இனிமேலும் நம்புவதில்லை! அங்கே சொன்ன மாதிரி இங்கேயும்....!



435 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்கும், நூறு உறுப்பினர்களைக் கொண்ட செனேட்டிற்கும் கடந்த செவ்வாய்க் கிழமையன்று நடந்த இடைத் தேர்தலில் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி பெருத்த பின்னடைவை சந்தித்திருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சமயத்தில், ஒபாமா மீது அமெரிக்க வாக்காளர்கள் கொண்டிருந்த பெருத்த நம்பிக்கையும் கூட பின்னடைவை சந்தித்திருக்கிறது. 

ந்தப் பின்னடைவிற்குத் தானே காரணம் என்று ஒரு தரமல்ல, நான்கு முறை  ஒபாமா ஒத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை! கோபத்தோடு கொந்தளிக்கும் வாடிக்கையாளர்களிடம் ஒரு விற்பனை மேலாளர்  உணர்ச்சி பொங்கப் பேசுவது போல ஒபாமா பேசியதாக இந்த செய்தி சொல்கிறது.பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி இப்படிப்பட்ட  சரிவை 1948 இல் தான் சந்தித்திருப்பதாகவும் இந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.

Yes We can! என்று நம்பிக்கையோடு ஆட்சியைப் பிடித்த ஒபாமா,சீரழிந்த அமெரிக்கப் பொருளாதாரத்தின் போக்கில் குறிப்பிடத் தகுந்த மாற்றம் எதையுமே செய்ய முடியாத நிலையில்,  ஜனங்களுடைய ஆதரவை வேகமாக இழந்திருக்கிறார். 

பொருளாதாரச் சீரழிவுக்குப் பெரிய அளவு காரணமாக இருந்த ரிபப்ளிகன் கட்சி, இந்த அதிருப்தியை, நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

ந்த வருடம் ஜனவரியில் எழுதிய ஒரு நாள் போதுமா என்ற இந்தப்பதிவில், ஒபாமா தொடர்ந்து ஜனங்களுடைய ஆதர
வை இழந்துவருவதைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகவே பேசியிருந்தது நினைவிருக்கிறதா?

காங்கிரஸ் சபைக்கு இதுவரை தெரிந்த முடிவுகளில், ஜனநாயகக் கட்சிக்கு 188, ரிபப்ளிகன் கட்சிக்கு 239, முடிவு தெரிய வேண்டியவை 8 என்ற எண்ணிக்கையில், காங்கிரஸ் ரிபப்ளிகன் கட்சியின் வசம் வந்து விட்டது.செனேட் சபையில் ஜனநாயகக் கட்சிக்கு 53 இடங்களும், ரிபப்ளிகன் கட்சிக்கு 46 இடங்களும், முடிவு தெரியாமல் ஒரு இடமும் இருப்பதாகக் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் பார்த்த செய்தி தெரிவிக்கிறது.  


ந்த நிலையில் ஆசிய நாடுகளில் பத்து நாள் சுற்றுப் பயணமாக, அதில் முதல் மூன்று நாட்கள் இந்தியாவில் என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அவரது மனைவி மிஷெல்  மற்றும் பரிவாரங்களுடன் வந்து மும்பையில் இறங்கியிருக்கிற செய்தியை தொலைகாட்சி செய்திகளில் பார்த்துக் கொண்டிருந்தேன். அமெரிக்க அதிபரின் இந்த வி
யத்தில், வெறும் வாயை மெல்லப் பழகி விட்ட ஊடகங்களுக்குக் கொஞ்சம் கலர் கலராகப் பஞ்சுமிட்டாயைக் கட்டித் தொங்க விட்டுக் காண்பிக்கிற மாதிரி, அமெரிக்க அதிபரின் "வரலாறு காணாத விஜயத்தைப் பற்றி" கதை விட ஒரு சான்ஸ் கிடைத்திருக்கிறது என்பதைத் தவிர, ஒபாமாவின் இந்த விஜயத்தினால் சொல்லிக் கொள்கிற மாதிரி எந்த ஒரு பயனும் கிடைத்து விடப் போவதில்லை!

