Showing posts with label ஊர்வம்பு. Show all posts
Showing posts with label ஊர்வம்பு. Show all posts

#ஊர்வம்பு ஒரு பிரிட்டிஷ் "கோமகனின் காதல்" ஒரு புத்தகம்!

பொதுவாக காதல் திருமணங்கள் என்றாலே கூடவே சர்ச்சைகளும் சேர்ந்தே வரும்! ராஜகுடும்பத்துக் காதல் என்றால்? அதுவும் தலைக்கனம் பெருத்த பிரிட்டிஷ் அரச குடும்பத்துக் காதல் என்றால் தனியாகக் கேட்கவே வேண்டாம்! பிரிட்டிஷ் ராணி எலிசபெத்தின் பேரன், டயானாவின் இரண்டாவது மகன் ஹாரி ஒரு அமெரிக்க டிவி நடிகையைத் திருமணம் செய்து கொண்டதில் ராஜகுடும்பத்தில் ஏக சலசலப்பு! அதற்கு நிறையக் காரணங்கள்! சமீபத்தில் ஹாரி - மேகன் தம்பதியினர் அரச குடும்பத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்ததில் இருந்து பிரிட்டிஷ் ஊடகங்களின் ஹாட் டாபிக்காக இந்தத் தம்பதிகளைச் சீண்டுவது இருக்கிறதென்றால் என்ன சொல்வீர்கள்?

   வீடியோ 26 நிமிடம் 
பழைய கதையை ரீவைண்ட் 
செய்துபார்ப்பதற்காக 

மேகன் மார்க்கலை நக்கலடிக்கிற விதமாக பிரிட்டிஷ் ஊடகங்கள் இந்தத் தம்பதி விவதாரங்களை #Megxit என்றே குறிப்பிடுவது கொஞ்சம் அதீதமாகத் தெரிகிறது இல்லையா? ஆனால்  அரசகுடும்பத்தைத் தங்களுடைய அடையாளமாகவும் வரலாற்றுப்பெருமிதமாகவும் நினைக்கிற ஒருபகுதி பிரிட்டிஷ் மக்களுடைய மன வக்கிரம் அப்படிப்பட்டது. அதற்கேற்ற மாதிரியே விக்டோரியா முதல் இப்போதைய ராணி இரண்டாம் எலிசபெத் வரையில் பழமைவாதத்தைக் கட்டிக் காப்பாற்றி வருவதை முதலில் உடைத்தவர் ஹாரியின் அம்மா (இளவரசி) டயானா! பழம்பெருமைக்காக ஒரு பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்த டயானாவை, காதல் இல்லாமலே கல்யாணம் செய்து கொண்ட இளவரசர் சார்லசுடைய இமேஜை உடைத்த கதை தெரியும் இல்லையா? டயானா அரசகுடும்பத்தின் பெருமையை உடைக்கிற மாதிரி ஒரு இஸ்லாமியரைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வந்து கொண்டிருந்த சமயத்தில், சௌகரியமாக ஒரு கார் விபத்தில் சோலியை முடித்துவிட்டதாகவும் அந்த நாட்களில் பரபரப்பாகவும் பேசப்பட்டதுண்டு. 

ஒருவர் கேட்கிறார்: தாரளமயமாக்கல், உலகமயமாக்கல் என்றால் என்ன?

அதற்குப் பதில் வருகிறது பாருங்கள்!! "இளவரசி டயானாதான்!"

எப்படி என்று மேலும் விளக்கம் கேட்பதற்கு முன்னாலேயே வருகிறது.

"ஒரு பழமைவாதப் பெருமை பேசும் ஆங்கிலேய அரச குடும்பத்துப் பெண், இளவரசி தன்னுடைய எகிப்துக் காதலனோடு, பிரெஞ்சு  சுரங்கப்பாதையில் டச்சு எஞ்சின் பொருத்திய ஜெர்மன் காரை
பெல்ஜியத்தை சேர்ந்த டிரைவர் ஸ்காட்ச் விஸ்கியைக் குடித்துவிட்டு ஓட்ட, இத்தாலியப் பத்திரிகையாளர் துரத்த எங்கேயோ எப்படியோ இடிபட்டு விபத்தாகிக் காயப்பட்டு,  அமெரிக்க டாக்டர் பிரேசிலிய மருந்தைக் கொடுத்து சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் இறந்து போனாரே அது தான்!"

