என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! எப்படிப் பட்ட தவறாக இருந்தாலும் துணிந்து செய்யலாம்!


நாளென் செயும் வினைதான் என் செயும் எனை நாடிவந்த
கோளென் செயும் கொடுங்கூற்றென் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் பாடல் 38

கடவுள் வந்து நம்மைக் காப்பாற்றுவார், நம்முடைய பிரச்சினைகள் தீர்வதற்குத் துணை நிற்பார் என்று நம்புகிற ஒரு சராசரி மனிதனை விட, கையில் கொஞ்சம் காசு இருக்கும் நபர்களுக்குப் பெரிய நம்பிக்கை, பக்க பலம் ஒன்று இருக்கிறது!

என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! எப்படிப் பட்ட தவறாக இருந்தாலும் துணிந்து செய்யலாம்!

கவனிக்க வேண்டிய விதத்தில் "கவனிக்கத் தெரிந்தால்" போதும்! 

அற்பக் காசுக்காக, தவறுகளுக்குத் துணை நிற்பதற்கு அரசு ஊழியர்களும், காவல்துறையின் துணியை நாடி புகார் கொடுக்கச் சென்றால் இவனிடம் காசு பெயராது என்று தெரிந்தால், புகாரை ஊற்றி மூடி விடுகிற தன்மையும், உடனடி நிவாரணம் தேடி நீதிமன்றத்துக்குப் போனால், இதற்கெல்லாம் கீழேயே பார்த்துக் கொள்கிற வசதி இருக்கிறதே என்று "தள்ளுபடி" செய்து விடுகிற தன்மையும் ஒன்று சேர்ந்தால், தவறு செய்கிறவனுக்குக் கொண்டாட்டம் தானே!

அப்புறம் என்ன!!

என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! எப்படிப் பட்ட தவறாக இருந்தாலும் துணிந்து செய்யலாம்! அப்படித்தானே!

கொண்டாட்டம் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு சாம்பிள் இங்கே!


கொண்டாட்டம் எப்படி இருக்கும் என்பதற்கு இன்னொரு சாம்பிள் இங்கே!



கேள்வி கேட்பதற்கு நாதி இருந்தால் தானே! கேட்க முனைபவனை சரிக் கட்டி விட்டால்....!

இங்கே ஈரல் மட்டுமல்ல, மொத்தமுமே அழுகிச் சீரழிந்து போன ஒரு அமைப்பைச் சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதாவது புரிகிறதா? 



என்ன செய்யப்போகிறோம், என்ன செய்ய வேண்டும் என்ற
மாதிரிக் கேள்விகளுக்கு சரியான விடை, முதலில் நடப்பை சரியாகப் புரிந்து கொள்வதில் இருந்து ஆரம்பிக்கிறது! 


நடப்பைப் பார்ப்பதில் எழும் கோபம், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவான எண்ணமாக உருவாக ஆரம்பிக்கிறது! எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது.

உருப்படியாக ஒன்று சேர்ந்து செயல்படுவதற்கு அதுவே சரியான ஆரம்பமாகவும் மாறுகிறது! 



இங்கே கொஞ்சம் அதிக விவரங்களுடன்..........

 




No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!