Showing posts with label ஒபாமா. Show all posts
Showing posts with label ஒபாமா. Show all posts

இனிமேலும் நம்புவதில்லை! அங்கே சொன்ன மாதிரி இங்கேயும்....!



435 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்கும், நூறு உறுப்பினர்களைக் கொண்ட செனேட்டிற்கும் கடந்த செவ்வாய்க் கிழமையன்று நடந்த இடைத் தேர்தலில் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி பெருத்த பின்னடைவை சந்தித்திருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சமயத்தில், ஒபாமா மீது அமெரிக்க வாக்காளர்கள் கொண்டிருந்த பெருத்த நம்பிக்கையும் கூட பின்னடைவை சந்தித்திருக்கிறது. 

ந்தப் பின்னடைவிற்குத் தானே காரணம் என்று ஒரு தரமல்ல, நான்கு முறை  ஒபாமா ஒத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை! கோபத்தோடு கொந்தளிக்கும் வாடிக்கையாளர்களிடம் ஒரு விற்பனை மேலாளர்  உணர்ச்சி பொங்கப் பேசுவது போல ஒபாமா பேசியதாக இந்த செய்தி சொல்கிறது.பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி இப்படிப்பட்ட  சரிவை 1948 இல் தான் சந்தித்திருப்பதாகவும் இந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.

Yes We can! என்று நம்பிக்கையோடு ஆட்சியைப் பிடித்த ஒபாமா,சீரழிந்த அமெரிக்கப் பொருளாதாரத்தின் போக்கில் குறிப்பிடத் தகுந்த மாற்றம் எதையுமே செய்ய முடியாத நிலையில்,  ஜனங்களுடைய ஆதரவை வேகமாக இழந்திருக்கிறார். 

பொருளாதாரச் சீரழிவுக்குப் பெரிய அளவு காரணமாக இருந்த ரிபப்ளிகன் கட்சி, இந்த அதிருப்தியை, நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

ந்த வருடம் ஜனவரியில் எழுதிய ஒரு நாள் போதுமா என்ற இந்தப்பதிவில், ஒபாமா தொடர்ந்து ஜனங்களுடைய ஆதர
வை இழந்துவருவதைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகவே பேசியிருந்தது நினைவிருக்கிறதா?

காங்கிரஸ் சபைக்கு இதுவரை தெரிந்த முடிவுகளில், ஜனநாயகக் கட்சிக்கு 188, ரிபப்ளிகன் கட்சிக்கு 239, முடிவு தெரிய வேண்டியவை 8 என்ற எண்ணிக்கையில், காங்கிரஸ் ரிபப்ளிகன் கட்சியின் வசம் வந்து விட்டது.செனேட் சபையில் ஜனநாயகக் கட்சிக்கு 53 இடங்களும், ரிபப்ளிகன் கட்சிக்கு 46 இடங்களும், முடிவு தெரியாமல் ஒரு இடமும் இருப்பதாகக் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் பார்த்த செய்தி தெரிவிக்கிறது.  


ந்த நிலையில் ஆசிய நாடுகளில் பத்து நாள் சுற்றுப் பயணமாக, அதில் முதல் மூன்று நாட்கள் இந்தியாவில் என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அவரது மனைவி மிஷெல்  மற்றும் பரிவாரங்களுடன் வந்து மும்பையில் இறங்கியிருக்கிற செய்தியை தொலைகாட்சி செய்திகளில் பார்த்துக் கொண்டிருந்தேன். அமெரிக்க அதிபரின் இந்த வி
யத்தில், வெறும் வாயை மெல்லப் பழகி விட்ட ஊடகங்களுக்குக் கொஞ்சம் கலர் கலராகப் பஞ்சுமிட்டாயைக் கட்டித் தொங்க விட்டுக் காண்பிக்கிற மாதிரி, அமெரிக்க அதிபரின் "வரலாறு காணாத விஜயத்தைப் பற்றி" கதை விட ஒரு சான்ஸ் கிடைத்திருக்கிறது என்பதைத் தவிர, ஒபாமாவின் இந்த விஜயத்தினால் சொல்லிக் கொள்கிற மாதிரி எந்த ஒரு பயனும் கிடைத்து விடப் போவதில்லை!

