சண்டேன்னா மூணு! படங்கள்!செய்திகள்!விமரிசனங்கள்!

"நான் என் கண்ணால் பார்த்தேன்!" 

அப்படிக் கண்ணால் பார்த்தது  ல்லாம் நிஜமாகி விடுமா?

உன் கண் உன்னை ஏமாற்றினால் என்ன செய்வது?  


"கண்ணால் காண்பதும் பொய்! காதால் கேட்பதும் பொய்! தீர விசாரித்து றிவதே மெய்!" என்று   பெரியவர்கள் அதனால் தான் சொல்லி வைத்து இருக்கிறார்கள்! இங்கே கீழே உள்ள படத்தைப் பாருங்கள்! ஒரே ஒரு கண் தானே! அதற்கு இப்போது என்ன வந்தது என்கிறீர்களா?


 

இங்கே க்ளிக்கிப் பாருங்கள்! 

இரண்டும் ஒரே படம் தான்! ஆனால் அந்த ஒரே கண்ணைத் தான் பார்த்தீர்களா அல்லது வேறெதையாவது பார்த்தீர்களா?

இந்தோனேஷியாவில் உள்ள ஒரு விளம்பர நிறுவனம், ஜான்சன் அண்ட் ஜான்சனுக்காக இந்த விளம்பரத்தை உருவாக்கியிருக்கிறது! இணையத்தில் உங்கள் குழந்தைகள் என்னென்னவெல்லாம் பார்ப்பார்கள், பெற்றோர்களே கவனம் என்று ஒரு எச்சரிக்கைச் செய்தியாக இந்த விளம்பரம் உருவாக்கப் பட்டிருக்கிறது. படம் பார்ப்பவர்கள் எச்சரிக்கைச் செய்தியையா பார்ப்பார்கள்..........?!

oooOooo

"தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்"  "தண்ணீரை வீணாக்காதீர்கள்" "தண்ணீரை அசுத்தப் படுத்தாதீர்கள்"  


இப்படியெல்லாம் நிறைய இடங்களில் போர்டு பார்த்தாயிற்று! யாராவது, இந்த போர்டில் எழுதி ருப்பதைக் கொஞ்சமாவது மதித்து, அட்லீஸ்ட் ஒரு சொட்டுத் தண்ணீரையாவது  மிச்சப் படுத்தி ருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா என்ன!


 
யான் லு டாட் காம் 
இந்த வலைத் தளத்தில் ஒரு தங்க மீனை மிதக்க விட்டு, ஒரு கைகழுவும் தொட்டியை வித்தியாசமாக வடிவு அமைத்து இருக்கிறார்கள்! பாவப்பட்ட மீன் தொட்டி கம் கைகழுவும் டத்தை நீங்கள் உபயோகிக்கும் ஒவ்வொரு முறையும், நீர்மட்டம் வற்றி அந்த தங்க மீன் இறந்து விடுமோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிப்பதாக இருக்கும் இந்த வடிவமைப்பு, நாம் விரையம் செய்யும் தண்ணீர் எப்படி இந்த உலகில் உள்ள மற்ற ஜீவராசிகளை (சக மனிதர்களையும் சேர்த்துத் தான்) பாதிப்பதாக இருக்கிறது என்பதை யோசிக்க வைக்கிறது!

நிலத்தடி நீர் மட்டம் வேக வேகமாகக் குறைந்து, தண்ணீருக்கே கஷ்டப்படும் நிலையில், இந்த மாதிரி, க்ரியேடிவான சிந்தனைகள் நம்பிக்கை தருவதாக இருக்கின்றன. 


புரிந்தால் சரி!

oooOooo

"நான் இங்கிலாந்தை மூன்றாவது உலக நாடு என்று ஒருதரம் சொன்னால், நூறு தரம் சொன்ன மாதிரி"
என்ற மாதிரி ஒற்றை விரலை நீட்டி நடக்கும் காஸ்பர்


வாய்க் கொழுப்பு என்றால் அதை வாடிகன் ஆ''சாமிகளிடம் தான் நன்றாகப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும்! போப் அரசர் இங்கிலாந்து விஜயத்தில் இருக்கிறார்! ஐந்து ஆண்டுகளுக்கு முன்னாலேயே திட்டமிடப்பட்ட இந்த நிகழ்ச்சி, ஏற்கெனெவே இங்கிலாந்தில் பெரிய சர்ச்சையைத் தோற்றுவித்திருந்ததை ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில்
பார்த்திருக்கிறோம்!

