சனிக்கிழமை #இட்லிவடைபொங்கல்

சாதி ஒழிப்பு சாதிமறுப்பு என்பதெல்லாம் பகுத்தறிவு #திராவிடங்கள் செய்கிற கண்துடைப்பு வேலைதான் என்பதை திமுக தலைவர் கருணாநிதி  மாவட்டச் செயலாளர்கள் தேர்தலில்  எத்தனைபேர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை சாதிவாரியாகப் பட்டியலிட்டு அறிவித்திருக்கிற செய்தி இங்கே  அரசியல்வாதிகளுக்கு  செலக்டிவாக அம்னீஷியா -ஞாபகமறதி வந்து விடுவதை  ஞாபகப்படுத்திக் கொள்வதற்காக தினமணி நாளிதழில் அடடே!மதி வரைந்த பழைய கேலிச்சித்திரம் இங்கே!

கருணாநிதி அறிவித்திருக்கிற 60 மாவட்டச்செயலாளர்களில் முக்குலத்தோர் 14 கொங்குவேளாளர், வன்னியருக்குத்தலா  8, நாயுடு முஸ்லிம் 4 முதலியார் 3, உடையார்,பிள்ளைமார், ரெட்டியார், மீனவர், எஸ்சி  சாதியினருக்குத் தலா இரண்டு அப்புறம் செட்டியார்,   யாதவர், நாடார், கிறித்துவ நாடார், கவுடு,,மருத்துவர் , முத்தரையர் சாதிகளுக்குத் தலா 1 ஆக மொத்தம் அறுபதில் ஒரே ஒரு பெண் அப்புறம் முதல் முறையாக  2 ஆதிதிராவிடர்கள் மாவட்டச் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்களாம். #திராவிடங்கள் #சாதிஒழிப்பு பற்றி வாய் கிழியப் பேசுவார்களே தவிர சாதிபார்த்துத்தான் எல்லாக் கணக்குகளும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு மேல் வேறென்னவாம்? 

இந்த அறிவிப்பில் சொல்ல மறந்தது போட்டி வருமென்கிற இடங்களில் புதுமாவட்டங்களாகப் பிரித்துப் போட்டியாளர்கள்அத்தனை பேருக்கும் இடம் கொடுத்ததும், மாசெக்கள் மாற்றப்படுவார்கள் என்று சொல்லப் பட்டதில் பழைய மாசெக்கள் கைகாட்டினவர்களே வந்திருக்கிறார்கள் என்பது. முக ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு முன்னுரிமை என்றானதில் அழகிரி தவிர, ராசியான மகளுமே கூட சோகத்தில் பெருங்கோபத்தில் என்பதுமே சொல்லப்படாத ஆனால் அத்தனைபேருக்கும் தெரிந்த ரகசியம்!
   
*********


2014 ஆம் வருடம் முழுக்க முழுக்க நரேந்திரமோடியின் வருடமாகவே ஆகிப் போனது.பிறந்திருக்கும் இந்த 2015 ஆவது ராவுல்பாபாவுக்கு ஆறுதல், உற்சாகம் அளிக்கும் வருடமாக இருக்குமா என்பதையே இங்கே 
சந்தேகப்படுகிறார்கள். 1998 இல் காங்கிரஸ் கட்சி தேர்தல்களில் அடைந்த தோல்விக்குப் பொறுப்பாக்கி சீதாராம் கேசரியைக் கதறக் கதற வெளியே தள்ளிவிட்டு சோனியா தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதைப் போல ராவுல்பாபாவுக்கும் ஆகிவிடலாம் என்று ஒரு ஊகம். ஆனால் #பாசமலர் பியங்கா தயாராக இருக்கிற மாதிரித் தெரியவில்லை.

கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி நீண்ட காலமாகிவிட்டது. இன்னும் தேய்ந்து என்னவாகப் போகிறார்கள் என்பது தெரியாமல் சென்ற டிசம்பர் 29 ஆம் தேதி 130வது துவக்க தினத்தைக் கொண்டாடிய காங்கிரஸ்காரர்கள் தவிப்பு. ஆளும் கட்சியாகவேஇருந்து சகல சௌகரியங்களையும் அனுபவித்தவர்கள் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் செயல்படுவதெப்படிஎன்பது புரியாமல் தவிப்பதும் இதர உதிரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்தும் கூட ஒரு நிலையான உருப்படியான எதிர்க்கட்சியாக உருவாகாமல் இருப்பது அவ்வளவு நல்ல அறிகுறியல்ல. 
******


#PK  அமிர்கான், அனுஷ்கா,சஞ்சய் தத் நடித்து சென்ற மாதம் வெளியான படம்.கடவுள் பெயரைச் சொல்லி எப்படி ஏய்த்துப் பிழைக்கிறார்கள் என்பதை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கும் படம் நன்றாகத்தான் இருக்கிறது பாக்ஸ் ஆபீசிலும் முதலிரண்டு வாரத்துக்குள்ளேயே இந்தியாவில் ரூ.278 கோடி வசூலைக் குவித்திருக்கிறது. சிலபல கலாசாரக் காவலர்கள் இது இந்து மதத்தினரைப் புண்படுத்துகிறது அதனால் தடை செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் அங்கங்கே கொதித்துக் கொண்டிருக்கிறார்கள், எரிகிற தீயில் எண்ணெய்  ஊற்றுகிற மாதிரி உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் இந்தப் படத்துக்குக் கேளிக்கை வரிவிலக்குப் பொங்கல்  என்பதை விட, படத்தை இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்து பார்த்ததாகச் சொல்லியிருப்பதுதான் உச்சபட்சக் கொளுத்தல். இவர் மட்டும் டவுன் லோடலாம் ஜனங்கள்மட்டும் காசு கொடுத்துப் பார்க்க வேண்டும்! இந்த 
சிக்குலர்சிங்கங்கள் அடிக்கிற கூத்து இருக்கிறதே.....!


