ரங்கராஜ் பாண்டே! டாக்டர் சுப்ரமணியன் சுவாமி! சீனாதானா!

தமிழக ஊடகங்களுக்கு நிரந்தரத் தீனி போடுவது சினிமா மற்றும் சினிமாக்காரர்கள் மட்டும்தான்!  அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் அடுத்தபடிதான்! இதில் ரங்கராஜ் பாண்டே மட்டும் விதிவிலக்காக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதே கொஞ்சம் தவறுதானோ?


தமிழக அரசியலே ஒரு நாலைந்து சினிமாநடிகர்களை நம்பியே இருக்கிற மாதிரி ஒரு பிம்பம் இங்கே தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வருவதில் ரங்கராஜ் பாண்டே என்ன நினைக்கிறார்? வீடியோ 12 நிமிடம்.

டாக்டர் சுப்ரமணியன் சுவாமியைப் பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்துவிட்டுப் போங்கள்! மனிதர் நடப்பு அரசியலைக் குறித்துச் செய்கிற சுருக்' விமரிசனங்களை அடித்துக் கொள்ள வேறெவரும் இங்கே இல்லை!  இன்றைக்கு ராகுல் காண்டியும் பிரியங்கா வாத்ராவும்  திஹார் சிறைக்கு பானாசீனாவை சந்திக்க வந்தார்களாம்! News 18 செய்திக்கு சுவாமியின் ஒருவரிக் கமெண்ட் இது: (திஹார்வாசம் எப்படியென்று) பரிச்சயப் படுத்திக் கொள்ளவாம்! 


சீனாதானா சிறையில் பொழுதைப் போக்க என்ன செய்கிறார் என்பது தெரியாமல் இருந்தது! கம்பி எண்ணுவதோடு நாளையும் எண்ணிக் கொண்டு இருக்கிறார் என்பது இப்போதுதானே தெரிகிறது!

மீண்டும் சந்திப்போம். 


2 comments:

  1. 99..........100..........101..........102.............................................

    ReplyDelete
    Replies
    1. பாவம்! சர்வசாதாரணமாக ஆயிரம் கோடிகளில் பார்த்துக் கொண்டிருந்தவரை LKG/UKG பிள்ளைகளை போல ஒன்று இரண்டு என்று எண்ண வைத்துவிட்டார்களே! :-(((

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!