தாராளமயம், உலகமயம் என்பதை இதை விட சுருக்கமாக, பொருத்தமாக சொல்லிவிட முடியாது என்று தான் தோன்றுகிறது.


இதை இந்தப்பக்கங்களில் எழுதி ஒன்பதே கால் வருடங்கள் ஆகிவிட்டன!
 
இங்கே உலகமயம்,தாராளமயம்  என்றால், எங்கோ ஒரு வெளிநாட்டில் பிறந்தவர்  இங்கே வாழ்க்கைப்பட்ட  ஒரே காரணத்தால், அந்தக் குடும்பத்துக்குக் கூஜா தூக்குவதற்கென்றே ஆட்களும் அதிகாரிகளில் சிலரும் இருப்பதால் கட்சி ஆட்சி இரண்டையும் கைப்பற்ற முடிகிறது.அந்தக் குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்தால் அனுபவமே இல்லாத ஒரு சிறுபிள்ளை, வருங்காலப் பிரதமராக சித்தரிக்கப்படுகிறார். இத்தனை தாராளம், உலகமயம் வேறெந்த நாட்டில் நடக்கும்? இதுவும் கூட அப்போதே என்னை நானே கேட்டுக் கொண்டதுதான்! பதில் சொல்லச் சிரமப்படவேண்டாம் தோழமைகளே!😂😉  


ஆனந்த விகடனில் சாவி என்கிற சா.விசுவநாதன் தொடராக எழுதி 1969 இல் மெர்க்குரி புத்தகக் கம்பெனி வெளியீடாக புத்தகமாகவும் வந்ததே, நினைவிருக்கிறதா? இது தொடராக வந்தநாட்களில், வேறு ஊர்வம்பு எதுவும் கிடைக்காமல் இருந்ததனால்   வரவேற்பு இருந்திருக்கும்! முதல் பதிப்பும் அதே காரணத்தால் விற்றிருக்கலாம்! அல்லயன்ஸ் வெளியீடாக மறுபடியும் முன்னூற்றுச் சொச்சம் பக்கங்களில், 131 ரூபாய்க்குக் கிடைக்கிறது. அல்லயன்ஸ் பதிப்பகம் என்ன நம்பிக்கையில் இந்தப்புத்தகத்தை மறுவெளியீடு செய்தார்கள் என்பது இப்போதுகூட எனக்குப் புரியவில்லை!

கதை என்னவோ பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் சுமார் 86 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதைதான்! எட்டாம் எட்வார்ட் என்று பிரிட்டனின் அரசனாக முடிசூட்டிக் கொண்ட ஒரு கோமகன்! இப்போதைய 2ஆம் எலிசபெத் ராணிக்குப் பெரியப்பா. Edward VIII, later Prince Edward, Duke of Windsor (Edward Albert Christian George Andrew Patrick David; 23 June 1894 – 28 May 1972), was King of the United Kingdom and the Dominions of the British Empire, and Emperor of India, from 20 January 1936 until his abdication on 11 December of same year. இம்சை அரசன் 23ஆம் புலிகேசிக்கு சேவகன் துதி பாடுகிறமாதிரி ரொம்பவும் இம்சையாக இல்லை? 

என்ன செய்வது கோமகன் என்றாலே இம்சைதானே! இந்த எட்டாம் எட்வார்டுக்கு ஒரு அமெரிக்கக் காதலி!  இரண்டுமுறை விவாகரத்தான வாலிஸ் சிம்ப்சன் என்கிற பெண்மணியைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியபோது ஒரு அரசியல் சாசனச் சிக்கல், இடியாப்பச் சிக்கலாக எழுந்தது. காரணம் இங்கிலாந்தில் அரசன் அல்லது அரசி தான் இங்கிலாந்து சர்ச்சின் தலைமைப்பொறுப்பையும் வகிப்பவர். விவாகரத்தானாலும் இரு மாஜி கணவர்கள் உயிரோடிருக்கும்போது, அந்தப்பெண் நாட்டின் அரசி ஆகமுடியுமா என்ற சர்ச்சை ஒருபக்கம், நாடாளுமன்ற எதிர்ப்பு இன்னொருபக்கமாக ஒரு இடியாப்பச் சிக்கல்! விதவை மறுவிவாகம் செய்துகொள்வதற்குக்  கூட உலகத்துக்கே நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்ததாகச்  சொல்லிக்கொள்ளும் இங்கிலாந்து சர்சே  தடையாக இருந்தது என்பது திராவிட வரலாறு மட்டும் படித்தவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்! 