பொதுவாகவே ஜனாயகக் கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம், இந்தியாவுக்குத் தொந்தரவுதான்! அமெரிக்க அரசின் வெளியுறவுக் கொள்கையில், பாகிஸ்தானுக்கு இருக்கும் முக்கியத்துவம், இந்தியாவுக்கு எப்போதுமே இருந்ததில்லை. ஆனால், சீனாவிடம் பொருளாதார ரீதியாகத் தோற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவை முழுமையாகப் புறக்கணிக்க முடியாத சூழ்நிலையும் அமெரிக்காவுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிற நிர்பந்தம்.

தாஜ் ஹோட்டலில் தங்கி, தீவீரவாதிகளுக்கு ஒபாமா, ஒரு அழுத்தமான செய்தியைக் கொடுத்திருப்பதாக ஒரு சிரிப்புச் செய்தியைப் பார்க்க முடிந்தது.


ர்விங் வாலஸ் எழுதிய ஒரு புதினம், The Man. இந்தக் கதையின் விமரிசனத்தை இந்தப்பக்கங்களில் பார்த்திருக்கிறோம் நினைவிருக்கிறதா? 

ந்த மாதிரி எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த ஒபாமாவின் அரசியல் இந்த இரண்டு ஆண்டுகளுக்கு சற்றுக் குறைவான காலத்திலேயே புஸ்வாணமாகப் போனதைப் பார்க்கும் போது சற்று வருத்தமாகத் தான் இருக்கிறது. ஆனால் ஒபாமா, தான் எங்கே சறுக்கினோம் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப் படுவதாகவோ, இவர் தேறி விடுவார் என்று அமெரிக்க வாக்காளர்கள் நம்புவதாகவோ எந்த அறிகுறியும் இல்லை. இர்விங் வாலஸ் படைத்த அந்த உறுதியான ஆப்ரோ அமெரிக்கனைக் கற்பனையில் மட்டும் தான் பார்க்க முடியும் போல.


இனிமேலும் நம்புவதில்லை என்று அமெரிக்க வாக்காளர்கள் சொல்லிவிட்டார்களே!
 
மெரிக்க ஜனாதிபதியின் இந்த விஜயத்துக்கு அமெரிக்கா ஒரு நாளைக்கு இருபது மில்லியன் டாலர்கள் அல்லது சுமார் தொள்ளாயிரம் கோடி ரூபாய்கள் செலவு செய்வதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது போல, அமெரிக்கர்களுடைய தாராளத்துக்குப் பின்னால் என்னென்ன ஏமாற்றங்களை இந்த தேசம் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது இன்னும் சிறிது காலத்துக்குள்ளேயே தெரிந்து விடும்.

இந்தப் பதிவில் சொல்லியிருந்ததை மறுபடி நினைவு படுத்திக் கொள்வது மிக மிக அவசியம் என்றே கருதுகிறேன்!

மீன்களைக் காப்பாற்ற வேண்டுமென்றோ, காதல் கொண்டோ எவரும் தூண்டிலில் புழுவை வைத்துக் காத்திருப்பதில்லை!

லிகளுக்கு, ஊசிப்போன வடையோ வெங்காயமோ எதுவானாலும், கருணையினால் வைக்கப் படுவது இல்லை.

யேசு அழைக்கிறார் என்று கூவுகிறவன் கோடிகளில் மிதக்கிறான்! அழைப்பைக் கேட்டுப் போனவன், அவனிடம் தசம பாகத்தைக் கொடுத்து விட்டு, என் ஆண்டவர் மிகவும் நல்லவர், அவர் என்னை என்றும் ரட்சிப்பார் என்று பாடிக் கொண்டு  திரும்புகிறான்!

தே மாதிரித் தான்!

மூக நீதி காக்கிறேன், சமத்துவம் தருகிறேன் என்று இலவசங்களைத் தருகிறவன் என்ன நிலையில் இருக்கிறான், அதை நம்பிப் போகிறவன் என்ன நிலையில் இருக்கிறான் என்பதைக் கொஞ்சம் கண்திறந்து பார்த்தாலே புரிந்து விடும்!

சுதந்திரம் என்பது இவர்கள் பாடப் புத்தகங்களில் எழுதி வைத்தது போல, காந்தித் தாத்தாவும், நேரு மாமாவும் கடைக்குப் போய் வாங்கி வந்து கொடுத்ததல்ல!


ப்போது நமது பொறுப்பை உணரப் போகிறோம்?

ப்போதிலிருந்தாவது.---

லவசங்களில் ஏமாறுவது இல்லை என்ற உறுதியோடு !

