Showing posts with label conspiracy theory. செய்திகளின் அரசியல். Show all posts
Showing posts with label conspiracy theory. செய்திகளின் அரசியல். Show all posts

#ராயல்அக்கப்போர் பிரிட்டிஷ் மீடியாவை கதற விடும் இளவரசர் ஹாரி!

#ராயல்அக்கப்போர் ஒரு "கோமகனின் காதல்" பிரிட்டனைப் பாடாய்ப் படுத்துகிறதாம்! என்று இன்னொரு பக்கத்தில் எழுதி ஒருவாரம் கூட ஆகவில்லை! ராணி எலிசபெத்தின் இரண்டாவது பேரன் ஹாரி புதியதொரு அதிர்ச்சியை பிரிட்டிஷ் மீடியாவுக்கும் அரசகுடும்பத்தினருக்கும் படு கேஷுவலாகக் கொடுத்து இருக்கிறார் Oprah Winfrey உடனான நேர்காணலில் என்னென்ன சொல்லப் போகிறார்களோ என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் #ராயல்அக்கப்போர் ரசிகர்களுக்கு, சற்றே முந்திக் கொண்டு, ஒரு 17 நிமிட ஷோவை ஹாரியுடன் நடத்தி இருக்கிறார்.    


பிரிட்டிஷ் ராஜகுடும்பத்தினருக்கு நெஞ்சுவலியே வந்துவிடுகிற அளவுக்கு, இளவரசர் ஹாரி  படு கேஷுவலாக, டபிள் டெக்கர் பஸ்ஸில் பயணிக்கிறார், சொந்த விஷயங்களையும் குறித்துத் தயக்கமில்லாமல் ஜேம்ஸ் கார்டெனுடன் உரையாடுகிறார். பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரிடம் காணமுடியாத மிகவும் இயல்பான down to earth யதார்த்தத்துடன் பேசுகிறார். ஒரு டிவி ஷோவுக்கு உண்டான கிறுக்குத்தனங்களை (tasks) முகம் சுளிக்காமல் செய்கிறார். Harry and Meghan have faced severe criticism from British Media. He admitted that he decided to take his family away from the U.K. because of the British press and how it was affecting his mental health back then. He said he did not want his family to be in that "toxic" environment and did what "any husband and father would do." பைத்தியம் பிடிக்கவைக்கும் பிரிட்டிஷ் மீடியாவின் நச்சுத் தனங்களிலிருந்து விலகியிருக்கவே ஒரு கணவனாக, தந்தையாக பிரிட்டனிலிருந்து வெளியேற முடிவெடுத்ததாக மிகவும் தெளிவாகச் சொல்கிறார்.

இங்கே இந்த ஷோவில் வெளிப்பட்ட 15 சுவாரசியமான விஷயங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்கள். 


இதுமாதிரியான அக்கப்போர் செய்திகளுக்கு உலக மீடியாக்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்பது உங்களுடைய கற்பனையையும் மீறிய விஷயம் என்பதைச் சொல்லி இந்தப்பதிவை முடிக்கிறேன்.

காரணம், இந்த ராயல் அக்கப்போரை விட முக்கியம் இங்கே சட்டசபைத் தேர்தல்களுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டிருப்பது தான்! தேர்தல் களம் தயாரென்ற அறிவிப்பும் வந்தாகி விட்டது! கூட்டணிகள் தயாராகி விட்டனவா?       

மீண்டும் சந்திப்போம்.           

சண்டேன்னா மூணு! பலமுகங்கள் காட்டும் #அரசியல்

சமீபகாலமாக இங்கே தமிழில் திரைப்படங்களும் வெளிப்படையான அரசியல் பேச ஆரம்பித்திருப்பதே ஒருவகையான நுண்ணரசியல் தான்! இங்கே டிவி சேனல்கள் அதையும் ஒரு மாதிரி விவாதப்பொருளாக ஆக்குவதுமே கூட சேனலின் உள்ளரசியல்! தந்தி டிவி இதைக்கூட கொண்டையை மறைக்கத்தெரியாத வடிவேலு காமெடி மாதிரி, ஒரு விவாதத்தை இயக்குனர் G மோகனுடன் நடத்தி காமெடிப்பீசாகி இருக்கிறது.


