Showing posts with label ஊமைச்சனங்கள். Show all posts
Showing posts with label ஊமைச்சனங்கள். Show all posts

ஒரு அரசியல் மாற்றத்துக்குத் தயாராகிறோமா அல்லது ஊமைச்சனங்களாகவே இருந்துவிடப் போகிறோமா?

தினமணி தலையங்கம்: மரபும், திரிபும்...


ரண்டு மாதங்களுக்கு முன்னால். குடியரசுத் தேர்தலைத் தொட்டு ஒரு அரசியல் மாற்றத்துக்குத் தயாராகிறோமா என்ற கேள்வியுடன் ஒரு பதிவை முடித்திருந்தேன்! ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் ஆளும் ஐமு கூட்டணிக் குழப்பம், தேமு கூட்டணிக் கலகம் இரண்டிலுமே ஒருதெளிவான முடிவை எடுக்கத் திணறிக் கொண்டிருந்த நேரம் அது!ஆளும் தரப்பு, எதிர்த் தரப்பு இரண்டுமே குழப்பத்தில் இருந்தாலும், தெளிவாக இருந்த ஒரே நபர் பிரணாப் முகர்ஜி ஒருத்தர்தான் என்பதை அடுத்தடுத்து ஏற்பட்ட  திருப்பங்கள், முறுகல்கள், பிரணாபைக் கொஞ்சமும் நம்பாத சோனியா வேறு வழி ல்லாமல், பிரணாபை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நன்றாகவே வெளிப்பட்டது!

1969 களில் இந்திரா மனசாட்சிப் படி ஓட்டு போடுங்கள் என்று சொல்லி, பேக்சீட் டிரைவிங் செய்ய முயன்ற முதுபெருந்தலைகளைப் புறக்கணித்துக் காங்கிரசையே இண்டிகேட், சிண்டிகேட் என்று இரண்டாக உடைத்தார். அந்த இண்டிகேட் மரபு இன்றைக்கு ஜனாதிபதிதேர்தலில் வெளிப்படையான குதிரை பேரம், சிபிஐ, மற்றும் அமலாக்கத்துறை உதவியோடு இத்தாலிய மம்மி காங்கிரஸ் ஒரு புதிய மிரட்டல் தொனியில் நடத்திக் கொண்டிருக்கிற அளவுக்கு சீரழிந்திருக்கிறது.

ந்த இரண்டு மாதங்களில், இந்த போக்கைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்ததில், ஒருஅரசியல் மாற்றத்துக்கு தயாராக இருக்கிறோமா என்ற கேள்வியே அமுங்கிப் போயிருப்பதை நன்றாகவே அனுமானிக்க முடிந்தது. 1973 ஆம் வருடம்ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையேற்று நடத்திய பீகார் இயக்கம் இந்திரா ஆட்சியின் சர்வாதிகாரத்தை எதிர்த்து ஆரம்பத்தில் மாணவர்கள் போராட்டமாக இருந்தது, ஒரு மக்கள் இயக்கமாக மாறியதை தினமணியின் அந்நாள் ஆசிரியர் திரு ஏ என் சிவராமன் கணக்கன் என்ற பெயரில் எழுதிய கட்டுரைகள்,பீகார் இயக்கம் - ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமை :நிகழ்ச்சிகள், தத்துவங்கள், குறிக்கோள் என்ற புத்தகமாக தினமணி வெளியீடாக முப்பத்தேழு வருடங்களுக்கு முன்னால் வந்தது.

ப்போது அந்தப் புத்தகத்தை, புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்தின் உதவியோடு மீண்டும் படித்துக் கொண்டிருப்பதில், Youth for Democracy ஜனநாயகத்துக்கான இளைஞர்கள் எழுச்சி ஏற்பட்டால் தவிர, இந்த தேசத்துக்கு விடிவு காலம் இல்லை என்று வார்தாவில் இருந்து  இளைஞர்களுக்கு ஜேபி விடுத்த அறைகூவல் இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறது என்பதை இங்கே கவனப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஆனால்,நேற்றைய தினமணி நாளிதழில் வெளியான தலையங்கம் கொஞ்சமல்ல நிறையவே ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது என்பதோடு, பிரச்சினையை ஒரு முழுமையான கண்ணோட்டத்தில்  பார்த்து எழுதப் பட்டதாக இல்லை. இந்தத்தலையங்கம் நேரு என்னவோ மரபுகளைத் திரிக்காமல் ஜனநாயகத்தை வளர்த்த மாதிரியும், இப்போது மட்டும் தான் மரபுகள் திரிக்கப்படுவது போலவும் எழுதப்பட்டிருப்பது விந்தையாக இருக்கிறது. 

போதாக்குறைக்கு, கருணாநிதியின் "குடியரசுத் தலைவர் தேர்தலில் தெற்கு வடக்கு பார்க்கத் தேவையில்லை" வசனத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருப்பதும் விந்தைக்கு மேல் விந்தையாக இருக்கிறது. 


காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தப் பதினான்கு ஆண்டுகளில், இத்தாலிய மம்மிக்குத் தான் இன்னும் செல்லு படியாகக் கூடிய காசுதான் என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம்!  

ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் ஒன்றில், கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்கிற உன்னதமான தலைமை என்று தியாக சிகரமான இத்தாலிய மம்மிக்குப் பேர் இருந்தது!(!!) ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டில், அந்த பிம்பம் உடைபட்டுப் போய், எத்தைத் தின்றாலாவது பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் நபர்களால் ஆனதுதான் காங்கிரஸ் என்ற உண்மையும், தியாக சிகரத்தின் தலைமைக்கான சோதனையும் பல்லை இளித்துக் கொண்டு இப்போது முன்வந்து நிற்கிறது.