லகத்  தொல்லைக் காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக என்று கூவும் பெட்டிகள் முன்னால் அமர்ந்து நேரத்தை வீணடிக்காமல்,

ங்கோ என்னமோ நடக்கிறது  எனக்கென்ன என்றிருக்காமல், சக மனிதர்களிடம் கொஞ்சம் அக்கறையோடு, பரிவோடு, பொறுப்போடு --- 

ருக்க முயற்சியை ஆரம்பிப்போமா! 

ப்படிப் பட்ட முயற்சியின் முதல் படி காங்கிரஸ் கட்சியை
முற்றொட்டாக நிராகரிப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை தானே!








சண்டேன்னா மூணு! புள்ளிராசா வங்கி! ஒபாமா! கூகிள்!



ஒரு வருடத்துக்கு முன்னால் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றுக் கொண்ட போது , ஐயோ பாவமே என்று தான் பரிதாபப் படத் தோன்றியது! 

காரணம், அதற்கு முந்தைய எட்டு ஆண்டுகளில், ஜார்ஜ் புஷ் அமெரிக்கப் பொருளாதாரத்தைக் கொண்டுபோய் நிறுத்தியிருந்த இடம் அப்படி! ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம், இந்தியாவுக்குக் குடைச்சல் அதிகமாகும், பாகிஸ்தானுக்குக் கொஞ்சம் அதிகமாகவே கொம்பு சீவப் படும் என்ற பழைய நிலை இன்னமும் இருக்கத் தான் செய்கிறது!

இந்த ஒரு ஆண்டில், அமெரிக்காவைத் தூக்கி நிறுத்திவிட முடியாது என்பது எல்லோருக்குமே தெரிந்தது தான்! ஆனாலும், நம்மூர் அரசியல் வாதிகளிடமிருந்து ஸ்பெஷல் ட்யூஷன் எடுத்துக் கொண்டார்களோ என்னவோ,  ரிபப்ளிகன் கட்சி கொஞ்சம் ஓவராகவே ஒபாமாவைச் சீண்டிக் கொண்டிருக்கிறது.

மருத்துவக் காப்பீடு எல்லோருக்கும் என்று ஒபமா அறிவித்ததில், எப்போதுமே வலதுசாரிகள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் அடைகிற அமெரிக்க மக்கள், ஒபாமாவை இடதுசாரி என்று நினைக்க ஆரம்பித்து விட்டது போல, ஆதரவு சதவீதம் கொஞ்சம் குறைந்து வருவதாக செய்திகள் சொல்கின்றன! இடது சாரி என்பது அமெரிக்காவில் ரொம்பவுமேகெட்ட வார்த்தை! 


அமெரிக்க நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தில் இரண்டு சதவீதம் வரை கட்சிகளுக்குத் தேர்தல் நிதியாக அளிக்கலாம் என்பதை அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழிமொழிந்திருப்பதைக் குறித்து, முந்தைய பதிவில் வாசகர் ஒருவர் கவலை தெரிவித்திருந்தார். இது பற்றிய செய்திக் கட்டுரை, பணம் என்பது பேச்சு சுதந்திரமாக முடியாது, கார்பரேஷன்கள் (பெரிய நிறுவனங்கள்)மக்களாகி முடியாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்வதைப் படிக்க.




oooOooo 

புள்ளிராசாவுக்குப் புள்ளி வருமா? நீண்ட நாட்களுக்கு முன்னால் இந்தியாவில் மிகப் பெரிய எய்ட்ஸ் விழிப்புணர்வு விளம்பர ஸ்லோகன் இது! எய்ட்ஸ் நோயை விட, அமெரிக்க வங்கிகளின் பேராசை மிக ஆபத்தானது, அவர்களோடு மட்டும் நின்றுவிடாமல், சுற்றியுள்ளவர்களையும் அழித்துவிடும் அளவுக்குப் பரந்துவிரிந்த நோயாக இருப்பதை, இந்தப் பக்கங்களில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம்!


தறிகெட்டுப்  பாய்ந்துகொண்டிருக்கும் மாட்டுக்கு மூக்கணாங்கயிறு கட்டுவது போல, பாரக் ஒபாமா சென்ற வியாழனன்று வங்கிகளைக் கட்டுப் படுத்த சில நெறி முறைகளாகச்  சட்டம் இயற்றப் போவதாக அறிவித்திருப்பது கொஞ்சம் அதிர்வுகளை உண்டாக்கி இருக்கிறது! 1929 இல் அமெரிக்கா சந்தித்த  நிதித்துறைச் சரிவிலிருந்து மீள்வதற்கு, பத்து ஆண்டுகளுக்கு மேலாயிற்று.

