ஒரு புதன் கிழமை! வழக்கம்போல அரசியல்!

எப்போதும் போல அரசியல் தான்! ஆனால் வழக்கமான அரசியல் தானா என்ற கேள்வியை, காங்கிரஸ் கட்சிக்குள் நடந்து கொண்டிருக்கிற ராகுல் ராஜினாமா நாடகம் எல்லை மீறிப்போய் ஆன்டி கிளைமேக்ஸை நெருங்கிக் கொண்டே வருவதை சென்ற 29ஆம் தேதி ஒரு ட்வீட்டர் செய்தியில் தெளிவாகச் சொல்லியிருந்தார்! So Congress attempting Kamraj plan 2? But don’t forget, 2019 is not 1963, Rahul Gandhi is not Nehru/Indira, Modi is the opponent not a Morarji, and ‘new’ India is not an ancien regime.. will need more than mass resignations to revive grand old Party IMHO.


ஆக, காங்கிரஸ் ராஜினாமா தமாஷா எங்கே போய்க் கொண்டு இருக்கிறதாம்? செயல்படவே முடியாத வெறும் தலையாட்டிக் பொம்மைகளை காங்கிரஸ் காரிய கமிட்டியில் வைத்துக் கொண்டு யாரிடம் எப்படி என்னவிதமான பொறுப்பை எதிர்பார்ப்பதாம்? சோனியா வாரிசுகளுக்கு ஆமாம்சாமி போடுகிற காக்கைக் கூட்டம், கட்சியை எப்படி வளர்க்க முடியும்? ஆனாலும் கூட ஒரு காங்கிரஸ்கார கபில் சிபல் நடத்துகிற ஒரு சேனலில், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அதிகம் அனுபவித்த பர்க்கா தத் என்ன சொல்கிறார்? எப்படி விவாதிக்கிறார் என்று பார்க்கும்போதே ராஜ்தீப் சர்தேசாய் ட்வீட்டரில் சொன்ன இன்னொரு கமெண்ட் தான் உடனடி கவனத்துக்கு வருகிறது.

  • There is no one but to lead the Cong today , the Puducherry CM tells me.. So now Cong is Rahul, Rahul is Cong and he doesn’t want to lead: bahut confusion hai! என்று சொல்லி முகநூலில் இந்த 4 நிமிட வீடியோவுக்கு லிங்க் கொடுத்திருக்கிறார்!காங்கிரஸ்காரன் சொல்கிறானோ இல்லையோ, கூடிய சீக்கிரமே ஜனங்களே பொங்கியெழுந்து ராகுலிடம் எடத்தைக் காலிபண்ணு! காத்து வரட்டும் என்று சொல்வார்களா என்கிற சுகமான கற்பனை ஒன்று தொடர்ந்து வருகிறதே!


    அதே திரங்கா டிவியில் இன்னொரு சுவாரசியமான விவாதம்! அதே பர்க்கா தத்! கூட விவாதிப்பவர்கள் வேறு. இந்த முறை காஷ்மீர் விவகாரம் மீதானது. காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து தரும் ஆர்டிகிள் 370 தற்காலிகமானதுதான் என்று நாடாளு மன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்ததில் இருந்து காஷ்மீர் பிரச்சினை மீதான ஊடகக் கவனம் திரும்ப ஆரம்பித்திருக்கிறது. அரசியல் ஆர்வம் உள்ளவர்கள், காஷ்மீர் பிரச்சினையைப் புரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் இந்த வீடியோவைப் பார்க்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன். முழுப்பிரச்சினையையும் இந்த வீடியோவில் பார்த்துப் புரிந்து கொள்ளமுடியாது. என்றாலும், விவரங்களைத் தேடித்தெரிந்துகொள்ள து ஒரு தொடக்கமாக இருக்கும்.

    370 ஐ விட ஆர்டிகிள் 35A எவ்வளவு மோசடியானது,
    நீக்கப்பட வேண்டியது என்பதற்கான காரணங்களை கூகிளில் தேடினாலே, நிறைய
    தகவல்கள் கிடைக்கும்!


    காஷ்மீரில் இந்திய அரசு லட்சக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொட்டியும் கூட அங்கே இருந்த அரசியல் சக்திகள் அந்தப்பணம் ஜனங்களுக்குப் போய்விடாமல், தங்கள் பாக்கெட்டுகளில் நிரப்பிக் கொண்டது ஒருபுறம். இன்னொருபுறம் பிரிவினைவாதிகள், பாகிஸ்தானிய கைக் கூலிகளுடன் சேர்ந்து கொண்டு ஒரு தனித்தீவாகவே ஜம்மு காஷ்மீரை வைத்திருந்ததான பழைய காங்கிரஸ் ஆட்சிக் கால கையாலாகாத நிலைமை இனிமேலும் தொடரமுடியாது என்று அமித் ஷாவின் அறிவிப்பு தெளிவுப்படச் சொல்லியிருக்கிறது.

    இது ஒரு நல்ல தொடக்கம். ஆனாலும் செய்யவேண்டியது நிறைய இருக்கிறது. அதைச் செய்வதற்கான உறுதியும், மனோபலமும் பாரதீய ஜனதா கட்சிக்கு இருப்பதற்கு, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஆதரவாக இருக்க வேண்டிய நேரம் இது. குறுகிய கட்சி அரசியல் செய்கிற விஷயமில்லை இது.

    இங்கே கொடுத்திருக்கிற காணொளிகள் மூன்றையும் பார்ப்பதற்கு சுமார் 2 மணிநேரம் தேவைப்படலாம். ஆனாலும் மிக முக்கியமான சப்ஜெக்ட் என்பதால் இது நேர விரையம் இல்லை, விஷயத்தை இரு வேறு கோணத்தில் பார்த்துப் புரிந்துகொள்ள மிக நல்லதொரு தொடக்கம்.

    மீண்டும் சந்திப்போம்
    uote Tweet

    No comments:

    Post a Comment

    ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!