பிஜேபியின் தேசிய செயலாளர் H ராஜா சற்றுக்கூடத் தயங்காமல் தன்னுடைய கருத்துக்களைப் பூசி மெழுகாமல் சொல்லக் கூடியவர் என்பதே இங்குள்ள அரசியல்வாதிகள் பலருக்கும் அலெர்ஜியாக இருக்கும் விஷயம். அவர் சொல்கிற விஷயத்தில் தவறு கண்டு பிடிக்க முடியாதவர்கள், அவரை வசைச்சொற்களால் எதிர் கொள்கிறார்கள் என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான்!
இலங்கைத்தமிழருக்கு ஆதரவு என்பதையே ஒரு பெரிய வியாபாரமாகச் செய்து கொண்டிருக்கிற கட்சிகளோ மதசார்பற்ற மு,போக்கு கூட்டணியில் இருக்கிற கட்சிகளோ இதுவரை வாயைத் திறந்து கண்டனக் குரலை எழுப்பவில்லை.அவர்களுடைய கள்ள மௌனத்துக்குப் பின்னாலிருக்கிற அரசியல், உள்நோக்கம் என்னவென்று புரிந்தவர்களுக்கு ஆச்சரியமான செய்தியொன்றும் இல்லை. புரியாதவர்கள் எஸ்ரா சற்குணம் மாதிரி அரசியல் செய்யும் பாதிரிகள் பேச்சைக்கேட்டு திருப்தி அடையுங்கள்! எஸ்ரா சாபம் கொடுக்கிறார்! திருமாவுக்கு சர்டிபிகேட்டும் கொடுக்கிறார்.
சீமாறு பேசுகிற தமிழ்த் தேசியம் கொஞ்சம் விசித்திரமான விஷயம்! குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்கிற கதை என்று ஏதோ சொல்வார்கள், அதுமாதிரித் தானா?
ஆளுக்கொருதிசையில் செய்வதற்குப் பெயர் அரசியலா? இதைத் தான் எதிர்க்கட்சிகள் செய்கின்றன என்றால், பிஜேபியைக் குறைசொல்லிப் பயன் என்ன?
சதீஷ் ஆசார்யா என்ன நினைத்து இதை வரைந்தாரோ தெரியாது! ஆனால் இந்தத் தேர்தலில் காங்கிரசும் கூட்டாளிகளும் ரொம்பவுமே தப்புக்கணக்குப் போட ஆரம்பித்திருக்கிறார்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
வயநாடு ராகுல் காண்டியால் அகில இந்திய கவனம் பெற்றிருக்கிறது என்றா நினைக்கிறீர்கள்? செய்தியை இங்கே முழுதாகப் படித்துவிட்டு அப்புறம் முடிவு செய்து கொள்ளுங்கள்!