இப்போது ஓராண்டிலேயே, அதைவிடப் பெரிய சரிவில் இருந்து அரசு, வரிப்பணத்தின் உதவியோடு மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்க நிதித்துறை, மறுபடி கட்டை மீறிப் பழையபடிப் புகுந்து விளையாட ஆரம்பித்திருக்கிறது.

"உன்னை விட மாட்டேன்" என்று ஒபாமா அறிவித்திருக்கிறார். தேவையானால் சண்டைக்களத்தில் இறங்கவும் தயார் என்றும் சொல்லியிருக்கிறார்.  அமெரிக்க வங்கித் துறையும் ஒரு யுத்தத்திற்குத் தயாராகிக் கொண்டிருப்பது போலத் தான் தெரிகிறது. 
   சொரிபிடித்தவன் கை சும்மா இருக்காது எண்பது போல, பேராசைக் காரனும் சூதாடியும் சும்மா இருக்க முடியுமா என்ன?   

எண்பது  வருட இடைவெளிக்குள் நிகழ்ந்த இந்தப் பொருளாதாரச் சரிவுகளில், குறிப்பிடத் தகுந்த மாற்றம் என்னவென்றால், சாமானிய அமெரிக்க ஜனங்கள், இந்த முறை கைகட்டி வேடிக்கை பார்க்கவில்லை. ஜனங்களுடைய கோபம், கார்பரேட் கொள்ளைகளுக்கு, பேராசைக்கு எதிராக ஒரு இயக்கமாகவே நடந்து கொண்டிருக்கிறது.




"MOVE YOUR MONEY"  என்று, பெரிய வங்கிகளில் இருந்து பணத்தைச் சிறிய நடுத்தர உள்ளூர் வங்கிகளுக்கு மாற்றும் இயக்கமாக அங்கே சத்தமே இல்லாமல் ஒரு மாறுதல் நடந்து கொண்டிருப்பது, ஒபாமாவுக்குச் சாதகமாக இருக்கக்கூடும்! 

என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்! நிச்சயமாக, நம்மூர் காங்கிரஸ்காரன் மாதிரி ஆறப்போட்டு, மறக்கடிக்க வைக்கிற டெக்னிக் அமெரிக்கர்களுக்கு இன்னமும் தெரியாது!


oooOooo 



 

கூகிள் -சீன த்வந்த யுத்தத்தில், வெளியே அதிகம் விவாதிக்கப் படாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன!


உலகம் முழுக்க கூகிள் நான் தான் நம்பர் ஒன் என்று மார்தட்டிக் கொண்டாலும், சீனாவைப்  பொறுத்தவரை  கூகிள் இரண்டாவது இடத்தில் தான் இருந்துவருகிறது. உள்ளூர்த் தயாரிப்பான பைடூ டாட் காம் தான் அங்கே நம்பர் ஒன் தேடுபொறி!  தினசரி முப்பது கோடி வருகைகள், தேடுபொறி உபயோகத்தில், வருமானத்தில்  அறுபத்து மூன்று சதவீதத்தைக் கையில் வைத்துக் கொண்டு நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது! கூகிள் ஆண்டவர், அங்கே வெறும்  முப்பத்து மூன்று சதவீதம் தான் உபயோகத்தில் உள்ளார்! முதலிடத்தைப் பிடிக்க முடியாது என்ற ஒரு விஷயமே கூட, சீனாவை விட்டு வெளியேறிவிடலாம் என்ற கூகுளின் முடிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் iResearch என்கிற சீன ஆராய்ச்சி நிறுவனம்  சொல்கிறது!


பீகிங் பல்கலைக் கழகத்தில் படித்துவிட்டுப் பிறகு, நியூ யார்க் மாகாணப் பல்கலைக் கழகத்தில் படிக்க வந்த ராபின் லீ என்ற 41 வயது  இளைஞர் தாயகம் திரும்பியவுடன் இன்னொரு நண்பருடன் சேர்ந்து துவக்கிய பைடூ உள்ளூர் மக்களுடைய ரசனைக்குத் தீனி போடுவதில் தன்னுடைய தனித்தன்மையை நிலை நாட்டிக் கொண்டது. பாட்டு, பொழுதுபோக்கு என்று அலைந்த சீன இளைஞர்களுக்கு பைடூ நல்ல தளமாக இருந்ததில் வியப்பொன்றுமில்லை!

