ஆமை புகுந்த வீடும்! காங்கிரஸ்கட்சி இருக்கும் நாடும்!

சமீபநாட்களில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடப்பதைக் கொஞ்சம் கவனித்திருந்தீர்களானால், காங்கிரஸ் எப்படி ஒரு தலை(மை)யில்லாத மு ண்டமாகச் செயல்படுவதில் தவித்துக் கொண்டிருக்கிறது, இனிமேல் எழுந்திருக்க முடியவே முடியாதென்ற நிலைக்குப் போய்விட்டது என்பதை புரிந்து கொண்டிருக்க முடியும்! ராஜ்யசபாவில் பிஜேபிக்குப் பெரும்பான்மை இல்லை என்கிற ஒரேவிஷயத்தைப் வைத்துக்கொண்டு, முந்தின 5 ஆண்டுகளில், பிஜேபி அரசு உத்தேசித்த சட்டவரைவுகளை முட்டுக் கட்டைபோட்டு போட்டுத் தடுத்து வந்தார்கள். 

அந்த மிதப்பைக் சில தினங்களுக்குமுன் RTI Amendment Bill ஐ சோனியாG  கௌரவப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு ராஜ்யசபாவில் தடுத்து  நிறுத்திவிடவேண்டுமென்று துடித்ததை பிஜேபி வெற்றிகரமாக முறியடித்தது. ராஜ்யசபாவில் வாக்கெடுப்பு நடந்ததில் மசோதா    நிறைவேற்றப் பட்டது. Floor Management செய்வதில் பிஜேபி காங்கிரசைவிட அதிகத்திறமைசாலிகள் என்பது சந்தேகம் இல்லாமல் நிரூபிக்கப்பட்ட தருணம் அது.


சரி, அதுதான் போகட்டும்! காங்கிரஸ் அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டார்களா? தங்களுடைய அணியை ஒற்றுமை ஆகச் செயல்பட வைக்க முடிந்ததா? இல்லை! ஆனால் அதற்கும் பிஜேபி மேல்தான் பழிபோடுவார்கள் என்றால் இப்படி ஒரு கட்சியை இன்னமும் விட்டு வைத்திருக்கத்தான் வேண்டுமா என்ற கேள்விக்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்! இந்த  நிமிடச் செய்தியில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்த 44 எம்பிக்களில் காங்கிரஸ் 4, திமுக 1,
மெஹபூபாவின் PDP 2 கம்யூனிஸ்ட் 1 என்று மொத்தக் கதையையும் காட்டிக் கொண்டே காங்கிரசின் ஆனந்த் ஷர்மா பிஜேபியைக் குற்றம் சொல்லித் தங்களுடைய ஏலாமைக்குச் சப்பைக்கட்டுக் கட்டுவதையும்  காண்பிக்கிறார்கள்.


MGR பாட்டைக் கேட்டெல்லாம் சோனியாG காங்கிரஸ்காரன் எவனும் மாறப்போவதில்லை! ஆனால் ஜனங்களாகிய நாம் தூங்கிவிடாமல் இந்தமாதிரி ஆசாமிகளை இனம் கண்டு வைத்துக் கொள்ளவேண்டுமில்லையா?


சேகர் குப்தா கூடக் காங்கிரசின் இன்றைய  நிலைமையைக் கண்டு காறித்துப்பியாக வேண்டிய நேரமும் வந்ததே!   வீடியோ 15 நிமிடம்தான்.

கஃபே காஃபி டே நிறுவனர் VG சித்தார்த் தற்கொலையில் புதிது புதிதாக விவரங்கள் வெளியே வந்துகொண்டே இருக்கின்றன. குமாரசாமி புலம்பியதுபோல செலெக்டிவாக வருமானவரித்துறை செய்த டார்ச்சர் அல்ல.  ஹவாலா முறையில் மணி லாண்டரிங் செய்தது, காங்கிரஸ் புள்ளிக்கு இருந்த தொடர்பு என பலவிஷயங்களை  நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி சொல்கிறது. 

அடி ஆத்தி இது என்ன ?

