இட்லி வடை பொங்கல்! #50 Quo Vadis எங்கே போகிறோம்?

Quo Vadis எங்கே போகிறோம் என்று கேட்டுக்கொள்வது தனிமனிதனுக்கும் சரி, ஒரு சமூகமாகவும்  சரி மிகவும் முக்கியமான கேள்வி! சரியான திசையில் தான் போய்க் கொண்டிருக்கிறோமா? அதை உறுதி செய்து கொள்ளவும், அப்படி இல்லா விட்டால் சரிசெய்து கொள்ளவும் உதவுகிற ஆதாரமான கேள்வி! நம்மை அவ்வப்போது கேட்டுக் கொளகிறோமா?

  
இந்த 16 வயது குஜராத்திப் பெண் 10 வருடங்களாக முடி வெட்டிக் கொள்ளாமல் வளர்த்ததில் கூந்தல் 5 அடி 7 அங்குலமாம்! கின்னஸ் உலக சாதனையில் இடம் பெறுகிற அளவுக்கு. இதே போல 80 சாதனையாளர்கள், அனைவரும் இந்தியர்கள் 2020 இல் வெளிவரவிருக்கும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுகிறார்கள் என்பது என்ன மாதிரியான செய்தி? என்ன மாதிரியான சாதனை? கொஞ்சம் சொல்லுங்கள் பார்க்கலாம்!

 
பிணராயி விஜயன் அரசைச் சாடுவதில் அ. மார்க்ஸ் முதலானவர்கள் குரல் எழுப்பியிருப்பது ஆச்சரியமில்லை. இவர்களைப் போன்ற உதிரிகளை நான் எப்போதுமே பொருட்படுத்தியதில்லை!  ஆனால், தனித்து நிற்கத் தெம்பில்லாத, மார்க்சிஸ்டுகளோடு ஒட்டிக் கொண்டு கேரள அரசில் அங்கம் வகித்துக் கொண்டேவலது கம்யூனிஸ்டுகள் (CPI) குரல் கொடுப்பது என்ன ரகத்தில் சேர்த்தி? அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு என ஒன்று இருப்பது தெரிந்து பேசுகிறார்களா? 
      
Expressing displeasure at the way four Maoists were gunned down in the forests near Palakkad this week by the Thunderbolt wing of the Kerala Police, the Communist Party of India (CPI) state leadership on Friday condemned the act as one that was "state-sponsored" and sought a magisterial probe. 

பூனை இளைத்ததென்றால் எலிகூட ஆத்தோரமா வாரியா என்று கேட்கிற கதையாக இடதுசாரிகளுக்கிடையிலான தோழமை, ஒற்றுமை, உறவுவிவகாரங்களும்  ஆகிவிடும் என்பதற்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்துக் கொண்டே வலது கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மறைமுகமாக சாடியிருப்பது ஒரு உதாரணம். அவர்கள் அரசியல் அது என்பது வேறு விஷயம். 

இந்த விஷயத்தில் நான் முன்னிலைப்படுத்த விரும்பும் ஒரே விஷயம் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு என்பது மட்டும் தான். இப்படி ஒரு விஷயம் இருப்பதை அறிந்து வைத்திருக்கிறீர்களா? 


இந்த 39 நிமிட விவாதத்தைப் பகிரலாமா வேண்டாமா என்று   இரண்டு நாட்களாக யோசனை செய்து விட்டு, கொஞ்சம் தாமதமாகப் பகிர்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் மட்டுமல்ல,  இடதுசாரிகள், பாமக, விசிக முதலான உதிரிகளை முற்றொட்டாகப் புறக்கணிக்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருவதை இங்கே வரும் நண்பர்கள் நினைவு வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். திருமா இங்கே சில ஒப்புதல் வாக்குமூலங்கள் மாதிரிப் பேசுகிறார்.விசிக மாதிரி உதிரிகள், களைகளாக இருந்தென்ன லாபம்?  மறுபடி யோசிக்க வைக்கிற விவாதம்.

மீண்டும் சந்திப்போம்.                                                        

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!