எட்டாம் எட்வார்டாக அரசனாகவும் இருந்து கொண்டு காதலியைத் திருமணம் செய்துகொள்ளமுடியாது என்று உறுதியானவுடன், அரசபட்டத்தைத் துறந்து, காதலிக்கு இரண்டாவது கணவனிடமிருந்து விவாகரத்து கிடைக்கிற வரை காத்திருந்து 1937 ஜூனில் திருமணம் செய்து கொண்ட காதலுக்காக அரசையே துறந்த அந்தத் தியாகம்  சாவியை ரொம்பவுமே கவர்ந்து விட்டது போல! காதலுக்கு என்ன மரியாதை என்று வியந்து மயங்கி இதையும் ஒரு தொடராக எழுதினார் என்பது இப்போது திரும்பிப்பார்க்கையில் மிகவும் கேலிக்குரியதாகத் தோன்றுவதில் வியப்பென்ன? அந்த நாட்களில் வேறு ஊர்வம்பு எதுவும் கிடைக்கவில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறதா இல்லையா!?
      
கோமகன் காதல் என்றாலே கொஞ்சம் வில்லங்கம் கொஞ்சம் ஊர்வம்பு என்ற கலவையாக இருப்பது பிரிட்டிஷ் ராஜ குடும்பம் ஒன்றுதான்! உலகில் வேறு பல ராஜகுடும்பங்கள் இருந்தாலும் இந்தக் குடும்பத்தைப் போல, அந்தரங்க விஷயங்கள் ஊடகங்களில் அலசிக் காயப்போட்டது மாதிரி வேறெதுவும் இல்லை!


ஊர்வம்பு பொரணி பேசுவதில் பிரிட்டிஷ் டேப்ளாய்ட்  The Sun இற்கு ஈடு இணை ஏதுமில்லை. இங்கே அரச குடும்பத்தின் ஆஸ்தான புகைப்படக்காரர் ஆர்தர் எட்வார்ட்ஸ், ஹாரி மறுபடியும் அரசகுடும்பத்திற்குத் திரும்பிவிடுவார் என்று அடித்துச் சொல்கிறார்! இதை மேலும் விவரித்துச் சொல்லப்போவதில்லை!

மீண்டும் சந்திப்போம்.     
   

செவ்வாய்க்கிழமைச் சுடுதல்கள்! ஊர்வம்பு, அக்கப்போர், நேரு பிரதாபம்!

ஊர்வம்பு, அக்கப்போர், கவர்ச்சிப்படம்  சதக்சதக் என்று வெட்டுகிற மாதிரிச் செய்திகள்  கிடைக்காத நேரத்தில் மொழிப்பெருமை பேசியே சலூன் டீக்கடைகள் தயவில் வளர்ந்த நாளிதழ் அது. கொஞ்சம் பிரபலமான ஒருத்தர், அவர் உயிரோடிருக்கும்போதே இறந்து விட்டதாகச் செய்தி வெளியிட்டு விட்டது. ந்தப்பிரபலம் அலறியடித்துக் கொண்டு செய்திகளை முந்தித் தருகிற  நாளிதழ் ஆசிரியரைச் சந்தித்து என்ன இந்தமாதிரிச் செய்தி வெளியிட்டு விட்டீர்களே என்று புலம்பினார். நாளிதழ் ஆசிரியர் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் இதற்கேன் பதறுகிறீர்கள், இன்னார் இன்னும் சாகவில்லை என்று செய்தி போட்டு விட்டால் போகிறது என்றாராம்.  


செய்திகளை முந்தித்தருகிறேனென்று இப்படித்தான் உண்மையில் இறந்துபோன ஒரு ஹிந்தித்திரைப்பட நடிகை மனோரமாவை  நம்மூர் மனோரமாவுடன் குழப்பிக் கொண்டு நேற்று ஒரே களேபரம். ஆச்சியே வீடியோவில்  நேரில் வந்து ஐயா, நான் நல்லாத்தான் இருக்கிறேன் ஐயா என்று சொல்ல வைத்து  விட்டார்கள். அவரே சொல்கிற மாதிரி ஏதோ கண்ணேறு பட்டுக் கழிந்து போனதாகத்தான் நினைக்க வேண்டும் போல. 


