மெய்ப் பொருள் காண்பதறிவு...!


Golden Drops of Light

Hidden in an earthly garment that survives,
I am the worldless being vast and free.
-Sri Aurobindo

March 1, 1914

“IT is in one’s own self that all the obstacles lie,

IT is in one’s own self that all the difficulties are found,

IT is in one’s own self that there is all the darkness and ignorance.

Were we to travel throughout the earth, were we to go and bury ourselves in some solitude, break with all our habits, lead the most ascetic life, yet if some bond of illusion held back our consciousness far from Thy absolute Consciousness, if some egoistic attachment cut us off from the integral communion with Thy divine Love, we would be no nearer Thee despite all outer circumstances.

Can any circumstances be considered more or less favorable? I doubt it; it is the idea we have about them which enables us to profit much or little by the lessons they give us.

O Lord, I implore Thee! Grant that I may be perfectly conscious and master of all that constitutes this personality, so that I may be delivered from myself and Thou alone mayst live and act through these multiple elements.


To live in Love, by Love, for Love, indissolubly united to Thy highest manifestation....


Always more light, more beauty, more truth!”

-The Mother
“Prayers and Meditations”

தமிழிலே ஒரே விஷயத்தை இரண்டு கோணங்களில் இருந்து எடுத்துச் சொல்லும்  அழகான முதுமொழிகள்  உண்டு:

"தீதும் நன்றும் பிறர் தர வாரா"
 

"எண்ணம் போல வாழ்வு"

நம்முடைய துயரம், வறுமை, நோய் முதலான எல்லாம் வெளியில் இருந்தே வருவதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். அது போலவே, மகிழ்ச்சி முதலானவையும் வெளியில் இருந்து வருவதாக எண்ணி மயங்கிக் கிடக்கிறோம். உண்மையில், சந்தோஷமோ, துக்கமோ வெளியில் இருந்து வருவதில்லை. தீது, நன்று எனப் பேதப்படுத்திப் பார்க்கிற எதுவும் நமக்கு வெளியிலிருந்து வருவதுமில்லை.

காளிப் பாட்டிலே பாரதி அருமையாகச் சொன்னான்:


"யாதுமாகி நின்றாய் காளி! எங்கும் நீ நிறைந்தாய்!
தீது நன்மை எல்லாம் நின்றன் செயல்களன்றி இல்லை!"


இதுவரை இவனுக்கு இந்த நுட்பம் ஏனோ தெரியாமலே போயிற்று.  தன்னைச் சுற்றி உள்ளவர்களுடைய குறைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தருணத்திலும், தன்னுடைய முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போல, இவனது அகத்தில் இருந்த அழுக்குத் தான் பிறரிடத்தில் இவன் பார்த்துக் கொண்டிருந்தது என்பது புரியாமலேயே போயிற்று.


தன்னைச் சுற்றியிருக்கிற உலகத்தைப் புரட்சிகரமாக சீர்திருத்தம் செய்யப் போகிறேன் என்று கிளம்பிய இவனுக்கு  சீர்திருத்தம் என்பது முதலில் தன்னிடத்தில் இருந்து தான் தொடங்குகிறது என்பது ஏனோ புரியவே இல்லை. புரட்சி என்று பகட்டான வார்த்தையில் சொல்லப் படுவது, ஒவ்வொரு தனி மனிதனும் தன்னளவிலே நடத்திக் காட்ட வேண்டிய திருவுரு மாற்றம் என்பதோ, அப்படிப் பட்ட மாற்றம், வெறும் ஆவேசத்தினாலோ, வார்த்தை ஜாலங்களினாலோ, எதையோ ஒன்றை கரித்துக் கொட்டுவதாலோ, வெறுப்பை உமிழ்வதாலோ சண்டை, சச்சரவுகள், கலகங்கள், ரத்தக் களறிகளாலோ நிகழ்வதில்லை என்கிற உண்மையை ஒரு விதமாகப் புரிந்து கொள்ளவே  இவ்வளவு நாட்கள் ஆயிற்று.


உண்மையைத் தெரிந்து கொள்வது அவ்வளவு எளிதாக இல்லை. அதிகப் பகட்டோடு வரும் பொய்கள் திசை திருப்புவதில் மயங்குகிற போது, எது உண்மை என்பதைப் புரிந்துகொள்வதில் மயக்கம் வருவது இயற்கைதானே!


அனுபவ சாத்தியமாகிற வரைக்கும், உண்மை என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது வெறும் ஏட்டுச் சுரைக்காயாகத் தானிருக்கும் என்பதும், நிறையவே பட்டும், சுட்டும் கொண்ட பிறகு தான் புலப்பட தொடங்கியது.

"குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை" என்பது நிதர்சனமாகத் தெரியத் தொடங்கின நேரத்தில், பழைய பழக்கங்களில் ஊறிப் போன பிடிமானமும், வெளிச் சூழ்நிலைகளும் சேர்ந்து,'மாறப் போகிறாயா என்ன? ஒன்ணும் காமெடி கீமடி பண்ணலையே" என்று வடிவேலு ரேஞ்சுக்கு ரேக்கி விட்டுப் போய்க் கொண்டிருப்பதையும், கொஞ்சம் தாமதமாகத்தான் புரிந்து கொள்ள முடிந்தது.