பொதுவாகவே ஜனாயகக் கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம், இந்தியாவுக்குத் தொந்தரவுதான்! அமெரிக்க அரசின் வெளியுறவுக் கொள்கையில், பாகிஸ்தானுக்கு இருக்கும் முக்கியத்துவம், இந்தியாவுக்கு எப்போதுமே இருந்ததில்லை. ஆனால், சீனாவிடம் பொருளாதார ரீதியாகத் தோற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவை முழுமையாகப் புறக்கணிக்க முடியாத சூழ்நிலையும் அமெரிக்காவுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிற நிர்பந்தம்.

தாஜ் ஹோட்டலில் தங்கி, தீவீரவாதிகளுக்கு ஒபாமா, ஒரு அழுத்தமான செய்தியைக் கொடுத்திருப்பதாக ஒரு சிரிப்புச் செய்தியைப் பார்க்க முடிந்தது.


ர்விங் வாலஸ் எழுதிய ஒரு புதினம், The Man. இந்தக் கதையின் விமரிசனத்தை இந்தப்பக்கங்களில் பார்த்திருக்கிறோம் நினைவிருக்கிறதா? 

ந்த மாதிரி எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த ஒபாமாவின் அரசியல் இந்த இரண்டு ஆண்டுகளுக்கு சற்றுக் குறைவான காலத்திலேயே புஸ்வாணமாகப் போனதைப் பார்க்கும் போது சற்று வருத்தமாகத் தான் இருக்கிறது. ஆனால் ஒபாமா, தான் எங்கே சறுக்கினோம் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப் படுவதாகவோ, இவர் தேறி விடுவார் என்று அமெரிக்க வாக்காளர்கள் நம்புவதாகவோ எந்த அறிகுறியும் இல்லை. இர்விங் வாலஸ் படைத்த அந்த உறுதியான ஆப்ரோ அமெரிக்கனைக் கற்பனையில் மட்டும் தான் பார்க்க முடியும் போல.


இனிமேலும் நம்புவதில்லை என்று அமெரிக்க வாக்காளர்கள் சொல்லிவிட்டார்களே!
 
மெரிக்க ஜனாதிபதியின் இந்த விஜயத்துக்கு அமெரிக்கா ஒரு நாளைக்கு இருபது மில்லியன் டாலர்கள் அல்லது சுமார் தொள்ளாயிரம் கோடி ரூபாய்கள் செலவு செய்வதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது போல, அமெரிக்கர்களுடைய தாராளத்துக்குப் பின்னால் என்னென்ன ஏமாற்றங்களை இந்த தேசம் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது இன்னும் சிறிது காலத்துக்குள்ளேயே தெரிந்து விடும்.

இந்தப் பதிவில் சொல்லியிருந்ததை மறுபடி நினைவு படுத்திக் கொள்வது மிக மிக அவசியம் என்றே கருதுகிறேன்!

மீன்களைக் காப்பாற்ற வேண்டுமென்றோ, காதல் கொண்டோ எவரும் தூண்டிலில் புழுவை வைத்துக் காத்திருப்பதில்லை!

லிகளுக்கு, ஊசிப்போன வடையோ வெங்காயமோ எதுவானாலும், கருணையினால் வைக்கப் படுவது இல்லை.

யேசு அழைக்கிறார் என்று கூவுகிறவன் கோடிகளில் மிதக்கிறான்! அழைப்பைக் கேட்டுப் போனவன், அவனிடம் தசம பாகத்தைக் கொடுத்து விட்டு, என் ஆண்டவர் மிகவும் நல்லவர், அவர் என்னை என்றும் ரட்சிப்பார் என்று பாடிக் கொண்டு  திரும்புகிறான்!

தே மாதிரித் தான்!

மூக நீதி காக்கிறேன், சமத்துவம் தருகிறேன் என்று இலவசங்களைத் தருகிறவன் என்ன நிலையில் இருக்கிறான், அதை நம்பிப் போகிறவன் என்ன நிலையில் இருக்கிறான் என்பதைக் கொஞ்சம் கண்திறந்து பார்த்தாலே புரிந்து விடும்!

சுதந்திரம் என்பது இவர்கள் பாடப் புத்தகங்களில் எழுதி வைத்தது போல, காந்தித் தாத்தாவும், நேரு மாமாவும் கடைக்குப் போய் வாங்கி வந்து கொடுத்ததல்ல!


ப்போது நமது பொறுப்பை உணரப் போகிறோம்?

ப்போதிலிருந்தாவது.---

லவசங்களில் ஏமாறுவது இல்லை என்ற உறுதியோடு !

