Showing posts with label டிராமா பார்ட்டி. Show all posts
Showing posts with label டிராமா பார்ட்டி. Show all posts

பிரசாந்த் கிஷோருடைய உத்தி டில்லி தேர்தலில் எடுபடவில்லையா?

நீங்கள் இந்தப்பதிவை வாசிக்கிற நேரம், அநேகமாக டில்லி சட்டசபைத்தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகி இருக்கும். மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வராகப் பதவியேற்பார் என்பது ஏற்கெனெவே கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்ததுதான்! ஆனால் இன்னமும் பெரும்பாலானவர்கள் புரிந்து கொள்ளாத விஷயம், காங்கிரசின் ஷீலா தீட்சித், 1998 இல் இருந்து 2013 வரை  தொடர்ந்து மூன்று முறை 15 ஆண்டுகள் முதல்வராக இருந்த இடத்தில், இப்போது காங்கிரசின் நிலைமை என்ன? காங்கிரஸ் கட்சி இப்போதைய தேர்தல்களில் போட்டியிட்டாலும் அது மும்முனைப்போட்டியாகத்தான் இருந்ததா?

பிற்பகல் 12.32 மணி நிலவரம் 

2013 சட்டசபைத்தேர்தலில் ஷீலா தீட்சித்தைத் தோற்கடித்த அரவிந்த் கேஜ்ரிவாலின் AAP வெறும் 28 இடங்களில் மட்டுமே ஜெயித்தது. 31 இடங்களில் ஜெயித்த பிஜேபியை வரவிடக்கூடாது என்று 11 இடங்களில் மட்டுமே ஜெயித்த காங்கிரஸ் நினைத்தது. காங்கிரசின் ஆதரவோடு ஆட்சியை அமைத்த அரவிந்த் கேஜ்ரிவால் 49 நாட்களிலேயே ராஜினாமா செய்ய நேரிட்டது பழைய கதை. அதற்குப் பின்னால் 2015 இல் நடந்த சட்டசபைத்தேர்தலில் 9.7 % வாக்குகளை மட்டுமே பெறமுடிந்த காங்கிரசுக்கு சட்ட சபையில், ஒரு சீட் கூட இல்லை!  அடிவாங்கிக் கொண்டாவது எப்போதும் ஊடகவெளிச்சத்திலேயே இருக்கத்தவித்த அரவிந்த் கேஜ்ரிவாலும் அவரது டிராமா பார்ட்டியும், காங்கிரஸ் வாக்குவங்கியை முற்றிலுமாகத் தங்கள் வசம் ஈர்த்துக் கொண்டுவிட்டார்கள். இப்போதைய நிலவரப்படி காங்கிரசின் வாக்கு சதவீதம் வெறும் 4% தான். ஆனால் பிஜேபியின் வாக்குசதவீதம் 9% வரை அதிகரித்திருக்கிறது. ஜாமியா மில்லியா, ஷாஹீன் பாக் இருக்கிற ஓக்லா தொகுதியில் பிஜேபி வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை  முன்னிலை வகிக்கிறது என்ற தகவல்களை கொஞ்சம் பொறுமையாக ஆராய வேண்டும். ரிசல்ட்டுகள், புள்ளிவிவரங்கள்  முழுமையாக வரட்டும்! அதற்குமுன்னால் இரண்டு கேள்விகள்! 

பிரசாந்த் கிஷோர் தேர்தல் உத்திகள் ஆம் ஆத்மி கட்சிக்கு கைகொடுத்ததா இல்லையா?

இரண்டுமாதங்களாகத் தூண்டிவிடப்பட்ட கலவரங்கள் போராட்டங்கள் உக்கிரமான பிஜேபி எதிர்ப்பு பிரசாரம் டில்லியில் முறியடிக்கப் பட்டு விட்டதா?

மீண்டும் சந்திப்போம்