"
போப் பெனடிக்ட் எங்கே போனாலும், வில்லங்கம் அங்கே முன்னால் போய் ஆஜராகி விடுகிறது!


இங்கிலாந்துக்கு இருபத்தெட்டு வருடம் கழித்து, வருகிற செப்டம்பர் மாதம்  ஒரு போப் விஜயம் செய்ய இருக்கும் தருணத்தில், கொஞ்சம் நக்கலும் நையாண்டியும் கலந்தமாதிரியான நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க யோசனை செய்த விவரம்

, அது வெளியே தெரிய வந்ததும், பிரிட்டிஷ் அரசு வாடிகனிடம் வருத்தம் தெரிவித்ததும் முழு விவரங்களுக்கு  மேலே லின்கைச் சொடுக்கிப் பாருங்கள்!


அப்படி என்ன வில்லங்கமான நிகழ்ச்சி நிரல், யோசனை என்று கேட்கிறீர்களா?

கருச் சிதைவு, ஓரினத் திருமணம் இவற்றை கத்தோலிக்க சர்ச் கடுமையாக எதிர்த்து வருகிறது! 



போப் வரும்போது, ஓரினத் திருமணம் (ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும்) ஒன்றை ஆசீர்வதித்து நடத்துவது, 


போப்  பிராண்டுடன் கருத்தடைக்கான காண்டம்களை வெளியிடுவது, 


ஒரு மருத்துவ மனையில் கருத்தடைக்கான வார்டைத்  திறந்து வைப்பது 


உள்ளிட்ட யோசனைகளை ப்ரெயின் ஸ்டார்மிங் என்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டதில், ஒரு அரசு ஊழியர் யோசனைகளாக சமர்ப்பித்த விவரம்  வெளியே கசிந்து, பிரிட்டிஷ் அரசுக்குத் தலைவலியை உண்டாக்கியிருக்கிறது! சண்டே டெலிகிராப் பத்திரிகையில் நேற்றைக்கு இந்த செய்தி வெளியானதும், வாடிகனில் உள்ள பிரிட்டிஷ் தூதர் போய் வருத்தம் தெரிவித்து விட்டு வந்தாராம்!


போப்பின் வருத்தம் தீர்ந்ததா? அல்லது பாதிரி சில்மிஷப் பிரச்சினை தீர்ந்ததா?"

வாய்க் கொழுப்பு எங்கே வந்தது? போப் விஜயத்தில் அவரோடு கூட வரவிருந்த ஜெர்மானிய கார்டினல் வால்டர் காஸ்பர், "இங்கிலாந்துக்கு வருவது ஏதோ ஒரு மூன்றாவது உலக நாட்டுக்கு வருவதைப் போல இருக்கிறது" என்று உளறப் போக ஏற்கெனெவே அரசு முறை விஜயமாக போப்பை, மக்களுடைய வரிப்பணத்தில் இருந்து செலவு செய்து வரவேற்க வேண்டுமா என்று கொதித்துக் கொண்டிருப்பவர்களை இன்னமும் கொதிநி
லைக்குக் கொண்டு போய்விடும் என்று முன்னெச்சரிக்கையாக, "உடல் நலம் சரி ல்லாததால்" காஸ்பர் திட்டமிட்டபடி போப்புடன் கூட வர முடியவில்லையாம்!


பாதிரி சில்மிஷங்களில் பாதிக்கப்பட்டவர்கள் குமுறுகிறார்கள்! உண்மை வேண்டும், நியாயம் வேண்டும், தவறுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று வாடிகனை விரல் நீட்டிக் குற்றம் சுமத்துகிறார்கள்
!  செய்தி இங்கே


ரிச்சர்ட் டாகின்ஸ் முதலான நாத்திகர்கள், ஐந்து மாதங்களுக்கு முன்னால், போப் இங்கிலாந்துக்கு வரும்போது மனித இனத்துக்கு எதிராகச் செயல் பட்டதற்காகக் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும்

என்ற மாதிரி ஒரு பிரசாரத்தைத் தொடங்கினார்கள்.

போப் விஜயம் மாதிரி, அதுவும் பிசுபிசுத்துப் போய் விட்டதோ என்னவோ தெரியவில்லை!
 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!