பார்த்ததும் கேட்டதும்! படித்ததில் பிடித்தது!

இந்தப்பக்கங்களில் முந்தைய நாட்களில் தலைமைப் பண்பு, நிறுவனப்பண்புகள், நிர்வாகம் என்று பல விஷயங்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். இப்போதும் கூடக்  காங்கிரசைப் பற்றியும் ராகுல் காண்டியைப் பற்றியும் எழுதிக் கொண்டிருப்பது என்னமோ எனக்கும் அவர்களுக்கும் வாய்க்கால், வரப்பு தகராறு இருப்பதால்தான் என்று எவரும் நம்பமாட்டீர்கள் என்ற நம்பிக்கை தவிர முதலில் சொன்ன தலைமைப் பண்பு, நிறுவனப்பண்பு, நிர்வாகம் இவைகளை  இந்த நபர்களோடு பொருத்திப் பார்த்து இவர்களிடம் இவை அறவே இல்லை என்று எடுத்துச் கொள்வதற்காகத்தான்! இன்று முகநூலில் படித்த ஒரு பழைய சம்பவம் தலைவன், தலைமைப் பண்பு என்றால் என்ன என்பதை அழகாக எடுத்துச் சொல்வதாக இருந்ததைப் பார்த்தேன்.   

Leadership is all about taking decisions. Leaders take decisions which they believe are in the best interests of the country and the organisation they represent. Here, I would like to recall an incident that took place in Amritsar, way back in 1959. At that time, 5 Jat was located in Amritsar and was commanded by an officer of great repute — Colonel Jyoti Mohan Sen (JM to his friends and comrades). It so happened that the unit officers and ladies had gone to the railway station to see off a unit officer and his wife who were proceeding on posting/long course. The son of the then Punjab Chief Minister, Pratap Singh Kairon, passed lewd remarks against some of the ladies and even attempted to molest one of them. It must be remembered that Kairon was very close to Nehru and was one of his confidants. When chased by the unit officers, junior Kairon and his goons took refuge in the Prakash cinema hall near the station. By this time, Colonel Sen had been contacted by one of the officers, and he promptly sent some JCOs and soldiers from the battalion, as reinforcements, to the cinema hall.The entry and exit points of the cinema were sealed. The culprits were soon identified, taken out and given a good thrashing. They were then taken to the unit Quarter Guard and locked up. 

The next day, the CM, Pratap Singh Kairon, came to the battalion’s location and was made to walk from the main gate to the CO’s office, where he was given a mouthful by Colonel Sen. Predictably, this created an uproar in Parliament and an explanation was sought from the Army Chief. The great General Thimayya, replied as only he could, with the words: “If we cannot defend the honour of our women, how can you expect us to defend the honour of our country?” He later complimented Col Sen. Leadership implies acting in perceived best interests of your organisation and the nation and taking responsibility for those actions. That is a lesson we, who are chosen to protect the Flag, need to imbibe in these troubled times. இது நான் படித்ததில் எனக்கு மிகவும் பிடித்த பகுதியாய் இருந்ததில், நேருவின் நண்பர்கள், வாரிசுகள் எல்லாம்  நேருமாதிரியே வழிசல்களாய் இருப்பார்கள் என்று சொல்வதற்காக இல்லை! நேரு முதலான ஆசாமிகள் அரசியல் வியாதிகளாய் இருந்தபோதிலும் கூட இங்கே இந்தியராணுவம தனது legacy என்னவாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தது, தலைமை, தலைமைப்பண்பு, நிறுவனப் பண்பு, நிர்வாகம் என்ற வார்த்தைகளுக்கு எப்படிப் பொருத்தமாக இருந்தது என்பதைச் சொல்வதற்காக மட்டுமே! மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த  சியாச்சென் பகுதியை பாகிஸ்தானுக்குத் தாரை வார்த்துவிடத் தயாராக இருந்தபோதும் கூட இந்தியராணுவம், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பகுதியை விட்டுக் கொடுக்க விரும்பாமல் போராடி மீட்டது என்ற கதை இங்கே பலரும் அறியாத செய்தியாகக் கூட இருக்கலாம்! 1948 இல் ஜவஹர்லால் நேரு எப்படி தன்னை சமாதானப் புறாவாகக் காட்டிக் கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டு, காஷ்மீரின் 40% பகுதியை பாகிஸ்தானியர்கள் ஆக்கிரமித்ததை, இன்னும் ஒரு நாள் அவகாசம் கொடுத்திருந்தால் நமது ராணுவம் அவர்களை விரட்டியடித்திருக்கும் என்ற நிலையில், ராணுவத்துக்கு முட்டுக் கட்டை போட்டார் என்கிற தகவல் பொதுவெளியில் இன்றும்கூட சிரிப்பாய்ச் சிரித்துக் கொண்டிருக்கிறது. 
            
