ஒரே கேள்வி ஒரே கேள்வி
எந்தன் நெஞ்சிலே
ஒரே பதில் ஒரே பதில்
எந்தன் நெஞ்சிலே
எந்தன் நெஞ்சிலே
ஒரே பதில் ஒரே பதில்
எந்தன் நெஞ்சிலே
பனித்திரை படத்தில் பிபி ஸ்ரீநிவாஸ்-பி சுசீலா டூயட் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்தது.வலையில் சேத் கோடின் பதிவுகளைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தேன். ரீடரில் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னமே வாசித்து விட்டாலும் கூட இந்த இரண்டு வரிப்பதிவு எழுப்பிய ஓராயிரம் கேள்விகளுக்கு இன்னமும் முழுமையான பதில்கள் கிடைத்தபாடில்லை.
சேத் கோடின் சொல்கிறார்.
The best creative solutions don't come from finding good answers to the questions that are presented.
They come from inventing new questions.
இரண்டே வரிகள் தான். மிக ஆக்கபூர்வமான தீர்வுகள் கேட்கப்படும் கேள்விகளுக்கு நல்ல பதில்களைக் கண்டு சொல்வதில் இல்லை.அவை.இன்னமும் புதிதான கேள்விகளை எழுப்புவதில் இருந்து பிறக்கின்றன என்கிறார்.பதிவின் தலைப்பிலேயே முத்தாய்ப்பாக, கேள்விகளைக் கேள்வி கேளுங்கள் என்று சொல்கிறார்.
ஏனாம்?
ஏன் என்ற கேள்வி கேள்வி கேட்காமல்
இங்கு வாழ்க்கையில்லை!
ஏன் என்ற கேள்வி கேள்வி கேட்காமல்
இங்கு வாழ்க்கையில்லை!
.........................................................
பகுத்தறிவு பிறப்பதெல்லாம்
கேள்விகள் கேட்பதனாலே!
பகுத்தறிவு பிறப்பதெல்லாம்
கேள்விகள் கேட்பதனாலே!
.........................................................
உரிமைகளைப் பெறுவதெல்லாம்
முயற்சிகள் செய்வதனாலே!
முயற்சிகள் செய்வதனாலே!
இந்தப் பாடல் வரிகளே, பதிவில் எழுத நினைத்ததன் சாராம்சத்தைக் கொஞ்சம்
சொல்லி விடுவதால் இந்த விஷயத்தை நான் நீளமாக எழுதப் போவதில்லை!நீங்கள் என்ன
நினைக்கிறீர்கள், உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள
மிக ஆர்வமாக இருக்கிறேன் என்பது மட்டும் நிச்சயம்!

