காங்கிரஸ் என்றால் ஊழல்தான்! கேலிப் படங்கள் சொல்வதும் அதையே தான்!

ஊழலுக்கெதிரான இந்தியா என்று அண்ணா ஹசாரே மட்டும் தான் இயக்கம் நடத்த முடியுமா?

ஊழலுக்கெதிரான கேலிச்சித்திரங்கள் என்று நாங்களும் நடத்துவோம்ல என்று ஒருத்தர் மிகவும் முனைப்பாக இருக்கிறார் போல! மின்னஞ்சலில் சுற்றிக் கொண்டிருக்கும் இந்தக் கேலிச் சித்திரங்களில் ஒரு சில என்னுடைய மின்னஞ்சலுக்கும் வந்த
. கேலி தானே என்று ஒதுக்கி வைத்துவிட்டுப் போக முடியாதபடி, படங்களில் இருக்கும் சில யதார்த்த நிலைகள் யோசிக்கவும் வைத்தன.
ப்ரஷ்டமேவ ஜயதே! லஞ்சமே ஜெயிக்கும்! 

என்கிறது இந்த முதல் படம்! அசோக ஸ்தூபியில் இருக்கும் சிங்கங்கள், நேர்மைக்கு அடையாளம் என்றால் இப்போதைய ஆட்சியாளர்களுக்கு ஓநாய்களைத் தவிர வேறென்ன சரியான பொருத்தமாக இருக்க முடியும்? அப்புறமென்ன!! இப்போது கடைப்பிடித்து வரும் கொள்கையை லஞ்சமே ஜெயிக்கும் என்று வெளிப்படையாகவே பிரகடனப் படுத்தி விட வேண்டியது தானே!


தேசிய விலங்காக டைனசார் காங்கிரசைத் தவிர வேறெது பொருத்தமாக இருக்க முடியும்! 
குல்லா! காங்கிரஸ் கள்ளா!

தேசீயப்பறவையாக, பிணம் தின்னிக் கழுகு!  
சோனி(யா)காங்கிரசுக்கும், அரசுக்கும் இதை விடப் பொருத்தமாக வேறொன்று கிடைக்குமா? போபால் மக்களை சாட்சியம் கேட்டுப் பாருங்கள்!


முதலில் இது சுத்தமாக இருந்தால் அல்லவோ, மற்றதும் சுத்தமாக இருக்கும்! சுத்தம் செய்யப் படவேண்டியது முதலில் இந்தக் கழிப்பறையைத் தான்!

தேசீயக் கழிப்பறை! 

தேசீயப் பாட்டு! 
 ஒய் திஸ் கொலவெறி, கொலவெறி டி!



தேசீய விளையாட்டு!  
வில்லு அம்பு ஓல்ட் பேஷன்!கேடி ப்ரதர்சைக் கூப்பிடுங்க! புதுசா என்ன விளையாட்டுன்னு தெரிஞ்சுக்கலாம்!


ஊழலே உணவாக! ஊழலே சுவாசமாக! அதுதான் காங்கிரஸ்!


தேசீய பானம்! அக்கமாலா, கப்சி கதை கேட்டு என்ன புண்ணியம்?
 
அரசியல் அட்டைகளுக்கு மக்களின் ரத்தம் தான்  தேசீய பானம்!


தேர்தல் தானே தேசீயத் திருவிழா! 
அன்னிக்கு ஒருநாள் மட்டும் ஓட்டுப் போடற மகாஜனங்கள் எல்லாம் இந்நாட்டு மன்னர்! அப்புறம் "வானளாவிய அதிகாரம்" எல்லாம் யாருக்காம்?

போகும் திசை மறந்து போச்சு! - இங்கே
பொய்யே வேதமின்னு ஆச்சு!

பொய்யும் புரட்டும் ஆட்சிக் கட்டிலில்.. இதில் வாய்மையே எங்கிருந்து வெல்லுவது?
 
தேசீய ஜோக்குன்னா அது இதுதான்!

முதுகெலும்பில்லாத காங்கிரஸ்காரனை
ஆட்சிக் கட்டிலில் ஏத்தி வச்சா - தெருவில்
போகிற நாய் கூட காலைத் தூக்கி அசிங்கம் செய்யும்!

கசாப்- தேசீய விருந்தாளி!


 
ஒன்றே சொல்வீர் ! அதையும் உரக்கச் சொல்வீர்!
 

காகிதப்பூக்கள் மணக்காது! காங்கிரஸ் ஆட்சி உதவாது!
 
கவைக்குதவாத காங்கிரசைத் தூக்கி எறிய உறுதி கொள்வீர்! 


5 comments:

  1. முதல் படத்தை தவிர வேறு படங்கள் தெரியவில்லை.

    ReplyDelete
  2. நன்றி திரு கருணாகரசு!

    படங்களை மறுபடி வலையேற்றம் செய்திருக்கிறேன்.சரியாக இருக்கிறதா அபுதாபியிலும் பெங்களூருவிலும் இருக்கும் இரு நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். பெங்களுரு நண்பர் படங்கள் இப்போது சரியாகத் தெரிகிறது என்று தகவல் தெரிவித்திருக்கிறார். தகவல் தந்தமைக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  3. எல்லா படங்களுமே யோசிக்க வைக்கும்தான். அந்த கடைசி படம்? இதியர்கள் அணைவரையும் மறக்க வைத்தாகிவிட்டது. இனி வேறு எங்காவது "பாக்கிகள் " நுழைந்து வெறியாட்டம் ஆடும் வரை கசாபை நினைவிருக்காது. இதுவே மற்ற நாடுகளில் வழக்கை முடித்து மரண தண்டனை முடித்திருப்பார்கள்.நாட்டை ஆளவும் ஆண்மை வேண்டும்.வெள்ளை தோல் கால்களை நக்கி நக்கி இதியாவையும் அடகு வைத்தாகி விட்டது. யாரை மனம் குளிரவைக்க கசாபை இன்னமும் விட்டு வைத்திருக்கிறார்கள்?

    ReplyDelete
  4. வாருங்கள் மாணிக்கம்!

    Appeasing the minority for their votes இந்த தேசத்து அரசியலில் ஒரு சாபக்கேடாகவே ஆகிப் போயிருக்கிறது.

    ReplyDelete
  5. இந்திய அரசின் மேலிருக்கும் கூரிய விமர்சனங்கள் இவை... பணம் பணம் பணம் பணம்

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!