 
போய்த் தொலையட்டும்! இப்போதிருப்பது நேரு, இந்திரா, ராஜீவ் காலத்துக் காங்கிரஸ் இல்லை! வஞ்சகமும் பணத்தாசையும் பிடித்து, பானாசீனா, ஆ!ராசா முதலானவர்களைப் பக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கிற சோனியாG என்கிற பெண்மணி தன் வாரிசுகளுக்காக நடத்திக் கொண்டிருக்கும் கொள்ளைக் கும்பல் மட்டுமே என்பது இன்னமும் புரியாமல், இப்போதிருக்கிற காங்கிரஸ் என்னவோ ஒரு பொறுப்பான, ஜனநாயக நடைமுறைகளில்           நம்பிக்கையுள்ள அரசியல் கட்சி என்று நம்புவதும், அய்யய்யோ பிஜேபி இவர்களைக் குறிவைத்துக் காலி செய்கிறதே! கேள்வி கேட்பாரில்லையா என்று அரற்றுவதும் என்ன மாதிரியான கேலிக்கூத்து?!  
  

இந்த வீடியோ மிகவும் சின்னதுதான்! மேலே சொன்ன விஷயங்களுக்கும்  கார்டூனுக்கும் ஆன  விவரங்கள் இதிலே இருக்கின்றன. சுப்ரமணியன் சுவாமியைப் பற்றிய உங்களது அபிப்பிராயம் என்னவாக இருந்தாலும்,இந்திராவின் மருமகள் மற்றும் வாரிசுகளின் ஆட்டத்தை அம்பலப்படுத்தி, நீதிமன்ற வாசற்படியேற வைத்ததில் அவரைத்தவிர   வேறெவருக்கும் பங்கில்லை. BJP கட்சியுமே கூட அவரைத் தன்  ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொண்டு ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டைக் கொடுத்துப் புறந்தள்ளி விட்டது என்பதை மறுக்க முடியாது.


இங்கே H ராஜா பேசுவதையும், கீழே உள்ளதையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக் கொள்ளாதீர்கள்! சுபவீ செட்டியார் ஒருவர் மட்டும் தான் கீழே உள்ள செய்திக்கு விளக்கம் சொல்லக் கடமைப் பட்டவர். அதுவும் ஒரு மகனாக அன்புராஜ்  செய்த விஷயத்துக்காக அல்ல, ஈவெரா பெயரில் இயங்கும் பல  ட்ரஸ்ட்கள், லட்சம் கோடி ரூபாய்களுக்கு மேலான மதிப்புள்ள சொத்துக்களுக்கு, கல்வி வியாபாரத்துக்கு நிர்வாகியாகத் தொடரத் தகுதி இருக்கிறதா என்ற ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லட்டும்!      


இந்தச் செய்தியைப் பகிர்வதில் எனக்கு எந்தவிதத்திலும் சந்தோஷமோ அல்லது அற்பத்தனமான திருப்தியோ இல்லை. அதிலும் கடைசி இரண்டு பாராக்களில் சொல்லப்பட்டிருப்பதில் எந்தவிதமான   உடன்பாடும் இல்லை. ஈவெரா ரக நாத்திகத்தில் சாரம் எதுவுமில்லை, நீண்டகாலம் செல்லுபடி ஆகாது என்பது என்னுடைய கருத்தாக இருந்தாலும் ஒரு தகப்பனுக்காக மகன் செய்கிற காரியங்களை விமரிசிக்க எவருக்கும் தகுதியில்லை என்றே நினைக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.
  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!