இதை சேனல் அரசியல் என்றும் வைத்துக்கொள்ளலாம்! ஆனால் இயக்குனர் G மோகன் மிகுந்த நிதானத்தோடு பக்குவம் பொறுமையோடு பதில் சொல்கிறார். படத்!தை பார்க்காமலேயே எதிர்ப்பு வழக்கு என்று போவது நம்மூர் பகுத்தமல் சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்பதை என்னவிதமான அரசியல் என்று வகைப்படுத்துவீர்கள்றிவுவாதிகளுக்குப் புதிதா என்ன? ஆனால் இயக்குனர் படத்தைப்பாருங்கள், அதன் பிறகு கருத்தைச் சொல்லுங்கள் என்று கொஞ்சமும் பொறுமையிழக்கா? ஆனால் இதுமாதிரி நிதானமான அணுகுமுறை கொண்ட அரசியல் வளர வேண்டும் என்பதை நான்மட்டுமல்ல நீங்களுமே கூட விரும்புவீர்கள் என்று நம்புகிறேன். வீடியோ 30 நிமிடம்.


டய மண்டு இப்போது பானாசீனாவுடன் ஒட்டிக் கொண்டு இருப்பது என்ன வகையான அரசியல் என்பதை முடிவுசெய்வதை உங்களிடமே விட்டு விடுகிறேன். கவிஞர் பாட்டெழுத முடியாமல் மேடை வெளிச்சம் கிடைக்காமல், ஞானபீட விருதுக்கு அடிபோட்டு அது நிறைவேறாதது, சமீபத்தில் SRM பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர்பட்டம் மத்திய அமைச்சர் கையால் வாங்கவிருந்ததும் கூட கைநழுவிப் போனது என்று வரிசையாகச் சிறுமைப்பட்டுக் கொண்டிருக்கிற நேரத்தில் பானாசீனா துவங்கி இருக்கிற எழுத்து என்ற அமைப்பில், நூல்களை வெளியிட்டுப்   பேசும்போது இப்படிப் பொருமித் தீர்த்திருக்கிறார்! 

சிதம்பரத்துக்கு கோபம் வந்தால் ...வந்தால் ..வந்தால் என்று பலமுறை டய மண்டு பேச்சில் பூச்சாண்டி காட்டுகிறார்! பானாசீனாவுக்கு கோபம் வந்தால் என்னவாகி இருக்குமாம்?  உங்களுக்குத் தெரியுமா?

பானாசீனாக்களை விடுங்கள்! மனிதகுல வரலாற்றை மிக விரிவாக எழுதிய அறிஞர் Will Durant இந்தியாவைக் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? 

படம் முகநூலில் பெங்களூரு ஜடாயு பகிர்வில் இருந்து சுட்டது.


1962 இந்திய சீனப்போரின் அவலங்களுக்கு யார் காரணம் என்ற பழைய கதையை சேகர் குப்தா இப்போது காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ் எழுதி இருக்கிற A Chequered Brilliance -முன்னாள் மத்திய அமைச்சர் வி கே கிருஷ்ண மேனன் தலையிலேயே முழுப்பழியையும் சுமத்தும்- புத்தகத்தைப் பற்றிப் பேசுகிறார் என்பதில் எங்கேயோ மணி அடிக்கிற. மாதிரித் தெரிகிறதா? கொஞ்சம் புத்தகத்தைப் பற்றி விவரங்களைதேடிப்பிடித்து விட்டு விரிவாக எழுதுகிறேன். நேரு மேனன் இருவருமே கற்பனாவாதிகள் நெருங்கிய கூட்டாளிகள், போரின் முடிவுக்குப்பிறகு பதவிவிலகும்படி கிருஷ்ணமேனன் கட்டாயப்படுத்தப்பட்டார் அன்றைய நாட்களிலேயே Scapegoat பலியாடாக மேனன் ஆக்கப்பட்டார் என்பது பொதுவெளியில் உள்ள தகவல்தான்! புதிதல்ல! ஜெய்ராம் ரமேஷ் இறந்துபோன நிறைய ராணுவத் தளபதிகள் மீதும் கிருஷ்ண மேனன் மீதும் நிறைய cospiracy தியரிகளைப் பின்னி எழுதியிருக்கிறார் என்பது சேகர் குப்தா விவரிப்பதைக் கேட்கும்போதே உறைக்கிறது.
மீண்டும் சந்திப்போம்.