யாரோ புண்ணியவான் யூட்யூப் தளத்திலேயே முழுப்படமும் பார்க்கிற மாதிரி அப்லோட் செய்திருக்கிறார். இன்றைக்கு சனிக்கிழமை! இட்லிவடைபொங்கல் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? 

தன்னையறியத் தனக்கொரு கேடில்லை! மாறாக, பழக்கங்களின் அடிமைகளாகவே இருந்துவிட்டால் ....?

..




வ்வொரு புத்தாண்டு தினமும் ஸ்ரீ அரவிந்தாசிரமத்தில் மிக சிறப்பாகக் கொண்டாடப்படும் தரிசன நாள். ஸ்ரீ அரவிந்த அன்னை ஸ்தூல உடலில் இருந்த நாட்களில் ஆசிரமத்தில் இருந்த சாதகர்கள் ஒவ்வொருவருக்கும் அந்த வருட காலண்டர்மற்றும் புத்தாண்டு செய்தியுடன் வாழ்த்து அட்டைஎப்போதும் போல அவரவர் பக்குவத்துக்கேற்ப மலர்கள் என்றுஅன்னையின் திருக்கரங்களாலேயே பெறுவார்கள்.


ஸ்ரீ அன்னையை ஆராதிப்பவர்கள்தவமிருந்து அவளுடைய செய்தியைஆசியைப் பெறுவதற்காகக் காத்திருக்கும் பொழுது இது.

 
ஸ்ரீ அரவிந்த அன்னையே! உ ன் திருவடிகளை வணங்குகிறேன்.

[I+pray+to+thee+guide+copy.jpg]
தன்னிடமிருக்கும்போது பெரிதாகத் தோன்றாத அதே தவறு அல்லது பழக்கம், பிறரிடம் பார்க்கும்போது கேலி, கண்டனத்துக்கு உரியதாகி விடுகிற வேடிக்கையைப் பற்றி ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்கிறார்.

"நம்மிடம் ஒரு பலவீனம் இருக்கிறதுஉதாரணமாக கேலிக்குரிய ஒரு பழக்கமோஏதோ ஒன்று தவறாகவோஅல்லது அரைகுறையாகவோ இருப்பதாக வைத்துக் கொள்வோம்அது நம்முடைய சுபாவத்தின் ஒரு அங்கமாகவே ஆகிவிடுவதால்அது இயல்பானது தான் என்று கருதுகிறோம்அது எந்தவிதத்திலும் நம்மை அதிர்ச்சிக்கோவியப்புக்கோ உள்ளாக்குவதில்லை!
 
அதே கேலிக்குரிய பழக்கம்தவறுஅல்லது அரைகுறையான விஷயம் மற்றவர்களிடத்தில் பார்க்கும்போதுமிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகிறோம்.

நம்மிடத்திலே அதே குறை இருப்பதைக் கொஞ்சமும் கவனியாமல்அடுத்தவரிடத்தில் அதைப் பார்த்து, "என்னஇவர் இப்படிப்பட்டவரா?" என்கிறோம்!

ஆகநம்மிடம் இருக்கும் அழுக்குடன்அதைக் கவனியாமல் இருக்கிற மடத்தனமும் சேர்ந்து கொள்கிறது.

இதில் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறதுயாரோ ஒருவருடைய ஏதோ ஒரு செய்கைபேச்சு உங்களுக்கு முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாததாகத் தோன்றும்போதுகேலி செய்யத் தோன்றும்போது, "என்னஅவர் அப்படி இருக்கிறாராஅப்படி நடந்து கொண்டாராஅப்படிச் சொன்னாராஅப்படிச் செய்தாரா?" என்று நினைக்கும்போதுஉங்களுக்குள்ளேயே சொல்லிப்பாருங்கள்!

நல்லது!நான் கூட எனக்குத் தெரியாமலேயேஅப்படித் தான் செய்கிறேனோ என்னவோஅவரை விமரிசிப்பதற்கு முன்னால்என்னையே முதலில் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்அதே மாதிரி நானும் வேறெந்த வகையிலும் செய்யாமல் இருக்கிறேனா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்! "

அடுத்தவருடைய நடத்தையைக் கண்டு "அதிர்ச்சியடையும் ஒவ்வொரு தடவையும்இதே மாதிரி நல்ல விதமாகவும்புத்தியுடனும் இருக்கப் பழகினால்,வாழ்க்கையில் மற்றவர்களுடனான உறவு ஒரு கண்ணாடியில் பிரதிபலிப்பதைப் போல இருப்பதைக் காணமுடியும்நமக்குள் இருக்கும் அழுக்கு,பலவீனங்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

பொதுவாகப் பார்க்கப் போனால்அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை,பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பது தான்,என்ன கொஞ்சம் வித்தியாசமாகமறைவாகஅல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான்நம்மிடம் இருக்கும் குறை பெரிதாகதீமை இல்லாததாகத் தெரிவதுஅடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது!"

1958 ஆம் ஆண்டு நவம்பர் ஏழாம் தேதிஸ்ரீ அரவிந்த அன்னை, "எண்ணங்களும் சிந்தனை மின்னல்களும்என்ற ஸ்ரீ அரவிந்தருடைய நூலில் இருந்துஒரு சிந்தனையை விளக்கிச் சொன்னதன் ஒரு பகுதி. அன்னை நூல் தொகுப்பு நூற்றாண்டுப்பதிப்பு, தொகுதி 10 பக்கம் 20-21