எவனாவது செத்துட்டா போதுமே, உடனே புனிதர் பட்டத்த தூக்கிட்டு அலைவானுங்களே.
தனியார் வங்கியின் வாராக்கடன் வசூலிக்கும் துறையின் சர்க்கிள் மற்றும் சிக்மங்களூர், கூர்க் காஃபி விற்பனையாளர்கள் சங்கத்தில் இருந்து வரும் செய்திகள் சித்தார்த்தா எவ்வளவு பவர்ஃபுல் மாஃபியாவை நடத்தியிருக்கிறான் என சொல்கிறது.
ஒரு வங்கி முன்னாள் அதிகாரி சொன்னது
நான் 15 வருடத்திற்கு முன் தனியார் வங்கியின் வாராக்கடன் வசூல் செய்யும் துறையின் தலைவராக பணியில் இருந்த போது அசல் கடன் 120 கோடி, மற்றும் வட்டி 9 கோடி மற்றும் சித்தார்த்தாவின் கையெழுத்திட்டு வங்கியில் இருந்து திரும்ப வந்த (Bounced Cheques) 138 காசோலைகள் சார்பாக அளிக்கப்பட்ட சம்மன்களையும் விசாரிக்க என் கீழ் பணிபுரியும் 20 அதிகாரிகளை அவரின் அலுவலுகம் மற்றும் வீட்டிற்கு அனுப்பினேன்.
அந்த அதிகாரிகள் குண்டர்களால் சூழப்பட்டு மிகவும் அச்சுறுத்தப்பட்டனர். இதை தூக்கி சாப்பிடுவது போல சித்தார்த்தா தன்னிடம் உள்ள கைத்துப்பாக்கியை ஒவ்வொரு அதிகாரியின் முகத்திற்கு நேராக பிடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். என் அதிகாரிகள் அனைவரும் 30 வயதுடைய இளைஞர்கள். அதில் சிலருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்திருந்தது. அவர்களை பெரும் போராட்டம் நடத்தி, பெரிய போலீஸ் அதிகாரிகள், சிஆர்பிஎஃப் உதவியோடு மீட்டோம். அந்த கொலை மிரட்டல் வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது.
சிக்மங்களூர் மற்றும் கூர்க் காபி விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறியது
சித்தார்த்தா காபி கொட்டைகள் ஏலம் எடுக்கும் கூட்டத்திற்கு லோக்கல் ரவுடிகள், குண்டர்களோடு வந்தாலே மற்ற காபி விற்பனையாளர்கள் பயந்து நடுங்கி ஒதுங்கி கொள்வார்கள். "என்னை பார்த்தாலே உங்களுக்கு முதுகுதண்டுல வேர்க்கணுமே"?? என கேட்கும் வழக்கம் கொண்டவன் அவன். எத்தனையோ முறை பலவந்தமாக நிறைய காபி விற்பனையாளர்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியே வீசிய சம்பவங்கள் உண்டு. ஒரு தனி காபி மாஃபியா நடத்தி இருக்கிறான் அவன்.
அவனை இன்று என்னமோ, மிக நேர்மையான வியாபாரி என தூக்கி வைத்து கொண்டாடி கொண்டு இருக்கிறார்கள். தொழிலில் எதிரிகளே இல்லாமல் பாத்து கொள்வதற்காக எந்த எல்லைக்கும் போயி, அதாவது குடும்பத்தை கடத்தி மிரட்டுவது, அடித்து கையெழுத்து வாங்குவது, காஃபி தோட்ட அபகரிப்பு என எந்த லெவலுக்கும் போயிருக்கிறான் இந்த பன்னாடை.
இருபதாயிரம் பேருக்கு வேலை குடுத்தான்டா, இல்லேனு சொல்லல. ஆனா இருபதாயிரம் குடும்பத்தை, ஒரு சில குடும்பத்துல தலைமுறையைவே அழிச்சிருக்கான் இந்த ரவுடிபய..
அது தவிர தனியார் வங்கிகளிடம், தனியார் நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனின் அளவை பாருங்கள்.
அவனின் உடல் கிடைத்துள்ளதாக செய்தியும் வீடியோவும் வந்துள்ளது. அஃபீஷியல் ரிப்போர்ட்டுக்காக காத்திருப்போம்.
சரவணபிரசாத் பாலசுப்பிரமணியன்   
  

மீண்டும் சந்திப்போம். 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!