சமூக ஊடகங்களில் ட்வீட்டர் ஸ்பேஸ் மற்றும் கிளப் ஹவுஸ் எனப் புதுப்புது விஷயங்கள் புழக்கத்தில் வந்து இருப்பதை முகநூலில் நண்பர் ராம்ஜி யாஹூ வழியாக ஒரு சோறு பதம் பார்த்திருக்கக் கூடும். இந்த கிளப் ஹவுஸ் அரட்டை ஒன்றில் பாடகி சின்மயியிடம் ஒரண்டை இழுத்த மருத்துவர் மன்னாப்பு கேட்டு ட்வீட்டரில் மன்றாடிய கதை கூட நண்பர்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் clubhouse அரட்டைகளில் வேறு அபத்தங்கள், விபரீதங்கள் இருப்பதை சோனியா காங்கிரசின் டிக்கி சிங் என்கிற திக்விஜய் சிங் நிரூபித்திருக்கிறார். ராகுல் காண்டிக்கு அரசியல் சொல்லிக்கொடுத்தவர் இவர் என்பதை இந்தத் தருணத்தில் நினைவில் கொள்வது நல்லது
ஜிதின் பிரஸாதா பிஜேபியில் சேர்ந்ததும் காங்கிரஸையும் திக்குவாய் சிங்கையும் ஓவர் டைம் போட்டு செருப்பால் அடிப்பதுபோல் ட்வீட் போட்டிருக்கிறார். திக்குவாய் சிங் எப்பவுமே பாகிஸ்தானுக்கு ஆதரவா மட்டுமே பேசுவாரு. கொஞ்சம் விட்டா ஏன் பாகிஸ்தானை உடைத்தார் என்று இந்திரா காந்தியையே திட்டினாலும் திட்டுவார்னு எழுதி இருக்கிறார். அவர் எழுதாமல் சொல்ல வந்தது... இந்திரா காந்தியைப் பற்றி.. அப்படி பேசச் சொல்லி சோனியா காந்தி தூண்டிவிட்டு ரசித்தாலும் ரசிப்பார் என்பது.
மோதிஜி ஒண்ணும் சும்மா சொல்லவில்லை.. “காங்கிரஸ் முக்த் பாரத்” வேணும்னு. அப்ப மட்டும்தான் பாரதம் உருப்படும்..! என்று டிக்கி சிங்கின் clubhouse உளறலை குறித்து முகநூலில் எழுதியிருக்கிறார் திருமதி பிரேமா. இதோ ஜிதின் பிரசாதாவின் ட்வீட்.
தேசத்தை விட, மோடியை எதிர்ப்பதற்காக எவருடன் வேண்டுமானாலும் கூட்டு என்பதாக சோனியா காங். கிகளின் லட்சணம் கடந்த 7 ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆர்டிகிள் 370 காலாவதியாகி, அங்கே அதை மறந்து ஜனங்களும் இயல்பு நிலைக்குத் திரும்புகிற தருணத்தில் குழியில் புதைத்ததை மறுபடி தோண்டி எடுப்பானேன்? ஒப்பாரி வைப்பது ஏன்? தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் ஆர்டிகிள் 370 ஐத் திரும்பக் கொண்டுவருவோம் என்பதெல்லாம் என்னமாதிரியான அரசியல்?
மப்பில் விஜயகாந்துடன் மல்லுக்கட்டி அதிலிருந்து தப்பிக்க திமுகவுக்குத் தேர்தல் பிரசாரம் செய்யப்போய் தன்னுடைய மார்க்கெட்டையே பறிகொடுத்த நடிகர் வடிவேலுவின் திரைக்காவியங்களில் ஒன்று இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி.
வடிவேலுவே மறந்தாலும் நம்மூர் அரசியல் அவரை விடுவதாயில்லை என்பதற்கு சாணக்யா தளத்தில் இன்று வெளியாகி இருக்கும் ஒரு மீம். சந்தேகசாம்பிராணி யார் என்பதாவது புரிகிறதா? அது வடிவேலுவோ சாணக்யா தளமோ இல்லை, நாம்தான்! புரிந்துகொள்கிறோமா என்ன? !!
அரசியலோடு கொஞ்சம் புத்தக அறிமுகம் ஒன்றையும் பார்த்து விடலாமா?
நான் இப்போது மறுவாசிப்புக்காக எடுத்துக்கொண்டு இருக்கிற புத்தகம் லியோன் ஊரிஸ் என்ற எழுத்தாளர் 1958 இல் எழுதிய நாவல் Exodus இஸ்ரேல் என்றொரு நாடு 1948 இல் பிறந்த கதையைச் சொல்வது. முன்பே படித்ததுதான்! இப்போது மறுவாசிப்பாக.
இஸ்ரேல் என்றாலே இன்றைக்கும் ஒரு புரியாத புதிராக, விளங்கிக்கொள்ள முடியாத அதிசயமாகத்தான் பார்க்க முடிகிறது. மோகன் குருசாமி இந்தப்புத்தகத்தைப் பற்றி 2017 இல் எழுதிய எதிர்மறையான விமரிசனம் இங்கே.
மீண்டும் சந்திப்போம்.