தாங்கள் சொல்வதற்குத் தலையாட்டுகிறவர்கள் தான் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பது இந்திரா காலத்தில் இருந்தே தொட்டுத் தொடரும் காங்கிரஸ் கலாசாரக் கருமாந்திரம்! என்றெழுதிய இந்தப்பதிவையும் ஒருதரம் வாசித்துப் பார்த்துவிடுங்கள்!காட்சிகள் மாறிவிட்டமாதிரித் தோன்றினாலும் பின்னணியில் இருப்பது பிரதானமாக இது ஒன்றுதான்!

தினமணி தலையங்கம்: First Published : 12 Jul 2012 02:29:00 AM IST


குடியரசுத் தலைவர் பதவி என்பது முதல் குடிமகன் என்கிற மரியாதைக்கு உரிய பதவியாக மட்டுமே நாடாளுமன்ற ஜனநாயக முறையில் கருதப் படும் என்பது உண்மை. ஆனால், யாரை ஆட்சி அமைக்க அழைப்பது என்கிற அதிகாரத்தையும் எந்த ஒரு கட்சிக்கோ கூட்டணிக்கோ பெரும் பான்மை இல்லாத நேரத்தில் ஜனநாயகத்தைக் கட்டிக் காக்கும் கடமையையும் அரசியல் சட்டம் குடியரசுத் தலைவரிடம் தான் ஒப்படைத்திருக்கிறது.

இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்டது முதல் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்வில் இரண்டு மரபுகள் கடைப் பிடிக்கப்பட்டன. முதலாவது மரபு, குடியரசுத் தலைவர் அல்லது துணைத் தலைவர் தென்னாட்டைச் சேர்ந்தவராக இருப்பது; இன்னொரு மரபு, இருவரில் ஒருவர் சிறுபான்மை அல்லது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிரதிநிதியாக இருப்பது என்பவைதான் அவை. இந்த இரண்டு மரபுகளும் வாக்குவங்கி அரசியலுக்காகவோ, குறுகிய கண்ணோட்டத்துடனோ ஏற்பட்டவை அல்ல.

சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரையோ, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரையோ, அதிகாரமில்லாத குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்துவதால் என்ன மாற்றம் ஏற்பட்டுவிடும் என்று சிலர் கேட்கக்கூடும். அதன் மூலம் மதக்கலவரங்களும், சாதிக் கலவரங்களும் இல்லாமல் போய்விடாதுதான். ஆனாலும், சிறுபான்மையினராக, தாழ்த்தப்பட்டவர்கள் என்று தனிமைப்ப டுத்தப்பட்டவர்களாக இருப்பவர்களுக்கு, நீங்களும் இந்த இந்திய சமுதாயத்தின் இன்றியமையாத அங்கம் என்பதை உணர்த்தும் அடையாளம்தான் தேசத்தின் முதல் குடிமகனுக்கான அங்கீகாரத்தை வழங்கும் செயல்.

சின்ன நாடான சிங்கப்பூர் ஒரு தமிழனைக் குடியரசுத் தலைவராக்கி சிறப்பிப்பது இதனால்தான். இப்படிச் செய்ய மறுத்ததால்தான் இலங்கையின் சிறுபான்மை தமிழ்ச் சமுதாயத்தினர் அந்த தேசத்துடன் தங்களை இணைத்துக் கொள்ள முடியாமல், இரண்டாம்தரக் குடிமக்களாக்கப் பட்டதாகக் குமுறத் தொடங்கினார்கள். தொலைநோக்குப் பார்வையுடன் இதை உணர்ந்துகொண்ட அன்றைய பாரதப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு எடுத்த தேர்ந்த முடிவுதான் 1952-ல் டாக்டர் ராதாகிருஷ்ணனையும், 1962-ல் ஜாகீர் ஹுசைனையும் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்பது.

குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் பதவிகளை வடக்கின் பிரதிநிதியும், தெற்கின் பிரதிநிதியும் மாறி மாறி அலங்கரிக்க வேண்டும் என்று முடிவெடுத்ததும் பண்டித ஜவஹர்லால் நேருதான். 1952-ல் குடியரசின் துணைத் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்கிற கேள்வி எழுந்தது.

அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த கைலாஷ்நாத் கட்ஜு (உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த மார்க்கண்டேய கட்ஜுவின் தந்தை) குடியரசின் துணைத் தலைவராக டாக்டர் ராதாகிருஷ்ணனைப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு ஏன் தேர்வுசெய்ய விரும்பினார் என்பதைத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்.  இந்திய சரித்திரத்தில் ஆழ்ந்த தேர்ச்சியுள்ள பண்டித ஜவஹர்லால் நேரு அப்படி ஒரு முடிவெடுத்ததற்கு சில சரித்திரக் காரணங்கள் இருந்தன என்று கைலாஷ்நாத் கட்ஜுவின் பதிவு தெளிவுபடுத்துகிறது.

தினமணி  தலையங்கத்தை  முழுமையாகப் படிக்க இங்கே

***** 

இப்போது கொஞ்சம் யோசித்து விட்டுசொல்லுங்கள்! நாம் ஒரு அரசியல் மாற்றத்துக்குத் தயாராக இருக்கிறோமா? அல்லது ஊமைச் சனங்களாகவே குறுகிப் போய்க் கிடக்கப்போகிறோமா?

..