.
இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். . அண்ணாதுரை,மு கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா  மற்றும் எம்ஜியார் இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும்என். டி. ராமராவ் தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார். 1000 திரைப் படங்களுக்கு மேல் நடித்தவர் என்ற கின்னஸ் சாதனை வேறு.

****** 

வேறெந்தப் பதிவரும் துக்ளக் இதழின் ஆசிரியரும், அரசியல் விமரிசகருமான சோ எஸ்  ராமசாமியைக் குறித்து இந்த அளவுக்குப் பதிவுகள் அதுவும் இத்தனை விரிவாக எழுதியிருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். மொத்தம் 145 பதிவுகள் என்று அவருடைய வலைப்பக்கம் காட்டுகிறது. இந்த வீடியோவைப் பார்த்தபோது துக்ளக் ஆண்டுவிழாவைக் குறித்து உடல் நலம் சரியில்லாத நிலையிலும் 2013 ஜனவரியில் பதிவர் டோண்டு ராகவன்  எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் சென்னைப்பதிவர்கள் நடத்திய Good Touch Bad  Touch பற்றிய விரிவான நிகழ்ச்சித் தொகுப்பை வீட்டுக்குத் திரும்பியவுடனேயே எழுதி வலையேற்றம் செய்த சுறுசுறுப்பு இன்னமும் மனதில் நிற்கிறது. இத்தனைக்கும் அவரை நான் நேரில் சந்தித்தது இல்லை. எழுத்தின் வழியாகவே அறிமுகமான ஒரு நல்ல வலைப்பதிவர். அவர் பதிவுகளை வாசித்திருக்கிறீர்களா?

******   
'காவியத்தலைவன்' படப்பிடிப்பில் இயக்குநர் வசந்தபாலன் மற்றும் நடிகர் சித்தார்த்

ஒரு சினிமா இயக்குநராக தான் செய்த அபத்தங்கள் என்னவென்று இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், ப்ருத்விராஜ், வேதிகா, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் 'காவியத்தலைவன்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. தற்போது தனது அடுத்த படங்கள் குறித்த விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஒரு சினிமா இயக்குநராக தான் செய்த அபத்தங்கள் என்னவெல்லாம் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். அவர் கூறியிருப்பது ஒரு 20 + காரணங்கள் என்று தி இந்து தமிழ் நாளிதழ் எடுத்துப் போட்டிருக்கிறது  

சொன்னதெல்லாம் இருக்கட்டும்! சொல்லாமல் விட்ட முக்கியமான ஒன்று இருக்கிறதே! இவர் இயக்குனர் ஆனதே முதல் பெரிய அபத்தம் என்று யார் அவருக்கு எடுத்துச் சொல்லப்போவதாம்?

nehru_cover 

அபத்தம் என்று சொல்லும்போது இந்திய அரசியலில் அபத்தங்களின் உச்சமாக இருந்த நேருவை மறந்து விட முடியுமோ?

எஜமானருக்கு விசுவாசமான நாய் படம் போட்டு அந்த நாட்களில் ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்  HMV என்று கிராமபோன் ரிக்கார்டுகள் இருந்தது நினைவிருக்கிறதா? எஜமானவிசுவாசம் மிகுந்த ஐசிஎஸ் அதிகாரிகளால் நேருவின் பெண்பித்து, அரசியல் பலவீனங்கள் குறித்த செய்திகள் மிகுந்த கவனத்துடன் மூடி மறைக்கப்பட்டாலும் வெளியே கசிவதை அவர்களால் தடுக்க முடியவில்லை.

மேலே நேருவின் அந்தரங்க உதவியாளராக இருந்தவர் எழுதிய நினைவுகள் முதலில் 1977 இல் வெளியானது பின்பு வெளிப்படையாகத் தடை செய்யப்படாவிட்டாலும், கிடைக்காமல் செய்யப்பட்டது, ஸ்க்ரிப்ட் தளத்தில் இரண்டு பகுதிகளாகவும் அல்லது இங்கே பிடிஎப் ஆகவும் கிடைக்கிறது 

******