“Can any circumstances be considered more or less favorable? I doubt it; it is the idea we have about them which enables us to profit much or little by the lessons they give us.”

ஸ்ரீ அரவிந்த அன்னை அருளிய இந்த பிரார்த்தனையை மறுபடி படிக்கிற போது தான் சில வெளிச்சக் கீற்றுக்கள் இருண்ட மனத்தின் ஏதோ ஒரு மாற மறுக்கிற பகுதியின் மேல் விழுவதை உணர முடிகிறது. 


பத்து வருடங்களுக்கு முன்னால் என்னுடைய இடத்தை அடுத்த மனைக்காரர் ஆக்கிரமித்து,  அந்தப் பிரச்சினையின் தன்மை பரிமாணம் என்ன என்பதே இப்போது தான் வெளிப்படத் தொடங்கி இருக்கிறது. காசு பணம் இருந்தால் எதைவேண்டுமானாலும் செய்து விடலாம் என்ற துணிவோடு ஒரு குடும்பமும் , காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் ஒரு கும்பலும் சேர்ந்து கொண்டு கொக்கரிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பதற்றத்தைத் தவிர்க்க முடியவில்லை என்ற பலவீனம் ஒரு புறம், என்ன செய்யப் போகிறோம் என்ற கவலை ஒருபுறம், உதவமுன்வந்த சில மனிதர்களுமே கூட, ஒரு எல்லைக்கு மேல் எதையும் செய்ய முடியாமல் நின்று விடுவதையும், நியாயம் கேட்டு எடுத்திருக்கும் முயற்சிகள் ஒரு விதமான மந்தத் தன்மையோடு தொடர்வதையும் பார்த்த பிறகு,நம்பிக்கைக்கும் அவ நம்பிக்கைக்கும் இடையில் ஊசலாடுகிற என்னுடைய இயல்பை முதலில் சோதித்து, சரி செய்து கொண்டாக வேண்டியதை உணர்கிறேன்.





இந்தப் பிரச்சினை கூட, எனக்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துவதற்காகவே வந்திருக்கலாம். என்னை சோதனை செய்து கொள்ளவேண்டிய ஒன்றை நினைவு படுத்துவதற்காக வந்திருக்கலாம்.

"என்னை எனக்கறிவித்தருள் செய்து" என்று விநாயகர் அகவலில் அவ்வைக் கிழவி சொல்லி வைத்ததற்கும் ஒரு விசேஷமான பொருள் இருப்பதை ஒருவிதமாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உனது திருவடிகளைச் சரண் அடைகிறேன்.


எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உனது திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.

உனது ஒளியினால் இவனது அகமும், புறமும் நிறைவு செய்யப் படட்டும், உனது எல்லையற்ற கருணையினால், பழக்கங்களின் அடிமையாகவே இருக்கச் சோம்பிக்கிடக்கிற பகுதிகளும், உனது ஒளியினால் தூய்மை பெறட்டும்.

தடைகளை அகற்றுவாய் தாயே! த்ரிதேக சுத்தியை அருள்வாய்.

உனது சித்தப்படி இயங்குகிற கருவியாக இவனை ஏற்றுக் கொள்வாய் தாயே!


"உன்னை விட்டு ஒருபோதும் விலகி இருப்பதில்லை. ஏனென்றால் நானே நீ! நீயே நான்!" என்ற உறுதியை அளித்திருக்கிறாய்!



"Look for the inner causes of disharmony much more than the outer ones. It is the inside which governs the outside."

The Mother

Words of The Mother, Vol.II



ஸ்ரீ அரவிந்த அன்னையே! நீ கூட இருக்கிறாய் என்ற ஒரு நினைப்பே எவ்வளவு பெரிய வலிமையாக இருக்கிறது!! 





2 comments:

  1. //நம்பிக்கைக்கும் அவ நம்பிக்கைக்கும் இடையில் ஊசலாடுகிற என்னுடைய இயல்பை முதலில் சோதித்து, சரி செய்து கொண்டாக வேண்டியதை உணர்கிறேன்//

    நன்கு உணர்கிறேன். நமக்குத் தெரியாததோ, படிக்காததோ கிடையாது, ஆனால் நடைமுறைப்படுத்தும்போதுதான் நம்மோடு நாமே ஜெயிக்க வேண்டி இருக்கிறது.

    அந்த திறன் உங்கள் மனதில் இருக்கிறது.

    நிகழ்காலத்தில் இருப்பீர்களாக...


    சிவா

    ReplyDelete
  2. நிகழ்காலத்தில் தான் இருக்கிறேன் சிவா!

    ஒரு ஆக்கிரமிப்புப் பிரச்சினை, சுமுகமாகப் பேசித் தீர்த்துக் கொள்ள நான் எடுத்த முயற்சி பலிக்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறேன். இங்கே பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்ல வேண்டிய அமைப்புக்கள், உள்ளாட்சி, அரசு இயந்திரங்கள் அத்தனையும் செயலிழந்து நிற்கிற அவலத்தைப் பார்த்த பிறகு, என் மனநிலையை சம நிலையில் வைத்துக் கொள்ள ஒரு பிரார்த்தனையாக எழுதிய பதிவு இது.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!