தகவல்களைத் தேடத் தேடு போறியா,அல்லது பொழுதுபோக்கத்
தேடு போறியா என்ற கேள்வியில், பொழுதுபோக்கு முதலிடம் பெற்றதில் ஆச்சரியமென்ன இருக்கிறது!


தவிர சீன அரசின் மனோபாவத்தைப் புரிந்துகொள்வதில் கூகுளுக்கு இயல்பாகவே ஒரு தடியன்கள் இருந்து வந்ததையும் பார்க்க வேண்டும்! Don't be evil என்ற முழக்கத்தோடு புறப்பட்ட கூகிள் சீனாவில், முழக்கத்தைத் தொண்டைக்குழிக்குக் கீழேயே  வைத்துக் கொண்டு செயல் படத் தயாராக இருந்தாலும் அவ்வப்போது உரசல்கள் வந்துகொண்டுதான் இருந்தன! வெளியேறவும் தயார் என்று வீரப் பிரதாபமாக முழங்கி இரண்டு நாட்களிலேயே, அப்படி ஒரு எண்ணம் இல்லை என்று அறிவிக்க வேண்டிய நிலையும் வந்தது.கூகுளின் அறிவிப்பைச் சீன அரசு நேரடியாகத் தொட்டு எதையுமே கண்டு கொள்ளவில்லை.

ஹில்லாரி கிளிண்டன் இணைய நடைமுறைகளைப் பற்றி உபதேசம் செய்ய முற்பட்ட போது, பாடம் கேட்டுக் கொள்வதற்கெல்லாம்  அவசியமே இல்லை என்று அமெரிக்கத் திமிருக்கு ஒருபங்கு கூடுதலாகவே சீனஅரசு பதில் சொல்லவும் தவறவில்லை!

கூகிள் என்று மட்டுமில்லை, சீனாவின் சந்தையைப் பிடிக்கும் கனவுகளோடு உள்ளே நுழைந்த அமெரிக்க கம்பனிகள் அத்தனையுமே இந்த இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டு விழிப்பது இன்னொரு வேடிக்கை! 


சீனர்களைப் பொறுத்தவரை, நவீனத் தொழில் நுட்பம், செய்முறைகளை, ஆராய்ச்சியோ, செலவோ இல்லாமல் காப்பியடித்து, ஒரிஜினலைத் துரத்துகிற கலை நன்றாகவே கை வருகிறது! ஆராய்ச்சி புண்ணாக்கு என்று ஏகப்பட்ட செலவை செய்து விட்டு, அதை வைத்து ஒன்றுக்குஆயிரமாக  கொள்ளை லாபம் பார்க்கலாம் என்று வந்தவர்கள், சீன டிராகனின் சாமர்த்தியத்துக்கு முன் ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறுவதைப் பார்க்கும்போது, வினோதமான வேடிக்கையாகத் தான் இருக்கிறது!


WTO, GATT, INTELLECTUAL PROPERTY RIGHTS, MONOPOLY, TECHNOLOGY AS NEW FORM OF CAPITAL இப்படி அமெரிக்கா சமீபத்திய காலங்களில் உலகையே ஆட்டிப் படைத்தது எல்லாம், வெறும் கேலிக் கூத்தாகவே இருக்கிறது!  அவனை இவனுக்கு எதிராகத் தூண்டிவிட்டு, அப்புறம் இவனைக் கொஞ்சம் தடவிக் கொடுத்து விட்டு வேறொருவனுக்கு எதிராகத் தூண்டிவிட்டு, ரஷ்யாவைச் சிதறு தேங்காய் போலச் சிதற  விட்ட சாமர்த்தியம், ஆப்பில் சிக்குண்ட குரங்கு கதையாக சீனாவில் ஆகிப் போனதைப் பார்க்கும்போது----

சீனப் பெருமிதம் அல்லது சீனப் பூச்சாண்டி, வெற்று உதார் விடுவதில் நிறையவே இருக்கிறது என்றாலும், அவர்களுடைய சாமர்த்தியத்தை வியக்காமல் இருக்கவும் முடியவில்லை! 


உதார் விடுவதை ஒரு பெரும் கலையாகவே சீனர்கள் வளர்த்து வைத்திருப்பதும் புரிகிறது! 

கொஞ்சம் சரக்கு இருப்பதும்தெரிகிறது!