லகத்  தொல்லைக் காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக என்று கூவும் பெட்டிகள் முன்னால் அமர்ந்து நேரத்தை வீணடிக்காமல்,

ங்கோ என்னமோ நடக்கிறது  எனக்கென்ன என்றிருக்காமல், சக மனிதர்களிடம் கொஞ்சம் அக்கறையோடு, பரிவோடு, பொறுப்போடு --- 

ருக்க முயற்சியை ஆரம்பிப்போமா! 

ப்படிப் பட்ட முயற்சியின் முதல் படி காங்கிரஸ் கட்சியை
முற்றொட்டாக நிராகரிப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை தானே!








6 comments:

  1. ஓபாமாவை..ஓ பா(வாமா ன்ணு சொல்லீட்டீங்க..

    ReplyDelete
  2. //அப்படிப் பட்ட முயற்சியின் முதல் படி காங்கிரஸ் கட்சியை முற்றொட்டாகநிராகரிப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை தானே! //

    ஏறக்குறைய இதே தொனியில் தான் சில பதிவுகளை எழுதுகிறேன். ஒன்று புரிகிறது,இணையத்தில் உலாவரும் எவருக்கும் இதே மனநிலைதான் உள்ளதோ என்ற எண்ணம் வருகிறது. ஆனால் காங்கிரசை நிராகரித்துவிட்டு மீண்டும் எதனை கொண்டுவருவது என்பதில் எல்லோருக்கும் மிக மோசமான குழப்பங்கள் உண்டு. அதனை என்ன செய்வது?

    ReplyDelete
  3. வாருங்கள் திரு சரவணன்,

    ஒபாமா பாவமா, இல்லை தேர்ந்தெடுத்த ஜனங்கள் பாவமா என்பது இன்னமும் தெளிவாகவில்லை! ஒரு திறமையான சேல்ஸ் மேனேஜரைப் போல, பேசிப் பேசியே ஒபாமா அமெரிக்க அதிபராகவும் ஆகிவிட்டார். ஆனால், ஜனங்களுடைய எதிர்பார்ப்புக்களின் படி காரியமாற்ற முடியவில்லை. வங்கி, நிதித்துறை, ஆட்டோமொபைல்ஸ் என்று அமெரிக்க பகாசுர நிறுவனங்கள் எதுவும் எந்தக் கட்டுப்பாட்டையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.. அவைகளின் பணபலம், லாபியிங் என்ற பெயரில் நடக்கும் கூத்துக்கள், எதிர்க்கட்சியான ரிபப்ளிகன் கட்சியினரின் "சாமர்த்தியமான ஒற்றுமை" எல்லாம் சேர்ந்து, ஒபாமா நிஜமாகவே ஏதாவது செய்ய நினைத்தாலும் வரிசையாகப் போட்டுக்கொண்டிருக்கிற முட்டுக் கட்டைகளைத் தாண்டி வர ஒபாமா நிர்வாகத்தினால் முடியவில்லை. ஒபாமா அதிபரானது ஒரு கெட்ட கனவாக மாறிவிடக் கூடிய அபாயம் இன்னமும் இருக்கிறது.

    இதேபோலத் தான் பிரான்சிலும்! கவர்ச்சிகரமாகப் பேசியே, சார்கோசி அதிபராகிவிட்டார்! ஆனால், ஜனங்களுடைய அடிப்படை உணர்வுகளைப் புரிந்துகொள்ளவோ, பொருளாதார நெருக்கடிகளை சரி செய்யவோ முடியவில்லை! பிரெஞ்சு அதிபருக்கு, இவைகளை விட, தன்னுடைய மனைவி கார்லா ப்ருனியைப் பற்றி வரியும் செய்திகளைத் தொடர்ந்து ஊடகங்களின் குரல் வளையை நெறிக்கவே நேரம் சரியாக இருக்கும் போல!

    ReplyDelete
  4. வாருங்கள் மாணிக்கம்!

