Bonne Annee! Happy New Year!

Bonne Année 2012
 

 
 
 
கடந்து போன வருடம், ஊழல், செயலற்ற தன்மை, கையாலாகாத் தனம், பொறுப்பற்ற அரசியல், தங்களால் எதுவுமே செய்ய முடியாதென்று சோம்பிக் கிடந்த ஜனங்கள் என்று ஒன்றைக் கூட விட்டு வைக்காமல் இந்த தேசத்தை ஒரு போட்டுப் புரட்டி விட்டுப் போயிருக்கிறது.

நானே உன் ரட்சகனும், மீட்பனும் ஏழைப் பங்காளனுமாய்  இருப்பேன் என்று தங்களுடைய கோரமுகத்தை வெற்று வாக்குறுதிகளில், இலவசங்களில் மறைத்துக் கொண்டு சுயநலம், குடும்பநலம் என்றே ஆகிப்போன தலைவர்களும், எவ்வளவு அம்பலப்பட்டுப் போனாலும் இவர்களது புரட்டுக்களில் மயங்கிக் கிந்தாலும் கிடப்பேன், ஆனால் மாற்றத்துக்காக ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட மாட்டேன் என்று சோம்பிக் கிடந்த ஜனங்களும் சூடுபட்டது போல வீறிட்டெழ 1,76,000,00,00,000 என்ற மந்திர எண் வரவேண்டி இருந்தது.

இத்தனை பூஜ்யங்களை பார்த்ததே இல்லை என்று ஆச்சரியப்பட்ட நீதியும் கூட, பூஜ்யங்களைப்பார்த்த மயக்கத்தில் மறுபடி தூங்க ஆரம்பித்து விட்டதோ என்று சந்தேகப்படும்படி, 2011 ஆம் ஆண்டு ஒருவித அலுப்புடன் சஸ்பென்சாக விட்டுப் போயிருக்கிறது.

தூண்டிலில் புழுவை வைப்பது எப்படி மீன்களின் மீதான காருண்யத்தினால் இல்லையோ, அப்படியே இலவசங்களுமே கூட ஒரு மாயைதான் என்பதைப் புரிந்துகொள்ளாத ஜனங்கள் கொஞ்சம் விழித்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள் என்று சந்தோஷப்பட ஆரம்பித்த தருணத்திலேயே, இலவசங்கள் கொஞ்சம் ஓவர் டோசாக..! ஜனங்கள் மறுபடி  தூங்கப்போய் விட்டார்களோ? 
 
2011 ஒரு கேள்வியையும் எழுப்பி விட்டுப் போயிருக்கிறது!

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன்திருவடிகளைச் சரணடைகிறேன். எனது கரணங்கள்,மனம், ஜீவன் அனைத்தையும் உன் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன். உனது கருணைக்குப் பாத்திரமாகும் தகுதியை அருள்வாய்,உனது பிரியத்துக்குத் தகுதியான குழந்தையாக வரமாக அருள்வாய்!

பிறக்கும் இந்தப் புத்தாண்டு,ஒளிமயமானதாக இருக்க வரம் தருவாய். பாரத தேசம் பார்க்கெல்லாம் திலகம். உலகின் ஆன்மீக குருபீடமாக திகழும் புண்ணிய பூமி. தகுதியற்றவர்களிடம் சிக்கித் தலை குனிந்து கொண்டிருக்கும் நிலை இன்னும் தொடரலாமோ?

அம்மா, மகா காளீ! உன்னை வணங்குகிறேன்! சிறுமையை அழித்து, சீர்மையை அருள்வாய்!

ஓம் ஆனந்தமயி, சைதன்ய
யி, சத்யமயி பரமே!
 


5 comments:

  1. வாருங்கள் மாணிக்கம்!

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கு மிகவும் நன்றி, அப்பாத்துரை சார்!

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இறையருளால், இந்தப் புத்தாண்டு மிக இனிமையாக அமைய அன்னையிடம் இறைஞ்சுகிறேன்!

    ReplyDelete
  4. Wish you a Prosperous and Happy New Year 2012.

    ungal arasiyal kanavukal ellam 2014 pinnarthan nadakkum. uulal peruchalikal odukkap paduvarkal. athu varai poruthu irunkal

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!