா? 


ந்த 32 நிமிட வீடியோ விவாதம் காஷ்மீரில் இருந்து கோரேகான் வரை பொய்ச்செய்திகளில் இந்தியா கேவலப் படுத்தப்படுகிறதா என்ற கேள்வியை முன்வைத்து! ஊடகம் தனக்கேற்ற சாயத்தைத் தானே தேர்ந்தெடுக்கும் என்பதை நினைவு வைத்துக் கொண்டு விவாதத்தைப் பாருங்கள்!   

மீண்டும் ரங்கராஜ் பாண்டே! வீடியோவில்  தன்னுடைய சிங்கப்பூர் அனுபவத்தைச் சொல்கிற பகுதியை மீண்டும் ஒரு முறை கேட்டுவிட்டு, உங்களுடைய கருத்தை மனம் திறந்து  பகிர முடியுமா? சுதந்திரம் உட்பட எதுவுமே இலவசமோ கட்டுப்பாடுகள் அற்றதோ இல்லை! 


திருமாவளவனும் கூட, நான் உண்மையைச் சொன்னாலும் ஊடகங்கள் வெளியிடுவதில்லையே என்று குறைப் பட்டுக் கொளகிறார்! இங்கே கிடைத்தது கிடைத்தபடி வெளியிட்டாயிற்று. திருமாவளவன் உண்மைதான் சொன்னாரா, கொஞ்சம் கூட்டிக்குறைத்துச் சொன்னாரா என்று நீங்கள்தான் இந்தச்  செய்தியின், சொல்பவரின், நம்பகத் தன்மை பற்றி முடிவு செய்துகொள்ளவேண்டும்! செய்தியின் வேரைப்பிடித்து, உண்மையைப் புரிந்து கொள்ள வேறெப்படி முயற்சி செய்வதாம்? வீடியோ 13 நிமிடம்.     
    

முன்பெல்லாம் காங்கிரசுக்குள் நடக்கிற வேட்டி கிழிப்பு முதலான விஷயங்களை ஊடகங்கள் பெருந்தன்மையாக வெளியிடாமல் இருந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறதோ? முன்னமிருந்த மறைமுகமான Carrot & Stick இப்போது இல்லை  என்பதாலா? அல்லது நிஜமாகவே திருந்தி வருகிறார்களா? உங்களுடைய ஊகம், பார்வை என்ன?  

  
ந்தச் செய்தி குறித்து நான் ஒன்றும் சொல்வதாயில்லை! நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல! XXXX படிதாண்டாப் பத்தினியுமல்ல என்று கம்பரசம் எழுதிய சி என் அண்ணாதுரை என்பவரை,  அவரை அடியொற்றி அரசியல் செய்பவர்களைப் பற்றி எல்லோருக்கும் தெரியும்! இவர் நேருவை இந்தவிஷயத்தில் மட்டும் பின்பற்றியிருக்கிறார் என்ற மாதிரி   சொல்கிறார்கள். திருப்பூர் ஜோதிஜி இதற்கென்ன சொல்வாரோ? இதற்குமேல் எழுதினால் எங்கள் Blog ஸ்ரீராம் வந்து ஒட்டுமொத்தப் பதிவையுமே மஞ்சப்பத்திரிகை ரகத்தில் சேர்த்துவிடுவார்!😀😂🙏🙏   

மீண்டும் சந்திப்போம்.