    காங்கிரசை நிராகரிக்க வேண்டும் என்பது எதற்காக? இந்தக் கேள்விக்குத் தெளிவான காரணங்களைப் புரிந்து கொண்டவர்கள், குழம்புவதில்லை.
    .
    கேரள அரசியல் களத்தைக் கவனித்திருக்கிறீர்களா? இங்கே தமிழ்நாட்டில் நடப்பதுபோல ஒரே கட்சி அல்லது கூட்டணிக்குத் தொடர்ந்து ஆளும் அதிகாரத்தை தேர்தலில் கொடுப்பதில்லை. மாறி மாறித் தான் வாய்ப்பை வழங்குகிறார்கள். அதில் குறைந்தபட்ச உத்தரவாதமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அந்த மாநிலத்தின் உரிமைகளை விட்டுக் கொடுப்பதில்லை. அதே மாதிரி நாமும் தற்போதைய ஆளும் கட்சியை அடுத்த முறை ஆளும் கட்சியாகத் தேர்ந்தெடுப்பதில்லை என்று ஒரு ஆரம்பமாக செய்து பார்க்கலாமே! மக்கள் பிரதிநிதிகளுக்குக் கொஞ்சம் குளிர் விட்டுப் போகாமல் செக் வைக்க உதவும்.

    இப்போதிருக்கும் தேர்தல் முறைகளில் இருக்கும் குளறுபடிகளை சரி செய்ய எந்த அரசியல் கட்சியுமே விரும்புவதில்லை. இருக்கும் ஒரு சில நல்ல நடைமுறைகளையும் நீர்த்துப் போகச் செய்வதிலேயே அத்தனை கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கின்றன. Winner takes all என்ற பிரிட்டிஷ் தேர்தல் முறையை உதறி எறிந்து விட்டு, ஒவ்வொரு அரசியல் கட்சியும் அது பெரும் வாக்குகளின் சதவீதத்திற்கு ஏற்றபடிதான், பிரதிநிதித்துவம் என்று மாற்றினால், இப்போதிருக்கும் கோளாறுகளில் பெரும் பாலானவற்றைக் களைய முடியும். தேர்தல் நேரங்களில் வெளியாகும் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைக்கும் உண்மையான ஆதரவு குறித்த புள்ளிவிவரங்களைத் தேடிப் பார்த்துக் கொஞ்சம் யோசியுங்களேன்!

    ReplyDelete
  5. கொஞ்சம் கொஞ்சமாக இங்கு ஒபாமா வெறும் பேச்சுதான் என்கிற கருத்து வந்து விட்டது. அவர் அடுத்தமுறை வெல்ல ஒரே ஒரு சந்தர்ப்பம் என்ன வென்றால் குடியரசு கட்சி சார்பாக சாரா பாலின் நிறுத்தப்பட்டால் மட்டுமே! அவருக்கு ஒபாமா எவ்வளவோ தேவலை என்ற நிலைமையினால்!
    கண்டிப்பாக காங்கிரஸ் சென்றே தீர வேண்டும். இல்லையேல் இந்தியாவில் கொஞ்சம் பாக்கி இருக்கிறதையும் விற்றுவிடுவார்கள்!

    ReplyDelete
  6. ஒபாமா ஒரே ஒரு தரம் தான் அதிபராக (one time President) என்று ரிபப்ளிகன் கட்சியினர் நக்கலாகச் சொல்வதை நீங்களும் நம்புகிறீர்களா என்ன! இன்னும் இரண்டு ஆண்டுகள் முழுதாய் இருக்கின்றன, அதற்குள் என்ன மாற்றங்கள் வேண்டுமானாலும் நடக்கலாம், இல்லையா!

    வேலைவாய்ப்புக்கள் தொடர்ந்து பறிபோய்க்கொண்டே இருக்கும் சூழ்நிலையில், ஹெல்த்கேர் அது இது என்று செலவுகளிலேயே குறியாக இருந்ததை நிறைய அமெரிக்க வாக்காளர்கள் விரும்பவில்லை. தவிர, வங்கி நிதித்துறையினரைக் கட்டுப் படுத்தப் போகிறேன் என்று பெயரளவுக்குக் கொடி பிடித்ததற்கே, அந்தத் துறையில் இருந்து கடுமையான எதிர்ப்பு, லாபியிங் இருக்கிறது. தவிர ஸ்பீக்கர் பெலோசியின் கடுமையான நடைமுறைகள் தான், இப்போது ஏற்பட்ட பின்னடைவுக்குக் காரணம் என்று அதிபர் தரப்பு கருதுகிறது.

    காலம் இன்னும் எத்தனை திருப்பங்களைக் கொண்டு வரும் என்பதை இப்போதே சொல்ல முடியாது அல்லவா?

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!