தொடர்ந்து கருத்துக்கணிப்புகள் என்ற பெயரிலான குழப்பங்களையே கவனித்துவந்ததில் வழக்கமாகப் பதிவிடும் இந்தத்தலைப்பில் எழுதக் கொஞ்சம் தாமதமாகிவிட்டது.
நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்கள் இருவர் பேசும் விவாதம் இது. எதைப் பேசுகிறார்கள்? நாடாளுமன்ற உறுப்பினராக தங்களுடைய கடமை பொறுப்பை உணர்ந்துதான் பேசுகிறார்களா என்பதைக் கவனித்தால், இந்தத் தேர்தல் முறையில் உள்ள கோளாறு என்ன என்பதும் புரியும். உள்ளாட்சி அமைப்புகளில் பேச வேண்டிய பிரச்சினைகளை பேசுவது நாடாளுமன்ற உறுப்பினருக்கான தகுதியா? சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த சபைகளுக்கு இவர்கள் தேவையா? தேர்தல்முறைகளைக் குறித்து எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறோம்? கொஞ்சம் மனம் திறந்து என்ன தோன்றுகிறது என்பதை பேசுங்களேன்!
நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்கள் இருவர் பேசும் விவாதம் இது. எதைப் பேசுகிறார்கள்? நாடாளுமன்ற உறுப்பினராக தங்களுடைய கடமை பொறுப்பை உணர்ந்துதான் பேசுகிறார்களா என்பதைக் கவனித்தால், இந்தத் தேர்தல் முறையில் உள்ள கோளாறு என்ன என்பதும் புரியும். உள்ளாட்சி அமைப்புகளில் பேச வேண்டிய பிரச்சினைகளை பேசுவது நாடாளுமன்ற உறுப்பினருக்கான தகுதியா? சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த சபைகளுக்கு இவர்கள் தேவையா? தேர்தல்முறைகளைக் குறித்து எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறோம்? கொஞ்சம் மனம் திறந்து என்ன தோன்றுகிறது என்பதை பேசுங்களேன்!
பொறுப்பில்லாதவர்களே தொடர்ந்து அரசியலில் கோலோச்சி வருவதில் இதுமாதிரிக் காமெடிக் கொடுமைகளை அனுபவித்தே ஆகவேண்டுமென்பது நமக்கென்ன தலையெழுத்தா?
தேர்தல்முறைகேடுகளைத் தடுக்க சக்தியில்லாத தேர்தல் ஆணையம் தண்ணிகாட்டும் அரசியல் பெருச்சாளிகள் பற்றி சதீஷ் ஆசார்யா கார்ட்டூன் இது! TN சேஷன் காலத்து மிடுக்கோடு தேர்தல் ஆணையம் துணிந்து நிற்குமானால் தயாநிதி மாறன்கள் இப்படி இளித்துக்கொண்டு பேட்டி கொடுக்க முடியுமா?
வருமான வரித்துறையின் அடுத்த குறி தயாநிதி மாறனாக இருந்தால் தவறென்ன? பாவம், News 18 சேனலுக்கு ஏன் வலிக்கிறதாம்? முகநூலில் இப்படி ஒரு பொருத்தமான மீம் பார்த்தேன்.
படத்தில் 5 மெகா திருடர்கள் இருந்தாலும், தேர்தலில் போட்டியிடுவது நான்கு மெகா திருடர்கள்தான்! மெகா ஊழல்களைத் துணிந்து அரங்கேற்றிய மெகா திருடர்களான இவர்கள் தோற்கடிக்கப்படுவது நடந்தால் ஜனநாயகம் காக்கப்படுவதன் முதல்படி.
இந்தத் தேர்தலில் கமல் காசர் அதிர்வலைகளை எழுப்பி இருப்பதென்னவோ நிஜம்! அதிர்வலைகள் எவ்வளவு வாக்குகளாக மாறும் என்பது இன்னமும் தெளிவாகத் தெரியாத மர்மம்!
மீண்டும் சந்திப்போம்!


